Monday, June 04, 2018

சிங்கப்பூர் ஆகியிருக்கவேண்டிய தமிழ்நாடு

ஆ ஊன்னா சிங்கப்பூர் ஆகியிருக்கவேண்டிய தமிழ்நாடுங்குறாங்க. அங்க 2 வருஷம் இருந்தவன், அந்த ஊர் பிடிச்சுப்போனவன் என்பதால கீழ இருக்க விஷயங்களை சொல்றேன், புரிஞ்சு தொலையுதான்னு பார்ப்போம்.
1. அங்க லீ குவான் யூ கஷ்டப்பட்டுதான் அந்த நாட்டை முன்னேத்துனாரு. ஆனா அங்க எல்லாரும் ஜாதி,மதம் பார்க்காம லொல்லு மயிறு பேசாம எல்லாரும் அவங்கவங்க வேலையை சரியா செஞ்சாங்க
2. நம்மூர் மாதிரி வேலைவெட்டிக்கே போகாம, அப்பன், பாட்டன், மகன், மகள் வருமானத்தில வாழுறவங்க அங்க யாருமில்லை.
3. நீங்க கொண்டாடுற சிங்கப்பூர்லயும் குடும்ப அரசியல் இருக்கு. லீ குவான் யூ மகன் தான் இப்போ பிரதமர்
4. நீங்க கொண்டாடுற சிங்கப்பூர்ல கலவரமே நடந்ததில்லை, அதை முதன்முதல்ல நடத்தி இப்ப பொழைக்க வழியில்லாம போன ஒரே இனம் நம்ம தமிழினம் தான்.
5. நம்மூர்ல இருக்க மாதிரி கருத்து சுதந்திரம் சகட்டுமேனிக்கு அங்க கிடையாது. கவர்மெண்ட்டுக்கு எதிரா ஒரு கருமமும் உங்களால எழுத முடியாது.
6. திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே மாதிரி, அங்கயும் அந்த ஊருக்காரன் வெளிநாட்டுக்காரர்களால் வேலையிழந்தோம் பங்காளின்னு அரசியல் பேசிட்டிருக்கான்
7. அந்த ஊர்ல தனியார் கூட வங்கிமூலம்தான் சம்பளம் தரும். முறைப்படி வரி 100% மக்களும் அரசுக்கு செலுத்தியே ஆகனும். நம்ம ஊர்ல வரி கட்டுறவன் எவன்னு தேடித்திரிய வேண்டியிருக்கு.
8. எல்லாத்தை விடவும் முக்கியமா அங்க இருக்கவங்க எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுராங்க. இங்க நம்மூர்ல சுத்தமாக் கிடையாது.
சொல்ல ஆரம்பிச்சா இன்னும் நிறைய மிச்சம் இருக்கு. என்னவோ இவனுகதான் சிங்கப்பூரை முன்னேத்துனாப்ல பொலம்பிக்கிட்டிருக்கானுக. திருந்துங்கடா கோப்பி வாங்கி தரேன்.

No comments: