Thursday, June 07, 2018

திரையில் நடிக்கத்தெரியாத சுமாரான நடிகர் சிவகுமார்

நடிகர் ஆனந்த்பாபு என்று ஒருத்தர் இருந்தார். நன்றாக டான்ஸ் ஆடுவார் என்று எல்லோரும் நம்பினார்கள். அவரும் நம்பினார். என்ன ப்ரச்னை என்றால் அவர் ஆடும் பாடல் முடிவடைந்த அடுத்த நிமிடம் உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பினார். அதனால் ஒரு ஐந்து நிமிட சினிமா பாடலுக்குள் பரதநாட்டியம், குச்சிபுடி, சல்சா, ஸ்விங், வால்ட்ஸ், பெல்லி டான்ஸ் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து வெறி கொண்டு ஆடுவார். கொஞ்ச நாளிலேயே சலிப்பாகி ஆனந்த பாபு டான்ஸ் என்றால் தியேட்டரில் எல்லாரும் தம்மடிக்க போய்விட்டார்கள்.
+++
சாம்பார் என்ற பட்டப்பெயரை மயிரிழையில் ஜெமினி வாங்கிக்கொண்டதால் தனக்கென்று பட்டப்பெயர் கிடைக்காமல் தப்பித்தவர் திரையில் நடிக்கத்தெரியாத சுமாரான நடிகரான சிவகுமார். அவருக்கு திடீரென ஒருநாள் தனது மனப்பாட திறமையை இந்த சமூகத்துக்கு நிரூபிக்க வேண்டும் என்ற ஞானம் வந்தது. உடனே கொங்கு பகுதியில் எவனோ தனக்கு வேண்டிய கல்வித்தந்தையை பிராண்டி அவர்கள் கல்லூரியில் எல்லா மாணவர்களையும் 3 நாட்கள் விடுமுறை தருகிறேன் என்று ஆசை காட்டி வலுக்கட்டாயமாக உட்கார வைத்து ராமாயணம், மகாபாரதம் ஒப்பிக்கிறேன் பேர்வழி என்று மணிக்கணக்காய் இம்சையை கூட்ட, மரண பீதி என்றால் என்னவென்று கண்டார்கள் மாணவர்கள். அடுத்த மூன்று நாட்களுக்கு சிவகுமார் என்ற பெயரை எதேச்சையாக கேட்டாலே வாந்தி பேதி தலைசுற்றல் போன்ற பத்து வித ப்ராப்ளம்ஸ்னால மாணவர்கள் அவதிப்பட்டதும்தான் எதற்கு லீவு என்பதே அவர்களுக்கு புரிந்தது.
+++
இன்று சிவகுமார் கொடுத்த ஒரு அஞ்சலி செய்தியை பார்த்தேன். அதைக் கூட லோக்கலாக நாலு வார்த்தையில் சொல்ல முடியாமல் சாக்ரடீஸ், கிரேக்கம், அய்ரோப்பா, ஆசியா எல்லாம் சுற்றி வரும் அளவு அவருக்கு நிலைமை முத்திப்போய்விட்டது.
+++
நடிகர் சிவகுமாரும் அரசியல்வாதி வைகோ போலவே கண்டதையும் படித்து பண்டிதராகியிருக்கிறார். தன்னை இந்த சமூகம் பண்டிதர் என்று சீக்கிரமே நம்ப வேண்டுமே என்ற பதைபதைப்பு எந்நேரமும் எரிமலையாக் கனன்று கொன்று இருக்கிறது. தனக்கு முன் மைக் நீட்டப்பட்டாலோ, கருத்து சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டாலோ உடனே வைகோ போலவே அதௌன கீர்த்தனாம்பரத்திலே என்று ஆரம்பித்துவிடுகிறார்.
+++
அவர்கள் அப்படித்தான். மக்கள்தான் தம் அடிக்கப் பழக வேண்டும். அப்படியே அவர்கள் முன் மைக்கை நீட்டுபவர்களையும்.

Tuesday, June 05, 2018

NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது.

இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது இந்திய அரசியல் சட்டத்தை திருத்தி அதைசாத்தியமாக்கியது இதே தமிழ்நாடு. இப்போது NEETஐ தமிழ்நாட்டின் மீது பலவந்தமாக திணித்திருப்பது அதே உச்சநீதிமன்றம்.
இட ஒதுக்கீடு செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றம் நிராகரித்தபோது தமிழ்நாடு மட்டும் அதை எதிர்த்திருக்காவிட்டால் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலுமே கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்தனை கோடி பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வளவு குறுகியகாலத்தில் பள்ளிக்கல்வியோடு, பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆய்வாளராகவெல்லாம் ஆகியிருக்க முடியாது. பல லட்சம்பேர் வெளிநாடுகளில் குடியேறி கோடீஸ்வரர்கள் ஆகியிருக்கமுடியாது.
அதையெல்லாம் செய்தவர் பெரியார் என்கிற ஒற்றை மனிதன். தனக்கென சொந்தமாக ஒரு குழந்தை இல்லாத அவன் தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் தன் சொந்தப்பிள்ளைகளாக நினைத்தான். அவர்களின் அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்டபோதெல்லாம் அவன் துடித்தான். அதன் விளைவே நம்மில் பலர் உயர்கல்வி கற்று நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்கு விமானம் ஏறிப்பறக்கவும் வெளிநாடுகளுக்கு கோடை விடுமுறைகள் செல்லுமளவுக்கும் செல்வந்தர்களாக முடிந்தது. சீரோடும் சிறப்போடும் செல்வாக்கோடும் வாழ முடிந்தது.
இன்று மருத்துவப்படிப்பில் பொதுசுகாதாரத்துறையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகத்திகழும் தமிழ்நாட்டின் மீது இப்போது அதே இந்திய உச்சநீதிமன்றம் NEETஐ பலவந்தமாக திணித்திருக்கிறது. அதை எதிர்த்து சட்டத்திருத்தம் மூலம் NEETஐ ஒழிக்கவேண்டியதும் அதே தமிழ்நாடு. அதற்குத்தேவை அரசியல் அதிகாரம். அரசியல் அதிகாரத்தால் மட்டுமே அது இனி சாத்தியப்படும். அடிமைக்கும்பல்களால் அல்ல. எனவே அடிமைகளை அகற்றி அரசியல்சட்டப்படிக்கு NEETஐ ஒழிக்க என்ன வழி என்பது மட்டுமே ஒற்றை இலக்காக இருக்கவேண்டும்.
NEETஐ இனி ஒழிக்கவே முடியாது என்கிற விரக்தியை, அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. ஏற்கவும் கூடாது. இந்திய அரசியல் சட்டத்தை திருத்த முடிந்த தமிழ்நாட்டால் இந்த சுண்டைக்காய் NEETஐ தூக்கி எறிய முடியாது என்பது ஏற்கக்கூடிய வாதமும் அல்ல; ஏற்கவேண்டிய வாதமும் அல்ல. அது ஏமாற்றுப்பேர்வழிகளின் வாதம். ஏமாளிகள் மட்டுமே அதை நம்புவார்கள். ஏழுகோடித்தமிழர்களும் ஏமாளிகள் அல்ல.

Monday, June 04, 2018

ராஜராஜ சோழனின் சிலையை கடத்தவும் மறைக்கவும் உதவிய பார்பனர்கள்

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து ராஜராஜ சோழனின் சிலையை கடத்தவும் மறைக்கவும் உதவிய பார்பனர்கள் சீனிவாச கோபாலாச்சாரி & இரா. நாகசாமி..
ராஜராஜ சோழன் சிலை மீட்பு - சில உண்மைகள்
காணாமல் போன வருடம் - 1960 (காங்கிரஸ் ஆட்சி காலம்)
திருடவும் விற்கவும் - ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி
திருட தூண்டியவர்கள் - குஜராத்தை வியாபாரிகள்
திமுகவின் முயற்சியும் நாகசாமியின் சூழ்ச்சியும்..
திமுக ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் தனியார் அருங்காட்சியத்தில் இருந்து இராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்க முயற்சி நடந்தது. அப்போழுது குஜராத் முதலமைச்சர் மோடி. தமிழ்நாட்டில் இருந்து அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலா துறைச் செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமி, தொல்லியல் அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழு குஜராத் சென்று மோடியை சந்தித்தது. அப்பொழுது சிலைகளை ஒப்படைக்க மோடி ஒப்புக் கொண்டார். ஆனால், குஜராத் தொல்லியியல் துறை உயரதிகாரி ஒருவர் இது இராஜராஜ சோழன் சிலைதான் என்று நாகசாமி சொன்னால் சிலைகளை ஒப்படைக்கிறோம் என்று கூறிவிடுகிறார். ஆனால், இது இராஜராஜ சோழன் சிலை இல்லை, கண்டேஸ்வரர் சிலை என்று நாகசாமி அறிக்கை அளித்தார். இதனால், அப்போழுது இந்தச் சிலைகளை மீட்க முடியாமல் போனது. இன்னொன்று, நாகசாமியையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த நாகசாமிக்கு பத்மபூஷன் விருதை அளித்து, தமிழுக்கு மாபெரும் துரோகம் செய்த்து மத்திய பிஜேபி அரசு..
தமிழைச் செம்மொழியாக வளர்த்தது சமஸ்கிருதம்தான் என்றும், இலக்கியம், இலக்கணம், அறம், அரசுச் சட்ட திட்டங்கள் என அனைத்தையும் சமஸ்கிருதத்திடமிருந்துதான் தமிழ் பெற்றது என்றும் தமிழை சிறுமைபடுத்தி, ஆரிய சமஸ்கிருதத்தை சார்த்து தான் தமிழ் உள்ளது என, "தமிழ் சமஸ்கிருதத்தின் கண்ணாடி (Mirror of Tamil and Sanskrit)" நூலில் எழுதிய இரா. நாகசாமி என்னும் ஆரிய சம்ஸ்கிருத, சங்கர மட ஆதரவாளருக்கு பத்மபூஷன் விருதை அளித்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...
திருக்குறள் சமஸ்கிருத வேதங்களின் காப்பி, தமிழ் மொழி எழுத்து முறையைப் பிராமணர்களிடமிருந்து பெற்றது, தொல் காப்பியம், புறநானூறு, அகநானூறு சிலப்பதிகாரம் முதலியவை சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை, தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலே இல்லை, அசோகர் காலத்தில் தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லை, செம்மொழிக்கான தகுதிகள் எவை எவை என்று வரையறுக்கப்பட்டுள்ளனவோ அவை யாவும் தமிழுக்கு இல்லை, பழங்குடிகளின் ஒரு கிளைமொழியாக (Dialect) இருந்த தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றுதான் செம்மொழியாக வளர்ந்தது... இப்படியெல்லாம் தமிழை தாழ்த்தி, இழிவுப்படுத்தி தன்னுடைய Mirror of Tamil and Sanskrit நூலில் நாகசாமி எழுதியுள்ளார்.
இப்படியான தமிழ் மொழியின் எதிரிக்கு, இந்தியாவின் உயரிய பத்மபூஷன் விருதை அளித்து மகிழ்ந்துள்ளது மத்திய பிஜேபி மோடி அரசு...

