Friday, September 21, 2018

நாஞ்செலியும் பார்ப்பனர் கொடுமையும்...

நாஞ்செலியும் பார்ப்பனர் கொடுமையும்...

ஆரிய வருகைக்கு முன்பு வரை, அப்போதைய இந்தியாவில் சாதிகள் என்பது இருந்ததில்லை. அவர்கள் வருகைக்கு பின்பு இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரும் தென்னிந்தியா பக்கம் நகரத்துவங்கினர். வட இந்தியா முழுவதும் சாதிக் கொடுமைகள் அரங்கேறிய போது, தென்னிந்தியாவில் சாதிக் கொடுமைகள் என்று இருந்ததே இல்லை. வட இந்தியாவை முழுவதும் வேத கலாச்சாரத்திற்கு மாற்றிய பார்ப்பனர்கள், தென்னிந்தியாவிற்கு கி.பி 2 முதல் ஏழாம் நூற்றான்டுகளில் குடியேறத் துவங்கினர்.

அப்படி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குடியேறிவர்கள் தான் நம்பூதிரிகள் என்ற பார்ப்பனர்கள்.

தங்களை பூமியில் வாழும் கடவுளாக பாவித்துக் கொண்டு, அரசன் முதல் அடித்தட்டு மக்கள் வரை தங்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள என்று பிரச்சாரம் செய்த நம்பூதிரிகள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையே தங்கள் வசம் கொண்டு வந்தனர். நம்பூதிரிகள் என்றழைக்கப்படும் இந்த பார்ப்பனர்கள் வந்த பிறகு தான் சாதிக் கொடுமைகள் தலைதூக்கத் துவங்கியது.


நாடார், ஈழவர், முக்குவர், பரவர், புலையர் என சுமார்
பதினெட்டு சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளாக அறிவித்த பார்ப்பனர்கள், அவர்களின் மீது கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
நம்பூதிர்களை கண்டால் நாடார்கள் 72 அடி தள்ளியே நிற்க வேண்டும். கோவில்களுக்கு செல்லக்கூடாது. பொதுக் கிணறு, குளம் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தீண்டாமைக் கொடுமைகளை திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா உதவியுடன் அரங்கேற்றினர் பார்ப்பனர்கள்.

நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு ஆடைகள் விசயத்திலும் மக்களை ஒடுக்கினார்கள். கீழ் சாதியினர் என்றழைக்கப்படுபவர்கள் யாரும் மேலாடை அணியக்கூடாது. முட்டுக்கு கீழே ஆடையும் அணியக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தனர். பார்ப்பனர்களுக்கு முன்பு இந்த பதினெட்டு சாதி பெண்களும் திறந்த மார்புடன் தான் உலவ வேண்டும். பெண்கள் திறந்த மார்புடன் உலாவுவதே எங்களுக்கு அளிக்கும் மரியாதை என்றனர் பார்ப்பனர்கள். அதனை மீறி மேலாடை அணிந்தால், அந்த ஆடை கிழிக்கப்பட்டு மரண தண்டனை அளிக்கப்படும்.


பெண்களுக்கு மட்டுமல்லாமல்,
ஆண்கள் மீசை வைத்திருந்தால் அதற்கு வரி விதிக்கப்பட்டது. கைத்தடி வைத்திருந்தால் வரி, கைப்பிடி இருக்கும் குடை வைத்திருந்தால் அதற்கு வரி என கொடுமைகள் செய்தது பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானம். இதில் கொடுமை என்னவெனில் சோறு என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாது, கஞ்சி என்று தான் சொல்ல வேண்டும் என்றளவிற்கு அடக்குமுறைகள் ஏவப்பட்டது.

பெண்கள் மார்பகங்களை காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் மார்பகங்களின் அளவிற்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டும் என்றும் புதிய சட்டம் போடப்பட்டது. இதனை எதிர்த்து பல பெண்கள் போராடினார்கள். அதில் குறிப்பிடத்தக்க பெண் தான் வீரமங்கை நாஞ்செலி.


30 வயதான நாஞ்செலி கேரளாவின் சேர்தலா என்ற பகுதியில் வசித்து வந்தார். பார்ப்பனர்களின் இந்த கொடுமையை எதிர்த்து மார்பு வரி செலுத்த முடியாது என்று போராடி வந்தவர், வரியையும் செலுத்தாமல் இருந்தார். பல மாதங்களாக வரி செலுத்தாத நிலையில், வரியை வசூல் செய்யும் பிராவதியார் என்ற அதிகாரிகள் நாஞ்செலி மீது கோபமடைந்தனர்.

நாஞ்செலி வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் வரியை தருமாறு கேட்டனர். இருங்கள் வருகிறேன் என்று உள்ளே சென்ற நாஞ்செலி, வாழை இலையையும் கையில் ஒரு அரிவாளையும் எடுத்து வந்தார். என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த அதிகாரிகள் மத்தியில், யாரும் எதிர்பாராத விதமாக, தான் வைத்திருந்த அரிவாளால், தனது இரண்டு மார்பகங்களையும் அறுத்து வாழையில் இலையில் வைத்து, மார்பகம் இருந்தால் தானே வரி கேட்பீர்கள் என்று கேட்க, அரண்டு போயினர் சமஸ்தான அதிகாரிகள்.

