Thursday, August 24, 2017

சமூத்ரகனியிசம்

ஒரு விஷயத்தை
”மேலோட்டமான உணர்ச்சிவசப்படலால் கொண்டாடுவது” என்பதற்கு
”சமுத்ரகனியிசம்” என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறேன்.
சமுத்ரகனியிசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி இருப்பார்கள்
- தடுப்பூசி போடாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி உடல்நலத்துக்கு கேடு.. தடுப்பூசியே மருந்து கம்பெனிகளின் சதி என்று நினைப்பது.
- பசுமாட்டில் இருந்து கறந்து அந்தவிநாடியே குடிக்கும் பால் மட்டுமே சத்துள்ளது என்று நம்புவது.
-400 சுகர் இருக்கும் போது அலோபதி மாத்திரைகள் இல்லாமல் ”பித்தாவில்” லேகியம் வாங்கி உண்டு சரிசெய்யலாம் என்று நம்புவது.
-மெட்டி போடுவது, தாலி போடுவது, உடன்கட்டை ஏறுவதில் எல்லாம் அறிவியலை தேடி தேடி கண்டுபிடிப்பது மாதிரி காட்டி அதை நிருபிப்பது.
- மிக்சியில் சட்னி அரைத்தால் சுவையிருக்காது. அம்மாவோ அத்தையோ பாட்டியோ நெஞ்சுவலிக்க வலிக்க அம்மியில் அரைத்த சட்னிதான் சுவை என்று நினைப்பது.
- நேச்சுரோபதி, அக்குபஞ்சர் போன்றவற்றைப் புகழ்ந்து, அங்கப் போங்க எல்லாம் சரியாகும் என்று சொல்வது.
- நாட்டுக்கத்திரிக்காய், நாட்டுக்கோழி, நாட்டு நாட்டு என்று தொடங்கும் எதுவும்தான் உடலுக்கு நல்லது, மீதம் அனைத்தும் விஷம் விஷம் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்வது.
- டூமச்சாக பிளாஸ்டிக் பொருட்களை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் எவ்வளவு உபயோகமாக இருக்கிறது என்பது பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டார்கள்.
- ஜாதிப் பிரச்சனை பற்றி, அடக்கப்பட்டோர் நிலை பற்றி சமுத்தரகனிசம் எப்போதும் பேசாது. அது மரம் நடுவது, பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கு சென்று சர்க்கரைப் பொங்கல் கொடுப்பது, எங்கோ ஒரு பாட்டி பட்டாணி விற்று குடும்பத்தைக் காப்பாற்றுவதை சிலிர்ப்பது இப்படியாக சமூகத்தைப் பார்க்கும்.