Monday, November 28, 2022

ஊழல் ஓழிப்பு போராளி H. Raja வும் - Lotus benefit fund -ம்

 ஊழல் ஓழிப்பு போராளி 


H. Raja வும் - Lotus benefit fund -ம் 


பாஜகவின் (முன்னாள்) மாநிலத் துணைத் தலைவர் ஹெச்.ராஜா பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு ஓர் அதிரடிக் கடிதம் வந்துள்ளது. 


பணத்தை பறிகொடுத்த திருச்சியை சேர்ந்த பழனியப்பன்-ரேவதி தம்பதியினர் பத்திரிக்கைக்கு அளித்த கண்ணீர் பேட்டி:-


பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரையின் பெயரில் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தை குடும்ப நிறுவனமாக 1997 ஆம் ஆண்டு காரைக்குடியில் துவக்கினார் ஹெச்.ராஜா. அப்பொழுது நான் பா.ஜ.க.வின் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தேன்.


ராஜா, மாநில செயலாளராக இருந்த பரிச்சயத்தால், அவர் மேலுள்ள நம்பிக்கையால், அவர் கேட்டுக்கொண்டபடி, முதலில் ரூ.50000 மட்டும் 'லோட்டஸ் பெனிபிட் பண்ட்'டில் முதலீடு செய்தேன். அதற்கு 2 வட்டி வீதம் கொடுத்திருந்தார். அதற்குப் பிறகு, ரூ.2 லட்சம் கூடுதலாக முதலீடு செய்தேன்.


அதற்குப் பிறகு ரூ.8 லட்சம் என பத்தரை லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தேன்.


திடுமென வட்டி வருவது நின்று விட, என்ன என்று கேட்டதற்கு, "நிறுவனத்தில் திருடு போய்விட்டது" என்றார்.


அதற்குப் பிறகு இன்றுவரை திருச்சியிலிருந்து, காரைக்குடிக்கு 200 தடவைக்கு மேல் வந்து சென்றுவிட்டேன். அவர் எனக்குப் பணத்தைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஆளை வைத்து கொலை செய்வதாக மிரட்டுகிறார். என்னைப்போல் அந்த நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் அதிகம். பணத்தை இழந்த அத்தனைப் பேரும் எங்களது பா.ஜ. கட்சியினரே. 


கட்சியில் மாவட்டப் பொறுப்பிலிருந்த எனக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை வாய் மூடி மௌனித்திருப்பதே" என்றார் பழனியப்பன்


முன்னாள் தேசியக்குழு உறுப்பினரும், பழனியப்பனின் மனைவியுமான ரேவதி கூறுகையில்,


"முதலில் ரூ.50000, அடுத்து ரூ.2 லட்சம் என அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தது போதும் என்றிருந்தோம். அப்போது சின்னக்கடை வீதியில் எங்களுக்கு சொந்தமான சொத்தை விற்று வங்கியில் போட்டு வைத்திருந்தோம்.


அதை தெரிந்துகொண்ட ஹெச்.ராஜா, "பேங்க்கில் சும்மாதானே பணம் கிடக்குது. இதை எங்ககிட்ட முதலீடு செஞ்சா, 2 வட்டி கிடைக்குமில்ல" என்றார். நாங்களும் அவர் பேச்சை நம்பி முதலீடு செய்து, நடுத்தெருவில் நிற்கிறோம். இப்ப, என் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடக்குது. அதற்காகக் கூட தந்துவிடலாமில்லையா?


வரும் தை பொங்கலுக்குள் எங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராவிட்டால் நான், என் கணவர், என் மகள் உட்பட மூன்று பேரும் ஹெச்.ராஜா வீட்டின் முன்னால் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்" என்றார் ரேவதி.


பாஜக-வின் தமிழக தலைவர்களில் இந்த ஹெச்.ராஜா என்பவர் ஒரு தினுசானவர். இவர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும்போது ஆதரங்களைப் பற்றி இம்மியளவும் கவலைப்படாமல் துணிந்து பேசக்கூடியவர். மறுதரப்பினரை பேச அனுமதிக்காமல் குறுக்கே பேசியும், கத்தியும் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடியவர்.


குறிப்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றியோ, காங்கிரஸின் மீதான பொருளாதார குற்றச்சாற்றுகள், ஊழல்கள் பற்றி பேசும் போதோ கொந்தளிக்கக் கூடியவர்.


ஆனால் அவரே ஊழல்வாதி தான்

சாதுவான பார்ப்பனர்களை ஜாதி வெறியர்களாக தூற்றுவது சரியா

 ஜாதியை இன்று

தூக்கி பிடித்து காப்பாற்றும் இடைநிலை சாதி

வெறியர்களை விட்டு விட்டு எப்போது பார்த்தாலும் சாதுவான

பார்ப்பனர்களை 

ஜாதி வெறியர்களாக

தூற்றுவது சரியா


#நண்பரின் பதில்

 நான் நம்புவது அவர்களுக்காக அல்ல!அவர்கள் ஜாதியத்தை பெரிதாக வளர்ப்பதில்லை 

நம் திராவிட கட்சிகளே ஜாதியத்தை வளர்க்கிறது.

நான் வெகு அரிதாகத்தான் கோவிலுக்கு செல்வேன்.


அர்ச்சனைகள் தட்டில் காசு கூட வெகு சில சமயத்தில்தான் இடுவேன்.


ஐயர்கள் மேல் எனக்கு பெரிய கோபம் ஏதும் இல்லை.


எனக்கும் கடவுளுக்கும் நடுவில் புரோக்கர்கள் யாரும் தேவையில்லை ஏன கருதுகிறேன்.


உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.


நான் பார்த்தவரையில் பிராமணர்கள் மூலம் ஏற்படும் ஜாதிய வேறுபாடுகளை விட ஆதிக்கஜாதிகள் செய்யும் ஜாதிய வேறுபாடுகளே அதிகம்.


அதை எதிர்த்து குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.


திகவினர் கூட ஜாதியத்தை வளர்கின்றனர்.


#என்பதில்

Mano Haran 

எரிவதை பிடுங்கினால்

கொதிப்பது அடங்கும்


ஜாதிக்கு விறகும் வைத்து

நெய்யும் ஊற்றுவது

பிராமணர்கள்

அவர்களின் மனுநீதி தர்மங்கள்


மூலம் எது என்று

அறியாத மூடர்கள்தான்

இடைஜாதி வெறியர்களை

குறை கூறுவார்கள்


இடைசாதி வெறியர்கள்

கல்வி அறிவு இல்லாமல்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக 

அரசர்கள் மூலம்

பார்ப்பனியம் வழி நடத்தப்பட்டதால்தான்


அவன் ஜாதி வெறியானக

இருக்கிறான்


அவனுக்கு முதலில் கல்வி

கொடுக்கவேண்டும்

என்பதை பெரியார் புரிந்தே.... 

காமராஜர் மூலம் பல ஆயிரம்

கல்வி கூடங்களை திறந்தார்/

திறக்க வைக்க துணை நின்றார்


அண்ணா இது மட்டும் போதாது

நம் மக்கள் 

ஆட்சிக் கட்டிலில்

ஏறினால்தான்

பார்ப்பனீயம் அடங்கும்

என்று தேர்தல் அரசியலுக்குள்

வந்தார்... 


அண்ணா எதிர்பார்த்தது போலவே

 பார்ப்பனீயம்

காமராஜரை அரசியலில் இருந்து இந்திராவை பிடித்து

ஒதுக்கியது... 


அண்ணாவுக்கு

தன் திட்டத்தை நிறவேற்ற

ஆயுள் இல்லை... 


அடுத்து வந்த கலைஞர்

கட்சியை காப்பாற்ற

பல தில்லு முல்லுகளை

செய்யவேண்டியதாகிவிட்டது


இதை வைத்து திராவிடத்தை

உடைக்க இந்திரா திட்டத்தில்

உதித்தவர் எம்ஜிஆர்


ஆனால் அவர் நேராக பார்ப்பனீய இந்திரா காங்கிரசில் இணையாமல்


தனி தவில் வாசித்தார்


அவரிடம் அதிகம் இருந்தவர்கள் ஜாதி மத வெறியர்கள்தான்


போலி திராவிட கொள்கையை

வைத்து மக்களை முட்டாளாக்கி

ஜாதி சனாதனம் வளர உதவியது

அதிமுக 


நாம் என்ன ஆயுதம்

எடுக்க வேண்டும் என்பதை

எதிரி தீர்மானிக்கிறான்


என்ற தத்துவப்படி

கலைஞரும் ஜாதி சாக்கடையில் இறங்கினார்


சூழ்நிலைக்கு தக்க தன்னை

தகவமைத்த உயிரே

நிலைத்து வாழும்


அப்படித்தான் திமுக 

இன்று வரை

உயிர்ப்போடு இருக்கிறது

ஜாதி சனாதனத்தை

எதிர்த்து போராடுகிறது


காரணம் கலைஞர்

ஒரு MBC தழ்ந்த ஜாதி பிரிவில்

பிறந்தவர்

அந்த வலி அவருக்கு தெரிந்திருந்தது.

2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன்

 #பகிர்வு

2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_.... 


அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். 


_அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்..எப்படி?!_


*மூட நம்பிக்கை*


*இறை நம்பிக்கை*


*மத நம்பிக்கை*


_இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது._


_*மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு*_


_1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்._


_2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்._

 

_3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்._


_4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்._


_5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்._


_6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்._


_*என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.*_


_*தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்.*_


_20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்.


_*காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை.*_


_எனது பெரியப்பா 3ஆம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ஆம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ஆம் வகுப்பு வரை சென்றார்._ 


_என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்._


_*இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை..?!*_


_*ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!?*_


_ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_


_*மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்.*_


_கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_


_*அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!*_ 


_*எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்.*_


_*நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்.*_

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்

*கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்மோனிய பொட்டி இளையராஜாவிடம்*




#கம்யூனிஸ்ட்_இயக்கத்திற்குதான் #நன்றிகடன்பட்டவர்கள்_இவர்கள்!


கேரளாவில் #இஎம்எஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது தேவிக்குளம், பீர்மேடு தொகுதி இடைத்தேர்தலுக்காக பிரச்சார மேடைகளில் பாடுவதற்காக மாயாண்டி பாரதி மூணாறு பண்ணைப் புரத்தில் தோட்டவேலை செய்து வந்த பாவலர் வரதராஜனை அழைத்து வந்துள்ளார். 


தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றபின் தலைவர்கள் எல்லாம் ஊருக்கு திரும்பியபின் மாயாண்டி பாரதியிடம் வாழ்க்கை நடத்த வழிச்சொல்லுங்கள் எனக்கூற, அதற்கு ஐமாபா, "நான் என்ன முதலாளியா? பணக்காரனா? என்ன செய்ய முடியும்? கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகையில் உன் பாட்டை பற்றி எழுதுகிறேன். ஆனா நீ ஒத்த குரல்ல பாடுனா பத்தாது. ஒரு கச்சேரி மாதிரி கொடுக்கனும்"ன்னு சொன்னார் ஐமாபா. 


அதற்கு, "என் தம்பி பயல்கள் 10 ,15 வயசு. அவனுங்கள கூட்டிட்டு வரேன்" என்றார் பாவலர் வரதராஜன். அதன்படி, தமிழ்நாட்டில் பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 


பாவலர் தம்பி பாஸ்கர், தபேலா போட, ராசய்யா (இளையராஜா) பெண் குரலில் பாட, அமர்சிங் (கங்கை அமரன்) ஜால்ரா போட, கச்சேரிகள் நடந்துள்ளது.


தனியாக பாட்டு மட்டும் பாடி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கலை அழகு கொடுக்க முடியாது என எண்ணி, கச்சேரி நடத்த தபேலா, ஹார்மோனியம், ஜால்ரா வாங்க தோழர்களிடம் நிதி தாரீர் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டப்பட்டது. 


அதற்கு தோழர்கள் அளித்த உதவியில் பாவலரின் இசை க்குழுவிற்கு இசைக்கருவிகள் கட்சியால் வாங்கப்பட்டுள்ளது. 


மாயாண்டி பாரதியால் சென்னையில் கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படி தான் தங்களது இசைப் பயணத்தை பாவலர் குடும்பம் தொடங்கியது.


#கம்யூனிஸ்ட் கட்சியால் அறிமுகம் செய்யப்படாமல் போயிருந்தால், இந்த நால்வரும் பண்ணைப்புரத்திலேயே இப்போதும் தோட்ட வேலை செய்து கொண்டிருந்திருப்பார்கள்.


வாழ்க்கை தந்த கம்யூனிஸ்ட் கட்சியை மறந்து பேசும் இவர்களை (கங்கை அமரன் மற்றும் இளையராஜா) போன்ற ஆயிரக்கணக்கான சுயநலவாதிகள் இந்த தேசத்தில் உள்ளனர். 

Saturday, November 26, 2022

கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான்

கடவுள்னு நீங்க கும்பிடுற சிலையே பார்ப்பனர்கள் காலுக்கு கீழதான் என்கிறார்களா ஐயன்மீர்?

 



அடே சங்கீஸ் இது என்ன அபிஷேகம் னு கேட்டு சொல்லுங்கடா.

 


 

சனாதனக் கதை

 சனாதனம்.. சனாதனம் என்று சங்கிகள் பொங்கிக் கொண்டிருக்கும் இந்த அற்புதமான சுபமுகூர்த்த வேளையிலே.. சனாதனம் பற்றி நாமும் அறிந்து கொள்ள சனாதனத்தின் மிக முக்கியமான இதிகாசமான மஹாபாரதத்தில் இருந்து கதைகள் சிலவற்றை அறிந்து கொண்டு சனாதனத்தின் சிறப்பை உணர்வோமாக!

சனாதனக் கதை - 1

யயாதியின் மகள் மாதவி

மஹாபாரதம் உத்தியோக பருவத்தில் இந்தக் கதை வருகிறது.

விசுவாமித்திரர் என்னும் அந்த மஹாமுனியிடம் சீடனாக இருந்து பொறுமை என்பதைக் கற்றுக் கொண்ட கலவன் என்னும் பிராமணன், விசுவாமித்திரரிடம், "நான் உங்களுக்கு ஏதாவது குருதட்சணை தர வேண்டும். தயவு செய்து என்ன வேண்டும் என்று கூறுங்கள்" என்றானாம். விசுவாமித்திரர் "எனக்கு எதுவும் தேவை இல்லை" என மறுக்க, மீண்டும் மீண்டும் கலவன் அவரைத் தொல்லை செய்து கொண்டே இருந்தானாம். விசுவாமித்திரர் கொஞ்சம் எரிச்சலாகி, "எனக்குக் கருப்பு நிறக் காதுகள் உடைய வெள்ளை நிறக் குதிரைகள் எண்ணூறு வேண்டும்" என்றாராம்.

"இப்படிப்பட்ட தரமான எண்ணூறு குதிரைகள் வாங்கிப் பரிசளிக்கும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே என்ன செய்வேன்? விஷ்ணுவிடம் சரணடைந்து கேட்கலாமா? என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கருடன் அவன் முன் தோன்றி, "வா நான் உனக்கு வழிகாட்டுகிறேன்" என்று தன் மீது அமர்ந்து கொள்ளச் சொல்லிப் பறந்தான்.