மார்பகத்தை வெட்டியதால் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு நாஞ்செலி இறந்து போனார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் செய்த தொடர் போராட்டத்தால், வேறு வழியில்லாமல் மார்பக வரியை ரத்து செய்தது திருவிதாங்கூர் சமஸ்தானம்.

நாஞ்செலியின் மார்பகம் அறுந்த உடலை பார்த்த அவளது கணவர் சிருகந்தன், அவரது இறுதி சடங்கில், உடலுக்கு தீ வைத்து விட்டு, அதன் மீது பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார். நாஞ்செலி வாழ்ந்த இடம் முலைச்சிபரம்பு என்று அழைக்கப்பட்டது.

பார்ப்பனர்களுக்கு எதிராக போராடிய எல்லா வரலாறுகளையும் தற்போது மறைத்து வரும் பா.ஜ.க அரசு, நாஞ்செலி வரலாறை வெறும் கதை என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் கூறி, கடந்த 2016 ஆம் ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்த நாஞ்செலி வரலாறை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி தோழர்

முஹம்மது பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?

முஹம்மது பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?
.
.
உலக மக்கள் அனைவருக்கும் உலகம் அழியும்வரை வழிகாட்துவதற்காக அனைத்தையும் அறிந்த, யாவற்றையும் படைத்த இறைவனான அல்லாஹ் அனுப்பிய இறுதித் தூதர் என்று சொல்லப்படும் முஹம்மது அவர்கள் தனது வாழ்க்கையில் பதினோரு பெண்களை திருமணம் செய்து அவர்களுடன் வாழ்ந்தார் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆதாரபூர்வமான அறிவிப்புகள் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் ஆகும்.
.
.
.
முஹம்மது அவர்கள் ஒரே தடவையில் அதிகப் படியாக பத்து மனைவிகளுடன் வாழ்ந்து இருக்கின்றார், மரணிக்கும் வரை அவருடன் பத்து மனைவிகள் இருந்துள்ளார்கள். அவர் மணமுடித்த பதினொருவரில் பத்துப்பேரை பருவமடைந்தவர்களாகவும், ஒருவரை சிறுமியாகவும் திருமணம் செய்திருக்கின்றார். இந்த பதினோரு பேருக்கு மேலதிகமாக சரியாக கணக்கிட முடியாத எண்ணிக்கையில் ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்’ என்ற பெயரில் பாலியல் அடிமைகளையும் வைத்து இருந்தார். (இவை அனைத்தும் இஸ்லாமிய மூலாதாரங்களில் உள்ள விடயங்களாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி ஆதரங்கள் தவிர்க்கப் படுகின்றன.)
.
.
.
எல்லா விடயங்களிலும் அழகிய முன்மாதிரி (உஸ்வதுல் ஹசனா) உள்ளவர் என்று குரான் சான்றிதழ் வழங்கும் முஹம்மது அவர்கள் தன்னைப் பின்பற்றும் முஸ்லிமான ஆண்களுக்கு ஒரே தடவையில் அதிகபட்சமாக நான்கு மனைவிகளை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கிவிட்டு, அந்த அதிகபட்ச அனுமதிக்கு முரணாக தான் மாட்டும் 10 மனைவிகளை ஒரே தடவையில் வைத்துக்கொண்டாலும், தான் எதற்காக ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கின்றேன் என்பது குறித்து எங்கேயும் விளக்கம் வழங்கியதாக விபரங்கள் இல்லை..
.
.
.
முஹம்மதிற்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் யுத்தங்கள் குறைவடைந்து கருத்தியல் ரீதியாக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பரப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்ட பொழுது இஸ்லாத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவையாக முஹம்மது நபியின் பலதார திருமணங்களும், சிறுமியை திருமணம் செய்ததும் அமைந்திருந்தன. இந்நிலையில் திருமணங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து இஸ்லாத்தை காப்பாற்றுவதற்காக பிற்காலத்தவர்களால் பல நூல்கள் மற்றும் விளக்கங்கள் எழுதப்பட்டன. இராஜதந்திரம், கோத்திரங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படுத்துதல், பெண்களுக்கு