Saturday, January 11, 2020

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம்

1884-ஆண்டு நெல்லையில் ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட படம், ஒடுக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாகத்திற்கு தண்ணீர் குடிக்கிறார். அவருக்கு தருபவர் நீண்ட மூங்கில் தண்டின் மேல் புறத்தில் தண்ணீர் ஊற்ற கீழே வழியும் நீரைக் குடிக்கவேண்டும்.



அன்றைய காலகட்டத்தில் இப்போது உள்ளது போல் எந்த கிணற்றிலும் போய் தண்ணீர் எடுக்க முடியாது, குளத்தில் இறங்கி குளிக்க முடியாது, அடிபம்ப் என்பது எங்குமே இல்லை. அப்படி என்றால் குடிக்க தண்ணீர் எடுக்க என்ன செய்யவேண்டும்.

இதற்கு தமிழகத்தில் என்ன நடந்திருக்கும் என்று புலன்விசாரணை செய்யும் முன்பு உஜ்ஜைனின் 1922-ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேயே அதிகாரியின் பதிவில் இருந்து “உஜ்ஜைனில் உயர்ஜாதியினரின் கழிவு நீர் தேங்கும் குழிக்கு அருகே ஒரு குழி வெட்டப்பட்டுள்ளது, அந்தக்குழியில் ஊற்று நீர்(கழிவு தொட்டியில் இருந்து வரும் நீர்) நிரம்பும் வரை காத்திருந்து பானைகளில் பிடித்துச் செல்கிறார்கள். இந்த அழுக்கு நீரை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களின் குழந்தைகள் நோயுள்ளவர்களாக உள்ளனர். இவர்களுக்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க டில்லியில் இருந்து கவர்னர் வேண்டுகோள் விடுத்தும் இந்த நாட்டின் (உஜ்ஜைன் ஆங்கிலேயரின் ஆளுமைகுட்பட்ட பகுதி அல்ல) தலைவர் மத சூத்திரத்தின் குறிப்புகளைச் சுட்டிக்காட்டி மறுத்துவிடுகிறார். மனம் வேதனைப்படுகிறது என்று எழுதியுள்ளார்.
இப்போது சங்கிகள் கூறும் ரொட்டிக்காகவும் காசுக்காகவும் மதம் மாறினார்கள் என்பது எந்த அளவிற்கு மோசடியான பொய்கள் என்று தெரியும்

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.