புலிகள் எவ்வளவு நன்றிகெட்டவர்கள்

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது
அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது
பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது
மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு
இனி பொறுப்பதில்லை, மொத்த புலிகளையும் தமிழரோடு முடித்துவிடுங்கள் என உத்தரவிட்டா அதுலத் முதலி எனும் பாதுகாப்புதுறை அமைச்சர்
கடும் யுத்தம் தொடங்கியது , சப்ளை முடங்கியது உணவில்லை , மருந்தில்லை, செஞ்சிலுவை சங்கத்தை கூட சிங்களம் அனுமதிக்கவில்லை
சுருக்கமாக சொன்னால் 2009 முள்ளிவாய்க்கால் அன்று தொடங்கியது
வழக்கம் போல ஈழகுரல்கள் எழும்பின, அமிர்தலிங்கம் உட்பட இலங்கை தமிழ் அரசியல்வாதிகளும் குரல் எழுப்பினர்
அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார் ராஜிவ், நடு கடலில் திருப்பி அனுப்பியது இலங்கை
அவ்வளவுதான் இந்திய ராணுவ விமானப்படைக்கு உத்தரவு கொடுத்தார் ராஜிவ், அவை உணவு மருந்துடன் பறந்தன, அவற்றிற்கு பாதுகாப்பாக மிராஜ் விமானங்களும் பறந்தன‌
அதாவது சிங்கள விமானம் தடுத்தால் அவற்றை சுட்டு வீழ்த்த வந்த விமானம் அது
உணவுபொருள் வடமாரட்சியில் வீசபட்டதும் தமிழர் ஆனந்தபெரு மூச்சுவிட்டனர், இனி இந்தியா நம்மை காப்பாற்றும் என மகிழ்ந்தனர்
இனி ஒரு அடி சிங்களபடை முன்னேறினால் இந்திய களமிரங்கும் என இந்திய அரசு அறிவிக்க, அலறி அடித்து ஓடிவந்து ஒப்பந்தமிடவந்தான் ஜெயவர்த்தனே
ராஜிவின் நடவடிக்கையினை உலகமே நோக்கியது, காரணம் ஐநா அனுமதி இன்றி இன்னொரு நாட்டில் விமானத்தை பறக்கவிடுவது என்பது போருக்கு சமம்
இலங்கை புத்த மொட்டை சாமி எல்லாம் நவதுவாரத்தை பொத்தி அஞ்சி கொண்டிருந்தது
போராளி குழுக்கள் எல்லாம் நன்றி கண்ணீர் வடித்தன, ஈழ மக்கள் எல்லாம் கைகூப்பி இந்தியாவினை தொழுதனர்
ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் கோபத்தை மறைத்தபடி, ஒருவித வஞ்சகத்துடன் சொன்னது "இந்தியா தங்கள் வல்லரசு சக்தியினை காட்டிவிட்டது"
அதன் அர்த்தம் என்னவென்றால் இவர்கள் இங்குவருவது அத்துமீறல் என்றது போன்றது
எல்லோரும் மகிழ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் நிம்மதி இல்லை, ஆனால் காட்டிகொள்ளவில்லை
புலிகளால் இப்படிபட்ட பேரழிவு வந்தபின்பே , இனி புலிகளால் ஒருநாளும் சிங்களனை வெல்லமுடியாது என்றபின்பே இந்தியா களமிறங்கி அமைதிபடையினையும் அனுப்பியது
ஆனால் பெரும் உள்நோக்கத்துடன் வம்பிழுத்து அந்நிய உதவியுடன் அதனை விரட்டி, ராஜிவினையும் கொன்றனர் புலிகள்
விளைவு 2009ல் முள்ளிவாய்க்கால் நடந்தபொழுது, 1987 ஜூன் 4ல் நடந்த அந்த சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லி மறுத்தது இந்தியா
இந்த ஜூன் 4 ஈழதமிழருக்காக ராஜிவ் களமிறங்கிய நாள், அன்றே அவருக்கான நாளும் குறிக்கபட்டது
ஆப்பரேஷன் பூமாலை என ராஜிவ் செய்த விஷயமெல்லாம் சாதாரணம் அல்ல, அதற்காக தன் உயிரையும் கொடுத்தார் அவர்
அதனை புறந்தள்ளிய புலிகள் இறுதியில் அழிந்தும் போயினர்
ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள், ஈழமக்களுக்காக அவர் உயிர்கொடுக்க துணிந்த நாள்
புலிகள் எவ்வளவு நன்றிகெட்டவர்கள் என பின்னாளில் உலகம் உணர்ந்த நாள்
ஈழதமிழரின் கண்ணீரை இந்தியா துடைக்க நினைத்த நாளிது, அந்த இந்திய கரங்களை வெட்டிவிட்டுத்தான் ஈழமக்களை தீரா அழிவில் தள்ளினான் பிரபாகரன்