"உலகத்தில் பிராமணர்களுக்கு வேண்டிய செல்வத்தைத் தரவே அரசர்கள் இருக்கிறார்கள். வா உன்னை காசியை ஆளும் யயாதி என்னும் அரசனிடம் அழைத்துச் செல்கிறேன்" என்று யயாதியிடம் சென்றார்கள். யயாதியிடம் குதிரைகள் வேண்டும் என்று கேட்க, யயாதியோ "எண்ணூறு உயர்தரக் குதிரைகள் தரும் அளவுக்கு செல்வம் இல்லை. யாசகம் கேட்டு வந்த பிராமணர்களைத் திருப்பி அனுப்பினால் என்னுடைய குலமே அழிந்து விடும். செல்வம் இல்லாவிட்டாலும், என்னிடம் மாதவி என்னும் மகள் இருக்கிறாள். அவள் உலகமே வியக்கும் பேரழகி, அரசர்கள் முதல் அசுரர்கள் வரை அவள் கரம் பிடிக்கப் போட்டி போடுகிறார்கள். எண்ணூறு குதிரைகள் என்ன? இவளை எந்த அரசனுக்குக் கொடுத்தாலும் அவன் உலகத்தையே உங்களுக்குக் கொடுத்து விடுவான்" என்று கூறினார். கருடனும் "நான் உனக்கு வழி காட்டிவிட்டேன். இனி உன் திறமை" என்று கூறிவிட்டு பறந்துவிட்டார்.

அந்த கன்னிகையை அழைத்துக் கொண்டு கலவன் அயோத்தியை ஆண்ட ஹர்யாஸ்வா என்னும் இஷ்வாகு (ராமன் பிறந்ததாகக் கூறப்படும் வம்சம்) அரசனிடம் அழைத்துச் சென்று, "இவளை நீ மனைவியாக ஏற்றுக் கொள். இவள் உனக்கு நான்கு நல்ல மகன்களைப் பெற்றுத் தருவாள். ஆனால், அதற்குப் பதிலாக ஸ்த்ரீதனமாக  எனக்கு வெள்ளைநிறமும் கருப்புநிறக் காதுகளும் உடைய எண்ணூறு குதிரைகள் தர வேண்டும்" என்றார்.

அந்த மன்னன் "ஆஹா!இவள் பேரழகி தான். எனக்கு நன்மக்களைப் பெற்றும் தருவாள். ஆனால் என்னிடம் இருநூறு குதிரைகள் தான் இருக்கின்றன. நான் ஒரே ஒரு மகனை மட்டும் இவள் மூலம் பெற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னானாம்.

இதைக் கேட்ட மாதவி கலவனிடம், "ஐயா.. பரவாயில்லை. எனக்கு உறவு கொண்டு குழந்தை பெற்றாலும் மீண்டும் கன்னித்திரை உருவாகி விடுகிற வரம் இருக்கிறது. அதனால், நீங்கள் நான்கு மன்னர்களிடம் என்னை அழைத்துப் போய் குழந்தை பெற வைத்து எண்ணூறு குதிரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றாளாம்.

அது போலவே செய்து அந்த மன்னனுக்குக் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை விட்டுவிட்டு மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் என்னும் அந்த பிராமணர் அடுத்த மன்னனைப் போய்ப் பார்த்தார். அவன் பீமஸேனனின் மகனாகிய திவோதசன். திவோதசனும் "நானும் இதை ஏற்கனவே கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகப்பெரிய மரியாதை" என்று கூறி மாதவியை ஏற்றுக் கொண்டு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளைக் கொடுத்தானாம்,

அடுத்ததாக மாதவியை அழைத்துக் கொண்டு கலவன் போஜ அரசனாகிய உசீநரனிடம் சென்றார். அவனும் முன்னவர்களைப் போலவே ஒரே ஒரு குழந்தையை மட்டும் மாதவி மூலம் பெற்றுக் கொண்டு இருநூறு குதிரைகளை மட்டும் கொடுத்துவிட்டானாம்.

கலவன் அறுநூறு குதிரைகளையும், மாதவியையும் வைத்துக் கொண்டு அடுத்து யாரிடம் போகலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கருடன் அவரிடம் வந்து, மீதமிருக்கும் இருநூறு குதிரைகளுக்கு பதிலாக விசுவாமித்திரருக்கு இந்த மாதவியைக் கொடுத்து ஒரு மகனைப் பெற்றுக் கொள்ளச் சொல்லலாம் என்று யோசனை கூற, அது போலவே விசுவாமித்திரரிடம் சென்று கலவன் கூறினான். விசுவாமித்திரரோ, "இதை நீ முன்பே சிந்தித்து இருந்தால், இவ்வளவு பேரிடம் போக வேண்டிய தேவை இல்லை. நானே, மாதவியுடன் கூடி நான்கு மகன்களைப் பெற்றிருப்பேனே?" என்று கேட்டு, மாதவியையம் அறுநூறு குதிரைகளையும் பெற்றுக் கொண்டு கலவனை அனுப்பிவிட்டாராம்.

மாதவியுடன் கூடி விசுவாமித்திரர் அஷ்டகன் என்னும் மகனைப் பெற்றெடுத்து அவனிடம் அறுநூறு குதிரைகளை விட்டுவிட்டு, மாதவியை மறுபடியும் கலவனிடம் கொடுத்துவிட்டாராம்.

கலவனும் மாதவியிடம் "பெண்ணே! நீ என்னையும் உன் தந்தையையும் நான்கு மன்னர்களையும் உன் மகன்களைப் பெரும் சக்தியால் காப்பாற்றிவிட்டாய். சென்று வா!" என்று கூறி தந்தை யயாதியிடம் கொடுத்து விட்டான்.

இதற்கு மேலும் தனக்கு மணவாழ்க்கை வேண்டாம் என்று எண்ணிய மாதவி துறவறம் பூண்டு காடுகளில் வாழ்ந்து மடிந்தாள்.

---------------------------------------------------------------------

இது ஒரு கதை தான். உண்மையான நிகழ்வு என்று நாம் கூறவில்லை. ஆனால், இப்படி ஒரு கதை எழுதப்பட்டதும் அது மிகப்பெரும் இதிகாசத்தில் பகுதியாக இன்றும் இருப்பதும் உண்மை.

இந்தக் கதையை எழுதியவர் வேதங்களைத் தொகுத்த, பிரம்மசூத்திரம் என்னும் வேதாந்தத்தின் அடிப்படை நூலை எழுதிய, பல புராணங்களை எழுதிய ரிஷி என்று சனாதனிகள் நம்புகிற வேதவியாசர்.

இந்தக் கதை மூலம் மக்களுக்கு அவர் சொல்ல விரும்பியது என்ன?

1.பிராமணர்கள் தானம் என்று கேட்டால் மறுத்தால் வம்சமே அழிந்து விடும்.

2. அவர்கள் கேட்பதைக் கொடுக்க முடியாவிட்டாலும் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தே ஆக வேண்டும்.

3. தந்தை தன்னைத் தானமாக எவனோ ஒருத்தனுக்குக் கொடுத்தாலும் எந்த எதிர்ப்பும் இன்றி சென்றுவிட வேண்டும்.

4. தானம் வாங்கியவர் தன்னை எப்படி பயன்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.

5. பிள்ளை பெற்றுக் கொடுக்கும் தன்னுடைய கடமையை எவன் செய்யச் சொன்னாலும் பெண் செய்ய வேண்டும்.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட கதைகளை உருவாக்கி, மக்கள் மத்தியில் பரப்பி தன்னுடையதும் தான் சார்ந்த கூட்டத்தின் நலத்தையும் மற்றவர்கள் எப்பாடுபட்டாவது எவ்வளவு கேவலமான செயல்களைச் செய்தாவது கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே சனாதனம். இந்த சனாதனம் நாட்டை அல்ல; ஒரு சிறு கூட்டத்தை மட்டுமே கட்டிக் காக்கிறது என்பதே உண்மை.✍🏼🌹

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள்

 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை ஏமாற்றி முட்டாளாக்கிய ஸ்ரீரங்கம் பார்ப்பனர்கள் - இன்றுவரை  தொடரும் பார்ப்பன தந்திர அரசியல்...

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்..

திருச்சிக்குப் பக்கத்தில சிறீரங்க கோயில்ல துலாபாரம் நடத்துருக்கு.. செஞ்ச பாவத்துக்கு ஏத்த மாதிரி எடைக்கு எடை பொருள கடவுளுக்கு குடுக்கப்படுறதா சொல்லிட்டு, ஐயர்ங்க ஆட்டய போடுற நிகழ்ச்சி தான் துலாபாரம்.

இந்த பார்ப்பனர்களுக்கு துலாபாரம்  கொடுத்து அதிகமான அரசர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றிப்பட்டுருக்காங்க. அதுல ரெம்ப அப்ராணியா, முட்டாளா ஏமாந்தவன் தான்  சுந்தர பாண்டியன் ங்கிற மன்னன். இப்படி சொன்னா நம்ம ஆளுகளுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் னு சொன்னா தெரியும். நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரிய வைக்கணும்

அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துப் போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான் னு வரலாறு சொல்லுது.

ஒரு ஐயர் சுந்தரபாண்டிய மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிற, பல உயிர்களைக் கொன்றிருக்கிற.. அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய செய்யணும்" னு சொல்லிருக்குறான். மன்னனும் "சரி செஞ்சிட்டா போச்சி.. துலாபாரம் எங்கே செய்யலாம்?" னு கேக்க., "சிறிரங்கத்தில போயி பெருமாளுக்கு செய்வோம்"னு பூணுல் போட்ட ஐயர் சொல்ல,  மன்னனும் "சரி.. அப்படியே பண்ணிறலாம்"னு சொல்லிட்டான்.

சுந்தரபாண்டியன் துலாபரம் கொடுக்குற மேட்டர கோயிலுள இருக்குற ஐயர்ங்கிட்ட சொல்ல.. ஐயர்ங்க கோயிலில தராசு கட்டி துலாபரத்துக்கு ரெடி பண்றாங்க

சுந்தரபாண்டியன் பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் போட்டு கோயிலுல இருக்குற ஜனங்களுக்கு ஒரு கும்புட போட்டு தராசில் உட்காரப் போனான். அப்போ.. ஒரு பட்டர் கேக்குறான் "மன்னா.. எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்"னு

(எடைக்கு எடை சாக்குப்பை நிறையா வெள்ளரிக்காய் தாறேன், கத்தரிக்காய் தாறேன், தக்காளி தாறேன், பழம் தாறேன் னு சொன்னா.. ஐயர்பயலுக மூடிட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போயிருப்பாங்க...)

ஆனா.. சுந்தரபாண்டியன் சொன்னது"நான் எடைக்கு தங்கம், பொருள்கள் தரப் போகிறேன்" னு

இவன் இப்படி சொன்னதும் பார்ப்பன மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி.. "எடைக்கு எடை தங்கம், வைரம் எல்லாம் கொடுக்கப் போறாான். எல்லாம் நம்மவாளுக்குத்தான் கிடைக்க போது, இவன் பட்டு வேட்டி சட்டையோட தாரசுல உட்காரக் கூடாது" னு ஒரு ஐயர் ஆரம்பிக்கான் "மன்னா.. நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்?"னு கேக்க, மன்னன்"போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான்"னு சொல்ல,

"ரொம்ப மகிழ்ச்சி. நீங்க துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்க.. ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள்"னு ஒரு ஐயர் சொல்றான்.

அங்க இருக்குற எல்லா ஐயர் பயபுள்ளைகளும் கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க "போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இதை எல்லாத்தையும் கொண்டு போவான்.. இதுவே ஒரு 50 கிலோக்கு சேரும், அப்றம் சுந்தரபாண்டியன் ஒல்லியான ஆள் இல்ல,. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் எல்லாம் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் எக்ஸ்ட்ரா வரும்" னு பிளான்ன போட்டு... "சுந்தரபாண்டிய மன்னா.. நீங்க போருக்கு எப்படி போனீங்களோ.. அத மாதிரி தராசுல உக்காருங்க,.. அப்போதான் நீங்க செஞ்ச பாவம் போகும்"னு ஐயர்ங்க சொல்ல ஆரம்பிட்டாங்க.

போரில எதிரிகள பாத்து நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த ஐயர், பட்டர் பயக கோரஸ்ஸா சொன்னத பாத்து நடிங்கிட்டான். உடனே தளபதிய கூப்ட்டு.., உடைவாள், கவசம், ஈட்டி எல்லாம் எடுத்துட்டு வர சொல்லி,  போருக்கு போன மாதிரியே தராசில் உட்காரப் போறான்.

"கொஞ்சம் பொறுங்க மன்னா" னு இன்னொரு பூணுல் போட்ட பெரிய பட்டர் கேக்குறான் "நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்?"னு கேக்க.., இப்ப யாரு.. னு பாத்த மன்னன் "போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன்"னு சொல்ல,

அதுக்கு பட்டர் "சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனா ஒன்னு, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள்" என்று கேட்டவன் "போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?"

(யானையோட, ஒவ்வொரு தந்தமும் மட்டும் 20 கிலோ எடை இருக்கும். மன்னனோட யானை டன் கணக்குல வெய்ட் இருக்கும்) இத கணக்குபோட்ட பட்டர் "யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும். யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரியோடு உக்காரவேண்டும்"னு சொல்ல அங்க இருக்குற ஜனங்க, பொண்டு பொடுசுக எல்லா சிரிச்சிட்டாங்க.

பக்கத்திலே இருந்த ஐயர்ங்க எல்லாம் கோரஸா.."ஆமா மன்னா.. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள்"னு சொல்ல ஆரம்பிக்க.. அங்க இன்னோரு ஐயர் குருப்பு "இப்ப எப்படி இவன் துலாபாரம் கொடுக்கிறான்னு பார்ப்போம். அதும் யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு"னு பேசி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

சுந்தரபாண்டியன் சிரிக்கல "யானைக்கு எடையா எதுல வச்சி கொடுக்க, தாரசு இல்லயே ?"னு கேக்க, அதுக்கு ஐயர் பயக "அத நாங்க பாத்துக்குறோம்.. நீங்க யானையோட வந்தா மட்டும் போதும்"னு சொல்லிட்டு தாரசு ரெடி பண்ண ஆத்தங்கர மண்டபத்திற்குப் போனாங்க, காவிரியில நிறையத் தண்ணீ ஓடுனது வசதியா போனதால.., இரண்டு பரிசலைப் யானையயும், பொருளயும் வைக்கிற மாதிரி பெருசா செஞ்சி.., ரெண்டையும் ஆத்துல மிதக்க விட்டுடாங்க.

அப்றம் சுந்தரபாண்டியன யானையோட ஒரு பரிசல்ல நிக்க வச்சிட்டு, இன்னொரு பரிசல்ல பொருள்கள கொட்ட சொன்னானுக. சுந்தரபாண்டியனும் தங்கம், அரண்மனல இருக்குற பொருள எல்லாம் கொட்டி சிறிரங்க கோயிலுக்கு துலாபரம் கொடுத்தான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியன பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிப் போக பெரிய திருவிழா மாதிரி கொண்டாடியிருக்காணுக.

எல்லாம் முடிச்சதும் ஏமாளியான சுந்தரபாண்டியன், அந்த கோயில் தலைமை பட்டரைப் பார்த்து "சாமி... எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது"னு கேக்கான்.
(சுந்தரபாண்டியன் யாரு..?.. மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன், அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மக்கள், மன்னர்கள்,  கைகட்டி காத்திருக்கின்றாங்க.. அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி.. பட்டரிடம் "சாமி, எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு.. இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளயே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன்" னு கேக்க..

அதுக்கு அந்த பட்டர் பய.."இல்ல, இல்ல.. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை"னு மறுத்துட்டான்.

சுந்தரபாண்டியன் நினைச்சிருந்தா இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமா ஆக்கியிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில தான் அந்த கோவிலும் இருக்கு. இந்த ஐயர், பட்டரெல்லாம் அவன் போடுற பிச்சையில உயிர் வாழ்ரவுங்க, அந்தப் பெருமாளும், கோயிலுமே அவன் போடுற பிச்சையில தான் வாழ்ற நிலைமை இருக்க, அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தும், ஒரு ஓராமா கூட அவனுடைய சிலைய வைக்க விடல.

