Thursday, April 12, 2018

சீமானை ஏன் அழைக்கவில்லை மே17 இயக்கத்தின் விளக்கம்

சீமானை ஏன் அழைக்கவில்லை மே17 இயக்கத்தின் விளக்கம்...
படிச்சுட்டு செத்துடுங்கடா தும்பிகளா
2011 நினைவேந்தலுக்கு சீமானை அழைத்த போது அனைவரும் வந்தமர்ந்து நிகழ்வு தொடங்கும் வரை நினைவேந்தலுக்கு வரமாட்டேனென சொன்னவர் , கடர்கரையில் 50000 தமிழர்கள் திரண்ட செய்தியறிந்தவுடன் பங்கேற்றார். ஐயா. காசி ஆனந்தன், நெடுமாறன், புலமைபித்தன் போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, கிட்டதட்ட புலமைபித்தனை கீழே தள்ளியவாறே முன்னேறி கூட்டத்தில் தன்னை முன்னிருத்தினர் அவருடன் வந்தவர்கள். நினைவேந்தல் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொழுதில் கூட்டத்திற்குள் தனியே அமந்து கூட்டத்தினை இரண்டாக பிரித்தனர்.
இந்நிகழ்வு நடந்த ஒரு மாதத்தில் மூவர் தூக்கு அறிவிப்பு வெளியானது. அன்றிரவு துயரத்தோடு செய்வதறியாது திகைத்து நின்றபோது அனைத்து கட்சி, இயக்கத்தினரை ஒன்றாக இணைத்து கூட்டமைப்பாகி போராட்டம் நடத்துவோமென திட்டமிட்டனர் தோழர்கள்.. நெடுமாறன், வைகோ திருமா,ராமதாஸ்,மற்றும் இயக்கங்கள் அனைத்தும் இணைக்கவேண்டுமென முயன்று சீமானையும் சந்தித்து ஒன்றாய் நிற்கவேண்டுமென்ற போது...
அவர்கள் அனைவரும் ஒன்றாய் நிற்கட்டும் நாம் மட்டும் தனித்து நிற்போமென்றார். இல்லை ஒட்டுமொத்த தமிழர் இயக்கங்களும் ஒன்றாக நிற்பதை மறுத்தார். அனைவரும் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தி கூட்டத்தினை திரட்டி அரசினை நெருக்குவோம் என்று திட்டமிட்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்ட போது, ‘ யார் கடைசியில் பேசுவது” என்றார்.. ‘ தான் தலையாய் மட்டுமே இருக்க முடியும், இறுதி உரை என்னுடையதாய் இருக்கவேண்டுமென்றார்...
அனைத்து மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டு கூட்டத்தினை கூட்டிய பின்னர், கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்தார். மூவர் உயிர்காப்பு கூட்டணி உருவானதில் இணைந்து கொள்ளாமல் விலகிநின்றார். செங்கொடி ஈகத்தின் போதும் இதே நிலை. கயல், சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர் சாகும்வரை உண்ணவிரதம் இருந்த 8 நாட்களில் ஒரு நாள் கூட அவர்களை சந்திக்க வரவில்லை. கடுமையான கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல் பின்னர் வந்து சேரவேண்டியதானது.
அனைத்து கட்சி-இயக்கமும் சேர்ந்து, உயர்நீதிமன்றம் மூவர் தூக்கிற்கு தடைவிதிக்கவேண்டுமென கோரிக்கை வைத்து உயர்நீதிமன்ரத்தினை முற்றூகையாக திரள்வோம் என முடிவெடுத்த போதும் சீமான்மட்டும் அதை புறக்கணித்தார்... இதன் பின்னர் நிரந்தரமாக தூக்கினை ரத்து செய்யவேண்டுமென 44 நாட்கள் நடந்த தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் தமிழ்நாட்டிலேயே பங்கெடுக்காத ஒரே கட்சி இவர்கள் மட்டுமே.....
இவையனைட்த்திற்கும் நேரில் சென்று அழைத்த போது திருப்பி அனுப்பியவரே இந்த உத்தமர்.
இதே நிலைதான் 2011இல் தீவிரமான முல்லைப்பெரியாறு போராட்டத்திலும் தொடர்ந்து நடந்தது . 2011 டிசம்பர் 25ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு முதலாக அழைக்கப்பட்டவர் சீமான். அந்த ஊர்வலத்தில் பாரதிராஜா முதல் அனைத்து படைப்பாளிகளும் கட்சிகளும் பங்கெடுத்தாலும் பங்கெடுக்காத ஒரே நபர் இவர் மட்டுமே... இதே போன்று 2011 ல் கூடன்குள போராட்டகூட்டமைப்பிலும் இதே நிலை.
2012 பிப்ரவரி 18ம் தேதி அமெரிக்க தீர்மான எதிர்ப்பினை முன்வைத்து சென்னை மெரினாவில் மே17 இயக்கம் கூட்டிய கூட்டத்திற்கும் முதலாக சீமானிற்கு நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டது... தமிழீழ கோரிக்கையை முன்வைக்கும் இக்கூட்டத்திற்கு வரமறுத்தார். இக்கூட்டத்திற்கு த்டை விதிக்கப்பட்டதை மீறி போராட்டம் நட்ந்தது. திருமுருகன் , மணியரசன், தியாகு, தாமரை வீரசந்தானம், மல்லை சத்யா, எழிலன், காஞ்சி மக்கள்மன்ற மகேஸ், எழிலன், தீரன் ஹாரூண் ரஷீத், கீற்று ரமேஸ், வடிவாம்பாள், கயல் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த வருடம் முறியடிக்கப்பட்டது.
இந்த போராட்டம் நடத்தப்படுவதற்கு இருவாரங்கள் முன்பு சீமான் இதே ஐநா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவேண்டுமென்று ஊர்வலம் சென்னையில் நடத்தினார். இக்கோரிக்கை தவ்றாய் போகுமென்று தோழமையுடன் நேரில் சென்றும் பேசினோம். இவரது இந்த ஊர்வலத்திற்கும் கூட எங்களுக்கு மட்டுமல்ல எவருக்கும அழைப்பில்லை.
இதன் பின்னர் அதே பிப்18ம் தேதிக்கு அடுத்து இடிந்தகரையில் போராடிய மக்கள் மீது ஜெயா அரசு வன்முறை ஏவியது. இதை கண்டித்து சாலை மறியலை சென்னையில் அனைத்து கட்சி-இயக்கத்தவரும் நடத்தினோம், ஐயா.மணியரசன் அவர்கள் மிக மோசமாக இழுத்துச் செல்லப்பட்டார். பெரியார் திராவிட கழக தோழர்கள் பேருந்துகளை தடுத்து நிறுத்தியதற்காக தாக்கப்பட்டனர். இப்போராட்டத்திலும் இவர் இணையவில்லை, மறுத்துவிட்டார்.
பின் 2012 நினைவேந்தல் கூட்டத்திற்கு அழைத்தோம். வருகிறேன் என்றவர், பின் வரமறுத்துவிட்டார். இந்த நினைவேந்தலுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அழைத்த உடன் பங்கேற்பதாக சொல்லி, உறுதி அளித்தவாறு உடல்நலம் சரியில்லாத பொழுதிலும் பங்கேற்றார். குடந்தை அரசன் அவர்களின் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநாட்டிற்காக வந்தவர் நினைவேந்தலில் பங்கேற்றார்.
நேரில் சென்றே அழைப்பிதழ் வைக்கப்பட்ட சிமான் வரவில்லை. இதே போல டெஸோ மாநாட்டிற்கு எதிரான திமுகவை அம்பலப்படுத்தும் போராடத்திற்கு அழைத்த போது, பிற கட்சிகள் பங்கெடுத்தனவே ஒழிய, சீமான் பங்கேற்கவில்லை. வழக்கம் போல பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை. பின்2012 காமன்வெல்த்திற்கு எதிரான போராட்டத்தின் போது வலிந்து அழைத்த போது ஒரே ஒரு பிரதிநிதி மட்டுமே, போராட்டம் முடிந்த பின்னர் அனுப்பப்பட்டார்.
2012 ஜீன் -ஜுலையில் சிறப்பு முகாமெனும் ஈழ ஏதலிகள் முகாம் முற்றூகை போராட்டம், கண்டனப் போராட்டம், ஈழநேரு உள்ளிட்டவர்கள் நடத்திய சாகும்வரை போராட்டத்திற்கு ஆதரவான போராட்டமென எந்தப் போராட்டத்திலும் நாம் தமிழர் தனித்தே நின்றார்கள்.
2012 செப்டம்பரில் இடிந்தகரையின் மீது கடுமையான தாக்குதலை அரசு செய்த போதும் இதே நிலை. தனித்தே நிற்கிறோமென்றார். பிற போராட்டங்களின் போதும் இதே நிலைதான் நடந்தது.
2013 பிப்ரவரியில் ஐ.நா முற்றுகைப் போராட்டத்தினை நடத்தியதற்கு நேரில் அழைப்பு கொடுத்தோம். அனைத்து கட்சியினரும் ஐயா.நெடுமாறன் தலமையேற்க பங்கேற்றார்கள்..இதிலும் பங்கேற்க மறுத்தார். இது குறித்த கருத்தரங்குகள்-ஆர்ப்பாட்டங்கள் என எதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை.
2013இல் பாலச்சந்திரன் படுகொலை படம் வெளியான போது ஒன்றாய் சேர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தினை முற்றூகையிடுவோம் என்றபோதும் இதே நிலை. பின் தோழமை இயக்கங்கள்-கட்சிகளோடு இப்போராட்டத்தினை நடத்தினோம்.