சிங்கப்பூர் ஆகியிருக்கவேண்டிய தமிழ்நாடு

ஆ ஊன்னா சிங்கப்பூர் ஆகியிருக்கவேண்டிய தமிழ்நாடுங்குறாங்க. அங்க 2 வருஷம் இருந்தவன், அந்த ஊர் பிடிச்சுப்போனவன் என்பதால கீழ இருக்க விஷயங்களை சொல்றேன், புரிஞ்சு தொலையுதான்னு பார்ப்போம்.
1. அங்க லீ குவான் யூ கஷ்டப்பட்டுதான் அந்த நாட்டை முன்னேத்துனாரு. ஆனா அங்க எல்லாரும் ஜாதி,மதம் பார்க்காம லொல்லு மயிறு பேசாம எல்லாரும் அவங்கவங்க வேலையை சரியா செஞ்சாங்க
2. நம்மூர் மாதிரி வேலைவெட்டிக்கே போகாம, அப்பன், பாட்டன், மகன், மகள் வருமானத்தில வாழுறவங்க அங்க யாருமில்லை.
3. நீங்க கொண்டாடுற சிங்கப்பூர்லயும் குடும்ப அரசியல் இருக்கு. லீ குவான் யூ மகன் தான் இப்போ பிரதமர்
4. நீங்க கொண்டாடுற சிங்கப்பூர்ல கலவரமே நடந்ததில்லை, அதை முதன்முதல்ல நடத்தி இப்ப பொழைக்க வழியில்லாம போன ஒரே இனம் நம்ம தமிழினம் தான்.
5. நம்மூர்ல இருக்க மாதிரி கருத்து சுதந்திரம் சகட்டுமேனிக்கு அங்க கிடையாது. கவர்மெண்ட்டுக்கு எதிரா ஒரு கருமமும் உங்களால எழுத முடியாது.
6. திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே மாதிரி, அங்கயும் அந்த ஊருக்காரன் வெளிநாட்டுக்காரர்களால் வேலையிழந்தோம் பங்காளின்னு அரசியல் பேசிட்டிருக்கான்
7. அந்த ஊர்ல தனியார் கூட வங்கிமூலம்தான் சம்பளம் தரும். முறைப்படி வரி 100% மக்களும் அரசுக்கு செலுத்தியே ஆகனும். நம்ம ஊர்ல வரி கட்டுறவன் எவன்னு தேடித்திரிய வேண்டியிருக்கு.
8. எல்லாத்தை விடவும் முக்கியமா அங்க இருக்கவங்க எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுராங்க. இங்க நம்மூர்ல சுத்தமாக் கிடையாது.
சொல்ல ஆரம்பிச்சா இன்னும் நிறைய மிச்சம் இருக்கு. என்னவோ இவனுகதான் சிங்கப்பூரை முன்னேத்துனாப்ல பொலம்பிக்கிட்டிருக்கானுக. திருந்துங்கடா கோப்பி வாங்கி தரேன்.

மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?