அதுக்கு பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்தி,... "சிலையெல்லாம் வைக்க விடமாட்டோம், வேணுமுனா.. நீங்க பிறந்த நட்சத்திரத்தில உங்களுக்கு ஒரு பூஜைய போடுறோம், அர்ச்சனைய பண்றோம் னு பட்டர்கள் சுந்தரபாண்டியன்கிட்ட சொல்லியிருக்கானுக. அந்த அர்ச்சனை சிறிரங்கத்து கோயிலுல இன்னைக்கு வரைக்கும் நடந்துட்டு இருக்கு..

BJP காரன் போட்டோ சாப்புக்கு 2 ரூபாய் குடுக்குற மாதிரி, இந்த ஐயர் பயபுள்ளகளுக்கு தட்டுல 1 ரூபாயோ, 2 ரூபாயோ போட்டாலே போதும் அர்ச்சனைய பண்ண போராணுக.. மலைபோல செல்வத்தை கொடுத்துட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்னுருக்கானா.... எவ்வளவு பெரிய முட்டாளா இருப்பான் சுந்தரபாண்டியன்..?
நம் முன்னோர்கள் அப்பவே முட்டாள்தான் பாஸு...

நான் சொல்லுவதெல்லாம் கதை இல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த பூணூல் பார்ப்பனர்கள் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் நம்மள இப்படித்தான் ஏமாத்திட்டு வாரங்க.. இதுக்கு உதாரணமா நடைமுறைல இருக்குற.. பார்ப்பனர்களின் RSS இயக்கத்தால் வழிநடத்தப்படுற மோடி ஆட்சிய சொல்லலாம்.. மக்களோட வரிப் பணத்தையெல்லாம் பார்ப்பன முதலாளிகளுக்கும், பானியா முதலாளிகளுக்கும் வாரி கொடுக்குறது, பார்ப்பனர்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புல 10% இடஒதுக்கீடு  னு அவன் நோகமா சவ்ரிய மைரா வாழ்றதுக்கு நாட்டுல இருக்குற மீத 97% முட்டாளா ஆக்கிட்டான்.

 பார்ப்பனன் இன்னும் நம்ம கோமணத்த தான் உறுவல னு நீங்க நினைக்க வேண்டாம் மக்களே. எப்போ 3% பூணூல்காரனுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் னு கோர்ட் சொல்லிச்சோ., அப்பவே 97% இருக்குற நாம நிர்வாணமா ஆக்கப்பட்டுவிட்டோம்.✍🏼🌹

EWSReservation Must Read

 Thread!
#EWSReservation
Must Read!

facebookல் ஒரு நண்பரின் பதிவு. கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று👇

நேத்து ஒரு அதிமுக நண்பன் கிட்ட பேசிட்டிருந்தேன். மிக நெருங்கிய நண்பன் அவன். #EWS ஆதரிச்சு ரொம்ப ஆவேசமா பேசிட்டிருந்தான். இட ஒதுக்கீட்டால SC/STதான் எல்லா வாய்ப்புகளையும்..

..பறிச்சு முன்னேறிட்டதாகவும்  தன் சமூகம் பின் தங்கிவிட்டதாகவும் அடிச்சு பேசினான். அவன் MBC

"குப்பை அள்ளுபவர்களுக்கு 75 ஆயிரம் சம்பளம், அவர்கள் 2 கோடியில் வீடு கட்டுகிறார்கள்" என்றெல்லாம் WhatsAppல் வந்த தகவல்களையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். அதெல்லாம் பொய்கள் என்று..

..சில Dataக்களைச் சொன்னேன். இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்சனை.. சும்மா Bookக்க படிச்சிட்டு, Data படிச்சிட்டு பேசுவீங்க. அதெல்லாம் உண்மையில்ல. Data எல்லாமே பொய்னு ஒரே அடியா அடிச்சிட்டான்.
 
திடீர்னு "இதுக்கெல்லாம் திமுக ஆட்சிதான் காரணம், தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லல?.."

"..ஆ.ராசா இந்துக்கள இழிவு படுத்திட்டாரு, திருமா நாடககாதலை ஊக்குவிக்கிறாரு, இந்து முஸ்லிம்.. ப்ளா ப்ளா ப்ளா"ன்னு பாஜக குரல்ல சங்கித்தனமா பேச ஆரம்பிச்சான்.

இவன் இப்டி பேசற ஆள் இல்லையே.. என்னடா இவ்வளவு எமோசனலா பேசறான்னு குழப்பமா இருந்துச்சு.

கடைசியா அதற்கான பதில் அவனே சொன்னான்.

"அம்பது வருஷமா இட ஒதுக்கீட்டால SC/ST பயனடஞ்சாங்கள்ல.. இந்த 10% EWSனால நாங்க பயனடையக் கூடாதா?"ன்னு கேட்டான்.
 
"அடேய்..  EWSல உனக்கும் பங்கு கிடைக்கும்னுதான் இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தியா?"னு கேட்டேன்.

Basically அவன் நல்லவன் தான்..

..வெளிப்படையா 'ஆமா'னு ஒத்துக்கிட்டான். அவன் தன்னையும் அரியவகை ஏழையா நெனச்சுட்டு இருந்திருக்கான்.

உயர்ஜாதி ஏழைகள் என்கிற வார்த்தை எவ்வளவு நுட்பமானது, சூழ்ச்சிகரமானது என்று அப்போதான் புரிஞ்சுது எனக்கு. சமூகத்தில் தன்னை உயர்ஜாதியாக கருதிக்கொள்கிற BC, MBCயில் இருக்கும்..

..பலரை கூட இந்த EWS இடஒதுக்கீடு தமக்கானது என நம்ப வைக்கப்பட்டிருப்பது ஆபத்தானது. இதற்கெதிரான பெரிய எதிர்ப்புக்குரல் எதுவும் வராததன் பின்னணியில் இந்தச் சூழ்ச்சிதான் இருக்கிறது

இந்த EWS என்கிற வழிப்பறிக்கெதிராக பேசாமல், ஜாதியை உயர்த்திப்பிடிக்கும் ஜாதிக்கட்சி தலைவர்களின்..

..சூழ்ச்சிகரமான அமைதிக்குப் பின்னால் இருக்கும் ஆதாய கணக்கீடுகளில் பலியாக்கப்படுவது இவனைப்போன்ற அப்பாவிகள்தான்

ஜாதி உளவியல், தனக்கு மேலடுக்கில் உள்ளவர்களின் ஆதிக்கம் குறித்து கவலையோ வெட்கமோ கொள்வதில்லை. ஆனால் தனக்குக் கீழடுக்கில் இருப்பவர்களின் குறைந்தபட்ச...

..முன்னேற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள இயலாதபடி இரக்கமற்ற முறையில் சூழ்ச்சிகரமாக வார்க்கப்படிருக்கிறது

இந்த WhatsApp வதந்திகள் மனிதர்களின் சிந்தனையை மலினப்படுத்தி, சக மனிதர்களின் மீதான கண்ணோட்டத்தை எவ்வளவு தூரம் ஊனப்படுத்திவிடுகிறது என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது

எதார்த்தத்தில் அவன் படித்தவன். சிந்திக்கும் தன்மையுடையவன் தான். சிந்திக்க விடாமல் தடுத்திருக்கும் பார்ப்பனியக் கருத்தியலையும் வாட்சப் பல்கலைக்கழகத்தையும் தாண்டி என்றாவது வெளியே வந்து தன்னைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலையைப் புரிந்துகொள்வான் என்று நம்பிக்கை இருக்கிறது

ஆனால் எவ்வளவு நாள் காத்திருப்பது. அதற்குள் மீண்டும் நம்மை பழைய நிலைக்கு கொண்டு செல்வார்கள். ஒரு 100வருடங்கள் பின் தங்குவோம்.

இந்த ஆபத்தை புரிந்துகொண்டு அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்து இந்த சமூக அநீதிக்கு எதிராக போராட வேண்டும். எதிர்கால சந்ததியினரை காப்பாற்றவேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை

 தாஜ்மஹால் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 செங்கோட்டை = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 குதுப்மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 சார் மினார் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 கோல் கும்பஸ் = முஸ்லிம்களால் கட்டப்பட்டது;
 சிவப்பு கதவுகள் = முஸ்லிம்களால் செய்யப்பட்டவை;
 ஏவுகணை = முஸ்லீம் செய்யப்பட்டது (டாக்டர் கலாம்);

 இந்தியா கேட் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
 இந்தியாவின் நுழைவாயில் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
 ஹவுரா பாலம் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 பாராளுமன்ற மாளிகை = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 ராஷ்டிரபதி பவன் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 வடக்கு-தெற்கு தொகுதி = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது;
 கன்னாட் பிளேஸ் = ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது..... (கட்டப்பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.)
 அரசியலமைப்பு = எஸ்சி உருவாக்கப்பட்டது (டாக்டர் அம்பேத்கர்);

 அப்படியென்றால் இந்தியாவில் இந்த புண்ணிய பிராமணர்கள் என்ன செய்கிறார்கள்???
 - நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!
 நாடு, மதம், கலாச்சாரம், நாகரிகம், சமூகம் ஆகியவற்றை பலவீனப்படுத்துகிறது!
 நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் கலவரங்களை உருவாக்கி வருகின்றனர்.
 - நாட்டை உடைத்திருக்கிறார்கள்!
 நாட்டுச் செல்வம், மதப் பயம் என்ற பெயரில் கோயில்களில் வசூல் செய்து வருகின்றனர்!

 1987 - போஃபர்ஸ் பீரங்கி ஊழல், 960 கோடி
 1992 - பங்கு ஊழல், 5,000 கோடி.
 1994 - சர்க்கரை ஊழல், 650 கோடி
 1995 - முன்னுரிமை ஒதுக்கீடு ஊழல், 5,000 கோடி
 1995 - சுங்க வரி மோசடி, 43 கோடி
 1995 - கப்லர் ஊழல், 1,000 கோடி
 1995 - தினார் / ஹவாலா ஊழல், 400 கோடி
 1995 - மேகாலயா வன ஊழல், 300 கோடி
 1996 - உர செவ்வக ஊழல், 1,300 கோடி
 1996 - தீவன ஊழல், 950 கோடி
 1996 - யூரியா ஊழல், 133 கோடி
 1997 - பீகார் நில ஊழல், 400 கோடி
 1997 - மியூச்சுவல் ஃபண்ட் ஊழல், 1,200 கோடி
 1997 - சுக்ராம் டெலிகாம் ஊழல், 1,500 கோடி
 1997 - SNC மின் திட்ட ஊழல், 374 கோடி
 1998 - உதய் கோயல் விவசாய விளைபொருள் ஊழல், 210 கோடி
 1998 - தேக்கு மரக்கன்று ஊழல், 8,000 கோடி
 2001 - டால்மியா பங்கு ஊழல், 595 கோடி
 2001 - UTI ஊழல், 32 கோடி
 2001 - கேதன் பரிக் பத்திர ஊழல், 1,000 கோடி
 2002 - சஞ்சய் அகர்வால் வீட்டு முதலீட்டு ஊழல், 600 கோடி
 2002 - கல்கத்தா பங்குச் சந்தை ஊழல், 120 கோடி
 2003 - முத்திரை ஊழல், 20,000 கோடி
 2005 - ஐபிஓ காரிடார் ஊழல், 1,000 கோடி
 2005 - பீகார் வெள்ளப் பேரிடர் ஊழல், 17 கோடி
 2005 - சார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், 18,978 கோடி
 2006 - பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், 1,500 கோடி
 2008 - கருப்புப் பணம், 2,10,000 கோடி
 2008 - சத்யம் ஊழல், 8,000 கோடி
 2008 - ராணுவ ரேஷன் ஊழல், 5,000 கோடி
 2008 - ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிரா, 95 கோடி
 2008 - ஹசன் அலி ஹவாலா ஊழல், 39,120 கோடி
 2009 - ஒரிசா சுரங்க ஊழல், 7,000 கோடி
 2009 - அரிசி ஏற்றுமதி ஊழல், 2,500 கோடி
 2009 - ஜார்க்கண்ட் சுரங்க ஊழல், 4,000 கோடி
 2009 - ஜார்க்கண்ட் மருத்துவ உபகரண ஊழல், 130 கோடி
 2010 - ஆதர்ஷ் வீடு ஊழல், 900 கோடி
 2010 - உணவு தானிய ஊழல், 35,000 கோடி
 2010 - பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல், 2,00,000 கோடி
 2011 - 2ஜி அலைக்கற்றை ஊழல், 1,76,000 கோடி
 2011 - காமன் வெல்த் ஊழல், 70,000 கோடி

 இந்த மோசடிகள் அனைத்தும் எந்த ஒரு வெளிநாட்டவரும் செய்யவில்லை, எந்த முஸ்லீமும் இல்லை, எந்த கிறிஸ்தவரும் இல்லை, எந்த SC, ST, OBC களும் இல்லை, இந்த மோசடிகள் அனைத்தும் போலி தேசபக்தியுள்ள பிராமண-பனியாக்கள் என்று அழைக்கப்படுபவர்களால் செய்யப்பட்டுள்ளன.  அதற்கு மேல், இடஒதுக்கீட்டால் நாடு பின்னோக்கிப் போகிறது என்று இந்த அயோக்கியர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 வாழ்க இந்தியா... வாழ்க அரசியலமைப்பு...
  பங்கு பங்கு
 மேலும் பகிர்வதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

Tuesday, November 22, 2022

காசி தமிழ் சங்கமம் பித்தலாட்டம்

 என்னுடன் முன்பு பணிபுரிந்த உத்திரபிரதேசத்திலுள்ள நண்பனிடம் நேற்று பேசினேன் லக்னோவை பூர்வீகமாக கொண்டவன் சமாஜ்வாடி கட்சிகாரன். 


அவனிடம் என்னப்பா உங்க ஊரே #காசி_தமிழ்_சங்கமத்தில் கோலகலமாக இருக்கிறதே என்று சொன்னவுடன்.


அப்படியா அந்த மாதிரி செய்திகள் எதுவும் லோக்கல் தொலைகாட்சிலயோ இல்லை ஊடகங்களிலயோ வந்தா மாதிரி தெரியலையே என்றான்.. 


காசியில் நடந்த விழா உண்மையில் தமிழ்நாட்டை தாண்டி ஒருத்தருக்கும் தெரியவில்லை.. தஞ்சை சாஸ்தா கல்லூரியில் படிக்கும் 300 க்கும் மேற்பட்ட மாணவர்களை இலவசமாக காசிக்கு கொண்டு சென்று கூட்டத்தை சேர்த்து ஒரு போலி நாடகத்தை நடத்தியுள்ளது பாஜக..

போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?!

 ஆதார் அட்டை கேட்டதற்கு பேரணியே வேண்டாமென்று ஓடிய கயவர்களைக் கண்டிருக்கிறோம் ..


போராட்டம் என்றால் கொள்கை உறுதி என்றால் என்ன தெரியுமா?! 




நவம்பர் 26 1957

சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை எரிக்க வேண்டும் என பெரியார் போராட்டத்திற்கு அழைக்கிறார்.


அழைத்தவர் பெரியார்...

திராவிடர் இயக்கத் தொண்டர்கள் 10000 பேர் அரசியல் சட்டத்தில் சாதியைப் பாதுகாக்கும் பக்கங்களைக் கொளுத்தினர்.



 தமிழக காவல்துறை 

பெண்கள் சிறுவர்கள் உட்பட போராட்டத்தில் கலந்து கொண்டாரில் 3000 பேரை கைது செய்தனர். 