பின்னர் 2013 மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் ஐ.நா தீர்மானத்தினை எதிர்த்த மெரினா ஒன்று கூடலுக்கு அழைப்பு கொடுத்தபோதும் அதை புறக்கணித்தார். எந்த பிரதிநிதியும் அனுப்பப்படவில்லை.
பின்னர் 2013 நினைவேந்தலுக்கு அழைப்பு கொடுத்தோம். வழக்கம் போல நேரிலேயே அழைப்பு கொடுக்கப்பட்டது.
திருமுருகனும், அருள்முருகனும் சென்று அழைத்தார்கள். வழக்கம்போல சீமான் வரவில்லை.
2013இல் வடக்குமாகாண சபை தேர்தல் தருணத்தில் மன்னாரில் தமிழர் நிலத்தை சிங்களவருக்கு கொடுப்பதான தகவல் வெளியானதை வைத்து போராட்டம் நடத்த அழைப்பு கொடுத்த போதும் பங்கேற்கவரவில்லை.
2013இல் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றூச்சுவர் இடிக்கப்பட்டபோது ஒன்றாய் நின்று ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்கிற போதும் இதே ஒற்றூமையற்ற நிலையே முன்னெடுத்தார்.
2014இல் ஐ.நா முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு கொடுத்தோம்.
2014 மார்ச்சில் மெரினாவில் ஐ.நா தீர்மான எதிர்ப்பு போராட்டம், இதனிடையே அமெரிக்க தூதரக முற்றுகைபோராட்டம், ஏழு தமிழர் விடுதலைக்கான மெரினா ஒன்றுகூடல் என்று எதிலும் ஒன்றாய் நிற்க மறுத்தார்கள்.
இந்தியாவின் அரசு அலுவலகங்கள் முற்றூகை போராட்டம் என எதிலும் பங்கேற்க மறுத்தார்கள். அரசு தடையை மீறி மே17 இயக்கமும் தோழமை கட்சி-இயக்கங்களும் பங்கேற்று ஒவ்வொரு முறையும் கைதானோம். எதிலும் பங்கேற்க மறுத்தார் சீமான்.
2015இல் நடந்த ஐ.நா முற்றூகைப் போரட்டம், அமெரிக்க தூதரகப் போராட்டமென ஒவ்வொன்றிலும் இதே நிலையெடுத்தார்கள்.
2015ல் நடந்த தமிழீழ நினைவேந்தலுக்கும் வரவில்லை. இம்முறை கிட்டதட்ட மூன்றுமணி நேரம் காத்திருந்து தோழர்கள் அழைத்த போதிலும் இதே நிலைதான்.
2015இல் அனைத்து அமைப்புகளும் ஒன்றுகூடி ஈழவிடுதலைக்கான பேரணி நடத்திய பொழுதில் கிட்டதட்ட 50-60 இயக்கங்கள் கட்சிகள் ஒன்றாய் நின்ற போதும் நாம் தமிழர் வரமறுத்தார்கள். அவர்களது நிலைப்பாடு என்பதே இந்த கூட்டங்களில் தங்களை தலைவராக முன்னிறுத்தவேண்டுமென்கிற கோரிக்கையே இவர்கள் தங்களை தனிமைப்படுத்தியதற்கான காரணம்.
இன்னும் பல போராட்டங்களை சொல்லமுடியும்... எந்த ஒரு நெருக்கடியான காலத்திலும் அனைத்து தமிழியக்கக்களோடு சேர்ந்து நின்றதில்லை...
இதே போன்ரு மீத்தேன் ஆவணப்பட வெளியீட்டிற்கும் பங்கேற்காமல் தவிர்த்தார்கள். இவ்வளவு ஏன் பாலைவனமாகும் காவிரி டெல்டா எனும் மீத்தேன் எதிர்ப்பு ஆவணப்படத்தினை திரையிட்ட நாம் தமிழர் தோழர்களை தடுத்து நிறுத்திய அதன் கட்சி பொருப்பாளர்கள், லைக்கா தயாரிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மீத்தேன் எதிர்ப்பினை பேசுகிறது என்று அதை பாராட்டி சுவரொட்டியும், பதாகைகளும் வைத்தனர்.
கத்தி திரைப்படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் ‘ராஜபக்சே’ தொடர்புடையது, என்று 120 கட்சி-அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோது அதை எதிர்த்து நின்றார் சீமான்....
இதே லைக்கா நிறுவனம் இன்று ரஜினிக்காக கட்சியில் முதலீடு செய்திருக்கிறதே?... லைக்கா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் ரஜினி கட்சியின் தலைமை பொறுப்பாளராகிறாரே இது எப்படி நடக்கிறது?...
இவ்வளவு ஏன், ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக அறிவிப்பானவுடன் நமல் ராஜபக்சே பாராட்டி செய்தி வெளியிடுகிறாரே... எனில் லைக்காவிற்கும், ராஜபக்சேவிற்குமான தொடர்பு சீமானுக்கு தெரியாதா?... லைக்கா-ராஜபக்சே-சீமான் ஒரே அணியாக நின்றது எப்படி?...
இதே போன்று எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் பச்சைமுத்து ‘ தனி நாடு வாங்கிதாரேன் என்று சொல்லி ஒருவன் லட்சம் பேரை கொலை செய்தான்’ என்று தேசியத்தலைவரை பேசியவரின் திரைப்படமான ‘புலிப்பார்வை’க்காக ஒன்றாக மேடையேறி படத்தினை சிறப்பித்தாரே, இது பற்றி ஏன் கேள்வி எழவில்லை?... இந்த புலிப்பார்வை திரைப்படம் பாலச்சந்திரனை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதை ஏன் கேள்வி கேட்கவில்லை....
தேசியத் தலைவர் பிரபாகரனை வாய்கிழிய பேசிய சீமான் தேசியத்தலைவரின் மகனை கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் பற்றி எதிர்ப்பு தெரிவிக்காமல், அவ்விழாவை சிறப்பித்தது எப்படி?.. இச்சமயங்களில் எல்லாம் தனித்து நின்றவர் தானே சீமான்?...
ஈழவிடுதலைக்காக தொடர்ந்து போராடும் இயக்கங்களோடு இணையாத சீமான், இந்து மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் ஈழ மக்களுக்காக என்று கலந்து கொண்டவர்தான்.. இத்தனை ஆண்டுகளாக அழைத்த போதும் வராதவர் , இன்று மே17 இயக்கம் மாநாடு நடத்திய போது அழைக்கவில்லை என கதறுவது ஏன்?...
கரு.பழனியப்பன், அமீரை வைத்து தன்னை ஏன் அழைக்கவில்லை கேள்வி கேட்க வைப்பது ஏன்?... ஏனென்றால் இன்று மே17 இயக்கம் அங்கீகரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.. அதை தனது ஓட்டு வங்கியாக சுருட்டவேண்டுமென்பதைத் தவிர வேறென்ன எண்ணம் இருந்துவிட முடியும்?...
ஈழம், பிரபாகரன் என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், புலம்பெயர் மக்களிடம் வசூலிப்பவர்கள் ஏன் இதுவரை சொந்தமாக ஒரு பலமான மாநாட்டினை நடத்தவில்லை?.. இவர்கள் ஈழத்திற்காக கடைசியாக நடத்திய போராட்டம் எது?..
லண்டன் கோபிசிவந்தனின் உண்ணாநிலை போராட்டத்தின் போதும். ஈழத்தில் சிறுவன் தர்சன் கொலை செய்யப்பட்ட போதும் நடத்திய போராட்டத்திற்கு அழைத்த போது வராத சீமான், வெல்லும் தமிழீழம் எனும் மாநாட்டிற்கு ஏன் அழைக்கவில்லை என கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. ..
கிட்டதட்ட 7 ஆண்டுகளாக அழைத்த நிகழ்வுகளுக்கு வந்ததில்லை, பங்கெடுத்ததில்லை, பங்கேற்க இயலாத போது குறைந்தபட்சம் மரியாதை நிமித்தம் பேசியதும் இல்லை... இவ்வளவு ஏன் தொடர்ந்து பொய்களை மட்டுமே பதிலாக சொல்லும் சீமான், ரேசன்கடைகளை மூடுவது குறித்து தானே 5 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதாக கடந்தவருடம் 2017இல் பேசுகிறார்.இதை முதன்முதலில் அம்பலப்படுத்தியது மே17 இயக்கமே...
2015 டிசம்பர் நைரோபி மாநாட்டில் கையோப்பமானதை தொடர்ந்து மூன்றாவது மாதத்திலேயே மே17 இயக்கம் அம்பலப்படுத்தியது.. இந்நிகழ்வு நடந்தது 2015இல் ஆனால் 2017லேயே சீமான் சொல்கிறார், தான்தான் 5 ஆண்டுகளுக்கு ரேசன்கடைகள் மூடப்படுவதாக முதன்முதலில் எச்சரித்ததாக சொல்லுகிறார். அப்படி அவருக்கு இதுகுறித்த கவலை இருக்குமெனில் ஏன் மே17 இயக்கத்தோடு இணைந்து பணியாற்ற முன்வரவில்லை?..
ஏன் மே17 இயக்கத்தினரை தனது மேடையில் ஏற்றியது இல்லை?... 7 ஆண்டுகளாக தொடர்ந்து அழைத்த மே17 இயக்கத்தினரை கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்திய சீமானும் அவரது தொண்டர்களும், இன்று தங்களை அழைக்கவில்லையே என கதறுவது ஏன்?....