"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி?
இந்த கேள்வி பிடித்தவர்கள் முழுவதும் படிக்கவும்...
குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ள முடியும்?
கலைஞர் ஒரு மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் எறி திருவாரூரில் இருந்து வந்து இன்று கோடீஸ்வரன் ஆனது எப்படி என அரைத்த மாவை அரைக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதனால் தான்.
அது என்ன மஞ்சள் பை, திருட்டு ரயில், ஆதாரம் என்ன என அவர்களிடம் கேட்டோமானால் உடனே கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்னும் புத்தகத்தை சொல்வார்கள். கண்ணதாசன் என்ன இந்திய சட்டம் எழுதிய அண்ணல் அம்பேத்காரா? அல்லது சத்திய சோதனை வடித்த மகாத்மா காந்தியா? உலகில் ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என ஒரு உதாரணம் மிகச்சிறந்த கவிதை வடித்திருக்கின்றாரே என கேட்போர்களுக்கு ஒரே வரி பதில் சொல்வேன். குப்பையில் இருந்து மின்சாரம் கிடைக்கின்றதாம். அதற்காக குப்பையை அள்ளி தலையிலே போட்டுக்கொள்ளவா முடியும்? கலைஞரே ஒரு முறை சொல்லிவிட்டார். நான் ரயிலில் வரும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்தவர்கள் போல பேசுகின்றனர், என அந்த பேச்சுகளை புறம் தள்ளிவிட்டு போய்விட்டார்.
அவர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி. கலைஞர் மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட தன் மூளையை கழட்டி திருவாரூர் கமலாலயத்தில் வீசி விட்டா வந்தார். அவர் பிறந்தது 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி. 1944ல் தன் இருபதாவது வயதில் ஜூபிடர் பிக்சர்ஸ்ல் கதாசிரியராக வேலைக்கு சேர்ந்து விட்டார். இன்றைக்கு இதே கலைஞரை வசைபாடும் கழுதைக்கூட்டத்தில் யாராவது தன் 20 வயதில் சுய சம்பாதித்யம் சம்பாதித்தது உண்டா என தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். தன் அப்பன் காசில் வாழும் ஊதாரிகள் வசைபாட கலைஞர் தான் கிடைத்தாரா?
அவர் அரசாங்க உத்யோகத்தில் வேலைக்கு சேர்ந்த அண்டு 1957ம் ஆண்டு தான். ஆம் சட்ட மன்ற உறுப்பின்ராக. ஒரு அரசாங்க உத்யோகத்தில் சேருபவர் மிக அதிக பட்சமாக மிக மிக அதிக பட்சமாக 42 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். ஆனால் 1957ல் அரசாங்க சம்பளம் வாங்க ஆரம்பித்த இவர் இன்று தன் 90 வயது ஆகிவிட்ட நிலையில் கூட கிட்ட தட்ட அர நூற்றாண்டுகள் கடந்தும் 56 வருடங்களாக அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டுள்ளார். இதில் ஐந்து முறை முதல்வராக சட்ட மன்ற சம்பளத்தில் அதிகப்படியன சம்பளம் வாங்கியுள்ளார். இவர் வாங்கும் அரசாங்க சம்பளம் என்பது இன்று ஐடி துறையில் பணி செய்வோர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். ஒரு வருடத்தில் ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களே உடனே ஒரு கார், சொந்த வீடு என சுபிட்சமாக இருக்கும் போது 56 வருடங்கள் அரசாங்க சம்பளம் வாங்கி கொண்டு இருக்கும் இவர் கோடீஸ்வரனாக இருக்க கூடாதா என்ன?
சரி போகட்டும். அரசாங்க உத்யோகம் இவருக்கு கைகூடும் முன்னர் என்ன செய்தாரெனில் அந்த பொறாமை கொண்ட வசவாளர்கள் சொல்வது போல மஞ்சள் பையுடன் வந்தார் என்றே வைத்துக்கொண்டால் கூட இவர் தன் 20 வது வயதில் திரைத்துறைக்கு வந்து தன் 24 வது வயதில் ராஜகுமாரி என்னும் படத்துக்கே வசனம் எழுத ஆரம்பித்து விட்டார். அது தான் எம் ஜி ஆர் அவர்களுக்கும் முதல் படம். தன் 28 வது வயதில் இவர் எழுதிய பராசக்தி படம் திரையுலகில் ஒரு திருப்பு முனை படம். அந்த படத்தின் சம்பளம் எல்லாம் வாங்கி எல்லாம் முடிந்த பின்னர் அதன் வசனங்கள் மட்டும் சிறிய புத்தகமாக போட்டு விற்பனை செய்யலாம் என ஏ வி எம் மெய்யப்ப செட்டியார் முடிவு செய்து இவரிடம் அனுமதி கேட்ட போது இவர் அதற்காக கேட்ட தொகை என்பது முழு பத்தாயிரம் ரூபாய். அப்போது ஒரு சவரன் 20 ரூபாய் என்னும் போது இப்போது அந்த பத்தாயிரம் ருபாய்க்கு என்ன மதிப்பு என கணக்கிட்டு கொள்ளுங்கள். அப்போது ஒரு ப்யூக் கார் விலையே 7000 ரூபாய் மட்டுமே. அப்போதே கார் வாங்கி விட்டார். எம் ஜி ஆர், சிவாஜி ஆகியோர் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டு இருந்த போதே அத்தனை சம்பளம் வாங்கியது இல்லை. தான் 1957ல் சட்ட மன்ற உறுப்பினர் ஆகும் முன்னரே 30000 (முப்பதாயிரம் ரூபாய்)க்கு தான் வசிக்கும் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். (அதையும் இப்போது தன் 87ம் பிறந்த நாளின் போது தன் காலத்துக்கு பின்னர் ஏழைகளுக்கான மருத்துவமனையாக ஆகும் படி அஞ்சுகம் ட்ரஸ்டுக்கு எழுதி வைத்து விட்டார்)
இவர் திரைத்துறையில் சம்பாதிக்க பணம் எடுத்துக்கொண்டு திருவாரூரில் இருந்து வரவேண்டும் என்பதில்லையே. அந்த மஞ்சள் பையில் ஒரு பேனாவும் அதில் நிறைய இங்க்ம், தன் மூளையும் மட்டுமே மூலதனமாக போதுமே. 1960ல் மேகலா பிக்சர்ஸ் என்னும் சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ஆக 1944 முதல் 1960 வரை தன் மூளையை மூலதனமாக கொண்டு சம்பதித்ததை மேலும் அதிகரிக்க சொந்த பட தயாரிப்பு நிறுவனமே தொடங்கி விட்டார். பின்னர் பூம்புகார் புரடக்ஷன்ஸ். இதும் அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் தான். பின் ஏன் அவர் கோடீஸ்வரன் ஆக மாட்டார்? கலைஞர் திரைப்பட துறையில் மட்டுமா சம்பாதித்தார். இல்லை. தன் எழுத்துகளை புத்தகமாக்கினார். நாடகம் ஆக்கினார். அவர் தொட்ட துறை எல்லாமே நிதியை அள்ளி கொடுத்தன. அவர் அன்று மட்டுமல்ல. தன் 90 வது வயதில் எழுதிய இரு புத்தகங்கள் ஒரே நாளில் இவர் புத்தக வெளியீட்டு மேடையை விட்டு இறங்கும் முன்னரே 15 லட்சத்தில் 74 ஆயிரத்துக்கு விற்று தீர்ந்தது. அவர் ஏன் கோடீஸ்வரர் ஆக கூடாது...
இனியாவது உருப்படியான வரலாறை தெரிந்து கொண்டு பேசுங்கள் மனிதர்களே...