சென்னையில் – 35 இடங்கள், வட ஆற்காடு மாவட்டம் – 30 இடங்கள், தென் ஆற்காடு மாவட்டம் – 26 இடங்கள், சேலம் மாவட்டம் – 41 இடங்கள், கோவை மாவட்டம் – 14 இடங்கள், இராமநாதபுரம் மாவட்டம் – 4 இடங்கள், மதுரை மாவட்டம் – 13 இடங்கள், நெல்லை மாவட்டம் – 8 இடங்கள், தர்மபுரி – 18 இடங்கள், செங்கல்பட்டு – 9 இடங்கள், கன்னியாகுமாரி – 5 இடங்கள், திருச்சிராப்பள்ளி – 107 இடங்கள், தஞ்சாவூர் – 161 இடங்கள், புதுச்சேரி – 6 இடங்கள், பெங்களூர் மற்றும் ஆந்திரா – 1 இடம்.


பெரியார் போராட்டத்தை அறிவித்த பின்னர்தான் அரசு சட்டத்தை எரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை என்று எச்சரித்து புதிதாக ஒரு சட்டத்தையும் இயற்றியது . அதுவரை அரசியலமைப்புச் சட்டத்தை எரிப்பவர்களுக்கு என்ன தண்டனை என ஒரு சட்டமே இல்லை .


அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடைய தியாகத்தைப் பற்றி சொல்வதானால் தனி புத்தகம் எழுத வேண்டும்.


அவர்களுடைய உறுதியை பற்றி சொல்வதானால் பேனாவில் மை நிரப்பக் கூடாது . எரிமலை குழம்பு தான் நிரப்ப வேண்டும்.


இன்றைக்கு சாதி ஒழிப்புக்கு திராவிடர் இயக்கம் என்ற செய்தது எனக் கேட்கத் துணிவோர் தம் காலாணிகளை எடுத்து தங்களையே அடித்துக்கொள்ள வேண்டும்.


திராவிடர் இயக்கத்தினரின் தியாகங்கள் அத்தனையும் சொல்ல என் எழுத்தால் சொல்ல முடியாதால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.


வாளாடியைச் சார்ந்த 16 வயது சிறுவன் பெரியசாமி. கருஞ்சட்டை தொண்டர். இன்னும் இளமை முழுதும் தொடங்காத அந்த உள்ளம் பெரியாரின் உரைகள் கேட்டு இரும்பின் இன்னொரு பிம்பமாய் நின்றது.


போராட்டத்தில் கைதாகி சிறைத் தண்டனை பெற்றவர்களில் ஒருவர்.

 பெரியசாமி க்கு விதிக்கப்பட்டது தூத்துக்குடி தட்டப்பாறை சிறை இரண்டு ஆண்டுகள் .


சிறைச்சாலையில் பார்வையிட வந்திருந்த அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி,. இளம் வயதில் ஒரு சிறுவன் அடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து என்ன என்று விசாரிக்க ...

உடனிருந்தோர் பெரியாரின் போராட்டம் அதில் பெரியசாமியின் பங்களிப்பு அத்தனையும் கூற 

இந்தச் சிறு வயதில் இப்படி ஒரு போராட்டத்தில் எப்படி ஈடுபட்டார் என்று அதிர்ந்து போயிருந்தார். பெரியசாமியை அழைத்துக் கேட்கிறார்.. இந்தச் சிறுவயதில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமா?! நான் உன்னை மன்னித்து விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன். மீண்டும் சட்டத்தை எரிக்க மாட்டேன் என்று எழுதிக் கொடுப்பாயா என்று கேட்கிறார் அன்றைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி....



“என் தலைவர் பெரியார் இந்தப் போராட்டத்தை அறிவித்தபோது நான் மட்டும் தான் சட்டத்தை எரித்தேன், வெளியே அனுப்பினால் என் தோழர்களைக் கூட்டி மீண்டும் எரிப்பேன்.” என்கிறார் அந்தப் பெருந்தொண்டர் பெரியசாமி என்கிற சிறுவன்.


மலைத்துப் போய் வாய் பேச முடியாத விஷ்ணு ராம் மேதி..மெல்ல தன்னைத் தேற்றி . கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்று சொல்லிவிட்டு போகிறார்..


ஏற்கனவே சிறை... விடுதலை செய்கிறேன் என்ற உறுதி.. இன்னலில் இருந்து தப்பி விடலாம் என்று எவரேனும் நினைக்கக்கூடும்... திராவிட இயக்கத்தின் சீர்மிகு தொண்டன் பெரியசாமி மீண்டும் போராடத்தான் செய்வேன் சட்டத்தை எரிப்பேன் என்று காட்டிய உறுதி எங்கே....



ஆதார் அட்டை கேட்டவன் பேரணியே வேண்டாம் என்று கலைந்து போன ஆர்எஸ்எஸ் கயவர் கூட்டம் எங்கே ..?!..





சொல்லாமல் விடமுடியுமா ...


 கீழ்வாளாடி பெரியசாமி‌ என்கிற திராவிட இயக்கத்தின் சமராளி...

22.12.58ல் சிறையிலே நோயுற்று இறந்தே போனார். பெரியாரும் மணியம்மையாரும் அந்த கொள்கை மறவனுக்கு கண்ணில் நீரொழுக அஞ்சலி செலுத்திய படம்

வீரமாமுனிவர்

 தமிழ்மொழியின் இனிமையால் ஈர்க்கப்பட்டு தன் பெயரையே மாற்றிக்கொண்ட மகத்தான தமிழ் அறிஞர் #வீரமாமுனிவர் பிறந்த தினம் - நவம்பர் 8:


இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.


மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.


இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.


வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.


அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.


தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.


உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.


இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.


தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.


திருநெல்வேலி தொல்லியல் கழகம்

Sunday, November 20, 2022

காசியும் பெரியாரும்

 பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார். பலவாறு பாடுபட்டு கசியை அடைந்த பெரியாருக்கு சோறு கிடைக்கவில்லை. பல நாள் பட்டினி. அவர் கையில் காசு கிடையாது. பசியைத் தாங்க முடியவில்லை. ஒரு சாப்பாடு சத்திரத்திற்குள் நுழைய முயன்றார். சத்திரத்தில் பார்ப்பன ஜாதியினருக்குத்தான் இலவசமாக சாப்பாடு கிடைக்கும். இவர் பார்ப்பனர் அல்ல என்பதைக் கண்ட காவலாளி பெரியாரை வெளியே  தள்ளினான். அப்போது எச்சிலைகளை வெளியே கொண்டுவந்து எறிந்தனர். பெரியார் பார்த்தார்.

பசிக்கொடுமை, எச்சிலை அருகில் ஓடினார். சட்டமாக அமர்ந்தார். எச்சிலையிலிருந்து சோற்றை வழித்து சாப்பிட்டார். இடுப்பில் ஒன்றரைப் பவுன் மோதிரமிருக்க பெரியார் இச்செயலைச் செய்தார்.

பிறகு காசியில் பெரியார் வேலை தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. தாடி, மீசையை எடுத்தார். மொட்டையடித்துக் கொண்டு சாமியாரானார்.

காசியில் பெரியாருக்கு ஒரு மடத்தில் வேலை கிடைத்தது. பெரியாருடைய வேலை பூசைக்காக வில்வ இலை பறிக்க வேண்டும். விளக்குப் போட வேண்டும். இந்தக் காரியங்களை அதிகாலையில் குளித்து உடம்பில் திருநீறு அணிந்து செய்ய வேண்டும். பெரியாருக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் குளிக்காமல் திருநீறு பூசிக்கொண்டு பூசைக்கு வந்தார். இப்படிப் பலநாள் செய்தார். ஒரு நாள் உண்மை தெரிந்தது. வேலையிலிருந்து விரட்டப்பட்டார்.

பெரியார் மறுபடியும் பிச்சை எடுத்தார். சாமியார் வாழ்க்கையை வெறுத்தார். சாமியார்களிடம் இருந்த ஒழுக்கக் குறைவு பெரியாருக்குப் பிடிக்கவில்லை.
 தன்னிடம் இருந்த மோதிரத்தை விற்றார். பணத்துடன் காசியை விட்டுப் புறப்பட்டார்.

காசி நகரம், ஆத்திகர் ராமசாமியை நாத்தீகராக மாற்றி அனுப்பி வைத்தது!

Saturday, November 19, 2022

இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை

 *“தமிழ்நாட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது.*

*எங்களுக்கு எல்லாம் பிடித்திருக்கிறது.*

*ஒன்றைத்தவிர.*


 இங்கு யாருமே இந்தி பேசுவதில்லை.


 ஏன் உங்கள் ஊரில் யாரும் இந்தியை பேசுவதில்லை” என்று கேட்டான். 


நான் அவனிடம் “உன் மாநிலம் எது?” என்று கேட்டேன். 


 “மத்தியப் பிரதேசம்” என்று சொன்னான். 


“உங்கள் மாநில மொழி எது?”  


அவன் “இந்தி” என்று பதிலளித்தான்.


 “அது தான் உங்கள் ஊரில் பேசுகிறார்களா?” என


 “ஆம்” என்று உறுதியாக தலையாட்டினான். 


ஆனால் “உங்கள் ஊருக்கென்று ஒரு மொழி இருக்குமே?” என்று கேட்டேன். 


அவன் நெடு நேரம் யோசித்துவிட்டு, “மால்வி?”


 “எங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவார்கள். அது எங்க ஊர் கிராமப்புறங்களில் பேசும் மொழி.” என்று சொன்னான். 


அதற்குப் பின் அவன் மேல் பரிதாபம் ஏற்பட்டதே தவிர எந்தக் கேள்வியும் எனக்கு எழவில்லை.


 “உன் தாய் மொழி ‘இந்தி’யா? ‘மால்வி’யா?” என்று நான் கேட்டால் அவனுக்கு அது புரியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை. 


அந்த இளைஞனுக்கு மட்டுமல்ல. அவர்கள் ஊரில் உள்ள பலருக்கும் இது தெரியாது. 


மத்தியப் பிரதேசத்தில் 1941 ஆங்கில அரசின் புள்ளி விவரக்கணக்குப் படி மால்வி மொழி பேசிய மக்களின் எண்ணிக்கை 16,லட்சத்து 7

8, ஆயிரத்து 087 பேர். 


ஆனால் அதே ஆண்டு 

இந்தி மொழி பேசிய மக்கள் எவ்வளவு பேர் தெரியுமா..? 

14 லட்சத்து ,40,906 பேர்கள் மட்டும் தான். 


அதாவது 

மத்தியப் பிரதேசத்தில் இந்தி மொழி பேசியவர்களை விட மால்வி மொழி பேசிய மக்களின் மக்கள் தொகை அதிகம். 


1951லேயே நிலைமையை தலைகீழாக மாற்றியது.


 இந்திய அரசின் மக்கள் தொகை கணக்குப் படி மால்வி பேசு வோர் 

5 லட்சம், என்றும், 

இந்தி பேசுவோர் எண்ணிக்கை 

58 லட்சம் என்றும்.


பஞ்சாபில் இந்தியை ஆட்சி மொழி(?)யாக்கும் சுற்றறிக்கையை அந்த மக்களுக்கு இந்தி தெரியாது(?) என்பதால் மக்கள் பேசிக்கொண்டிருந்த(!) உருது மொழியில் அச்சடித்து கொடுக்கும் அளவிற்கு இந்திமயம் வேகமாக நடந்தது. 


அதனால்தான் அடுத்த 

10 ஆண்டுகளில் இந்தி பேசும் மக்கள் தொகை 40 விழுக்காடு என்ற கதை ஆனது. 


இதன் விளைவு மால்வி போன்ற மொழிகளின் இன்றைய நிலைதான்.


தன் தாய்மொழியையே அவனுக்குத் தெரியாமல் மறக்கடிக்கும் அளவிலான கொடூரத்தின் அடிமை அடையாளம் தான் அந்த இளைஞன். 


 அவன் மட்டுமல்ல. 


தாங்கள் இந்திக்காரர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்

 வட இந்தியாவைச் சேர்ந்த 90 விழுக்காடு மக்களின் நிலையும் கூட இதுதான்.


 80க்கும் மேற்பட்ட உங்கள் மொழிகளை முற்றிலும் அழித்து, அதன் இரத்த வெள்ளத்தின் மீது கட்டப்பட்ட பெரும் கோட்டை தான் நீங்கள் கொண்டாடும் இந்தி என்பதை அவர்களிடம் 

யார் போய் சொல்வது..? 


அல்லது அது நமக்கும் தான் தெரியுமா..?


இந்தி பெல்ட் என்று சொல்லும் மாநிலங்கள் எல்லாவற்றிற்கும் தனித்த மொழி இருக்கிறது. 


ஆனால் அவற்றை நாம் கூட இந்தி பெல்ட் என்றே பொதுப் புத்தியிலிருந்து அழைக்கிறோம்.


 இராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் இவற்றோடு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்டவைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். 


ஆனால் மேற்கண்ட எல்லா மாநிலங்களுக்கும் இராஜஸ்தானி, பஞ்சாபி, பீகாரி, மராத்தி, குஜராத்தி என்று தனித்த மொழிகள் இருக்கின்றன. 


 இவற்றில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களை முழுவதும் இந்தியை தாய் மொழியாக கொண்ட மாநிலங்கள் போல் இன்று வரை 

ஒரு பிம்பத்தை கட்டி உருவாக்கி வைத்துள்ளார்கள்.


 ஆனால் அதுவும் கூட போலி பிம்பமே என்பதை 70 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு நமக்குச் சொல்கிறது.  


இந்திய விடுதலைக்கு முன்பு வரை மேற்கண்ட இந்தி பெல்டுகளில் மட்டும் பேசப்பட்ட மொழிகளாக பிரிட்டிஷ் அரசு பட்டியலிட்டுள்ள மொழிகள் இந்தி, உருது, இராஜஸ்தானி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளோடு இந்துஸ்தானி, மைதிலி, பிரசு பாஷா, பக்ரி, மேவாரி, ஜெய்புரி, சட்டிஸ்காரி, மார்வாரி, பந்தேலி, ஆஜ்மீரி, தம்தி, ராகோ பான்சி, பலாகி, லோடி, கிராரி, மிர்கனி, பைகனி, பாண்டோ, ஸ்வதி, அதுகுரி, பாடு, இராஜ்காடி, நுனியா, பங்கி, கோசாவி, பர்தேசி, கலாரி, அபு, பர்பி, கோசங்கா, பாடி, பஸ்தாரி, சடி, போவாரி, மகேசுரி, போபாலி, மாதுரி, சடாரி, போஜ்புரி, உத்கேதி ௲ போலி, கோரக்பூர், முசல்மானி, பூலியா, புவானி, பரத்பூரி, கங்காபாடி, உத்தாரி, லோதாந்தி, சங்கலி, வாணி, கோத்யானி, இராஜபுதானி, ஆக்ராவாலி, சார்மாலி, பாமி, கோர்க்காலி, குர்சார், மராரி, ஓகி, நிமாதி, மிர்சாபுரி, கோட்வாரி, கங்கேரி, தேவநாதரி, கோர்த்தி, பான்சாரி, கந்தால், பிரதாப்காடி, அகரி, பான்சாரி, பூலி, குருமாலி, போயாரி, இரிவை, மேர்வாரி, இரங்கடி, கால்பீ என்று

 80க்கும் மேற்பட்ட மொழிகளை பட்டியலிடுகிறது. 


இவை ஒன்றும்

சமஸ்கிருதம் போல் சில நூறு பேரின் தாய்மொழி அல்ல. 


ஒவ்வொரு பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் பேசிய மொழிகள் ஆகும். 