தமிழர் உரிமைக்காக போராடவராதவன் தமிழனா? அவனை/அவளை அடித்தால் என்ன தப்பு?

தமிழர் உரிமைக்காக போராடவராதவன் தமிழனா? அவனை/அவளை அடித்தால் என்ன தப்பு? அவர்கள் மீது செறுப்பு வீசினால் என்ன குற்றம்? என வக்கணை பேசும் அறிவுசீவிகளே, நடுநிலைகளே, பெரியாரியரே, அம்பேட்காரியரே, மார்க்சியரே இன்னுமுள்ள முப்பத்து முக்கோடி முற்போக்காளர்களே தன்னை சகமனிதனாக கூட மதிக்கமறுக்கும் சமூகத்தை தலித்துகள் அடிக்கவேண்டுமானால் சாதித்திமிர்பிடித்த மனிதர்கள் மீது செறுப்பெறியவேண்டுமானால் எத்தனை கோடி பேரை அடிக்க வேண்டும்? எத்தனை கோடி செறுப்புகள் தேவைப்படும்? தலித்துகள் யாரும் இன்னும் அப்படி அடிக்கப்புகவில்லையே? பல தலித்துகளால் இன்னும் அவர் சொந்தக்காசில் வாங்கிய செறுப்பை தம் சொந்தக்கால்களில் அணிந்து ஊர்த்தெருக்களில் நடக்கவே முடியாதபோது அவர்கள் எங்கே செறுப்பால் அடிப்பது? அம்பேட்கரும் பெரியாரும் அவர்களை ஒருநாளும் அப்படி செய்யச்சொல்லவில்லையே? இன்னும் சட்டத்திற்குட்பட்டுத்தானே அவர்களின் சமத்துவத்துக்கான போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது? அந்த சட்டத்தையும் நீர்த்துப்போகச்செய்யும் அதிகார எல்லை மீறிச்செயற்படும் உச்சநீதிமன்றமுள்ள ஒரு நாட்டில்
என்றேனும் நீவிர் தலித்துகளின் சமத்துவ போராட்டத்தை ஆதரித்தீர்களா? அல்லது அம்பேட்கர், பெரியாரை அஹிம்சாமூர்த்திகள் என்றோ அவதார புருஷர்கள் என்றோ கொண்டாடியிருக்கிறீர்களா? இல்லையே? அப்படியிருக்க இதென்ன தமிழரின் உரிமைக்காக தறுதலைத்தனத்தை ஊக்குவிக்கும் முற்போக்கு முகமூடி? தற்குறித்தனம், தறுதலைத்தனம், இலக்கற்ற தாக்குதல், எளியவர் மீதான வன்முறை, கும்பல் கலாச்சாரம் இவையெல்லாமே வெகுஜன விரோத அரசியலே. அவை எதன்பேரால் நிலழ்த்தப்பட்டாலும். யார் அதை செய்தாலும். இதிலெல்லாம் நீக்குப்போக்காக இருந்தால் நீங்கள் காந்தியின் படுகொலையை செய்த, நியாயப்படுத்திய, கொண்டாடிய கொலைகார அரசியலை பிரதியெடுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். இனியேனும் தெளியுங்கள். அரசியல் பாசிஸத்தின் அடிப்படை குணமே அது தன்னை ஆதரித்து வளர்த்தவர்களையே முதலில் பலிவாங்கும். ஜெர்மனி, ஈழம், இந்துத்துவம் மூன்றிலும் அது தான் நடந்தது. தமிழ்த்துவத்தின் பேராலும் அதுவே நடக்க ஆரம்பித்திருக்கிறது என்பதன் அறிகுறியே நேற்றைய அசிங்கம்.

இதுகளுக்கும் காவிரி பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை

None of these jokers can win a single seat on their own, even as a local body councillor in their own native village/town/city. And yet they claim to represent 7-Crore Tamils of Tamil Nadu and dictate terms on what one Crore Chennai citizens do in their spare time. On top of it, they claim they are going to get justice to Tamil Nadu in a vexatious issue like Cauvery water dispute. The saddest part in this whole tragicomedy is well educated Tamils, even those live abroad, support these bunch of bafoons and their selective thuggery. When they cant winnower their own neighbourhood, how can they win in Cauvery dispute? கூரை ஏறி கோழிபுடிக்கத் தெரியாதவரெல்லாம் ஒண்ணுகூடி வானம் ஏறி வைகுந்தம் காட்டப்போறேங்கிறது இதைத்தான். அதுல ஒரு ஆளு வெளிநாட்லேர்ந்து வர்ர காசை நம்பிதான் கட்சியே நடத்தறாரு. காவிரியை காரணம் காட்டி கூடுதலா உண்டியல் வசூல் பண்ண நினைக்கிறாரு போல. அதைத்தாண்டி இதுகளுக்கும் காவிரி பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை


IPL எதிர்ப்பாளர்கள் எவ்வளவு அரைவேக்காடுகள்



IPL எதிர்ப்பாளர்கள் எவ்வளவு அரைவேக்காடுகள் என்பதற்கும் memes creators எவ்வளவு அடிமுட்டாள்கள் என்பதற்கும் இந்த காணொளிகள் ஆகச்சிறந்த உதாரணம். Tamil Nadu Digital Media Association என்கிற பெயர் வைத்திருக்கும் கும்பல் எந்த அளவுக்கு digital யுகத்திற்கு எதிரானவர்கள் media ethics இல்லாதவர்கள் என்பதற்கும் அதைவிட கேவலம் இவர்கள் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் எடுபிடிகள் என்பதற்கும் இந்த காணொளிகள் மிகச்சிறந்த சாட்சியங்கள். IPLஐ பார்க்கச்செல்பவர்களைப்பார்த்து நீங்கள் வயிற்றுக்கு சோறு தின்கிறீர்களா ** தின்கிறீர்களா என்று அத்தனை பேர் முன்னால் ஒருவர் திரும்பத்திரும்ப மைக்கில் கேட்கிறார். அதற்கு மேடையிலும் கீழேயும் இருப்பவர்கள் கெக்கெபிக்கே என்று சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். நம்புங்கள் இவர்கள் தான் தமிழ்நாட்டின் digital age இளைஞர்கள். மாற்று ஊடகவியலாளர்கள்?!?!? இன்னொரு பிரகஸ்பதி முதல்வரும் துணைமுதல்வரும் “எங்க ஆளுக” என்கிறார். ஆனால் எதிர்கட்சியினர் காவிரிக்காக நடைபயணம் போவதை திட்டுகிறார். ஐம்பது ஆண்டுகளாக தமிழ்நாடு நாசமானதாக ஒப்பாரி வைக்கிறார். இதற்கெல்லாம் உச்சமாக இந்த digital media அமைப்பை வாழ்த்த வந்த வில்லன் நடிகர் உதிர்த்த முத்து தான் விலைமதிக்கமுடியாத “விவசாய முத்து”. போன (காங்கிரஸ்) ஆட்சியின் 100 நாள் வேலைதிட்டம் தான் இந்திய/தமிழக விவசாயத்தை அழித்துவிட்டது என்று ஒரே போடாக போட்டார் அந்த நடிகர். கிராமப்புற விவசாயக்கூலிகளின் பட்டினிச்சாவுகளை தடுத்த ஆகச்சிறந்த திட்டம் என்று உலக அளவில் பாராட்டப்படும் 100 நாள் திட்டம் விவசாயிகளை சோம்பேறிகளாக்கிவிட்டது என்று தீர்ப்பே எழுதினார் அந்த வில்லன் நடிகர். விவசாயிக்கும் விவசாயக்கூலிக்குமான வித்தியாசம் தெரியவில்லை என்பதா அல்லது இந்த 100 நாள் வேலைதிட்டத்தால் பலன்பெரும் ஏழை விவசாயக்கூலிகள் தனக்கு முன்புபோல கொத்தடிமைகளாக இருப்பதில்லை என்கிற மேல்ஜாதி விவசாயியின் கோபத்தை கொட்டினாரா தெரியவில்லை. இத்தனைக்கும் தானும் விவசாயக்குடும்பத்தில் இருந்து வந்ததாக அவர் கூறிக்கொண்டார். விவசாயகுடும்பத்தில் இருந்து வந்ததாக கூறிக்கொண்டவரின் விவசாய நெருக்கடி குறித்த புரிதல் இந்த லெட்சணத்தில் இருந்தால் நெல்லு மரத்தில் காய்க்குமா கொடியில் தொங்குமா என்று கேட்கும் மற்ற நகர்ப்புற அரைவேக்காட்டு இளைஞர்கள் பற்றி என்ன சொல்ல? IPL பார்க்கச்செல்பவர்களை வாயில் வந்தபடி திட்டுவது; எதிர்கட்சிகள் காவிரிக்காக போகும் நடைபயணத்தை விமர்சிப்பது; அவர்கள் ஓட்டுகேட்டு வந்தால் போன ஆட்சியில் காவிரிக்காக என்ன செய்தாய் என கேள்விகேட்கும்படி மக்களை தூண்டுவது; மத்திய அரசை பாம்புக்கும் நோகாமல் கம்புக்கும் நோகாமல் பூவால் வருடுவதைப்போல லேசாக திட்டுவது என்பதாக வாய்நீளம் காட்டிய இந்த வெண்ணெய் வெட்டிகள் யாரும் ஏழுகோடி தமிழரை ஆளும் எடப்பாடியையோ ஓபிஎஸ்ஸையோ மறந்தும் ஒரு சொல் சொல்லவில்லை. அவர்கள் இருவரின் பேரைச்சொன்னவர் கூட “அவுக எங்காளுக” என்பதாக சொந்தம் கொண்டாடினாரே தவிர அவர்களை கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லா அர்ச்சனைகளும் அந்த IPL Cricket பார்க்கப்போன அப்பாவிகளை எதிர்த்தே செய்தார்கள். அதைவிட முக்கியம் காவல்துறை நம் நண்பர்கள் நல்லவர்கள் ஆட்சியில் இருப்பவர்களின் ஆணையை நிறைவேற்றுவது அவர்களின் கடமை என்று ரஜினிகாந்தைப்போலவே காவல்துறைக்கு “நற்சான்று பத்திரம்” படித்தார்கள். Mainstream media தான் மோசம் என்றால் இந்த மாற்று mediaக்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கேவலத்திலும் கேவலமான எடுபிடிகளாக, ஜாதிவெறியர்களாக, எந்த விஷயத்தைப்பற்றியும் குறைந்தபட்ச புரிதலும் இல்லாத lumpenகளாக இருக்கிறார்கள். இதில் இப்போதெல்லாம் யாரும் செய்திகளையே பார்ப்பதில்லை என்றும் memes பார்த்தே செய்திகளை தெரிந்துகொள்வதாகவும் இதுகளில் ஒன்று ஆணவம் பொங்க அறிவித்தது. தமிழ்நாட்டை ஆளும் கட்சியை தட்டிக்கேட்க வக்கில்லாமல் தொடர்பே இல்லாமல் IPL பார்க்கச்சென்றவர்களை ஆபாசமாக திட்டிய lumpenகளை பார்க்கும்போது அவர்களுக்கான அரசியல் புரிதலை இந்த அரைவேக்காடுகள் தான் தொடர்ந்து memesகளாக அளித்து மூளையை மழுங்கடிக்கின்றன என்பது மட்டும் உறுதியானது.

சமூக நீதி காவலர் வி.பி. சிங்


தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வி.பி. சிங் என்பவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.அப்பொழுது பலவித எதிர்ப்புகளுக்கு இடையில் மண்டல் கமிசன் எனும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான(obc) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

இதனால் கூட்டணி கட்சிகள் முதற்கொண்டு அனைத்து கட்சிகளும் அவரது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரது ஆட்சியை கலைத்தன.பிரதமர் பதவியும் பறி போகிறது.

இப்போது மண்டல் கமிசன் அமைய காரணமாக இருந்த மேலும் அந்த கமிசன் அமல்படுத்தியதால் பயன்பெற்ற ஒரு மண் அவரை பாராட்ட/கொண்டாட அழைக்கிறது.அவரும் வருகிறார் பிரதமராக அல்ல முன்னாள் பிரதமராக.

அந்த மண் அவரை உச்சி முகர்ந்து வரவேற்கிறது.தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.'சமூக நீதி காவலர்' என பட்டம் அளித்து மகிழ்கிறது.

ஏன் அந்த மண் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது??

ஏனென்றால் அந்த மண் சுயமரியாதை மண்;சமூகநீதி மண்.அந்த மண்ணிற்கு தெரியும் யாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்!யாரை தலை தெறிக்க ஓட விட வேண்டும் என்று!

அந்த வகையில் இன்று(12/4/2018) அந்த மண் சுயமரியாதை மண்;சமூக நீதி மண் என மீண்டும் நிரூபித்துள்ளது.

அந்த மண் தமிழகம்❤️


ஒரு வயசாகியும் கல்யாணமாகாத ஐயரின் குமுறல்.