பாப்பார பசங்க எப்பயுமே எல்லா விஷயத்தை சொந்தம் கொண்டாடுவானுங்க

பாப்பார பசங்க எப்பயுமே எல்லா விஷயத்தை சொந்தம் கொண்டாடுவானுங்க. எல்லா விஷயத்துலயும் அவனுங்க தான் முன்னோடியா இருக்கனும் னு நினைச்சிப்பானுங்க. நம்ப இல்ல னே இங்க எதுமே இல்ல னு ஒரு புத்தி அவனுங்க கிட்ட அதிகமா இருக்கும்..
அம்பேத்கர் னு ஒரு பாப்பார ஆசிரியர் இருந்தாரு அவரு தான் அம்பேத்கரை படிக்க வைச்சாரு சோறு போட்டாரு அதுக்கு நன்றி கடனா தான் அம்பேத்கர் பேரு வைச்சிகிட்டாருனு சொல்றது லா பெஸ்ட் Example ஆ எடுத்துகலாம்!
அதே மாதிரி திருவள்ளுவர்! திருவள்ளுவரையும் அந்தணர் பிராமணர் னு அலந்துவுடுவானுங்க. ஆனா கலைஞர் அதுக்கு ரொம்ப தடையா இருந்தாரு. திருவள்ளுவர் சிலைக்கு பூணூல் போடுறதையும் அரசு சார்பா வெளியிட்ட படத்தலயும் திருவள்ளூர் பூணூல் இல்லாம இருக்காரு னா அதுக்கு காரணம் கலைஞர்தான். திருவள்ளுவருக்கு பூணூல் போட்டு நம்ப ஆளா ஆக்கிக்க பாப்பார பசங்க எவளோ முயற்சி பன்னியும் அதுக்கு பெரிய தடையா இருந்தவரு கலைஞர் தான்.
இப்போ வரைக்கும் நிறைய பாப்பார பசங்க இதை சொல்லியே பொலம்பி கதறுவானுங்க. இதனால கூட கலைஞர் மேல அவளோ காண்டு அவுனுங்களுக்கு.
இந்த போட்டோ ல கலைஞரோட அந்த நக்கல் பார்வை அதுவும் வையிட்டா ஒரு கவுண்டர் கொடுத்து இருப்பாரு. அதான் எல்லாரும் செம்மயா சிரிக்கிறாங்க. They way he touches the thread and the look he gives ல அவளோ அர்த்தம் இருக்கு!

நம்முடைய கலாச்சாரம் , பண்பாடு இத்தியாதி எல்லாம் சங்க கால ஓலைச்சுவடிகளில் செல் அரித்து காணாமல் போய் விட்டது.