ஆனால் இவற்றின் நிலை என்ன என்பது தான் நம் கேள்வியே. 


ஒரு மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல.


 அது அந்த மண்ணின் பண்பாட்டை, மக்களின் வரலாற்றை தாங்கியுள்ளது. 


மொழியை அழித்தால் அந்த மக்களை முழுவதும் அடிமையாக்கலாம் என்பதற்கு இந்தி பெல்டுகளே சாட்சி. 


 அந்த இளைஞனின் 

சொந்த மாநிலமான மத்தியப்பிரதேசம் நர்மதை - சோன் பள்ளத்தாக்குகளுக்குள் இருக்கிறது.


 பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்புக் காலங்கள் முதல் மத்தியப்பிர தேசத்தின் வரலாறு தொடங்குகிறது. 


பிம்பேத்திகாவில் உள்ள 

600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்திருக்கின்றன. 


சாகர்களும் குஷானர்களும் 

மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப்

 பெரும் இராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆட்சி செய்துள்ளார்கள். 


வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும், 

மற்றப் பகுதிகளைச் சத்ரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமி புத்திர சதாகாரணியும ஆதிக்கம் செலுத்தி யுள்ளார்கள். 


அவருக்குப் பிறகு குப்தர்கள்,

 ஹூனர்கள், 

யசோதர்மன், 

ஹர்ஷர், 

ராஷ்ட்டிரகூடர்கள், 

பராமார்கள், 

பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், 

டெல்லி, 

துருக்கி, 

குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், 

மராட்டியர்கள்,

ஹோ ல்கர்கள், 

மஹாகோசர்கள், 

சிந்திக்கள், 

போபாலை ஆண்ட 

ஆப்கானிஸ்தான் அரசர் 

தோஸ் மொகமது கான் என 

அந்த மண்ணை எண்ணற்ற மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். 


 கொடுங்கோன்மை மிக்க முடியாட்சி காலத்திலும், 

ஆங்கில ஆட்சிக் காலத்திலும்கூட அங்கு இந்தி ஆட்சி மொழியாக இருந்ததில்லை. 


மால்வி, 

நிமதி, 

பகேலி உள்ளிட்ட அந்த மண்ணின் மக்களின் மொழிகளே அங்கு கோலோச்சியுள்ளன. 


ஆனால் முடியாட்சி, 

அடிமையாட்சி நீங்கி நம்மை நாமே ஆண்டு கொள்ளும் ஜனநாயக ஆட்சி முறை நிலைபெற்றுள்ள இந்த 

70 ஆண்டுகளில் தான்

 அந்த மக்களின் மொழிகள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளன என்பது வரலாற்று முரண். 


ஏன் இது நிகழ்ந்தது? 


இதற்குப் பின் வெறும் 

மொழி அரசியல் தான் உள்ளதா? என்றால் இல்லை. 


இது ஒரு சித்தாந்த அரசியல்.  


கிபி 1340 இல் தில்லியில் 

நிலை பெற்ற

முகமதுபின் துக்ளக் ஆட்சி அங்கு அப்போது மக்கள் பேசிவந்த சிதைந்த பிராகிரத மொழியை பார்த்தது. 


அது அப்போது ஒரு சீரான மொழியாக இல்லாத போது, 

அதில் தங்களின் அரபு மொழியை கொண்டு 

பாரசீக அரபு கலப்பால் ஒரு சீரான மொழியாக உருது மொழி உருவாக்கப்பட்டது. 


உருது எனும் சொல்லுக்குப் பொருள், பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதாகும். 


அதன் பின் உருது மொழி இந்தியாவில் அவர்களின் அரசு மொழியாக இருந்தது. 


இந்தி மொழியானது ‘லல்லு ஜிலால்’ என்பவரால் உருது மொழியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்டதாகும்.


 உருது மொழியில் இருந்த 

அரபுச் சொற்களை நீக்கிவிட்டு

அந்த இடத்தில் சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாக சேர்த்து இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். 


இவ்வாறு அவரால் உருவாக்கப்பட்ட இந்தி மொழிக்கும், 

அதற்கு முன்பாக வடநாட்டு மக்களால் பல இடங்களில் பேசப்பட்ட சிதைந்த பிராகிருத மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. 


இந்தி மொழி என்பதே 

இந்து சனாதனத்தின் 

தாய் மொழியாக அவர்கள் கருதும் சமஸ்கிருதத்திலிருந்து உருவாக்கப்பட்டது.  


அதனை நன்கு உணர்ந்தவர்கள் உருவாக்கிய சித்தாந்தமே இந்தி, இந்து, இந்தியா என்பதாகும். 


அந்த கொடூர சித்தாந்தத்தை காங்கிரசிற்குள் இயங்கிக்கொண்டிருந்த வலதுசாரிகளின் துணை கொண்டு அரங்கேற்றினார்கள். 


அவர்கள் கனவு கண்ட இந்து தேசியத்தின் பலி பீடத்தில் 

பலி கொடுக்கப் பட்டுள்ள மாநிலங்கள் தான் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட இந்த இந்தி பேசும் மாநிலங்கள். 


இது தான் இன்றைய இந்துத்துவ அரசியலின் கேந்திரமான பகுதிகளாகவும் இருக்கின்றன என்பதை நாம் பிரித்துப் பார்க்கக்கூடாது. 


‘‘ஏன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்” என்ற அந்த இளைஞனை போன்ற சிலர் நம்மூரிலும் கேட்கிறார்கள்.


 அவர்களுக்கு இதுவரை கிடைக்காத அந்தக் கேள்விக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என்றே நம்புகிறோம். 


3000 ஆண்டுகளுக்கு நிகரான நாகரீக சமூகத்திற்கான தொல்லியல் சான்றுகளோடு இருக்கும் 

தமிழ் மண்ணை போலி தேசியத்தின் பலி பீடத்தில் வைத்து காவு கொடுக்க நாங்கள் முட்டாள்களா என்ன?


 உலகின் பல்வேறு நாடுகளில் 

ஆட்சி மொழியாக இருக்கும் தமிழை இந்தியாவைத் தாண்டி எங்கும் இல்லாத இந்தியைக் கொண்டு அழித்துவிட முடியுமா என்ன..?


 “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய சித்தாந்தத்தை கொண்ட தமிழ் மண் 

நான்கு 

வர்ணக் கோட்பாட்டை முன்னிறுத்தி உள்ளே வரும் வைதீகத்தின் 

மொழி வடிவத்தை ஏற்றுக் கொள்ளுமா என்ன..?


“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற, 

அதிகாரத்திற்கு எதிரான முழக்கத்திற்கு சொந்தக்காரர்களான தமிழ் மண் ஆங்கிலேய ஆட்சியானாலும், 

காங்கிரஸ் ஆட்சியானாலும், 

சங்பரி வாரத்தின் 

நேரடி ஆட்சியானாலும் 

யாருக்கும் அஞ்சாமல் 

மொழி உரிமைப்போரில் 

இந்தித் திணிப்பிற்கு எதிராக 

அதே கம்பீரத்தோடு எதிர்த்து நிற்கும் தானே.


 1937லும், 1948லும் 1965லும் 1986 லும் தமிழகம் மட்டுமே இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக தனித்துப் போராடியது. 


ஆனால் இன்று நிலைமை அவ்வாறு இல்லை. 


*நமக்கு தோளோடு தோள் கொடுக்கும் தோழமைகளாக கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மராத்தியம் என்று பல்வேறு மாநிலங்களும் களத்தில் குதித்துள்ளன.*


இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் இந்திய நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான போராட்டம். 


இந்தச் சூழலில் ஒன்றிய அரசு உருவாக்கிய அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரை போன்ற 

எந்த வடிவில் 

இந்தியை திணிக்க நினைத்தாலும் அதை முற்றாக புறந்தள்ளுவதே இந்திய நாட்டின் பன்மைத்துவத்திற்கும், ஒற்றுமைக்கும் நல்லதாகும்.

Sunday, October 30, 2022

பிள்ளைகளை கொத்தடிமைகளாக மாற்றும் கேடு கெட்ட திட்டம்

 “உங்க கம்பனில 12வது முடிச்சவங்களுக்கு ஒரு வருசம் ட்ரைனிங் கொடுத்து வேலைக்கு சேர்த்துக்கு வாங்கலாமே, அந்த ப்ரோக்ராம் எப்படி?”



“அருமையான ப்ரோக்ராம். காலேஜ் எல்லாம் வேஸ்ட். இதுல சேர்ந்தா ஸ்கூல் முடிச்சு ஒரே வருசத்துல ஐடி கம்பெனில வேலை. கை நிறைய சம்பளம். சின்ன வயசுலயே வாழ்க்கைல செட்டில் ஆகிடுவாங்க”


“உங்க பையன் இந்த வருசம் தான 12வது பாஸ் செஞ்சான். இந்த மாதிரி ட்ரைனிங் ப்ரோக்ராம்ல தான் சேர்த்து விட்டிருக்கீங்களா?”


“ச்சேசே! என் பையன BE கம்ப்யூட்டர் சயின்ஸ்ல தான் சேர்த்துவிட்டேன்”


“ஏன் சார் உங்க கம்பனி ட்ரைனிங் ப்ரோக்ராம் நல்லதுன்னு இப்போ தானே சொன்னீங்க. அப்புறம் ஏன் அதுல சேர்க்காம காலேஜ்க்கு அனுப்புனீங்க?”


“அதெல்லாம் இல்லாத வீட்டு பிள்ளைகளுக்கு. நம்ம புள்ளைக்கு BE முடிச்சுட்டு அமெரிக்காவுல MS செஞ்சு H1B விசா வாங்கி அங்கேயே செட்டிலாகுற பிளான் வச்சுருக்கேன்”


12வது முடித்தவர்களுக்கு ஐடி கம்பனில ட்ரைனிங் அப்புறம் வேலை என்பது விவரம் அறியாத பெற்றோரை ஏமாற்றி அவர்கள் பிள்ளைகளை கொத்தடிமைகளாக மாற்றும் கேடு கெட்ட திட்டம்.

Sunday, October 09, 2022

மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை

 வெள்ளைக்காரன்: மாடு அல்லாத ஒட்டகம் அல்லாத அனைத்தும் கழுதை.


நரி : நல்லவேளை நம் அனைவருக்கும் வெள்ளைக்காரன் கழுதை என்ற ஒரு பொதுப்பெயரைக் கொடுத்தான். இல்லையெனில் நாம் நரியாகவோ நாயாகவோ இருந்திருப்போம்.


யானை: என்னை எப்படிடா நீ கழுதைன்னு சொல்லலாம்.


எலி: அப்ப நீ என்ன மாடா... ஒட்டகமா... நீயும் என்னைப்போல கழுதைதான்.


யானை: எலிப்பயலே ஒரே மிதியா மிதிச்சு நசுக்கிப் புடுவேன். உனக்கு கழுதை என்பது பெருமையாக இருக்கலாம். நீ கழுதையாகவே இருந்துக்கோ. ஆனா என்ன ஏண்டா உன்கூட சேர்க்கிற.


எலி: வெள்ளைக்காரனே நாம் எல்லோரும் கழுதைன்னு சொல்லிட்டான்.! காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் தங்களை கழுதைன்னுதான் சொல்லுது.! தடிப்பயலே, உனக்கு என்ன திமிரு இருந்தால் திரும்பத் திரும்ப நீ யானைனு சொல்லுவ.!


இங்க இருந்தா கழுதையா இரு. இல்லேன்னா பாகிஸ்தானுக்கு ஓடிப்போ.!

Saturday, October 08, 2022

மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்!

 களப்பிரர் காலம் இருண்ட காலம் ஏன்?மறைக்கப் பட்ட உண்மை????


©️இறுதி மனிதர்கள்

©️களப்பிரர் ஆட்சி


மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! 


களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம்.


இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. 


தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. 


தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. 


மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின்  ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் சமூகத்தையும் அழிவிற்கு உள்ளாக்கினார்கள்.


தமிழர்களின் மதம், கலை, கலாச்சாரம், வானியல், சோதிடம், மருத்துவம், மொழி அனைத்தும் வெகு விரைவாக ஆரிய சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. 


ரிக் வேத ஆரிய முனிகள் தமிழர்களின் கண்டு பிடிப்புகளுக்கு உரிமை கொண்டாடினார்கள்.


தமிழ் கல்வி பிராமணர்களின் ஏகபோக உரிமையானது. 


உதாரணம்: சங்க இலக்கியங்களுக்கு பிற்காலத்தில் உரை எழுதிய அனைவரும் பிராமணர்களே. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரும் பிராமணரே.


இதன் விளைவு சங்க இலக்கியங்கள் அனைத்திலும் திருக்குறள் உட்பட எல்லாவற்றிலும் பார்ப்பனியத்தை திணிக்கும் வேலைகள் சுதந்திரமாக நடந்தது.


இதை தட்டி கேட்க வேண்டிய மூவேந்தர்களும் யாகங்களில் மூழ்கி கிடந்தார்கள்.


தங்களுக்கு எதிரான அனைத்தையும் விழுங்கி செரித்து விடுவது பார்ப்பனியத்தின் சிறப்புகளுள் ஒன்று. 


வட இந்தியாவில் சமணமும், பௌத்தமும் பார்ப்பனியத்தால் விழுங்கப்பட்டன. 


இந்தியாவில் தோன்றிய பௌத்தம் இந்தியாவில் பரவாததற்கு காரணம் இதுவே.


மூவேந்தர்களும் போட்டி போட்டுகொண்டு வைதீக பார்ப்பனியத்தை ஆதரித்தார்கள்.


பிராமணர்களுக்கு உள்ளூர் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது. 


மனு போன்ற பிராமணியத்தின் பிரத்தயேக தர்மங்கள் பொது மக்களிடையே திணிக்கப்பட்டன.


பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் வழங்கப்பட்டன.


பிரம்மதேயங்கள், சதுர்வேதி மங்களங்கள் என்றால் என்ன ?


பிராமணர்களுக்கு என்று ஒரு ஊரை உருவாக்கி, அந்த ஊரில் வசிக்கப் போகும் ஒவ்வொரு பிராமணருக்கம் அந்த ஊரை சுற்றி விவசாய நிலங்களை ஏற்படுத்தி, அந்த நிலங்களில் உழைப்பதற்கு வேலையாட்களையும் கொடுப்பதற்கு பெயர் பிரம்மதேயம் மற்றும் சதுர்வேதி மங்களம். 


இந்த ஊர்களில் வசிக்கும் பிராமணர்களிடமிருந்து எந்தவிதமான வரியும் வசூலிக்கப்படாது. இவர்களின் விவசாய நிலங்களுக்கும் வரிகள் கிடையாது.


எந்த தகுதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மட்டும் இத்தகைய ஆதிக்க சலுகைகள் என்று அன்றைய தமிழ் சமூகத்திற்கும், அன்றைய மூவேந்தர்களுக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றாத நிலையில்தான் களப்பிர புரட்சியாளர்கள் தமிழகத்திற்குள் நுழைந்தார்கள்.


ஒடுக்கப்பட்ட விவசாய மற்றும் வணிக வர்கத்தின் கூட்டே களப்பிரர்கள். 


சமூக சீரழிவிற்கு துணைபோன மூவேந்தர்களும் ஆட்சி அதிகாரங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள்.


இந்த விரட்டியடிப்பு கி.பி.150 ஆம் ஆண்டுகளிலேயே தொடங்கிவிட்டது. 


கி.பி. 250 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் களப்பிர புரட்சியாளர்களின் முறையான ஆட்சி தொடங்கியது.


தமிழகமும் பார்ப்பனியத்தின் பிடியிலிருந்தது மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.