மந்தைவெளியில் இருக்கும் கல்யாண் நகர் அசோஸியேஷனில் பார்த்த காட்சியை கல்யாண வயதில் ஆண்பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் பார்த்திருந்தால் பாதிப்பேருக்கு நெஞ்சு அடைத்திருக்கும். இன்று அங்கு ஜாதகங்களை பதிவு செய்யும் ஒரு நிகழ்ச்சி நடந்தது நானும் அங்கே என் சகோதரியின் 32 வயது மகனுக்காக சென்றிருந்தேன் .அந்த மண்டபத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கூடியிருந்திருப்பார்கள். ஆனால் பதிவு செய்யப்பட்ட பெண்களின் ஜாதகங்கள் வெறும் பத்துதான் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கே கிட்டத்தட்ட எல்லார் முகங்களிலும் கவலை குடிகொண்டிருந்தது.
என்னதான் நடக்கிறது பிராமண சமுதாயத்தில்? இந்தப் பெண்கள் எல்லாம் எங்கே போனார்கள்? இருக்கிறார்களா இல்லையா ? என்ன ஆயிற்று இவர்களுக்கு ?
"எல்லாம் நாம செஞ்ச பாவம் சார் "என்று ஒரு அம்மா தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தார். "அந்தக் காலத்தில் பிள்ளையைப் பெற்றவர்கள் செய்த அக்கிரமங்கள் என்ன பாவங்கள் என்னென்ன அதற்கு பகவானே கொடுத்த தண்டனை இது "என்று சொல்லி கண்ணைத் துடைத்துக்கொண்டார் . .கல்யாணத்தில் பேசிய வரதட்சிணையைத் தரவில்லை என்று கர்ப்பிணி என்றும் பார்க்காமல் பெண்ணை பிறந்த வீட்டுக்கு துரத்திய கதைகள் நம் சமுதாயத்தில் உண்டு. மறுத்து பேசுங்கள் பார்ப்போம் . பிள்ளையும் பெண்ணும் சேர்ந்து சினிமாவுக்கு போனாலே "தலைவலி "என்று படுத்துக்கொண்டு அவர்களது திட்டங்களை கே கெடுத்து அவர்களது சந்தோஷத்தை கெடுத்த மாமியார்கள் நம் சமுதாயத்தில் இல்லை என்று சொல்லமுடியுமா.? இதற்கு மேலும் வீட்டில் ஏதாவது அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் அது "இவளால்தான் " என்று மருமகள்களை கரித்துக்கொட்டிய பெரியவர்கள் இல்லை என்று சொல்லுங்கள்? அன்றைக்கு அப்படி கஷ்டப்பட்டவர்களின் குடும்பங்களில் பிறந்த பெண்கள்தான் இன்று கல்யாண வயது வந்தும் "கல்யாணமே வேண்டாம் "என்று ஒருவித கசப்புடன் நிற்கிறார்கள். போதாக்குறைக்கு நாட்டில் இருக்கும் அரைகுறை ஜோதிடர்கள் வேறு . இவர்கள் படுத்தும் பாடு "தாங்க முடியலைடா சாமி "என்று சொல்ல வைக்கிறது. முக்கால் வாசி ஜோசியர்களுக்கு "செவ்வாய் தோஷம் "என்றால் என்னவென்றே தெரியாது. தோஷம் என்பதற்கு ஐந்தாறு அமைப்புகள் இருந்தால் தோஷம் இல்லை என்று சொல்ல ஐம்பது அமைப்புகள் இருக்கின்றன. அப்படி என்னதான் செவ்வாய் தோஷம் என்று இருந்தாலும் ஒரு கந்த சஷ்டி கவசமோ, ஒரு முருகன் கோவிலில் விளக்கு ஏற்றுவதனாலோ அந்த தோஷங்கள் அடி பட்டுப்போகின்றன. மேலும் சேஷாத்திரி நாத சுவாமிகள் என்ன சொல்கிறார் என்றால் ஜாதக பொருத்தமே பார்க்கத்தேவை இல்லை. கல்யாணத்தில் சொல்லப்படுகிற வேத மந்திரங்களே எல்லா தோஷங்களுக்கும் பரிகாரங்கள் ஆகும் என்கிறார். பள்ளிக்கூட பரீட்சைகளில் கேள்விகளை "சாய்ஸில்"விட்டுப்பழகிய நமக்கு கல்யாண மந்திரங்களையும் சாய்ஸில் விட வாத்யார்களை படுத்தி குழந்தைகளுக்கு கெடுதல் செய்கிறோமோ என்று தோன்றுகிறது.
பிள்ளையைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
முதலில் "பணம் பணம் "என்று பணத்தின் பின் ஓடுவதை நிறுத்துங்கள். உங்கள் வீட்டுக்கு வரும் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு கடனை உடனை வாங்கி படிக்கச் வைத்து அந்தக் கடனை பெண்ணிடம் வசூல் செய்வதை நிறுத்துங்கள். ஏனென்றால் தற்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்களும் நீங்கள் கடன் வாங்கிய அதே வங்கிகளில்தான் கடன் வாங்குகிறார்கள். ஒரு பெண் தன் பெற்றோர்களுக்கு அவர்களது ஒய்வு காலம் அமைதியாக கழிய பொருளாதார உதவி செய்தால் அதை தடுக்காதீர்கள். ""கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பாத்தியமெல்லாம் எங்கள் குடும்பத்துக்குத்தான்" என்று மொண்ணை கண்டிஷன்கள் போடாதீர்கள். தவிர அவர்கள் வாழ்க்கையில் தேவை இல்லாமல் குறுக்கிட்டு குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள்.
பெண்கள் பக்கத்திலும் நிறைய தவறுகள் உள்ளன. பையனுடைய அப்பா அம்மா இரண்டு பெரும் பர லோகம் சென்று பையன் அனாதையாக இருந்தால்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்கிற அசட்டுப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு புத்திமதி சொல்லுங்கள். ஆனால் அவர்கள் சொற்ப சதவிகிதம்தான் என்று சொல்லலாம்.
நான் பார்த்தவரையில் தற்கால இளம் பெண்கள் நல்ல அறிவு உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். மாமனார் மாமியார்களிடம் அன்பாகத்தான் இருக்கிறார்கள். பெண்களிடம் இருக்கும் கல்யாணம் பற்றிய பயத்தை போக்கினால் பல ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் கிடைப்பார்கள். தவிர ஜாதக பொருத்தங்களை விட குடும்ப பொருத்தம், மனப் பொருத்தம் போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இரண்டு வீட்டாரும் பேசி முடிவெடுங்கள். கல்யாணங்களில் குத்துப்பாட்டு, வெட்டி டான்ஸ் போன்றவற்றை விட்டுவிட்டு புரோகிதர்களுக்கு அள்ளிக் கொடுத்து கல்யாணங்களை முழு வேத முறைப்படி நடத்துங்கள். பிராம்மண சமுதாயம் க்ஷீணமடைவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.
மேலும் இந்த பிரச்சினையை காஞ்சி இளைய சுவாமிகள், சிருங்கேரி சுவாமிகள் கவனத்துக்கும் யாராவது கொண்டு சென்றால் நலம்.
நம் குழந்தைகளுக்காக தயவு செய்து சிந்தியுங்கள்.
வாழ்த்துக்களுடன்
ராமகிருஷ்ணன்
மயிலாப்பூர்

Wednesday, April 11, 2018

உணர்வு இல்லாதவனை எல்லாம் அடிச்சு உணர்வு வர வைக்கிறது தான் சரி

கர்நாடகாரனுக்கு இருக்கற உணர்வு தமிழனுக்கு இல்லை. அதனால உணர்வு இல்லாதவனை எல்லாம் அடிச்சு உணர்வு வர வைக்கிறது தான் சரி. தடுக்க போலீஸ் வந்தா, அவனையும் வெளுக்க வேண்டியது தான். வேற வழியில்லை. வன்முறை என்று இதை கூறக்கூடாது. உணர்வு போராட்டம் என்று பார்க்க வேண்டும்.
இப்படி ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
சரி ரொம்ப சந்தோஷம். இப்போ இஸ்லாமியர்களுக்கு பாத்தீங்கன்னா அவங்க மத உணர்வு இருக்கு. அவங்க இறையச்சம் இருக்கு. வெள்ளிக்கிழமை தவறாம மசூதி போய் தொழுகை செய்யணும்ன்னு நினைக்கறாங்க. அந்த உணர்வு இந்துன்னு சொல்லிக்கற எல்லாருக்கும் இருக்கறதில்லையே? என்ன பண்ணலாம்?
இந்துக்கள் எவன் எவன் எல்லாம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போய் சாமி கும்பிடாம இருக்கானோ, அத்தனை பேரையும் அடி வெளுக்கணும். தடுக்க போலீஸ் வந்தா தூக்கி போட்டு மிதிக்கணும்.
இதை வன்முறைன்னு சொல்லக்கூடாது. உணர்வுப் போராட்டம் என்று பார்க்க வேண்டும்.
சரி தானே?

சென்னை வெள்ளம் வந்தப்போ

சென்னை வெள்ளம் வந்தப்போ, எங்க மாவட்டத்துக்காரன் எல்லாம் வேலையை விட்டுட்டு உங்களுக்கு பொருட்களை அனுப்பினான், நீங்க கேவலம் ஒரு IPL மேட்ச்சை பார்க்காம இருக்க முடியாதா? எங்களுக்காக?? ///
டேய், கோமுட்டி மண்டையா, சென்னையில இருக்கவன் எல்லாருமே சென்னை பூர்வீக குடிகளா டா தடிமாடு? உன் ஊர்லருந்து சென்னைக்கு எவனுமே வரலையா?? நீயே வீக்கெண்ட் பார்ட்டி, குடிக்க ஈசிஆர் போகலாம்னு சொல்ற டோமர் தானே, நீயெல்லாம் சென்னை ஆட்களைக் கேள்வி கேட்கலாமா??
சரி, வெள்ளம் வந்தப்ப உதவினோம்ன்னு சொல்லி இன்னும் எங்களை ஏதோ பரிதாபத்துக்கு தத்தெடுத்த மாதிரியே பில்டப் கொடுக்கிறியே, உன்னை மாதிரி ஆட்கள் ஐ.டி கம்பெனியில வேலைச் செய்ய சென்னைப் புறநகரில் எவ்வளவு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதுன்னு தெரியுமா ? எத்தனை ஏரிகள் நீங்க படிச்ச தனியார் பல்கலைக்கழகங்களா மாறியிருக்கு தெரியுமா? பஞ்சமி நிலங்களெல்லாம் பன்னாட்டு கம்பெனியா இருக்கிறது தெரியுமா?
சில ஆண்டுகளா ஊர்லருந்து வந்து இங்கேயே ஒரு ஊரையே வளைச்சுப் போட்டு கடைகளைக் கட்டி அந்த கழிவெல்லாம் எங்க கூவத்துல கலக்குறது தெரியுமா?
பத்து பைசா இல்லாமல் வந்தாலும், பசியாற்றுற ஊரு இது. எங்கிருந்து வந்தாலும் கொஞ்சம் நன்றியுணர்வு இருக்க மக்களால் தான் கூட்டம் கூட்டமா எவ்வளவு பேர் வந்தாலும் அத்தனைப் பேருக்கும் இடம் கொடுக்குது. உன்னை மாதிரி திடீர் IPL புறக்கணிப்பு போராளியெல்லாம் சென்னையையும், இங்கே வாழுற மக்களையும் பார்த்து கேள்வி கேட்கவோ, இதைச் செய்யலைன்னா தமிழனே இல்லைன்னும் சொல்றதுக்கெல்லாம் நிஜமாவே அந்த எக்ஸ்டரா மூளை தான் காரணம் போல.