வாழ்வு கொடுத்தல் என்று முஹம்மது அவர்களின் திருமணங்களுக்கு புத்திசாலித்தனமாக விளக்கம் கொடுக்க முற்பட்ட பிற்கால இஸ்லாமிய அறிஞர்கள், முஹம்மது அவர்கள் இச்சைக்காகவோ, பெண்ணாசைக்காகவோ காமத்திற்காகவோ திருமணம் செய்யவில்லை என்று நிறுவுவதற்கு பகீரதப் பிராயத்தனங்களை மேற்கொண்டு இருப்பதை தாராளமாகக் காணலாம். எனினும் முஹம்மது அவர்களின் நெருங்கிய பணியாளராகிய அனஸ் இப்னு மாலிக் அவர்களோ “முஹம்மது அவர்களுக்கு முப்பது ஆண்களின் பாலியல் சக்தி வழங்கப்பட்டு இருந்தது” என்று அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி கிரந்தத்தின் பாகம் ஒன்று நூல் 05 இல் 268 ஆவது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது. இதே ஹதீஸ் மேலும் பல இடங்களிலும் பதிவாகி உள்ளமையானது பிற்கால அறிஞர்களின் சப்பைக்கட்டு விளக்கங்களை குப்பைத்தொட்டியின் வாசலுக்கே தள்ளிவிடுகின்றது.
.
.
.
இது மட்டுமின்றி இப்னு ஷாத் உடைய கிதாப் அல் தபகாத் அல் கபீர் பாகம் ஒன்றின் 438 ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் “அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.” என்று அமைந்துள்ளது. இது மட்டுமின்றி மேற்குறிப்பிட்ட கிதாபின் 469 ஆவது பக்கத்தில் ஆயிஷா அறிவிக்கும் ஹதீஸ் “நபிக்கு உலகில் மிகவும் பிரியமான பொருட்கள் வாசனைத் திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு ஆகியவையாம். அவர் உணவைத் தவிர மற்ற இரண்டையும் அடைந்துகொண்டார்” என்று அமைந்துள்ளது. மேலும் நஸயி 3939 இல் பதியப்பட்டுள்ள அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கும் இன்னொரு ஹதீஸ் “பெண்களும் வாசனைத் திரவியங்களும் எனக்கு உலகில் பிரியமானவையாக ஆக்கப்பட்டுள்ளன” என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் என்று அமைந்துள்ளது.
.
.
.
உலகம் அழியும்வரையான உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் அருளப்பட்ட வழிகாட்டி என்று சொல்லப்படும் இஸ்லாமிய புனித நூலான குரானில் முஹம்மதிற்கும், அவரது மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பண்ணுவதற்காக மட்டுமே பல வசனங்கள் இடம்பெற்று இருப்பதை காணலாம். முஹம்மதின் திருமணங்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்கின்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தை என்று முஸ்லிம்கள் நம்பும் குரான் முற்றுப்புள்ளி வைக்கும் வசனம் சூரத்துல் அஹ்ஸாப் இன் 53 ஆவது வசனமாக இடம்பெற்றுள்ளது. “(நபியே) வேறு பெண்களின் அழகு உம்மைக் கவர்ந்த பொழுதும் அவர்களை திருமணம் செய்வதற்கோ அல்லது உமது மனைவிகளை மாற்றிக்கொள்வதற்கோ உமக்கு அனுமதியில்லை, எனினும் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களின் விடயத்தில் உமக்கு விலக்களிக்கப் பட்டுள்ளது.” என்ற வகையில் குறித்த வசனத்தின் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. இந்த வசனத்தின் வெவ்வேறு மொழிபெயர்ப்புக்களை https://goo.gl/dFYmzc என்ற இணைப்பில் காணலாம். இந்த வசனம் ஏற்கனவே குப்பைத் தொட்டியின் வாசலுக்கு தள்ளப்பட்டுவிட்ட அறிஞர்களின் சப்பைக்கட்டு விளக்கங்கள், சமாளிப்புகளை எட்டி உதைத்து குப்பைத் தொட்டிக்குள் தள்ளிவிடுவதாக அமைந்துவிட்டது. ஆக, பலபேர் பலவாறு விளக்கங்கள், சமாளிப்புகள் செய்தாலும், பெண்களை போகப் பொருளாகப் பார்த்த முஹம்மது அவர்கள் பல திருமணங்களை செய்ததன் காரணம் பெண்களின் அழகு மற்றும் காமம் போன்றவைதான் என்றுதான் குரானும், ஹதீஸ்களும் தெளிவான ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளன.
இப்பொழுது சொல்லுங்கள் : “முஹம்மது நபி பல பெண்களை திருமணம் செய்தது ஏன்?”.