ஒரு வெளிநாட்டு நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கையில் சொன்னது இது.
உலகில் வெள்ளைக்காரர்கள் , கருப்பர்கள் என்று இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். என்னதான் நாகரீகம் அடைந்தாலும் வெள்ளையர்களிடத்தில் இன்னும் ரேசிசம் இருக்கிறது.
வெள்ளையர்கள் கருப்பர்களை கேவலமாகத்தான் பார்ப்பார்கள். ரேசிசம் நுணுக்கமாக இருந்து கொண்டே இருக்கும். நிற்க இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
அதே வெள்ளையர்கள் , நம்மை , இந்தியர்களை , கருப்பர்களை விட , கேவலமாக பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கு கொடுக்கும் மரியாதையில் , பாதி கூட இந்தியர்களுக்கு கொடுப்பதில்லை. நாம் தான் ஆக கேவலமானவர்கள் அவர்களுக்கு.
கருப்பர்கள் , நம்மை மதிக்கிறார்கள். ப்ரோ என்று கட்டிக்கொள்கிறார்கள். நாம் பெரிய மயிரு போல , அவர்களை கருப்பர்களாக இருந்தாலும் மதிப்பது போல சீன் போடுகிறோம்.
உண்மையில் , உலக அரங்கில் , நாம் கருப்பர்களுக்கும் கீழேதான்.
இங்கே நாம் அய்யர் , அய்யங்கார் , தேவர் ,கவுண்டர் , செட்டி ,பிள்ளை என பலவித ஜாதி அடுக்குகளை வைத்துக்கொண்டு , ஜாதி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம். “பறையன்” என்று சொல்வது சட்டப்படி தவறுதான் என்றாலும் உண்மையில் “பறையன்” என்பதை ஆங்காங்கே சொல்லிக்கொண்டுதான் உள்ளனர். அவர்களை தாழ்த்திதான் பார்க்கிறோம்.
ஆனால் உலக அளவில் வெள்ளையர்கள் , அய்யர் அய்யங்கார் எல்லோரையும் சேர்த்து நம்மை இண்டர்நேஷனல் பறையர்களாகத்தான் பார்க்கிறார்கள்.
நாம் மொத்தமாக கறுப்பர்களுக்கு கீழ்தான்.
ஏன் இப்படி என்று அந்த நண்பரிடம் கேட்டேன். நமக்கு “கலாச்சாரமே” கிடையாது , அதுதான் காரணம் என்றார்.
உடனே பொங்கல் வைப்பது , மஞ்சத்தண்ணி ஊத்துவது , வளைகாப்பு என துக்கிக்கொண்டு வராதீர்கள். அது வேறு ....
நம்க்கு என்று ஒரு வாழ்வியல் முறை , தனித்தன்மை , ஒரு ஒற்றுமை என ஏதும் கிடையாது. இனியும் காது குத்துவது , ஒன்றாய் குழுவாய் சேர்ந்து பேலப்போவதை எல்லாம் கலாச்சாரம் என்று சொல்லி ஜல்லி அடித்துக்கொண்டு இருக்காதீர்கள்.
அப்படியே நமக்கு ஒரு வாழ்வியல் முறையோ அல்லது பழக்கவழக்கமோ இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் , அது அவ்வளவு அருவருப்பாகவும் , முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கிறது. அதனால் தான் நம்மை ஆக கேவலமான இடத்தில் உலக சமுதாயம் வைத்து இருக்கிறது.
கருப்பர்கள் கறுப்புத் தோலினால் ஒதுக்கப்பட்டார்கள்.அது ரேசிசம்.
நாம் நம்முடைய மட்டமான வாழ்வியல் முறையாலும் , இங்கே இருக்கும் ஜாதி மத வேறுபாடாலும் , நம்முடைய அருவருப்பான பழகும் தன்மையாலும் , அடிமை புத்தியாலும் , காலை நக்கும் பழக்கத்தினாலும் ,நமக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சிறு புத்தியாலும் வெள்ளையர்களால் கீழே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறோம்.
நம்முடைய கலாச்சாரம் , பண்பாடு இத்தியாதி எல்லாம் சங்க கால ஓலைச்சுவடிகளில் செல் அரித்து காணாமல் போய் விட்டது.

இதுல இன்னொரு நடைமுறை உளவியலும் இருக்கு. பொதுவான சுற்றுலா ஸ்தலத்தில் நாம பண்றத காட்டிலும் பல அழிச்சாட்டியங்களை வெள்ளாக்காரன் பண்றான். ஆனால் அவன் பண்ணா அது fun போல பார்க்கப்படுகிறது. நாம பண்ணால் நாகரீகம், கலாசாரம் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. 

இன்னொன்னு, நாம பாக்குற பார்வை, உடல்மொழி, அடிக்கும் கமெண்ட் எல்லாமே கொடூரமா இருக்கு. 

புக்கட் கடற்கரையில் நடந்த சம்பவம் இது. 

ஒரு கொரிய அல்லது சைனாக்காரன். கூட ஒரு பொண்ணு கையை கோர்த்துட்டு போய்ட்டு இருந்தான். அந்தப் பொண்ணு அட்டகாசமான அழகு. பையன் கொஞ்சம் சுமாராதான் இருந்தான். 
எனக்குப் பின்னால் கட்டம் போட்ட சட்டையும், முக்கா கால் ஷார்ட்ஸும் போட்டு நாலு தமிழர்கள் வந்துட்டு இருந்தாங்க. அவனுங்க அந்த ஜோடியை பார்த்து அடிச்ச கமெண்ட். 

" கேணக்கூதி மாதிரி இருக்கான். அவனுக்கெல்லாம் இவ்ளோ சூப்பரா ஐட்டம் கிடைக்குது "

இவனுங்க ஜாதிலயும், ஜாதி எதிர்ப்புலயும் பெருமைப்பட்டு நட்டுக்குறானுங்க.

அவங்ககிட்ட இருக்குற தொழில்நுட்பம், பிசினெஸ் ஐடியாக்கள், 500-800 பில்லியன் பிசினெஸ் அசெட்கள் இதெல்லாம் இந்த எருமை மாட்டுமூளைகளுக்குப் பு
ரிவதே இல்லை. அப்படி என்றால் என்ன என்கிற பிரக்ஞையே இல்லை.

இதுகள் போராளி, ஆண்ட பரம்பரை மோடிலேயே கெத்துக் காட்டிக் கொள்கின்றன.

இங்கு ஒரு ஜெஃப் பெஸோஸ், ஜாப்ஸ், கேட்ஸ், ரிச்சர்ட் ப்ரான்ஸன்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

வால்மார்ட் ஃப்ளிப்கார்ட்டை ஒரு லட்சம் கோடிக்கு வாங்கி, அதன் ஃபௌண்டர்கள் 7000 கோடி சம்பாதித்தது எல்லாம் ஜுஜுபி. அது ஒரு பில்லியன் தான்.