வன்முறையை கொண்டாடும் மனப்போக்கு அதிகரித்தால் எதிர்காலம் சூனியமாவது உறுதி.

வன்முறையை கொண்டாடும் மனப்போக்கு அதிகரித்தால் எதிர்காலம் சூனியமாவது உறுதி.

கிளாடியேட்டர் படத்தில் அடிமைகள் அடித்துக்கொண்டு சாவதை பார்த்து கொண்டாடும் மனநிலைக்கு இங்கு பலர் வந்துவிட்டனர்.

யாராவது யாரையாவது அடிக்க வேண்டும், அதைப்பார்த்து மகிழவேண்டும். இதைச் செய்யும் சிறு அமைப்புகளை பாராட்ட வேண்டும், அமைதியான அற வழியில் மக்களை திரட்டி எதிர்ப்பை காட்டும் பெரிய கட்சிகளை இகழ வேண்டும்.

இறுதியில் தமிழகத்திலும் ஈழத்தில் நடந்தது போல பேரழிவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கிளாடியேட்டர் ரசிகர்கள்.

வேலை வெட்டியை விட்டுட்டு போராட்டம் பன்னி சாவரவனுக்கு எதுக்கு வீரவணக்கம்
முடிஞ்சா அவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி கொடுத்து அடுத்த தலைமுறை இப்படி அனியாயமா சாகாமல் இருக்க அறிவுரை சொல்லுங்கள்

இப்புடி போராட்டம் பண்ணி தான் காஷ்மீரில் ஒரு இனமே அழிந்து , பாதி மாநில மக்கள் அகதிகளாகவும் , மீதி மக்கள் தீவிரவாதிகளுக்கு அஞ்சியும் வாழ்ந்துவருகின்றனர்

தமிழகத்தையும் காஷ்மீர் போல மாற்ற தமிழ் தேசியவாதிகள் முனைந்துவருகின்றனர் என்பதில் எனக்கு ஐயமில்லை

இதன் விளைவாக , நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால தலைமுறையின் வாழ்க்கை பாதிப்படையும் என்பதை விளங்கிக்கொள்வது அவசியம்

அறவழியில் சட்டரீதியாக உரிய வழியில் நம் உரிமைகளை வேண்டிப்பெறுவதே உசிதம்

போராட்டம் போராட்டம் என்று இன்டர் நேஷனல் லெவல்ல பேசுறவன் எல்லாம். பாதுகாப்பா போய்விடுவான் கடைசியில் அடிவாங்கும் ஆட்களை பாருங்கள்.



வன்முறை செய்யும் அமைப்புகளுக்கு இணையப் போராளிகளிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

ஜனநாயக முறைப்படி போராட்டம் செய்யும் திமுக போன்ற, மக்களிடம் வாக்குகளை வாங்கும் பொறுப்பான எதிர்க்கட்சிகள், விவசாயிகளோடு - மக்களோடு காவிரி மீட்புப் பயணத்தை செய்கிறது.
நேற்று தமிழ்தேசியம் பேசும் கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் தூண்டி விட்டு, உசுப்பி விட்டு தமிழனை தமிழர்களே அடித்தார்கள்.

இதற்காகவே காத்திருந்த காவல்துறை நிலைமையை கட்டுக்குள் வைக்க தடியடி நடத்துகிறோம் என்று 2,000 பேர் மீது வன்முறையை நடத்தியது.
யார் யாருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
அரசின் வெறியாட்டத்தைக் கேட்டால் அப்புறானிகளை அடித்ததை நீங்களே பார்த்தீர்களே என்று நம்மிடமே விளக்கும் கேட்கும்.

பொறுப்பான எதிர்க்கட்சிகள் மக்களுக்கு வரலாற்றையும், போராட்டத்தின் அவசியத்தையும் சொல்கிறது. கூட்டத்தை கட்டுக்குள் வைக்கிறது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அரசின் கவனத்தை ஈர்த்து பிரச்சினைகளை தீர்க்கப் பார்க்கிறது.

வன்முறை தான் தீர்வு என்று பேசும் சிலரால் அரசின் வன்முறையைத்தான் எதிர் வினையாகப் பெறமுடியும்.
அது தொண்டர்கள் தலையில் தான் விழும்.

தமிழகத்தை அடிதடி மாநிலமாகக் காட்டும் பரப்புரை நடைபெறும் அபாயம் இருக்கிறது

திரைப்படங்கள் தொடர்ந்து மதுரையை ஒரு ரவுடி / வெட்டுக்குத்து / ரத்தவெறி ஊராகக் காட்டிக்கொண்டே இருந்ததால் பல நிறுவனங்கள் மதுரை பக்கம் வரவே தயங்கின .
குறிப்பா ஐ. டி துறை ஜாம்பவான்களிடம் கேட்டுப்பாருங்கள். தமிழகத்தின் தென்பகுதி , சென்னையின் வடக்கு பகுதிகளில் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை விஸ்தீகரிக்க ஏன் தயங்குகின்றன என்று .
ஏரியா வஸ்தாதுகள் கலாட்டா செய்து வியாபாரத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்ற பயமும் ஒரு காரணம். இதில் தமிழ் சினிமாவின் பங்கும் அதீதம்.
தமிழன்டா என்று நாம் கொக்கரிக்கும் அதே நேரம், வட இந்திய ஊடகங்கள் தமிழகம் என்றாலே வெற்று கலாட்டா செய்கிறவர்கள் என்று திரும்ப திரும்ப நம்மை stamping செய்கிறார்கள்.
இந்த மாதிரியான திட்டமிட்ட பரப்புரைகளால் நியாயமான போராட்டங்களைக் கூட விஷமமான நோக்கில் மக்களிடம் சென்று சேரும் அபாயம் இருக்கிறது...
இப்படிப்பட்ட சூழலில் சும்மா இருப்பவனை அடித்து உதைத்து ,சட்டையைக் கிழித்து அடிக்கும் போக்கால் தமிழகம் என்றாலே வெற்றுக் கூச்சல், கலவர பூமி என்று ஆணித்தரமாக தமிழகத்தை அடிதடி மாநிலமாகக் காட்டும் பரப்புரை நடைபெறும்.
IT நிறுவனங்கள் , பன்னாட்டு நிறுவனங்களே வேண்டாம் ஆடு மாடு மேய்க்கும் அரசுவேலை மட்டும் போதும் என்றால் , Cattle per capita மிக மிக குறைவு.....
இதை எப்படி கையாளப் போகிறோம் ?

இந்தியா முழுக்க சாதிய வன்கொடுமை சட்ட தளர்வினை எதிர்தது பெரும் போராட்டம்

இந்தியா முழுக்க சாதிய வன்கொடுமை சட்ட தளர்வினை எதிர்தது பெரும் போராட்டம் வெடித்துவிட்டது
இம்மாதிரி போராட்டங்களுக்கு தாய்வீடான தமிழகம் காவேரி, ஐபில் அது இது என திசைமாற்றபட்டு அந்த சமூகநீதிக்கான போராட்டத்தில் இருந்து மறக்கடிக்கபடுகின்றது
எதை எதை மறைக்க யாரை போராட வைத்து எதை பேசவைக்க வேண்டும் என்ற பெரும் அஜெண்டா மேலிடத்தில் உண்டு
பாஜகவின் அடிமை பழனிச்சாமி மட்டும் என நினைத்தால் சரியல்ல. போராளிகளிலும் நிறைய அடிமைகள் உள்ளன‌
அவர்களுக்கு போடபட்டிருக்கும் விலங்குகளும், அவர்கள் மறைக்க விரும்பும் விஷயங்களும் அடிமைகள் யார் என என உணர்த்தாமலா போய்விடும்?
அடிமைகள் எல்லா இடத்திலும் இருக்கின்றனர்.