பார்ப்பனியம் மற்றும் பிராமணர்கள் பக்கம் களப்பிர புரட்சியாளர்களின் பார்வை திரும்பியது. 


பிரம்மதேயங்களும் சதுர்வேதி மங்களங்களும் பிராமணர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டன.


பிராமணர்கள் தலைமுறை தலைமுறையாக அனுபவித்த சொத்துகள் அனைத்தும் களப்பிர ஆட்சியாளர்களால் திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன.


பிராமணர்களின் மேலாதிக்கம் அடக்கி ஒடுக்கப்பட்டது.


பிராமணர்கள் உழைக்கும் வர்கத்திற்கு அடங்கி இருக்க வேண்டிய நிலையை களப்பிர புரட்சியாளர்கள் ஏற்படுத்தினார்கள். 


இந்தியாவில் தோன்றிய பேரரசுகளில் பார்ப்பனியத்திற்கு எதிரான வலுவான நடவடிக்கை எடுத்த ஒரே ஒரு பேரரசு களப்பிர பேரரசு மட்டுமே. 


பார்ப்பனியத்தை அடக்கி ஒடுக்கி உட்கார வைத்த காரணத்திற்காகவே இன்று களப்பிரர் ஆட்சி இருண்ட காலமாக வருணிக்கப்படுகிறது.


களப்பிரர் கொள்ளையர்கள் என்று அடையாளம் காட்டப்படுகிறார்கள்.


நேர்மையான எந்த வரலாற்று ஆராய்ச்சியாளரும் களப்பிர ஆட்சி காலத்தை இருண்ட காலம் என்று சொல்லத் துணியக் கூட மாட்டார்கள்.


அனைவரும் அனைவருக்கும் சமம் என்று போதிக்கின்ற சமண மதமும், பௌத்த மதமும் களப்பிரர்களின் அரசாங்க மதமாக இருந்தது. 


களப்பிர புரட்சியாளர்களின் காலத்தில் காஞ்சிபுரமும், காவிரிபூம்பட்டினமும் மிக மிக முக்கியமான பௌத்த நகரங்களாக இருந்தன. 


ஆரிய கலப்பற்ற மிகச் சிறந்த பௌத்த தமிழ் இலக்கியங்கள் களப்பிரர் ஆட்சி காலத்திலேயே எழுதப்பட்டன. சீவகசிந்தாமணி, நரிவிருத்தம், கிளிவிருத்தம், பெருங்கதை போன்ற இலக்கியங்கள் இதற்கு உதாரணம்.


சங்கமித்திரர், புத்ததத்தர், புத்தமித்திரர், போதிதருமர் (ஏழாம் அறிவு புகழ்) போன்ற மிகச் சிறந்த பௌத்த மத துறவிகள் களப்பிர அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். 


இதில் சங்கமித்திரர் இலங்கையில், பௌத்த தத்துவத்தின் ஒரு பிரிவான மகாயன பௌத்தத்தை பரப்பி புகழ் பெற்றவர்.


போதிதருமர் தென்கிழக்காசியாவில் பௌத்த தத்துவத்தின் தியான பிரிவான ஜென் தத்துவத்தை பரப்பி புகழ் பெற்றவர்.


இன்றைய வரலாற்று நூல்கள் சித்தரிப்பது போல் களப்பிரர் ஆட்சி காலம் இருண்ட காலமாக இருந்திருந்தால் இவர்களால் இத்தகைய சாதனைகளை செய்திருக்கவே முடியாது.


உண்மை வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தருமம்.


அதுவும் ஆரிய வர்ணம் தூக்கலாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும்,

அதற்கு எதிரான அனைத்தையும் சிறுமைபடுத்துவதும், கேவலப்படுத்துவதும், எதிர்ப்பு குரல் எழுப்புபவர்களை துரோகிகளாக சித்தரிப்பதும் இவர்களின் செயல்கள்.


கி.பி. 250 முதல் தமிழகத்தை ஆரிய ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்த களப்பிரரின் ஆட்சி 350 வருடங்கள் கழித்து கி.பி.600-ல் முடிவிற்கு வந்தது. 


தெற்கில் பாண்டியன் கடுங்கோனும், வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணுவும் களப்பிரரை வீழ்ச்சியடைய செய்தார்கள். 


பிடுங்கபட்ட பிராமணர்களின் ஆதிக்கச் சலுகைகள் மீண்டும் அவர்களுக்கு கிடைத்தது.

Friday, October 07, 2022

இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!!

 இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! 


சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். 


பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். 


அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி நமக்கு திருப்பிக் கிடைக்கும் வழி. 


பெண்களுக்கான கட்டணமில்லா உள்ளூர் பேருந்து பயணத்தை பெண்கள் உரிமையோடு மேற்கொள்ள வேண்டும்!

காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

 நிலை 1: நம் ஊர் பெரிதாக வேண்டும். எல்லா வசதிகளும் அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.


எங்கள் வீடுகளை, நிலங்களை அரசு திட்டங்களுக்குத் தர மாட்டோம். அது எங்கள் வாழ்வாதாரம்.


பக்கத்து ஊரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் நிலங்களின் மதிப்பு கூடிவிடும்!


நிலை 2: என் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்குகிறது. என்னால் இங்கு வாழ முடியவில்லை. எங்கேயோ வடிகால் அடைபட்டிருக்கிறது. உடனே அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


வீட்டைச் சுற்றி நீர் தேங்கினாலும் என் வீடு ஆக்கிரமிப்பு கிடையாது. அரசு என் வீட்டை இடிக்கக் கூடாது. பக்கத்து வீட்டை இடித்தால் நீர் வடிந்துவிடும்.


நிலை 3: நிலத்தடி நீரை சட்டத்திற்கு புறம்பாக உறிஞ்சும் நிறுவனங்களால்தான் என் நிலத்தில் நீர் கிடைக்கவில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மூன்று நாள்களாக தொடர்ந்து குடிக்க கேன் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம். ஒரு கேனுக்கு 100 உரூபாய்! அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

நூல் அளவுதான் வித்தியாசம்

 எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக


எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காகஎங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு லச்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக


எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள் 

கோவில் கருவறையில்

காமலீலை செய்ததற்காக,


எங்கோ ஒரு கோவில் குருக்கள் 

கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக, எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்

100 கிலோ தங்கத்தை திருடியதற்காக.


 எங்கோ ஒரு சித்ரா ராமகிருஷ்ணன் பிராமணாள் பங்கு சந்தையில் பலகோடி ஊழல் செய்ததற்காக 


ஒட்டு மொத்த பார்ப்பனரையும்

தவறாகப் பேசக்கூடாது.


ஆனால்...


எங்கோ ஒரு முஸ்லிம்

குண்டு வைத்ததற்காக,

ஒட்டு மொத்த முஸ்லிம் எங்கோ ஒரு முஸ்லீம் குண்டு வைத்ததற்காக முஸ்லீம் சமுதாயத்தையும் குற்றம் சொல்லலாம்.


எங்கோ ஒரு திமுக காரன்

பியூட்டி பார்லர் கடையை உடைத்தற்காக,

ஒட்டு மொத்த திமுக காரனையும்

பழி சொல்லலாம்.


ஏனெனில், நியாயம் நீதி இரண்டு வகைப்படும். 

அது இரண்டுக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்...

Thursday, October 06, 2022

இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!!

 இந்தியாவில் எல்லா நபரும் வரி செலுத்துபவர்தான்!! 


சில கட்சிகள் வருமான வரியை மட்டும் கணக்கில் கொள்ளும். கட்டணமில்லா சேவைகளை/சலுகைகளை இலவசங்கள் என்றும், அவைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக கூறும். அவைகளை புறக்கணிப்போம். 


பிறப்பு முதல் இறப்பு வரை நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும்/பெறும் சேவைகளிலும் வரி (ஜிஎஸ்டி) செலுத்துகிறோம். 


அரசின் சலுகைகள் நம் வரிப்பணத்தின் ஒரு பகுதி நமக்கு திருப்பிக் கிடைக்கும் வழி. 


பெண்களுக்கான கட்டணமில்லா உள்ளூர் பேருந்து பயணத்தை பெண்கள் உரிமையோடு மேற்கொள்ள வேண்டும்!

எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன்

 

India Today பத்திரிக்கை வருடா வருடம் இந்திய மாநிலங்களை தரப்படுத்தி வெளியிடும். அதை நூலகத்திலோ, இணையத்திலோ தேடி படித்து பாருங்கள். அதில் ஒவ்வொரு முறை திமுக ஆட்சில இருக்கும் பொழுதும் தமிழ் நாடு முதல் மூன்று இடங்களில் இருக்கும். ஆனால் அதிமுக வரும் பொழுது எல்லாம் கீழே இறங்கி விடும். அதிலும் OPS முதல்வராக இருந்த பொழுது கடைசி இடதுக்கு தள்ளப்பட்ட கேவலமும் நடந்தது.

குறிப்பாக 96-01 திமுக ஆட்சி இன்றைய நவீன தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட பொற்கால ஆட்சி என்று திமுக பிடிக்காத பார்ப்பன பத்திரிகைகளே ஒத்து கொண்ட விடயம். I.T துறை முதல், சாலை மற்றும் போக்கு வரத்து விரிவாகம் வரை தமிழ் நாடு நாட்டிலேயே உச்சதுக்கு போக காரணம் திமுக தான். EPS வந்து எல்லா இடத்துக்கு MGR பேரை வச்சிட்டு வெற்று தம்பட்டம் அடித்து கொண்ட கொள்ளைகாரன்/ கொலைகாரன்.

(MGR ஆண்ட 10 வருடங்கள் தமிழ் நாட்டில் எந்த பொருளாதார வளர்ச்சியில் இல்லை, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடியாது என்று அப்ப வந்த CAG அறிக்கை காறி துப்பி விட்டது. ஆனா சினிமா மோகத்தை வச்சி மக்களை ஏமாற்றி, கடைசில் A1 கொள்ளைகாரி கிட்ட தமிழ் நாட்ட விட்டுட்டு போய்ட்டாரு.)

Bonus for those interested in facts and not inane bullsh!t:

இந்தியாவிலேயே தமிழ் நாடு இன்று முன்னேறிய மாநிலமாக இருக்க காரணம், கலைஞர் தான். 1971 இல் SIPCOT மற்றும் SIDCO உருவாக்கி மாபெரும் தொழிர்ச்சாலைகள் & வேலைவாய்ப்புகள் உருவாகினார். பிறகு 1977இல்ல ELCOT தொடங்கி அதான் மூலம் மின்னனு தொழிர்ச்சாலைகள் உருவாக்கி தொழிர்ரபுரட்சியை தமிழ் நாட்டில் தொடங்கினார். பிறகு 1991இல் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் உலகமயமாக்கள் இந்தியாவிற்கு கொண்டுவந்த பின், கலைஞர் 1997இல் இந்தியாவில் முதன் முதலாக I.T policy உருவாக்கினார். பிறகு 1999இல் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய I.T பூங்காகளில் ஒன்றாக TIDEL park உருவாக்கினார்.

இன்று அதில் உட்கார்ந்து கொண்டு தான் சில தற்குறிகள் “திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே”னு போன்ல பதிவு போடுதுங்க. அப்பலாம் இங்க I.T னா என்னன்னே பெரும்பாலும் மக்களுக்கு தெரியாமல் இருந்த பொழுது அதான் எதிர்காலத்தை உணர்ந்து I.T துறையை உருவாக்கி, கணினி கல்வியை கொண்டுவந்தார். மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்கு 1995-96இல் வெறும் 0.2% இருந்தது, அதை 2000 எட்டும் பொழுது 13% மாற்றி காட்டினார்.

ஜெயலலிதா எத்தனை I.T park அமைத்தார்னு யாராவது சொல்ல முடியுமா. சொல்லப்போனா ஓசூர் கிட்ட அமையவிருந்த I.T park திட்டத்தை திமுக போட்ட திட்டம்னு கிடப்பில தான் போட்டாங்க. (இப்ப திமுக மதுரையில ஒரு பெரிய I.T park மைக்கும் திட்டத்தை PTR அறிவித்திருக்கார்.)

இந்தியாவின் Detroit என தமிழ் நாடு புகழ் பேரும் வகையில் கார், பைக் தொழிர்சாலைகள் கொண்டுவந்தார். சேலம் இரும்பு ஆலையையும் கொண்டுவந்தவர் கலைஞர் தான்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு சாலை போக்குவரத்து infrastructure உருவாக்கியது 1996-01 கலைஞர் தான். முதன் முதலில் சிறு சிறு தெருக்களுக்கு கூட சிமன்ட் சாலை, குக்கிராமங்களுக்கு மினி பேரூந்து தொடங்கினார். பேரூந்து கட்டணங்களை தொடர்ந்து இந்தியாவிலேயே மிக மலிவாக வைத்துகொண்டார். கோயம்பேட்டில் அப்போதைக்கு ஆசியாவின் மிக பெரிய பேரூந்து நிறுத்தம், கிட்டத்தட்ட 100 சிறு மற்றும் பெரு அணைகள், அரசு ஊழயர்களின் குடும்பத்துக்கு அனுதாப தொகை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கியது, சென்னை மெட்ரோ, தமிழ் நாடு முழுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் (அம்மா கிளினிக் போல வெறும் ஒரு பாத்ரூம் கட்டி பலகை தொங்க விட்டவரல்ல), என்று இன்னும் பல.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தை, Tamil Nadu Civil Supplies Corporation போன்றவற்றை கொண்டுவந்தார்.

கை ரிக்க்ஷாகள் ஒழித்தார், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி, இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கு சொத்து உரிமை கொடுத்தவர், குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வித்திடவர். இன்று தமிழ் நாட்டில் 75% பேர் சொந்த வீடு வைத்துள்ளனர். Backward class/தாழ்த்தபட்டோர் என்பதை நீக்கி பிற்படுத்தப்பட்டோர் என்ற பதம் உருவாக்கினார். அது போல் ஊனமுற்றோர் என்ற பாதத்தை நீக்கி, மாற்றுத்திறனாளி என்ற பதத்தை கொண்டுவந்து, அவர்களுக்கு 3% இடஒதுக்கீடும் கொண்டுவந்தார். இன்னும் நூற்று கணக்கில் திட்டங்களை, infrastructure என்று உருவாக்கி தமிழ் நாட்டின் தலைஎழுத்தை மாற்றியவர்.

It's these things that gave common people a chance to improve their lives become determiners of their lives. Not random selection of rich men with caste backing as ministers.

ஆனால் இது எதை பற்றியும் தெரியாமல் ஒரு காலத்தில் நான் சீமான் பின்னால் சுற்றி கொண்டு இருந்தேன், பிறகு அரசியல் தெளிவு ஏற்பட்ட பின் வெளி வந்து விட்டேன். இங்கு கலைஞரை திட்டி பதிவு போடுபவர்கள் நாளை உணர்வார்கள்.

Friday, September 30, 2022

தேவதாசி


 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.

 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர். பெண் விடுதலைச் சட்டம் அனைத்தையும் எதிர்த்தவர்கள் இவர்களே.

இதற்கு பார்ப்பனர்கள் சொன்ன காரணம் என்னவென்றால்.. இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவோமே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நாங்கள் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டோம் என்று கூறி தேவதாசி பெண்களை வைத்தே இந்த தீர்மானத்தை எதிர்த்து போராட வைத்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் பெரியாரிடம் வந்து "இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது" என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் ஆலோசனை கேட்டார்.

அதற்கு பெரியார் " நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தார்.
 