ஆனால், ஜெஃப் பெஸோஸ் 100 பில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறார், பில் கேட்ஸ், பஃபெட் எல்லாம் 80, 90 என்றும், அவர்களின் நிறுவனங்கள் 600, 800 பில்லியன் மதிப்பிலும் இருக்கின்றன.

இவர்கள் ஒரு பெரிய அசெட்டை உருவாக்கி, நாட்டையே சுபிட்சமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு இன்னும் கோயிலில் முதல் மரியாதை, நிலம் எங்கள் உரிமைன்னு கற்கால மனிதர்களாகவே தொடர்கிறார்கள். நாம் உண்மையில், மிகக் கேவலமான ஒரு சமுதாயம் தான்.

அதைவிடப் பிரச்சனை, இவர்கள் நண்டுகளாக நம்மையும் இழுத்து விடுவார்கள் என்பது தான்.

அயல் நாட்டுக்காரன் ஒருவனிடம் சிரித்து பேசிவிட்டு அவன் அந்த பக்கம் நகர்ந்த அடுத்த நொடி அவனைப்பற்றி அவன் நண்பனிடமே குறை கூறிப்பேசும் hi profile version இந்தியனிலிருந்து விமானத்தில் இலவசமாக தரும் விஸ்கியை ஆறாவது பெக் கேட்டு திரும்ப திரும்ப அழைக்கும் இந்தியன் வரை... என் அனுபவத்தில் நாம் மட்டமானவர்கள் தான்... கருப்பர்களில் நல்லவன், கெட்டவன் ரெண்டு வகைதான்.. நயவஞ்சகர்கள் குறைவு.. நாம்தான் ராஜதந்திரம், மயிருன்னு மானிட பண்புகளில் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்...


Sunday, June 03, 2018

கட்சிகள் இலவசங்கள் மூலம் சமூகத்தை சீரழித்துவிட்டன.

கட்சிகள் இலவசங்கள் மூலம் சமூகத்தை சீரழித்துவிட்டன.

இலவசமாக பொருட்களை பெறுவது பிச்சையெடுப்பதற்கு சமம்.

இதுபோன்ற வசனங்கள் நீண்டகாலமாக பல்வேறு இடங்களில் பல்வேறு ஆட்களால் சொல்லப்பட்டு வருகிறது.

உண்மையில் இலவசங்கள் தவறா…?

தவறே இல்லை. அவை சமூகநீதியையும், சமூக சமத்துவத்தையும் நிலைநாட்டும் மற்றுமொரு வழிமுறையே.

ஏழை பணக்காரன் வேறுபாடின்றி இன்று எல்லோர் வீடுகளிலும் "TV, Mixi, Grinder, fan, Cycle, Gas stove என எல்லாம் உள்ளது. இவை பெரும்பான்மை மக்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக தரப்பட்டவைகளே.

ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கி பயணித்துப்பாருங்கள், மேற்கண்ட பொருட்கள் யார் வீட்டில் இருந்தது என்றும் அவர்கள் இதுபோன்ற பொருட்கள் இல்லாதவர்களை எப்படி பார்த்தார்கள் என்று.

பொருட்கள் வெறும் அஃறினை பண்டங்கள் அல்ல, அவை சமூக உயர்நிலையை காட்டும் குறியீடுகள்.

இன்றும் கூட Motor bike, Car போன்றவைகளை வைத்திருப்பது சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் அடையாளமாக கொள்ளப்படுகிறது.

ஒரு மனிதன் மற்ற மனிதனிடமிருந்து தன்னை உயர்வானவனாக காட்டிக்கொள்ள இந்த பொருட்கள் காரணமாக இருப்பதால், இவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வதன் மூலம் போலியான சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யலாம்.

இது உங்களுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத காரணமாக தோன்றலாம்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் TV பார்க்க பக்கத்து வீட்டிற்கு சென்று அவர்களால் வெளியே விரட்டப்பட்டு கதவடைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட குழந்தைகளை கேட்டுப்பாருங்கள், இதன் சமூக நீதி விளங்கும்.

தங்களுக்கு மட்டுமே கிடைத்து, தங்களின் சமூக நிலையை மற்றவர்களை விட உயர்வாக காட்டிய பொருட்கள் இன்று அனைவருக்கும் கிடைத்து அனைவரையும் தங்களுக்கு சமமாக மாற்றிவிட்டதை ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டம் தான் இலவசங்கள் தவறு என்றும், இலவசங்களால் சமூகம் சீரழிந்துவிட்டது என்றும் பதறுகிறது.

TV Fan மட்டுமல்ல, அரசால் முடிந்தால் Car Bike போன்றவைகளை கூட இலவசமாக தரலாம். Car, Bike போன்றவைகளை வைத்துக்கொண்டு "பந்தா" செய்யும் ஆட்களின் ஆணவம் அடங்கட்டுமே.

இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்பதை கூறும் தகுதி அவைகளை விலை கொடுத்த வாங்க இயலாத சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே உள்ளது.

புளி ஏப்பம் விடுபவர்களுக்கு பசி ஏப்பத்தின் வலி புரியாது