கருநாக்கின் வாக்கு/சாபம் பலிக்குமா?

கேள்வி:
கருநாக்கின் வாக்கு/சாபம் பலிக்குமா?
பதில்:
எனக்கு தெரிந்த பெரியவர் ஒருத்தர் சொல்லுவார், நான் சொன்னா மழை வரும் தெரியுமான்னு, அதை என் போன்ல இருக்கும் அப்ளிகேசனே சொல்லுமேன்னு நான் சொல்லுவேன்
ஒரு படத்தில் சந்தானம் ஒரு ஹோட்டலில் வேலை செய்வார், சந்தானம் எதாவது தப்பு செய்யும் போது ஹோட்டல் முதலாளி வேலைய விட்டு போன்னு சொல்லுவார், தான் கருநாக்கு சொன்னால் பலிக்கும் மிரட்டியே சந்தானம் வேலையில் இருப்பார்
இப்படி சினிமாவையும், புத்தகத்தில் படித்தும் தான் மக்கள் மூடநம்பிக்கையை வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள், சீமான் கூட ஒருமுறை முப்பான் முருகன் தான் தமிழனத்தின் முதல் போராளி என்றார், எப்படி சொல்றிங்கன்னு கேட்டதுக்கு திருவிளையாடல் படம் பார்க்கலையான்னு கேட்டாரு, நான்ல்லாம் இப்ப நினைச்சாலும் சிரிச்சிகிட்டு இருக்கேன்
சாபம் பற்றி
உங்களை யாராவது திட்டினால் நீங்கள் எதும் தவறு செய்யவில்லை என்றால் உங்களுக்கு கோவம் வரும், தவறு செய்திருப்பின் அமைதியாக இருப்பீர்கள். அது ஒரு எதிர்வினை.
உங்கள் முகத்துக்கு நேராக ஒருவர் சாபம் விடும் பொழுது, அவருக்கு நான் எதும் தீங்கிழைத்து விட்டமோ, நம்மால் அவர் பெரும் இழப்பை சந்திப்பு விட்டாரோ என உங்களுக்கு குற்ற உணர்வு வந்தால் அது மன உளைச்சலை உண்டாக்கும், மன உழைச்சல் உங்களை எந்த வேலையும் செய்ய விடாது, எல்லார் மீதும் எரிந்து விழுவீர்கள், உங்களுக்கு நீங்களே கொடுத்து கொள்ளும் தண்டனையே சாபத்தின் பலனாக நீங்களே உணர்வீர்கள்.
உங்க மனசாட்சிபடி நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை, வேலையந்த வெட்டிபய எதோ சாபம் விட்டு போறான்னு நகர்ந்து சென்றால் அது உங்களை எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
யாரும் சாபம் விடனும்னு அவசியமில்லை, குற்ற உணர்வே சாபம் தான், அதனால் முடிந்த வரை உங்கள் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருங்கள். அதுவே நிறைவான வாழ்க்கை