அப்போது சத்தியமூர்த்தி அய்யர் பேசினார். "தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார். அவர்கள் தங்களை அர்ப்பணித்து தொண்டு செய்வதால் புண்ணியம் பல சேர்த்து புண்ணியவதியாகிறார்கள்.'' என்றார்

அதற்கு முத்துலட்சுமி அம்மையார், எதிர்க்கட்சி பார்ப்பனர்களைப் பார்த்து "தேவதாசி ஒழிப்பு தீர்மானத்திற்கு எதிராக பேசும் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள். எக்கச்சக்க புண்ணியத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
இனிமேல் அந்தத் தொண்டை உங்கள் பிராமண பெண்களே செய்யட்டும்.. நீங்களும் புண்ணியம்  சேர்த்து கொள்ளுங்கள், அதற்கு யாரும் எதிர்ப்பு கூறமாட்டார்கள், உங்கள் சாத்திர சம்பிரதாயங்களும் கெட்டுப் போகாது" என்றார்.

இதைக் கேட்ட பார்ப்பனர்களுக்கு, ஒரு செருப்பை வாயில கவ்வக் கொடுத்து, இன்னொரு செருப்பை சாணில முக்கி அடித்தது போல் இருந்தது.

இவ்வளவு பிரச்சினைகளை மீறித்தான் தேவதாசி ஒழிப்பு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

#பெரியார்_என்றாலே ஏன் பார்ப்பனர்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்று இப்பொழுதாவது புரிகிறதா..?

Sunday, September 04, 2022

பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமா.!?

 பிரபல தீஸிஸ் திருடனின் பிறந்தநாள் 

ஆசிரியர்_தினமா.!? 


ஜாதுநாத் சின்ஹா கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1915ல் இளங்கலை தத்துவவியல் முடித்து, புகழ்பெற்ற ஃபிலிப் சேமுயல் ஸ்மித் மற்றும் க்ளின்ட் நினைவு பரிசுகளையும் வென்று, 1917ல் முதுகலையும் முடிக்கிறார். உடனடியாக கல்கத்தா ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் துறை துணை பேராசிரியராக தேர்வாகி பணி செய்கிறார் 


கல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் கல்வி உதவித்தொகைக்காக 1922ம் ஆண்டு, “இந்திய உளவியல் ஞானம்” என்ற தலைப்பில் தொகுதி 1 மற்றும் 2 என்ற இரண்டு ஆராய்ச்சி ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க தொடங்குகிறார். அதற்கு தேர்வாளராக பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். ஆராய்ச்சியின் ஒவ்வொரு வகுப்பீடும் தேர்வாளர் பேராசிரியர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் சமர்பிக்கப்படுகிறது. 1923ம் ஆண்டு ஜாதுநாத் சின்ஹாவுக்கு புகழ்பெற்ற க்ரிஃப்ஃபித் பரிசும் மௌஅத் பதக்கமும் வழங்கப்படுகிறது. 1925ல் ஆராய்ச்சியின் முழு அறிக்கையும் சமர்பிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஜாதுநாத் சின்ஹா தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் சாறுகளை மீரட் கல்லூரி இதழில் 1924 மற்றும் 1926ம் ஆண்டுகளில் வெளியிடுகிறார். 


ஜாதுநாத் சின்ஹாவினுடைய ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் பெரும்பகுதியை திருடி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது இந்திய தத்துவம் புத்தகத்தின் இரண்டாம் தொகுதியில் பதிந்து வெளியிட்டிருப்பதை நவம்பர் 1928ல் கண்டுபிடிக்கப்பட்டது.


சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் இந்த பதிப்புரிமை மீறல் தொடர்பாக, 20.12.1928 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாடர்ன் ரிவ்யூவ் இதழுக்கு அனுப்புகிறார் ஜாதுநாத். 1929 பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களில் மீண்டும் புகார் கடிதங்களை அனுப்புகிறார். அவை அதே இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவை பலனிக்காதததால், 1929 ஆகஸ்ட் மாதம், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மீது தனது ஆராய்ச்சி ஆய்வறிக்கையை திருடிவிட்டதாக, கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குகிறார் ஜாதுநாத்.


சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நடவடிக்கையால் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானம் கப்பலேறுவதை சகிக்க முடியாமல், சக பேராசிரியர்களின் துணையோடு, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு பேச்சுவார்த்தை நடத்தி மே 1933ல் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. 


பிறகு 1952ல் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, 1954ல் பாரத ரத்னா விருதையும் வாங்கிக் கொண்டார். 


பின்பு 13.05.1962ல் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், அதன் பிறகு வந்த தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட அவரே வற்புறுத்தினார். அதன் விளைவாக 05.09.1962ம் ஆண்டு முதன்முதலாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. 


இப்படி தனது மாணவனின் ஆராய்ச்சி அறிக்கையைத் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பாரத ரத்னா விருது வாங்கிய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது வரலாற்றுப் பிழை


நியாயமாக பார்த்தால் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலேவின் பிறந்தநாளான ஜனவரி 3 தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

Tuesday, June 14, 2022

Marshall நேசமணி

 "1810 வரை தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட, சேரர் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், அதன் பிறகு, சனாதன தர்மத்தை கொள்கையாகக் கொண்ட சமஸ்கிருத மலையாள மன்னராட்சியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது.
ஏறத்தாழ 146 ஆண்டுகள் இந்நிலப்பரப்பு அடிமைப்பட்டுக் கிடந்தது. தீண்டாமை, காணாமை, தோள் சீலை அணியும் உரிமை மறுப்பு, கோவிலுக்குள் நுழையத் தடை, தலைப்பாகை அணியக்கூடாது, நல்ல பெயர்களை சூட்டக் கூடாது, வரிச்சுமை.. இன்னும் பற்பல அடக்குமுறைகள் தமிழ் குலத்தினர் மீது ஏவப்பட்டது!!

கன்னியாகுமரி தமிழர்கள் மீண்டும் தமிழ்நாட்டுடன் சேராமல் இருக்க சமஸ்கிருத மலையாள ஆட்சியாளர்கள், இந்நிலப்பரப்பை மலையாளமயமாக்கினர்; தமிழ் கற்கும் உரிமை மறுக்கப்பட்டது. தமிழர்களை அடக்கி ஒடுக்கினர். 1948 - 1956 காலகட்டத்தில், மொழி வழியில் மாநிலங்களை பிரிக்க இந்திய அரசு ஆய்வு நடத்திய போது, கேரளத்தோடு குமரி மாவட்டத்தை சேர்க்க அரசு முடிவு செய்தது. இவற்றையெல்லாம் எதிர்த்து, தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து நடத்திய போராட்டமே, தெற்கெல்லை விடுதலைப் போராட்டமாகும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடைபெற்ற வீரஞ்செறிந்த போராட்டங்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் நாடார் சமூகத்தினர். காவல்துறையின் கொடூரமான தாக்குதல்களில், நூற்றுக்கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். எவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும், தமிழ்நாட்டோடு இணைந்தே தீருவது என்ற மன உறுதியோடு மக்கள் போராடினர்.

போராடிய மக்களின் தலைவராக இருந்து வழிநடத்தியவர் தான் குமரித் தந்தை Marshall நேசமணி. வர்ணாஸ்ரமதர்மத்தால் ஒடுக்கப்பட்ட நாடார் சமூகத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில், ஆதிக்க ஜாதி வழக்கறிஞர்களுக்கும் ஒடுக்கப்பட்ட வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்து, அனைவருக்கும் பொதுவான ஒரே பானையை வைத்தவர்.

தான் நீதிமன்றம் சென்ற முதல் நாளன்றே,  ஒடுக்கப்பட்டடோருக்கு (நாடார், தேவர், பறையர், முக்குவர், ஈழவர், புலையர்......), தீண்டாமை காரணங்களுக்காக போடப்பட்டிருந்த "தனி" ஸ்டூலை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியில் உட்கார்ந்தவர். தமிழர்களை ஒன்றுதிரட்டி, அரசுக்கு எதிராக பல கிளர்ச்சிகளை முன்னின்று நடத்தியவர். அதேபோல,  தாய்மொழிக்கல்வி மறுக்கப்பட்ட தமிழர்களின் மொழி உணர்வுக்கும் விழிப்புணர்வுக்கும் எழுச்சிக்கும், வேளாளர்கள் முன்னெடுத்த தமிழ் சங்கங்களும், கருத்தரங்குகளும் பெரிதும் பயன்பட்டன.

துப்பாக்கி சூடுகள், தடியடிகள்,  ஆதிக்கவாதிகளின் அரிவாள் வெட்டுக்கள், சொத்து பறிப்புகள், தியாகங்கள், உயிரிழப்புகள் ஒருபுறம் அதிகரித்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பலகட்ட போராட்டங்கள் நடந்தன‌.  "வீட்டுக்கு ஒரு தமிழன், நாட்டை காக்க புறப்படு" என்று நேசமணி முழங்கினார். ஒரு கட்டத்துக்கு மேல், இந்திய அரசால் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், விருப்பம் இல்லாமல், கன்னியாகுமரி மாவட்டத்தையும், தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை தாலுகாவையும், தமிழ்நாட்டோடு இணைத்தது அரசு. (1956)

நேசமணி எழுதிய நூல்கள்:
1. Inside Travancore, Tamil Nadu
2. Rule of Steel and Fire in Travancore Cochin
3. "திங்கள்" என்ற இதழையும் நடத்தினார்.

தன் இறுதிக் காலத்தில், Church of South India (CSI) - கன்னியாகுமரி மறைமாவட்ட துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து மறைந்தார். (1968). மன்னராட்சியில் ஜாதிகளால் பிளவுபட்டிருந்த, பிளவுபடுத்தி வைக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி தமிழர்கள் (நாடார், மீனவர், பறையர், வேளாளர்,  ....), மொழி & பண்பாட்டின் அடிப்படையில், ஒன்று திரண்டெழுந்த வீரவரலாற்றுக்கு சொந்தக்காரரான Marshall நேசமணியின் பிறந்தநாள் இன்று ⚔️⚔️⚔️"

படி..படி..படி...

 படி..படி..படி...
படிக்காம ஜெயிச்சவன் ஒருத்தர் இரண்டுபேர காட்டலாம் படிச்சு ஜெயிச்சவன் லட்சம் பேர என்னால காட்டமுடியும் .. படிக்காம ஜெயிக்கலாம் அப்படி எவனாவது சொன்னா நம்பாதே ..
இவர்களெல்லாம் முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில்  தவறான பாதையை காட்டும் சூழ்ச்சி ..
தமிழ்நாட்டின் தலைவன்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
..
ஆம்
படிக்காம விவசாயம், பண்ணு ஆடு வளர்க்க போ.. லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம் .. IPS வேலைய ராஜினாமா பண்ணிட்டு ஆடு வளர்த்தேன்  என படிக்க  நினைக்கிறவன் மனதில் விசத்தை விதைக்கிற "பசுமைவிகடன்" விவசாயம் பண்ணி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இன்ஜினியர் என மயக்கும் வார்த்தைகளை நம்பாமல் படியுங்கள் .. படிப்பு மட்டுமே ஒருவனின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் ..
..
எங்கே படிச்சு மேல வந்துடுவானோ என்கிற அச்சம் பன்நெடுங்காலமாய் கல்வி மறுக்கபட்டவன் உயரத்தை நோக்கி வரும் போது அவனை திசைமாற்றும் சதி.. அதை நம்பாமல் கல்வி ஒன்றே குறையாத செல்வம் .. எப்படியாவது படித்துவிடு என முதலமைச்சர் கவலைக்கொள்கிறார் .. எக்கேடுகெட்டால் என்ன மாட்டு மூத்திரமும் புல்டோசரும் முஸ்லிம்களும் இருக்கும் வரை நம்மை அசைக்கமுடியாதென மக்களை மடையர்களாக வைத்திருக்க நினைக்கும் காலத்தில் படி என்கிறார் திராவிட மாடல் முதல்வர் ..
..
காலையில படி மாலையில விளையாடு என பாரதி பாட்டை பாடமாக்கி அவர்கள் மட்டும் எல்லா நேரமும் படித்துக்கொண்டிருக்க பாவேந்தர் தான்
"காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி"..
படி படி படி என பாடினார் ..
..
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் தான் திராவிடத் தலைவர்கள் படித்த சமுதாயம் உருவாக வேண்டுமென பாடுபட்டார்கள், பாடுபடுகிறார்கள் ..  
மிக முக்கியமான காலகட்டத்தில்
வரலாற்றை மாற்றி எழுத துடிக்கும் சனாதனசக்திகள், தமிழகத்தின் விடுதலை வரலாற்றை கூட மறைக்க முயலும் பாசிச சக்திகள், சாதிமத துவேசத்தை எளிதாக நம்மிடையே கடத்த முயலும் இக்காலகட்டத்தில் .. மிகப்பெரிய மாற்றம் என்ற பெயரில் பொய்புரட்டு புராணத்தை புகழ்ந்து கல்வியில் திணிக்க முயலும் வேளையில், எதையும் ஆய்ந்தறிந்து சரியானதை தேர்வு செய்து மாணவச் செல்வங்களின் நெஞ்சில் நல்லதை விதைக்க சரியானவரிடம் அதிகாரம் வந்திருப்பதும் அதை அவர் மிக சாதூர்யமாக கையாள்வதும் மகிழ்வை தருகிறது "எண்ணும் எழுத்தும்"..
..
இந்திய ஒன்றிய அரசு (எல்லாமாநிலத்திற்கும்) ஒதுக்கியதை விட அதிகமாக நிதியை ஒதுக்கி வலுவான கல்வி கட்டமைப்பை தருகிறார் .. நம் பிள்ளைகளை படிக்க வைக்கவேண்டும்..
ஆம் அப்போது தான் இச் சமூகத்தில்
 சிறந்தவர்களாக பண்பாளர்களாக, நல்லொழுக்கமுள்ளவர்களாக, சாதிமதவெறியெனும் சாக்கடையில் மூழ்காமல் எதையும் அறிவுக் கொண்டு சிந்திக்கும் நல்லவர்களாக உருவாக்குவோம் ..
..
நல்லதை விதைப்போம்
வருங்காலம்  நன்மையே பயக்கும்

லார்டு மெக்காலே வை பார்ப்பனர்கள் வில்லனாக சித்தரிப்பதன் காரணம் என்ன?

 “1813 துவங்கி 1833 வரை கிழக்கிந்திய கம்பனி, இந்தியாவில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சிக்காக, வருடம் தோறும் வழங்கிய ஒரு லட்சம் ரூபாய் மானியம் என்ன ஆயிற்று? என்று பிரிட்டிஷ் பாராளுமன்ற குழு ஆய்வு நடத்தியது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் ரூபாய் என்றால் இன்றைய மதிப்பில் எத்தனை பில்லியன் என்று பாருங்கள்!

அவ்வளவு பணமும் இந்திய பொதுமக்களுக்கு போய் சேரவில்லை. கல்வியோ, பொது அறிவோ, முக்கியமாக அறிவியலோ வளரவே இல்லை. அந்த இருபது லட்சத்தையும் வேத பாட சாலை நடத்தி சமஸ்கிருதம் வளர்க்கவும், மதராசாவில் அரபி கற்பிக்கவும் தான் செலவாயிற்று என்று தெரிய வந்தபோது அது பிரிட்டிஷாருக்கு அதிருப்தியைத் தந்தது.

காரணம்
பிரிட்டனில் கல்வி என்பது மதசார்பற்றது,
எல்லா மனிதருக்கும் பொதுவானது,
முக்கியமாய் பிரிட்டனில் பெண்களும் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

ஆனால்
//இந்தியாவில் பெண்களை விடுங்கள், பிராமணரைத் தவிற வேறு எந்த வர்ணத்தை சேர்ந்த ஆண்களுமே கல்வி‌ கற்கவே கூடாது என்கிற விதி இருந்தது//

இந்தியாவின் இந்த விசித்திரமான வழக்கத்தை ஆய்வு செய்யும் பணி தாமஸ் பாபிங்டன் மெக்கலே எனும் ஆங்கேலேய அதிகாரிக்கு வழங்கப்பட்டது.