1971ல், 1972ல் நடந்தேறிய அனைவரும் அறிய வேண்டிய மிக இன்றியமையாத அரசியல் வரலாறு.
ஒன்றிய அரசு நினைத்தால் எப்பற்ப்பட்ட அரசையும், சூழ்ச்சி செய்து, கவிழ்த்து விடலாம். 184 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தை கூட நிலைகுலைய செய்யவும் முடியும். கபட நாடகத்தை அரங்கேற்றி ஒரு செல்வாக்கு பெற்ற நடிகரைக் கூட தனி கட்சியை தொடங்க வைக்க முடியும் என்பதற்கு கீழ்காணும் பதிவு. சான்று.
-----------------------
23.3.92 இல் தமிழ் வார இதழில் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன்
ஜூனியர் விகடன்
எஸ் எஸ் வாசன் என்ற
பிரபல காங்கிரஸ்காரரும்
ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்தவிகடன் நிறுவனமான செல்வாக்குடன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் புதல்வர் பாலசுப்ரமணியம் அவர்களால் நடத்தப்படும் ஏடு.
அந்த ஏட்டில் போலீஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு தொடர் வெளிவந்து கொண்டு இருக்கிறது
நான் இங்கே குறிப்பிடுவது
13ஆவது தொடராகும்.
போலீஸ் உளவுத் துறை அதிகாரி ஒருவர் அவர் பணியாற்றியபோது நாட்டில் நடந்த சில நடப்புகளையும் விளக்குகிறார் அதைத்தான் வாசகர்களாகிய நீங்கள் இப்போது படிக்கப் போகின்றீர்கள்
அவர் பின்வருமாறு எழுதுகிறார்
எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியே கொண்டுவர ஒரு பெரிய நாடகம் நடத்தினோம்
அந்த நாடகத்தை எப்படி நடத்தினோம் தெரியுமா என்று ஆரம்பித்த
சிஐடி அதிகாரி தொடர்ந்து
சொல்லத் தொடங்கினார்.
எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கு தேவையான தகவல்களை திரட்டித் தரும் பொறுப்பும் ஒரு சில சமயம் உளவுத்துறையின் தலையில் விழும்
அதைச் செய்ய வேண்டுமானால்
அந்த கட்சியில் உள்ள தலைவர்களுருடைய தனிப்பட்ட வாழ்க்கை அவர்களுக்கு உள்ள
பலம் பலவீனங்கள் கண்டெடுக்கப்படும்
அவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு போன்ற
புள்ளி விவரங்கள்
இன்டெலிஜன்ஸ் அதிகாரிகளுக்கு
தெரிந்திருக்க வேண்டும்
இல்லையென்றால் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகும்.
1971 திமுக 25 எம்பிக்களை வைத்திருந்தது.
அரசியலில் கருணாநிதியும் ஒரு சூப்பர் மேனாக இருந்த நேரம்
மாநில சுயாட்சிக் கொள்கையை உரமூட்டி வளர்த்துக் கொண்டிருந்தார் தன்னுடைய மாநிலதில் தான்
சிறப்பான ஆட்சி என்று முழங்கினார் இந்த குரல்கள் எல்லாம்
பிரதமர் இந்திரா காந்தி
காதிலும் விழுந்திருந்தன
தமிழ்நாட்டைச் சுற்றி உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆண்டது தமிழ்நாடு மட்டும் ஒரு தீவாக திமுகவின் கையில் இருந்தது.
திமுகழக எம்பிக்களின் ஆதரவு
இந்திரா காந்தியின் அரசுக்கு
அப்போது தேவைப்பட்டது
அதே சமயத்தில் கருணாநிதி
தன் கைக்குள் இருக்க வேண்டும்
என்றும் நினைத்தார் இந்திரா காந்தி
இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தார்
திமுகவை உடைத்துவிட்டால் தான் அந்தக் கட்சி காங்கிரஸ் உதவியை தமிழ்நாட்டில் நாடும்
என்று முடிவெடுத்தார்.
அதற்கான வேலையை செய்ய இன்டெலிஜென்ஸ்
உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்
உதவிக்கு காங்கிரஸ் பிரமுகர் ஒருவரும் அனுப்பப்பட்டார் அந்த காங்கிரஸ் பிரமுகர் இன்டலிஜன்ஸ் அதிகாரியோடு உட்கார்ந்து திட்டம் போட்டார்
எனக்கு கூட அப்போது வேறு மாநிலத்தில் தான் பணியில் இருந்தது
ஆனால் தமிழக அரசியல் தெரியும் என்பதால் எனக்கு
ஸ்பெஷல் ட்யூட்டி போட்டிருந்தனர்.
திமுகவில் முக்கிய புள்ளிகள் யார் யார் இருக்கிறார்கள் என்று பார்த்தபோது
என் கண்முன் எம்ஜிஆர் தான் முன்னணியில் இருந்தார்.
அதனால்தான் அவரை
திமுகத்திலிருந்து இழுக்க
நாங்கள் முயற்சி செய்தோம்.
அப்போது ஏராளமான படங்களில்
நடித்து கொண்டிருந்தார் எம்ஜிஆர் வருமானமும்அதிகமான இருந்த நேரம்
இதைக் கருத்தில் கொண்டு
வருமான வரி அதிகாரிகள்
அடுத்து வருவாய் கண்காணிப்பு அமலாக்க பிரிவு என்று
எல்லா அதிகாரிகளையும்
எம்ஜிஆர் வீட்டை முற்றுகையிட்டு குடைந்து எடுக்க வைத்தோம்
அப்போது அவர் ஒரு சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்று வந்திருந்தார்
அதற்கான கணக்கு வழக்குகளை விசாரித்தார்கள்
ஆனால் இதற்கெல்லாம்
பெரும் பின்னணி இருப்பது
எம்ஜிஆருக்கு தெரியாது.
இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் பேச என்னை அனுப்பினார்கள்
நான் போன போது எம்ஜிஆர் மிகவும் சோர்வாக இருந்தார்
நானே வழியே பேசி பிரச்சினைகளை சமாளிக்க டெல்லி போய் இந்திராகாந்தியை பாருங்க எல்லாம் சரியாய்ப் போய்விடும் என்று
யோசனை சொன்னேன்
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் எம்ஜிஆர்
பிறகு நானே முக்கியமான காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் மூலமாக அம்மாவை மீட் பண்ணுங்க என்று கூறி வழி காட்டிக் கொடுத்தேன்
அதன்படி எம்ஜிஆர் அந்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் தன் வழக்கறிஞரிடம் சென்று பிரதமரை சந்தித்தார்
சந்திப்பு நடந்து எம்ஜிஆர் உற்சாகமாக திரும்பினார்
இப்படித்தான் மெதுமெதுவாக தொடங்கி திமுகவில் உட்பூசல் உண்டாக்கி கடைசியில் 1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்ற வைத்தோம் என்று முடித்தார்
அந்த போலீஸ் அதிகாரி.
ஜூனியர் விகடன் வார இதழில் வந்துள்ள இந்த உண்மையை
20 ஆண்டுகளுக்கு முன்பு
நானும் திமுக தலைவர்களும்
பல ஆதாரங்களுடன்
மக்கள் மன்றத்தில் எடுத்துவைத்த போது இப்படியும் இருக்குமா என்று
எங்களை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர்
ஆனால் உண்மை 20 ஆண்டுகள் கழித்து சாட்சியுடன் வெளிவந்துள்ளது.
நெஞ்சுக்கு நீதி தொடரிலிருந்து
அண்ணன் Napa Mc.
_____________________
இது ஏதோ முரசொலியில் பதிவானது அல்ல. 'நான் ஏன் பிறந்தேன்' என்று தொடரை கொடுத்த ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஜூனியர் விகடனில் வெளியானது.
உண்மைத்தன்மை நிறைந்திருக்கும். ஏனெனில் எழுதியவர் அரசியல்வாதி அல்ல. எழுதிய நேரத்தில் திமுக சட்டமன்றத்தில் 1 இடம் மட்டுமே வென்ற அரசியல் கட்சி.
கணக்கு வழக்குகளை கொடுக்க வேண்டிய பொருளாளர் எவ்வாறு கணக்கு கேட்பார் என்ற அடிப்படையே தெரியாத அறியாதவர்கள் அதிகம் வாழ்ந்த காலம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கவில்லை.
நிறைவாக, ஆளும் ஒன்றிய அரசு நினைத்தால் எந்த ஒரு நடிகரையும் கட்சியோ, மய்யமோ, மன்றமோ, இயக்கமோ தொடங்கி வைக்க முடியும்.
பெரும் பலம்வாய்ந்த ஒரு இயக்கத்தை தகர்க்க, ஆட்சியில் வராமல் தடுக்க எல்லா அரசியல் சித்து விளையாட்டுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்க முடியும்.
அன்று அந்த விவரமறியாத தமிழ்ச் சமூகம் ஏமார்ந்தது. இன்று நிச்சயம் ஏமாராது என்பதனை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் உணர்த்தி உள்ளனர்.மீண்டும் உணர்த்துவார்கள்.