குர்ஆனும், அதன் சுய முரண்பாடுகளும்

குர்ஆனும், அதன் சுய முரண்பாடுகளும்
குர்ஆன் தனக்குத்தானே எவ்வாறு முரண்படுகிறது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியல் சுருக்கமாக விளக்குகிறது.
கீழே காணப்படும் எண்கள் குர் ஆனின் வசனங்களைக் குறிப்பிடுகிறது.
1) படைப்பாளன்
அல்லாஹ் மட்டுமே : 39:62, 40:62
படைப்பாளர்களில் சிறந்தவன் : 23:14, 37:125 (மற்ற படைப்பாளர்கள் யார்?)
2) படைப்பின் காரணம்
அல்லாஹ்வை வணங்குவதற்காக : 2:21, 51:56, 13:15
நரகத்திற்காக : 7:179, 50:30, 19:71
படைப்பினங்களிடமிருந்து எவ்வித
தேவைகளற்றவன் : 3:97, 35:15
3) பூமி மற்றும் வானங்களின் படைப்பு
பூமி முதலில் படைக்கப்பட்டது : 2:29, 41:9-12
வானம் முதலில் படைக்கப்பட்டது : 7:54, 10:3, 11:7, 32:4, 79:27-30
ஆறு நாட்களில் படைக்கப்பட்டது : 7:54, 10:3, 11:7, 25:59
எட்டு நாட்களில் படைக்கப்பட்டது : 41:9-12
‘குன்’ என்றால்உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
4) பூமி மற்றும் வானங்களின் வாரிசு
படைப்பினங்களிடமிருந்து பெறப்பட்டது : 3:180, 15:23, 19:40, 21:89, 28:58
அல்லாஹ்வே அனைத்திற்கும் உரிமையாளன் : 2:116, , 3:189, 9:116,10:55, 20:6, 21:19, 57:2 , 44:85
அல்லாஹ்வே அனைத்திற்கும் வாரிசு : 15:23
5) மனிதன் படைக்கப்பட்டது
தூசியிலிருந்து : 3:59
ஈரமான கருப்பு களி மண்ணிலிருந்து : 17:61, 38:71
சுடப்பட்ட களி மண்ணிலிருந்து : 15:26
அல்லாஹ்வின் இருகைகளால் : 38:75
தண்ணீரிலிருந்து : 21:30
எதுவுமாக இல்லாத நிலையிலிருந்து : 19:9, 19:67
எதுவுமாக இல்லாத நிலையிலிருந்து படைக்கப்படவில்லை : 52:35
‘குன்’ என்றால்உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
6) அல்லாஹ்விற்கு வாரிசு
அவன் நாடினால் தன்னிலிருந்தே உருவாக்க முடியும் : 39:4
(பெண்) துணை இல்லாததால் வாரிசு இல்லை : 6:101-102
அல்லாஹ்வின் ஆணையால் மரியம் (ஆண்) துணையின்றி தாயானார் : 19:21
‘குன்’ என்றால் உடனே உருவாகிவிடும் : 2:117, 3:59, 19:35
7) பாதுகாவலர்களும் நண்பர்களும்
அல்லாஹ் மட்டுமே : 2:107, 5:55, 9:116, 17:111, 29:22, 32:4, 42:28
வானவர்கள் : 13:11, 41:31-32, 82:10
நபிமார்கள் : 5:55, 13:11
நம்பிக்கையளர்கள் : 9:71,
கிருஸ்துவர்கள் : 5.82
8 ) வேதங்களின் நிலை
மக்காவிற்கும் அதை சுற்றியிருக்கும் பகுதி மக்களுக்காக : 42:7
நன்கு விவரிக்கப்பட்டுள்ளது : 2:85, 2:159, 3:138, 6:103,6:116,10:37, 16:89
பல பொருள் தரும் வசனங்கள் உள்ளது : 3:7
யூதர்களும் கிருஸ்துவர்களும் மாற்றிவிட்டனர் : 2:75 79, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41, 41:43, 7:162, 9:169
யாரும் மாற்ற இயலாது : 6:34, 6:115, 10:64,
அல்லாஹ் மாற்றுவான் : 2:106, 13:39, 16:101
9) மறுப்பாளர்களுக்கு சவால்
ஒரு அத்தியாயத்தைக் கொண்டுவர முடியுமா? : 2:23, 10:38
பத்து அத்தியாயங்களை கொண்டுவர முடியுமா? : 11:13
முழு குர்ஆனைக் கொண்டுவர முடியுமா? : 17:88, 52:34
இரண்டு வேதங்களைக் கொண்டுவர முடியுமா? : 28:49
10) மனிதனுடைய செயல்களுக்கு காரணம்
மனிதனின் அறிவே : 2:6, 4:79, 6:12, 6:149, 8:55, 11:118,
30:9, 42:30
சைத்தான் : 4:120, 38:41
அல்லாஹ்வின் விதி : 2:6-7, 2:272, 4:78, 6:9, 57:22, 36:7…
11) அல்லாஹ்வின் ஒருநாள் என்பது மற்றும் மறுமை நாளின் அளவு என்பது
1,000 ஆண்டுகள் : 22:47
50,000 ஆண்டுகள் : 70:4
12) யூதர்களும் கிருஸ்துவர்களும்
அவர்களின் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பளிக்கப்படும் : 2:62, 2:139
நிரந்தரமான நரக தண்டனை : 4:150-151, 9:17, 9:30
அவர்கள் கொல்லப்படவேண்டும் : 5:33, 5:54, 8:39, 9:5, 9:29, 47:4,
நெருங்கிய நண்பர்கள் : 5:82
(கிருஸ்துவர்கள்)எதிரிகள் : 3:118, 5:51, 5:57, 5:82 (யூதர்கள்),
58:14, 60:13
அவர்களை மன்னிக்கவும் : 5:13
அவரவர் பாதை அவரவர்களுக்கு : 109:6
அவர்களின் பெண்களைத் திருமணம் செய்யலாம் : 5:5, 9:30
அவர்களின் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது : 2:221, 60:10
13) நபிமார்களின் நிலை
நபிமார்களிடையே பேதம் பார்க்கக்கூடாது : 4:152
அவர்களிடையே தகுதி வேறுபாடு இருந்தது : 2:253, 17:55
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டனர் : 16:36, 29:27, 35:24
சமுதாயத்தின் மொழியிலே அனுப்பிவைக்கப்பட்டனர் : 14:4
அரேபியர்களிடையே அனுப்பப்படவில்லை : 28:46, 32:3, 34:44, 36:6
நபி ஈஸா இறக்கவில்லை : 4:157, 4:158
நபிமார்களுக்கும் மரணம் உறுதியானது : 3:144, 23:15, 39:30
நபி யூனுஸ் வெட்டவெளியில் வீசப்பட்டார் : 37:145
நபி யூனுஸ் வெட்டவெளியில் வீசப்படவில்லை : 68:49
14) பத்ரு போரில்
1000 வானவர்கள் : 8:9
3000 வானவர்கள் : 3:124
5000 வானவர்கள் : 3:125
15) தீர்ப்பு நாளில்
எவருடைய பரிந்துரைகளும் ஏற்கப்படமாட்டாது : 2::48, 2:123, 2:254, 6:51, 78:37
பரிந்துரைகள் ஏற்கப்படும் : 10:3, 34:23, 20:109, 21:23, 53:56
16) நரகத்தில் மறுப்பாளர்களுக்கு உணவு
ஜக்கூம் பழம் மட்டுமே : 37:62 – 66
தரி என்ற முள் வகை மரம் மட்டுமே : 88:6
துர்நாற்றமான சீழ் மட்டுமே : 69:36

கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழை

சும்மா கிடந்த சங்கை.... ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
வீரபாண்டியக்(?) கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே .
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.
ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.
இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான், வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.
இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.
கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.
இந்நூல் மூலம் நமக்கு தெரியவருவதுயாதெனில்,
வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பொய்ப் பரப்புரை செய்து கட்டப்பட்ட பிம்பமே கட்டபொம்மு.
எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது. இது பொய்.
ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான்.
தமிழர்கள் அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்.

பிள்ளையார் ஊர்வலத்தை முன்வைத்து ஓர் உரையாடல் .