யார் இந்த தாமஸ் மெக்கலே?

அவர் ஒரு எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பல மொழி வித்தகர், அடிமை முறைக்கு எதிரானவர், முற்போக்கு கருத்தளர்,  பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற கொள்கை உடைய பிரிட்டிஷ் அதிகாரி.

இந்த லார்ட் மெக்கலே இந்தியாவிற்கு விஜயம் ஆனார். சமஸ்கிருதமும் பர்ஷியனும் கற்றுக்கொண்டார்.  அவருக்கு ஏற்கனவே கிரேக்கமும், லத்தீனும் அத்துப்படி என்பதால், அதே வேர் சொற்களை கொண்ட சமஸ்கிருதம் அவருக்கு எளிதில் புரிந்துபோனது.

அவருடைய ஆழமான ஆய்விற்கு பிறகு, 1835 ல் “இந்தியாவில் கல்வி” எனும் அவருடைய குறிப்புக்களை வெளியிட்டார். இந்த
Minutes  on Indian Education எனும் உரை, பிறகு Macaulay's Minutes என்று பிரசித்தி பெற்றது.

அதில் மெக்காலே சொன்னது என்னவென்றால்?

1. சம்ஸ்கிருத நூல்களில் இருக்கும் குறிப்புகளை அனைத்தையும் ஒன்று திரட்டிப்பார்த்தாலும்,
அவை பிரிட்டிஷ் ஆரம்ப கல்வி நூல்களை விட குறைவான தகவலே கொண்டுள்ளன.

2. இந்தியாவில் இது வரை சமஸ்கிருதத்திலும் அரபிக்கிலும் கற்பிக்கப்பட்டு வந்த பாடங்கள் அறிவியலுக்கு உகந்ததாக இல்லை

3. இந்தியர்கள் இதனாலேயே பிற்போக்கான, காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்

4. அதனால் இந்திய மொழிகளில் பாடம் நடத்துவது வீண் செலவு.  அது அனைவருக்கும் போய் சேரவில்லை.

மெக்காலேவின் எண்ணம்
“எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும்,
இந்தியர்கள் அனைவரும் வெளித்தோற்றத்தில் பழுப்பு நிறத்தவராய் இருந்தாலும், எண்ணத்திலும் நாகரீகத்திலும், நேர்த்தியிலும், ரசனையிலும் பிரிட்டிஷாரை போல முற்போக்காய் இருக்க வேண்டும்,
சமத்துவ நிலையை அடைய வேண்டும்,
அதற்கு ஆகும் செலவை மனிதாபிமான அடிப்படையில் பிரிட்டிஷ் அரசே மேற்கொள்ள வேண்டும்”
என்றார்.

//சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இது ஆபத்தான போக்காக தோன்றிற்று. இந்தியர்களை தமக்கு சமமான நாகரீக நிலைக்கு கொண்டு வர முயல்வது வேண்டாத வீண் செலவு என்றே அவர்கள் நினைத்தார்கள்//

ஆனால்
*தாமஸ் மெக்கலே பிரிட்டிஷ் வரலாற்று நூல் எழுதியவர் என்பதால் அரச குடும்பத்திற்கு நெருக்கமானவர்.  மிக சிறந்த அறிஞர், நாணயமிக்கவர், மனிதாபிமானி, அப்பழுக்கற்ற அறச்சிந்தனையாளர் என்பதால் யாராலும் அவரை நேரடியாக எதிர்க்கமுடியவில்லை*

இதற்கு இடையில் 1833 ல் இந்தியாவில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அது வரை சில பிரெசிடென்சிகளை மட்டுமே ஆண்டுவந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு
ஒட்டுமொத்த இந்திய நிலபரப்பை ஆளும் அதிகாரம் அளிக்கப்பட்டது.

லார்ட் வில்லியம் பெண்டிங் ஒருங்கிணைந்த இந்திய பிரதேசத்தின் முதல் கவர்னர் ஜெனரலான பொறுப்பேற்றார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு இயற்றிய முதல் சட்டம்:

பெங்கால் சதி தடை சட்டம்.

ஆங்கிலேயருக்கு இந்தியாவில் ரொம்பவே பிடிக்காத காட்டுமிராண்டுத்தனம் ஒன்று உண்டு என்றால் அது “சதி ஏறுதல்” எனும் மிகவும் கொடூரமான சம்பிரதாயம்.

இங்கிலாந்தில் கணவன் இறந்துவிட்டால்,
மனைவி விரும்பினால் மறுமணம்  செய்து கொள்ளலாம். அல்லது தனி பெண்ணாய் தன் பிள்ளை குட்டியை வளர்த்து ஆளாக்கி சுயமாய் வாழலாம்.

ஆனால் இந்தியாவிலோ கணவன் இறந்தால்,
அதற்கு மேல் பெண்ணுக்கு மறுமணம் செய்தாரில்லை. அந்த பெண்ணை சுயமாக வாழ விட்டாரும் இல்லை. அந்த பெண், கணவனின் சிதையில் தானும் குதித்து செத்தே ஆக வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருந்தார்கள்.

பிள்ளைகுட்டி இருக்கிற பெண், இப்படி பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டு சதியில் குதிப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது?  
அந்தப் பெண் உயிரோடு இருந்தால் தானே அவள் குழந்தைகளுக்கு அனுகூலம்!  
அப்போது தானே அவள் மரபணுக்களுக்கு லாபம். அவள் கணவனுடைய மரபணுக்களுக்கும் லாபம்.

இதை விட்டுவிட்டு ஆரோக்கியமான ஓர் இளம் பெண் இறந்து போவதில் யாருக்கு என்ன லாபம் இருக்க முடியும்??

ஆனால் லாபம் இருப்பதாகவே இந்தியர்கள் நம்புவிக்கப்பட்டார்கள்!
என்ன லாபம் தெரியுமா?
கணவன் அவனுடைய ஈரேழு ஜென்மங்களில் செய்த அத்தனை பாவமும் போய்,
அடுத்த ஜென்மத்தில் புனித க்ஷேத்ரமான காசியில், புனித நதியான கங்கையின் கரையில், புண்ணியாத்மாவான பிராமணனாக பிறக்கும் நல்வாய்ப்பை பெறுவான்.
அதனால் தன் கணவனுக்கு இந்த பாக்கியம் கிடைக்க வேண்டி கற்பில் சிறந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது அவசியம்!!

அந்த பெண்ணுக்கு வலிக்குமே?
ஆங்! உண்மையான கற்புக்கரசிக்கு வலிக்காது! எல்லாருக்கும் கிடைக்குமா இந்த பாக்கியம்!  அதுக்கெல்லாம் கொடுப்பனை வேண்டும்!....
என்று சொல்லி,
அழகு போட்டி என்று சொல்லி பெண்களை அரைநிர்வாணமாய் நிற்க வைத்து ஆண்கள் கண்களாலேயே வேட்டையாடுவது போல, கற்புக்கரசிக்கான போட்டி- கற்புள்ளவளுக்கு வலிக்காது என்று கதைகட்டி விட்டார்கள் கருட புராணம் எழுதிய பிராமணர்கள்.

இந்த கதைகளை எல்லாம் இந்தியாவில் படிப்பறிவில்லாத முட்டாள்கள் நம்பி, ஷத்திரிய பெண்களையும், வைஷிய பெண்களையும் மானாவாரியாக உடன்கட்டை ஏற்றி கொன்றுவிட்டார்கள்!

ஆனால் சூத்திர பெண்கள் அதிகமாக உடன்கட்டை ஏறவில்லை. காரணம் சூத்திர பெண்கள் வேலைக்கு போனார்கள். அவர்கள் ஊதியம் ஈட்டினார்கள்.
உழவு, நெசவு, கொசவு, பூ தொடுத்தல், அரண்மனையில் வேலை செய்வது என்று சூத்திர பெண்கள் குடும்பத்திற்கு தங்கள் வருவாயை கொண்டு வந்ததால், அவர்களை யாரும் உடன்கட்டை ஏற்ற தயாராக இல்லை.

பிராமண, ஷத்திரிய, வைஷிய பெண்கள் வீட்டு வாசற்படியை தாண்டாமல், பொருளாதாரத்தில் பங்கே எடுக்காமல் இருந்ததால், அவர்களுக்கு சமூக மதிப்பு இல்லை. அதனால் அந்த பெண் சதி ஏறி செத்தால், அவளுடைய பிள்ளைகளை தவிற வேறு யாருக்கும் எந்த இழப்பும் தெரிந்திருக்கவில்லை.

இந்தியர்கள் இந்த கருட புராண பொய்களை நம்பி இப்படி இளம் பெண்களை கொல்வதை பார்த்த ஆங்கிலேயருக்கு அறச்சீற்றம் பீறிட்டது.
அவர்களுக்கு கங்கை புனித நதி இல்லை,
காசி புனித தளம் இல்லை,
ஈரேழு ஜென்மம் எனும் நம்பிக்கை இல்லை.
பிராமணர் உயர்ந்தவர் என்றோ,
பிராமணருக்கு தக்‌ஷனை கொடுத்தால் தான் புண்ணியம் என்றோ அவர்கள் நம்பவில்லை.

//பிராமணர் எழுதிய சமஸ்கிருத நூல்கள் பலதை அவர்கள் படித்தார்கள். அந்த நூல்களில் இருந்த அப்பட்டமான சுயநலமும், தந்திரமும், ஏமாற்றுத்தனமும் அவர்களுக்கு அருவருப்பாக இருந்தது//

இந்த சமஸ்கிருதம் வளர்க்க நாம் வேறு இருபது ஆண்டுகளாக மானியம் வழங்கி ஏமாந்திருக்கிறோமே என்கிற காட்டம்!

சதியை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய கையோடு, லார்ட் மெக்கலேவின் அறிவுரையின் படி,
அடுத்த அதிரடி சட்டத்தை இயற்றினார் லார்ட் பெண்டிங்:

//இனி பிரிட்டிஷ் இந்தியா முழுக்க,
ஆங்கிலமே கல்விக்கான மொழி!
ஒரே ஒரு சாராருக்கான சமஸ்கிருதத்தை இனி ஊக்குவிப்பதில்லை, எனும் ஆங்கிலவழி கல்வி சட்டம் 1835 முதல் அமலானது//

இதனோடு, நீதி துறையின் அலுவல் மொழியாக அது வரை இருந்த அரபிக்கை நீக்கி, ஆங்கிலத்தையே சட்ட துறையின் அலுவல் மொழியாக அறிவித்தார்.

குருகுலம், வேத பாட சாலை, மதார்சா எனும்
மத கல்விக்கு அதற்கு மேல் பிரிட்டிஷ் காசு
செல்வழிக்காமல், நேரடியாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாய், பிரிட்டிஷ் தரத்தோடு, பிரிட்டனில் இருக்கும் அதே பாட திட்டத்தோடு இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்தார்கள்.

ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், அறம், உடல் பயிற்சி என்று சர்வதேச தரம் வாய்ந்த கல்வி இந்தியர்களுக்கு இலவசமாய் கிடைக்க ஆரம்பித்தது.

1835 ல் கல்கத்தாவில் ஒரு மருத்துவ கல்லூரி,
அடுத்த ஆண்டே கல்கத்தாவில் பொது நூலகம்,
1847ல் ரூர்கியில் இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி.
1848டில் கல்கத்தாவில் பெண்களுக்கான பிரத்தியேக தனிப்பள்ளி

1835 முதல் ஆங்கில பள்ளிகளில் கற்றுந்தேர்ந்த மாணவர் கல்லூரிக்கு போக வேண்டுமே?
அதனால் 1858 ல் கல்கத்தா, சென்னை, மும்பாய் ஆகிய நகரங்களில் பல்கலைகழகங்கள் துவக்க பட்டன.....

//இரண்டாயிரம் ஆண்டுக்கால இடைவெளிக்கு பிறகு இந்தியர்களுக்கு கல்வி எனும் ஆயுதம் கிடைத்தது//

இப்போது சொல்லுங்கள்,
இத்தனைக்கும் காரணமான அந்த தாம்ஸ் பாபிங்டன் மெக்காலே ஹீரோவா வில்லனா?”
Lord Macaulay, சரசுவதி & Statistics*

நவராத்திரி விழா முடிவில் சரசுவதி பூசையும் சேர்த்து கொண்டாடப்படும். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் மிகவும் பக்தியுடன்  கல்விக்கான கடவுள் என்று குறிப்பிட்டு சரசுவதியை கும்பிடுவார்கள். இந்த வழிபாடுகளில்  முதன்மையான பங்கு வகிப்பவர்கள் பெண்கள்.

ஆம்
சரசுவதி கல்விக்கடவுள்.
அதிலும் பெண் கடவுள்.
இதுவெல்லாம் புராணங்கள் நமக்கு கூறும் செய்திகள்.

கல்விக்கடவுள் பெண். எனவே கல்வியைக் கற்பித்தலில் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு துணை நிற்க வேண்டியவர் சரசுவதி.

ஆண்களுக்கும் கல்வி என்றாலும், பெண் கடவுள் கல்விக்கு தலைமை ஏற்பதால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது நியாயமே என்று எண்ணுவது இயல்பு.

வரலாறு தரும் Statistics நமக்கு சொல்லும் உண்மை என்ன?

1881ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 4.32%.  
ஆண்கள் மட்டும் 8.10%.
பெண்கள் வெறும் 0.35%.  

2011ல்  

இந்தியர்களின் எழுத்தறிவு 74.04 %  
ஆண்கள் 82.14 %   
பெண்கள்  65.46%.

அதாவது கல்விக்கடவுளாக பெண்ணே இருக்கும் நாட்டில் 1881 வரை ஒரு விழுக்காடு பெண்கள் கூட படிக்க வில்லை.

ஒட்டுமொத்தமாகப் படித்தவர்களே 4.32% தான்

இதையெல்லாம் கல்விக்கடவுள் சரசுவதி ஆய்வு செய்து சீர் செய்தாரா என்றால் இல்லை.

ஆனால் இப்போதோ எழுபது, எண்பது, அறுபது என்ற நிலை.

இதற்கு காரணம் யார்?

Lord Thomas Babington Macaulay

WhatsApp வந்த காலத்தில்
அவர் நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகம்.

இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன் என்று தான் பல Forward Messages சுற்றியது.

யாரிந்த மெக்காலே என்ற தேடலும் அங்கிருந்து தொடங்கியது தான்.

Macaulay இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அந்தக் காலத்திலேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.

இந்தியாவிற்கு வந்தபோதும் அதே செக்யூலரிசத்தை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்துவ மிஷினரி
தந்தால் மட்டுமே உண்டு.

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பித்தவை. இதற்கு இங்கிலாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய்மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொதுக் கல்வியை திட்டமாக கொண்டு வந்தவர் மெக்காலே.

♦️ கல்வி ஆங்கிலேயர்களால் பரவலாக்கப்பட்ட பிறகே

♦️ அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டப் பிறகே

♦️ கல்வி நிலையங்கள் அவரவர் இருப்பிடம் அருகில் அமைந்த பிறகே

இந்தியர்கள் படித்தார்கள்.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது.

அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுஸ்மிருதி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்குமான “இந்தியன் பீனல் கோடு” என்று மாற்றி IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

அந்த Lord Macaulay அவர்கள்

அவர் திருமணம் ஆகாதவர். அவருக்கு Genetic சந்ததியினர் இல்லை.

நாம எல்லாரும், குறிப்பா இந்தியப் பெண்கள் அவருடைய Memetic வாரிசுகள்!