இரண்டு விளம்பரங்கள்.

இரண்டு விளம்பரங்கள்.
1. ராம்ராஜ் வேட்டி விளம்பரம்.
வேஷ்டி கட்டுவதில் 99% ஆட்கள் கிராமப்புற ஆட்கள். ஆனால் விளம்பரம் நகர்ப்புற முன்னேறிய பிரிவினரை அதுவும் சாதீய ரீதியிலான மொழி அடையாளங்களுடனே காட்டி விளம்பரம் செய்கிறார்கள்.
2. அடுத்து ஏதோ வாஷிங் பவுடர் விளம்பரம்.
மெஸ் மணி மாமாவிற்கு குழந்தைகள் உதவுவது போல.
இன்னும் ஏகப்பட்ட விளம்பரங்கள் இப்படித்தான் சமூகத்தின் பெருவாரியான மக்களிடம் பொருட்களை விற்க 3% முன்னேறிய பிரிவினரை வைத்து சாதி ரீதியாக கூட விளம்பரங்கள் வருகின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.
1. விளம்பரம் எடுக்கும் ஏஜன்சியினரின் சாதிப்பாசம்.
2. பெருவாரியான மக்கள் அடிமை மனப்பான்மையில் இருப்பதால் இதுபோன்ற விளம்பரங்கள் பயனளிக்கும் என்று நினைக்கிறார்கள்.

"தை ஒன்னு" தமிழ் புத்தாண்டு இது வரலாற்று உண்மை

"தை ஒன்னு" தமிழ் புத்தாண்டு இது வரலாற்று உண்மை



ஆனால் அதை கலைஞர் சொல்லிவிட்டாரே அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்

#பார்ப்பன கைக்கூலிகளும்,
போலி தமிழ் #தேசியவாதிகளும் சேர்ந்த புலம்பும் புலம்பல்

மானமுள்ள தமிழா நீ முடிவு செய் யாரையும்💪 நம்பாதே வரலாற்றை ஆய்வு செய் பிறகு நீயே சொல்ல
"தை ஒண்ணா" அல்லது
"சித்திரை ஒண்ணா" என்று



தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியே .. புது வருடத்தில் ஒரு நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் வைக்கப்பட்டது !!! இந்த உண்மையை உணர்ந்து கலைஞர் தை ஒன்றை வருடப்பிறப்பாக மாற்றினார் !!! ஆனால் ஜெ ஆட்சிக்கு வந்து .. மீண்டும் தவறாத சித்திரை யை வருடப்பிறப்பாக மாற்றினார் ... அவர் நிலையை பார்த்தீர்களா ??? என்று மரித்தார் என்று தெரியவில்லை !!! கொலை செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை !!! சித்திரவதைக்கு ஆளானாரா என்றும் தெரியவில்லை !!!

இந்து மதம் அறிவியல் மதம் ப்ரூ...

இந்து மதம் அறிவியல் மதம் ப்ரூ...



சரிடா... திரேத யுகம் எத்தன வருஷம்?
12 லட்சத்தி 96 ஆயிரம் வருஷம் ப்ரு... பாருங்க. பைபிள் வெறும் 6,000 வருஷம்னு சொல்லுது. ஆனா அறிவியல் உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகுதுனு சொல்லுது. அதுனால இந்துமதம் அறிவியல் மதம் ப்ரூ...
பொறுடா நாயே... வாமன அவதாரம் எந்த யுகம்?
சத்திய யுகம் ப்ரூ.
சரி. சத்திய யுகம் முடிவுல வாமன அவதாரம் வந்ததா வச்சுக்குவோம். இப்போ நாம இருக்குறது எந்த யுகம்?
கலியுகம் ப்ரூ. அதான் உங்கள மாதிரி நாத்திகர்கள் பெருகிட்டாங்க.
இப்போ திரேத யுகம், துவாபர யுகம் ரெண்டையும் சேத்து கூட்டு.
திரேத யுகம் 12,96,000 +
துவாபர யுகம் 8,64,000
= 21,60,000 வருஷம் ப்ரூ....
சரி. 20 லட்சம் வருஷம்னு வச்சுக்குவோம். அறிவியல் படி மனிதன் தோன்றி எவ்வளவு காலம் ஆகுது?
தெரியலையே ப்ரூ...
இது தெரியாமதான் நீ அறிவியல், அது இதுனு பேசுனியா? 3,00,000 ஆண்டுகள் முந்தைய படிம ஆதாரங்கள் இருக்கு. அதிக பட்சம் 5,00,000 வருடங்கள். இப்போ விஷயத்துக்கு வருவோம். எனக்கு 10,00,000 வருட பழமையான Homo sapiens எலும்பு/படிமம்/இதர ஆதாரம் ஏதாச்சும் காட்டு. நான் ஏத்துக்கிறேன்.
அது ப்ரூ... ஒவ்வொரு யுக முடிவிலையும் பிரளயம் வரும். எல்லாம் அழிஞ்சு போயிடும்.
அப்போ ஏன் ஆறு கோடி வருஷம் பழைய Tyrannosaurus rex எலும்பு கிடைக்குது?
அது யாரு பாஸ்? கிறிஸ்டின் ராஜாவா?
முண்டமே... அது டைனோசர்டா!
ப்ரூ... அது பெரிய விலங்கு ப்ரூ....
அப்போ 15 கோடி வருஷம் முன்னால வாழ்ந்த காக்கா சைஸ் archaeopteryx படிமம் கிடைச்சிருக்கு? ஏன் 10 லட்சம் வருட பழைய மனித எலும்பு கிடைக்கல?
இதெல்லாம் வெளிநாட்டுகாரன் சொல்ற கதை ப்ரூ. அறிவியல் எல்லாம் ஒரு கற்பனை ப்ரூ...
டேய்! நீதான அறிவயல் மதம்னு ஆரம்பிச்ச. இப்போ அறிவியல் கற்பனைனு சொல்ற? அப்போ உன் மதம் கற்பனையா?
ப்ரூ... நீங்க தியானம் பண்ணி மனச ஒருநிலைப் படுத்தி தேடுங்க. நான் சொல்றது புரியும்.
அப்போ அறிவியல்னு சொன்னதுக்கு ஆதாரம்?
அறிவியல் வேஸ்டு ப்ரூ.
அப்போ உன் அறிவியல் மதமும் வேஸ்டு.
உங்களுக்கு ஒரு நாள் புரியும் ப்ரூ.
ஆனா உனக்கு என்னைக்குமே புரியாது போல... பாவத்த. போய் உன் மகனோட 5-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்த வாங்கிப் படி.