பிள்ளையார் ஊர்வலத்தை முன்வைத்து ஓர் உரையாடல் .
சென்ற ஆண்டைவிட இவ்வாண்டு தமிழகத் தில் பிள்ளையார் சிலைகள் எண்ணிக்கை அதிகம் என மார்தட்டி , ஆன்மிக எழுச்சி என புழங்காகிதம் அடைந்தார் அந்த காவிசங்கி .
நான் பார்த்ததை ,விசாரித்து அறிந்ததை , தகவல் சேகரித்ததைக் கொண்டு அசை போட்டேன் .
தமிழகத்தின் எந்த மூலையில் பார்த்தாலும் பிள்ளையாரைக் கரைக்க ஊர்வலம் போகும் போது பத்து பதினைந்து விடலைப் பசங்கள் சீருடை பனியன் அணிந்து சென்றனர் மக்கள் கண்டு கொள்ளவே இல்லை .
சுற்றுச்சூழலை நீர்நிலையை மாசுபடுத்தாத பிள்ளையார் என்பதை இந்த வெறிக்கூட்டம் கிஞ்சிற்றும் மதிக்கவே இல்லை.சமூக அக்க றையோ ,பொதுநல சிந்தனையோ அற்ற மதவெறியே அதில் மேலோங்கி நிற்கக் காணலாம் .
இந்த விடலைப் பிள்ளைகள் ஆன்மீகம் ,மதம் எல்லாம் அறிந்தவரல்ல ; உசுப்பிவிட்டதால் நாக்கில் தேன் தடவியதால் வந்த கூட்டமே . போதையும் வெறிக்கூச்சலும் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது ஊர்வலத் தில் ஒலிபரப்பட்ட பாடல் கூட பெரும்பாலும் சினிமா குத்துப்பாட்டே ;சாமி பாட்டல்ல .
கொங்கு மண்டலம் சார்ந்த மோடிக்கு கடந்த தேர்தலில் ஆதரவு நல்கிய குமார் துரைசாமி கூறுகிறார் ,“வசூல் செய்வதும் ஊர்வலங்கள் நடந்துவதும் எனக்கு தெரிந்து 25 வருசங்க ளாக நடக்குது . அந்த அந்த பகுதியில் உள்ள 25 வயதுக்கு உட்பட்ட வாலிபர்கள் தாங்கள் நண்பர்களோடு இணைந்து செய்வார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் அவங்க அவங்க வேலையை பார்த்துட்டு போய் விடுவார்கள். புதிய குழுக்கள் வருவார்கள்.
ஈரோட்டில ஒரு காலத்துல முன்னாடி நின்னு நடந்திய யாரும் அரசியலுக்கு வரவில்லை அவங்க அரசியல் கருத்தை இந்த விழா
முடிவு செய்யவில்லை,இப்பயாரும் முன்னாடி நின்னு நடத்திட்டு இருக்கவில்லை
இவரின் இந்த கணிப்பை நான் நிராகரிக் கவும் இல்லை ;அப்படியே ஏற்கவும் இல்லை .
தமிழகம் முழுவதும் சுமார் 25,000 பிள்ளை யார் என மிகக்குறைவாக கணக்குப் போட்டாலும், ஒரு பிள்ளையார் பின்னால் சுமார் 15 விடலைப் பையன்கள் என்று மிகக்குறைவாகக் கணக்குப் போட்டாலும் சுமார் ஆறு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அவர்களில் 2 சதம் பேரிடம் மதவெறி விஷம் ஏறினும் சுமார் 12,500 பேர் .
வருடாவருடம் இதேபோல் எனில் மெல்ல மத வெறி விஷம் ஏற்றப்படுகிறது.அதன் பேரா பத்தைப் புரிந்து முற்போக்காளர்கள் எதிர் வினை ஆற்றல் அவசியம்.மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் சிந்தனைக்குப் பின் விடலைப் பருவ இளைஞர்களை திரட்டல் மிகமிக அவசிய அவசரப் பணியாகும்,
"கோவையில் பெரும் பணக்காரர்கள் (இந்துக்கள்தான்) வசிக்கும் ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி (வனக்கல்லூரியை ஒட்டி உள்ள பகுதி), ரேஸ் கோர்ஸ் சாலை" ஆகிய பகுதிகளில் வினாயகர் சிலைகள் அநேக மாக இல்லை.
இந்த ஆட்சியால் பெரும்பாலும் லாபமடைந்த ஆதிக்க சாதிகளை சேர்ந்தவர்கள், பனியாக் கள்,மார்வாரிகள்,ஜெய்ன்கள்,யாரும் வினாய கர் பந்தல்களில் உட்கார்ந்திருக்கவுமில்லை.
வினாயகரின் அதிதீவிர பக்தைகளான பெண்கள் இல்லை. பண்பாட்டு நடவடிக்கை கள் இல்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகள் இல்லை. நமது கோவில்களில் வினாயகர் சதுர்த்தி அன்று இருந்த கொண்டாட்ட மனநிலை அறவே இல்லை.
உழைக்கும் வர்கங்களைச் சேர்ந்த இளைஞ ர்கள் பந்தலில் உட்கார்ந்திருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள்.
நமது பாரம்பரியத்திலிருந்து அன்னியப்பட்டு நிற்கிறது இந்த வழிபாட்டு முறை.” என்கிறார் இரா. முருகவேள்.
“இவர் சொல்வதில் உண்மையுண்டு .சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட போது கும்பிடவும் பூஜை செய்யவும் முண்டியடித்த பெண்கள் கூட்டம் இப்போது கிட்டத்தட்ட இல்லை.
மது போதை வாசம் மிக்க சில காலிகளின் பிள்ளைப்பருவ சேட்டையாய் மாறிக்கொண் டிருக்கிறது இப்பிள்ளயார் விழாக்கள் .இது இந்து முன்னணி ஏற்பாடு செய்யும் பிள்ளை யாரின் அவலம் மட்டுமே .பாரம்பரியமான பிள்ளையார் கோயில்களில் இன்றும் கூட்டம் முட்டி மோதத்தான் செய்கிறது .
“பிள்ளையாரை கேடயமாகி செங்கோட்டை யில் எச் ராசா வகையறா திட்டமிட்டு நடத்திய சிறுபான்மை மீதான தாக்குதல் அவர்கள் நோக்கத்தை நிறைவேற்ற உதவவில்லை . மதக் கலவரமாக பற்றவில்லை.தமிழகம் மதவெறித் தீயில் பொசுங்கவில்லை.
இது மட்டுமல்ல .அண்மையில் சங்பரிவாரின் இத்தகைய முயற்சி எல்லாம் இந்தியா முழுவதும் ஒரு பக்க கொதிப்பாய்த்தான் முடிகிறது .
இந்தியாவெங்கும் இந்துக்களோ ,முஸ்லீம்க ளோ ,இதரர்களோ மதக்கலவரத்தை விரும்ப வில்லை .மக்கள் ஒற்றுமையை சீர்குலைப் போர் யாராயினும் மக்கள் நிராகரிப்பர் .
இதுவே நமக்கு நல்ல செய்தி .அவர்களுக்கு கெட்ட செய்தி .” என நான் இட்ட பதிவும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கதே .
ஆக ,’ ஆன்மீகப் பேரெழுச்சி” என்கிற சங்கிகளின் ஆரவாரக் கூச்சலைக் கண்டு மனம் தளரவும் வேண்டாம் ,மதவெறி நச்சை மெல்ல பரப்பும் அவர்களின் முயற்சியைக் குறைத்து மதிப்பிட்டுவிடவும் வேண்டாம் .
மதச்சார்பின்மைக்காகவும் அறிவியல் மற்றும் சமத்துவ விழிப்புணர்வுக்குமான நம் போராட்டம் ,முயற்சி அனைத்தும் இளைஞர் மாணவர் ,பெண்கள் மத்தியில் இன்னும் பலமடங்கு வீச்சோடும் நுடபத்தோடும் முன்னெடுக்கப்பட வேண்டும் .

பெண்களை அசிங்க படுத்துறதுதான் இந்த காவியங்களோட நோக்கமா?

இராமாயணத்துல சூர்ப்பனகை என்ற இராவணனின் தங்கை இராமன் மீது கொண்ட மோக உணர்வால் அவனை அடைய வேண்டி இராமனிடம் கேட்ட பொழுது சூர்ப்பனகையோடு மனம் 
குளிர பேசி விட்டு என்னால் முடியாது. நான் ஏக பத்தினி விரதன்.
என் தம்பி அர்ச்சுனனிடம் கேட்டு பார்.முடிந்தால் உன் ஆசையை பூர்த்தி செய்து கொள் என்று ஏளனம் 
செய்தவன் இராமன். இது போக 
அவள் மூக்கை வேற இரண்டு பேரும் 
அறுத்து விட்டாங்க.தர்மத்தின் 
ஊற்று இராமனோட லீலை.
மகாபாரதத்தில பாண்டவர்கள் ஐந்து 
பேருக்கும் பத்தினியா இருக்கிற பாஞ்சாலியை வைச்சிக்கிடுறதில 
அஞ்சு பேரும் ஒரு உடன்படிக்கை 
போடுறாங்க.ஒரு வருடத்துக்கு ஒருத்தன் கூட இருக்கனும்.
இந்த ஒரு வருடம் மற்ற நாலு பேரும் 
பாஞ்சாலி கூட ஒப்பந்த காரன் இருக்கிறதை பார்க்க கூடாது.
அப்படி பார்த்து விட்டால் ஒரு வருடம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
தருமனும் பாஞ்சாலியும் தனிமையில் இருக்கும் போது பிராமணனுக்கு ஏற்பட்ட துயரம் 
போக்குவதற்காக தன்னுடைய 
வில்லை எடுக்க அந்த அறையில் 
நுழைந்து விடுகிறான் .
இதனால் ஒப்பந்த விதி படி நாட்டை விட்டு போகிறான். போன இடத்துல 
கங்கையில களிச்சிகிட்டு இருக்கும் போது உலூபி என்ற நாக கன்னிகை 
அவன் அழகில் மோகம் கொண்டு 
அவனிடம் நேரடியாக முறையிடகிறாள்.அர்ச்சுனனும் அதை ஏற்று அவள் ஆசைய அன்று இரவு நிறைவேற்றினான்.
பெண்களை அசிங்க படுத்துறதுதான் இந்த காவியங்களோட நோக்கமா?
இராமன் கடவுள் அவதாரம்.
நினைச்சா சூர்ப்பனகை எண்ணத்தை மாற்றி இருக்கலாம்.
அதை செய்யாமல் ஏறுக்கு மாறா 
கிறுக்கு தனம் பண்ணி இராவணன் 
சீதாவை தூக்கிட்டு போற அளவுக்கு
ஒரு காரணத்தை உண்டாக்கணுமா?
அருமை அருமை.😐😐


அர்ஜுனன் ஒரு பெண்பித்தன் அவனது மனைவிகளுக்கு எண்ணிக்ககையே இல்லை..அல்லி எனும் மனைவி அவனுக்கு மிகவும் பிடித்தமானவள்..அல்லிஅர்ஜுனன் என்ற பெயரே அவனுக்கு உண்டு..அர்ஜுனனுக்கு போறஇடமெல்லாம் பொண்டாட்டி என்ற பழமொழியே உண்டு..இந்த ஒழுக்க சீலருக்குத்தான் அந்த கோபியர் கண்ணன் கீதை என்ற அறிவுரை கொடுக்கிறான்..வெட்கக் கேடு..இவர்களைவாழ்வியல் நாயகர்களாக கொண்டதால்தான் பார்ப்பனியம் ஒழுக்கக்கேட்டின் உறைவிடமாக இருக்கிறது.

வென்றவன் சொல்வதெல்லாம் வேதம் என்பதால் இப்படி எழுதியிருக்கிறார்கள் . இன்று எச்.ராஜா பேசுவதும் அப்படித்தான்



😐



வென்றவன் சொல்வதெல்லாம் வேதம் என்பதால் இப்படி எழுதியிருக்கிறார்கள் . இன்று எச்.ராஜா பேசுவதும் அப்படித்தான்

புரியும் வரை நீ ஆடு

அருமை இளைஞனே..
உன் தலையில் ஒரு காவி ரிப்பன் கட்டியிருந்தாய்.
புதிய டி ஷர்ட் அணிந்திருந்தாய்... அதில் வீரசிவாஜி படம் இருந்தது. உன் நெற்றியில் காவி செந்தூரம் இருந்தது...அந்த புதிய டி ஷர்ட் கிழே உன் பழைய டிரவுசர் அல்லது தூக்கி கட்டிய கைலி இருந்தது. கால்கள் எல்லாம் பழுப்பேறி இருந்தது.
உன்னை போலவே உங்களை சேர்ந்த ஒருவர் உங்களுக்கு தொகைகளை பிரித்துகொண்டிருந்தான். உங்களை போலவே ஆடையணிந்த சிலர் பறை அடிக்க நீங்கள் நகர்ந்தீர்கள்..
நாக்கை துறுத்திய படி நீ ஆட.. உன் சக தோழர்களும் அப்படியே ஆட....ங்கொத்த டே நல்லா குத்துடா... என நீ பறை தோழர்களை நோக்கி விசிலடித்து ஆடினாய்.... தன் கையில் இருப்பது ஆதிதமிழனின் பறை என்பது அறியாது , அது ஆலயங்களில் இருந்து தூக்கி எறியபட்டது அறியாது அவனும் அடித்தான்... மேற்கு தொடர்சி மலை அடிவாரம் தொட்டு அது எதிரொளித்தது..
உன் பின்னால் சிலர்.... வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார்கள்... பாவம் அவர்களுக்கு வீரசிவாஜி டி ஷர்ட் கிடைக்கவில்லை. நெற்றியில் காவி செந்தூரம் இல்லை. வேர்வை கூட வராமல் நடந்து வருகிறார்கள்.
முன்னாடி உங்களில் ஒருவன் கணபதி பப்பா மோரியா என கத்துகிறான்.தொடர்ந்து ஏதோ கத்துகிறான். சாலையின் ஓரத்தில் நிற்கும் பெரும்பாலான கைகள் பிள்ளையாரை வழிபடவே இல்லை. ஏதோ ஒரு மரத்தின் அடியில் இருக்கும் பிள்ளையாரை கூட கும்பிட்டபடி வாகனத்தில் செல்பவர்கள் தான் அவர்கள்... ஆனால் உங்களை ஏதோ ஒரு பூச்சியை போலவே பார்த்தார்கள்.
உங்களை கடந்து சென்றேன்... நேற்றைய பயணம் முழுவதும். பிறகு மாலை கலவரம் கைது என்றதும் பார்த்தேன்... அந்த வெள்ளை வேட்டியோ சட்டைகள் இல்லை. அவர்களுக்கு பின்னால் கொஞ்சம் வெள்ளை நிறத்தில் ஏசி காரில் வந்தவர்களோ ஒருவர் கூட இல்லை... அந்த கைதில்.... ஒரு ஸ்டேஷன் வாசலில்.. அந்த பிளாஸ்டிக் பறைகள் புடுங்கி வைக்கப்பட்டு இருந்தன... சிலர் அமர்ந்திருந்தார்கள்...
தாத்தா ரெட்டமலையில் தொடங்கி அம்பேத்கர் வழியாக பெரியார் சொன்ன எதுவும் உனக்கு வந்து சேரவில்லை என புரிந்தது... எப்படியும் இந்நேரம் உன்னை வெளியே எடுத்திருப்பார்கள் கூடுதலாக ஒரு இருநூறு கிடைத்திருக்கும். இனி அடுத்த ஆண்டு நீ தேவைப்படுவாய்.... காத்திரு இளைஞனே.
சாதீய கொடுவாள்கள் கொத்தாது இருந்தால்.. அடுத்தாண்டும் நீ ஆடு... உன்னை முன்னால் விட்டு அவர்கள் பின்னால் ஆடுவார்கள்... அது புரியும் வரை நீ ஆடு...