#ச்சீமான்

#ச்சீமான் தமிழ் மீனவனை அடித்தால்,
சிங்கள மாணவனை அடிப்பேன் ன்னு சொன்னப்போ கேக்கல.

தமிழச்சியை கற்பழித்தால்,
சிங்களச்சியை கற்பழிப்பேன் ன்னு சொன்னப்போவும் கேக்கல.



மாறா...சில்லறை விட்டெறிஞ்சோம்.

இப்போ ஜாம்பிக்கள் தமிழனை அடிக்க ஆரம்பிச்சி இருக்கு. அடுத்து எங்க அண்ணன் சொல்றதை கேட்காதவன் எல்லாம் இனத்துரோகி என அடிக்கும். ஏன்னா.. அவிங்க "வளர்ப்பு" அப்படி.

ஹிட்லர் படத்தை "எங்கள் வழிக்காட்டி" ன்னு போஸ்டர் அடிச்சி ஓட்டுனவய்ங்க அவிங்க!

சீக்கிரமா முழிச்சிக்குங்க "மக்கழே".இல்லாட்டி...கூட்டமா கொண்டு போய் மலை உச்சியிலே இருந்து தள்ளிவிட்டுருவானுங்க இந்த பாரிசாலனுங்க!

வாச்சாத்தியும் ரஜினிகாந்தின் நீலிக் கண்ணீரும்

வாச்சாத்தியும் ரஜினிகாந்தின் நீலிக் கண்ணீரும்:
காவிரிப் பிரச்சனையை ஒட்டி பொதுவெளியில் நடக்கும் போராட்டம் அப்பட்டமான பாசிஸ பாதையில் பயணிக்கிறது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மிக ஆபாசமாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கும்பல் எப்போதும் இலக்கில்லாமல் மூர்க்கம் காட்டும். கும்பலாக இருப்பதாலேயே தனி மனிதனாக செய்ய துணிவில்லாததையும் தனியாக செய்ய கூசும் செயல்களையும் எளிதாகச் செய்யும்.திரையரங்கில் கும்பலாகவோ, தனியாகவோ இருட்டைப் பயன் படுத்தி ஆபாசமாக கூவும் தமிழர்களை, அமெரிக்காவிலும் கண்டிருக்கிறேன். இதில் முதலிடம் வகிப்பவர்கள் ரஜினி ரசிகர்கள்.


கும்பலுக்கு போலீஸ், பொது மக்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது இன்னும் சொல்லப் போனால் இவ்வாய்ப்பை பயன் படுத்தி அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் காவல் துறை, காவல் நிலையம், பொதுத்துறை சொத்துகள் தாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். காவல் துறையும் அமைதிப் பதுமைகள் அல்ல. வெளுத்து வாங்குபவர்கள் தான். கேவலம் லஞ்சத்துக்காக ஒரு குடும்பத்தை சீரழித்த கதை சமீபத்தில் தானே நடந்தது. அப்போது எங்கே போனார் இந்த ‘சூர்யா சார், உரசாதீங்க’ ரஜினிகாந்த்?
வாச்சாத்தி, வரலாறு அறிந்தவர்கள் மறக்காத அவலம். வாச்சாத்தியில் போலீஸ் வெறியாட்டம் நடத்திய போது ஹீரோயின்களோடு இடுப்பாட்டம் போட்டுக் கொண்டிருந்த ரஜினிகாந்துக்கு இப்போது தான் பேச வாய் வருகிறது. ஜல்லிக் கட்டு போராட்டத்தில் காவல் துறை வெறியாட்டம் நடத்தியதே? அப்போது எங்கே போனார் இந்த காகிதப் புலி? உடனே, ஆ அப்போது கலவரம் செய்ததை போலீஸ் ஒடுக்கியது என்று விரல் நீட்டாதீர்கள். கலவரத்தை அடக்குவது என்பது வேறு அதிகார மமதையில் வெறிக்கொண்டு அடக்குவது வேறு. காணொளிகள் சொல்லும் நடந்தது எந்த வகை என்று.
இன்றும் இந்தப் போராட்டத்தின் பாசிஸத் தன்மையை கண்டிக்கத் துணிவில்லாமல் வசதியாக உளறியிருக்கிறார் காகிதப் புலி.

Tuesday, April 10, 2018

ஹிந்துத்துவாவுக்கு சாமரம் வீசும் தமிழ் தேசியம் பேசும் சிலர்

தமிழ் தேசியம் பேசும் சிலர், ஹிந்துத்துவாவுக்கு சாமரம் வீசிக்கொண்டு, திராவிட இயக்கத்தவரை விமர்சிக்கிறார்கள்.. அவர்கள் கவனத்துக்கு..
சமீபத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தால் நடத்தப்பட ராமராஜ்ய ரத யாத்திரையின் வீடியோ ஒன்றை பார்க்கநேர்ந்தது, அதில் காவி துண்டு அணிந்த பலர், ஆவேசமாக பல்வேறு மத துவேஷ கோஷங்களை எழுப்புகிறார்கள்.. அப்போது, அங்கே, வந்த காவி அணியாத, வேட்டி & டீ ஷர்ட் அணிந்த "அவா" ஒருவர், "வெட்டுவோம் வெட்டுவோம் சீமானை வெட்டுவோம்" என்று கோஷத்தை துவக்குகிறார், உடன், அங்கிருந்த காவி கோஷ்டிகள் அனைவரும் அதை திருப்பி சொல்கிறர்கள்.. இப்படி வெளிபடையாக வன்முறை கோஷத்தை எழுப்பும் தைரியத்தை இந்த கும்பலுக்கு யார் கொடுத்தது??
மற்றொரு நிகழ்வு, செல்வா பாண்டியன் என்ற தமிழ் தேசிய கொள்கையாளர், தமிழர் நடுவம் என்ற இயக்க தலைவர், சில நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.. பல தரப்பினரும் இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள்.. ஆனால், ஹிந்துத்துவா கும்பல், அவரின் மரணத்தை கொண்டாடும்விதமான செய்தியை, "ஒரு தமிழ் தேசிய பிரிவினைவாதி அவுட்" என பகிர்ந்திருந்தார்கள்..
இப்படி எங்காவது, மாற்று கருத்துடையோர்களை திராவிட இயக்கத்தினரோ, பெரியாரிஸ்ட்களோ வன்முறை விஷம் கொண்டு பேசுவதில்லை.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுபவர்கள் தான் திராவிட இயக்கத்தவர்.. அதினால் தான், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு பேசப்பட்ட காலங்களில் கூட, பார்பனர்கள் மீது எந்தவிதமான வன்முறை தாக்குதல்களோ, அடிதடி கலவரங்களோ இங்கு நடந்தது இல்லை.. எந்த ஒரு பார்பனரும் தாக்கப்பட்டது இல்லை..

திராவிடத்தால் வாழ்ந்தோம்

1960ல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் சராசரியாக 390 ரூபாய் சம்பாதித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரோ 330 ரூபாய் சம்பாதித்தார். அதே 2014ல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சராசரியாக 80,000 ரூபாய் சம்பாதித்தார். தமிழகத்தைச் சேர்ந்தவரோ 1,36,000 ரூபாய் சம்பாதித்தார்.
1960ல் (அதாவது பொற்கால காமராசர் ஆட்சியில்) இந்தியாவின் நான்காவது வறிய மாநிலமாக இருந்த தமிழகம், 2014ல் இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலமாக வளர்ந்து நிற்கிறது.
1991இல் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் மதிப்பு 274 பில்லியன் கோடி டாலர். இப்போது தமிழகம் என்னும் ஒற்றை மாநிலத்தின் பொருளாதாரம் மட்டுமே ஏறத்தாழ அந்த அளவை எட்டி விட்டது.
திராவிடத்தால் வாழ்ந்தோம். இல்லை என்று சொல்பவன் முட்டாள் அல்லது மோசடிப் பேர்வழி.

திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லீட்டு திரியரவங்களை பீகாருக்கோ இல்ல உ.பி க்கோ

"திராவிடத்தால் வீழ்ந்தோம்... கழகங்களால் நன்மையில்லை.. தமிழகம் வளரவில்லை..." என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசிவந்த கும்பல்களே, இப்போது, "தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வளர்ந்த மாநிலங்கள் தான்..
ஹிந்துத்துவா கொலோசும், பிஜேபி ஆளும் வட ஹிந்திய மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சியடையாத, பின்தங்கிய மாநிலங்கள்... அதினால் அவர்களுக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது" என்ற உண்மையை பேசவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்..
அதேபோல, திராவிட நாடு விவாதத்தால், தமிழக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் கீழ்கண்ட பல உண்மைகள் தெரியவந்துள்ளது..
1. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், மத்திய இந்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது..
2. இந்திய அரசுக்கு 33% வரியை, 25% GDPயை வழங்கும் ஐந்து தென் மாநிலங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்குவது வெறும் 18% நிதி மட்டும் தான்..
3. உத்திர பிரதேசம் ஒரு ரூபாயை வரியாக கொடுத்து, 1.79 ரூபாயை திரும்ப பெறுகிறது.. ஆனால், தமிழ் நாடோ, ஒரு ரூபாயை வரியாக மத்திய அரசுக்கு கொடுத்து, வெறும் 0.40 பைசாவை திரும்ப பெறுகிறது...
4. தென்மாநிலங்கள், மத்திய பிஜேபி அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன.. நிதி ஒதுக்கீடுகளும் இல்லை.. மத்திய அரசின் புதிய திட்டங்களும் இல்லை.. ஏற்கனேவே இருந்த திட்டங்களும், நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது..
5. தமிழ்நாட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா -- இந்த தென் மாநிலங்கள்தான் இந்திய மத்திய அரசுக்கு பெரும் நிதியை வரி வருவாயாக செலுத்துகிறது. ஆனால் இந்த வரி வருவாயின் பெரும்பகுதி வட மாநிலங்களின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகின்றன.. தென்மாநிலங்களுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளும், தனியார் நிறுவனங்களும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசால் திருப்பிவிடப்படுகிறது....
6. அனைத்து தரப்பும் பலன் பெரும், ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட வளர்ச்சி, இன்குளுசிவ் வளர்ச்சி தென் மாநிலங்களில் உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் ஏழை மாநிலங்களின் பட்டியலில் இருந்த தமிழ் நாடு, இப்போது இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் முதல் மூன்று இடங்களில் உள்ளது.. தமிழ் நாட்டின் தனிநபர் வருவாய் 1,40,000 ரூபாய்.. ஆனால், உத்திரபிரதேசத்தின் தனிநபர் வருவாய் 43,000 ரூபாய் மட்டுமே..
7. தென் மாநிலங்களின் வரியில், அவர்களுடைய மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த பெரிய நிதியையும் ஒதுக்காமல், அவர்களுடைய வரிகளை கொண்டு, ஹிந்தி மொழிக்கு நூற்றுக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் மத்திய அரசு ஒதுக்குகிறது..
8. தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில், திட்டமிட்டு, உள்ளூர் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநில இளைஞர்கள், பல்வேறு முறைகேடான வழிகளில் ஆக்கிரமிகிறார்கள்.. சொந்த மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டு, அங்கெல்லாம், வட மாநில இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..
9. சமூக சீர்திருத்தவாதிகளால், சாதி சமய வேறுபாடுகள் குறைந்து, தென் மாநிலங்கள் மேம்பட்டு, தங்களது வளர்ச்சி திட்டங்களால், ஹிந்துத்துவா மூடநம்பிக்கைகளால் பீடிக்கபட்டுள்ள வட மாநிலங்களை விட பல மடங்கு சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார & மருத்துவ குறியீடுகளில் முன்னேறியுள்ளன..
10. 1920-40 கள் வரை ஆந்திரா (பகுதி), கர்நாடகா (பகுதி), தமிழ் நாடு உள்ளடங்கிய சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்த செயல்பாடுகளாலும், இடஒதுக்கீடு போன்ற திட்டங்களாலும், தந்தை பெரியார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளாலும், இங்கு அதிகமாக செயல்பட்ட கிருஸ்துவ கல்வி & மருத்துவ நிறுவனங்களாலும், தென் மாநிலங்கள், வட மாநிலங்களை விட, மேம்பட்ட சமூக கட்டமைப்பும் குறைவான சாதி மத வெறுப்புணர்வும், கல்வி & சுகாதார முக்கியத்துவமும் கொண்டுள்ளன.. இவற்றால், இம்மாநிலங்களின் வளர்ச்சி துரிதமாக நடந்தேறியது. ஆனால், வட மாநில நிலைமை தலைகீழ்.. சமூக சீர்திருத்தம் பெரியளவில் இல்லை.. மிக அதிகமான சாதி மத வெறுப்புணர்வு.. RSS ஹிந்துத்துவா போன்ற மக்களை பிளவுபடுத்தும் சக்திகளின் ஆதிக்கம்... சரியாக நடைமுறைப்படாத இடஒதுக்கீடு முறைகள்.. ஒருசில முன்னேறிய சாதிகளே அனைத்து கல்வி & வேலைவாய்ப்புகளை ஆக்கிரமித்ததுகொண்டு, OBC, SC, ST பிரிவினர்களுக்கு அவர்களின் உரிமைகளை மறுப்பது.. இவைகளால், அம்மாநிலங்களில் வளர்ச்சி பெரியளவில், சம அளவில் இல்லை..
ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, ஹிந்துத்துவா RSS பிஜேபி கும்பல், ஏதோ பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் வளர்ச்சியடைந்து முன்னேறிவிட்டதை போலவும், தமிழகம் போன்ற பின்தங்கிய மாநிலங்களும் அவ்வாறு வளர்ச்சியடைய, "கழகங்கள் இல்லாமல்" பிஜேபி ஆட்சிக்கு வரவேண்டும் என பொய் பிரச்சாரம் செய்துவருகிறது..
திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்லீட்டு திரியரவங்களை எல்லாம் அடுத்த ரயிலை புடுச்சு பீகாருக்கோ இல்ல உ.பி க்கோ டிக்கெட் எடுத்து அனுப்பி விட்டுருங்க !!

அரசியலில் உள்ள மருத்துவர்கள் சிலர் அரை வேக்காடாகத்தான் இருப்பார்களோ?

அரசியலில் உள்ள மருத்துவர்கள் சிலர் ; அரை வேக்காடாகத்தான் இருப்பார்களோ???????
-----------------------------------------------------------------------------------
அறிவாயுதத்தால் திருப்பி அடி
#########################################################
SC- ST க்கள் படிச்சி டாக்டரோ-என்ஜிினியரோ-ஜ- ஏ எ்ஸ் -ஆபீசரோ-கலெக்டராகவோ--வந்தவங்க திருப்பி சேரிக்கு போக மாட்டேன்கிறாங்களே-
---------------------------------------------------------------------------------------
அவுங்க கல்யாணம் பண்றதே செவத்த தோலைத்தானே-
-------------------------------------------------------------------------------------------
SC- ST ல கல்யாணம் பண்றதிலேயே 95 சதவீதம் அந்த கம்யுானிட்டியில கல்யாணம் பண்றதில்ல-ரிசர்வேசன்ல படிச்சி வந்தவங்க அவுங்க கம்யுானிட்டில பண்ண வேண்டியது தானே?? அதை விட்டிட்டு ஏன் நாயுடுவையோ- பிராமணரையோ கல்யாணம் பண்றாங்க???SC- ST டாக்டராயிருந்தா-அதுக்கு கீழேயுள்ள நர்சை (மேல் சாதி பெண்)-இன்ஜினியராயிருந்தா அதுக்“கு கீழேயுள்ள
மேல் சாதி பெண்“ணை கல்யாணம் பண்றாங்க--இது தப்பில்லையா??
-----------------------------------------------------------------------------------------------
திரு- டாக்டர்- திரு -சேது மாதவன்--- அவர்கள்- மூவேந்தர் முன்னேற்ற கழகம்-சன்- டி-வி- விவாத மேடையில்
######################################################
SC- ST யில் படிச்சவர்களை சேரிக்கு போகாதவர்கன் என்றால் மற்ற படிச்ச சமூகத்தினர் அனைவரும்
கிராமத்தில் சாதி இந்துக்கள் தெருவில் தான் வாழ்கிறார்களா?? நகரம் என்பது புதிதாக உருவாக்கபட்டதே-அதில் வாழுபவர்கள் படித்த
சேரிக்கு போகாத SC- ST மக்கள் மட்டும்தானா?? அல்லது அங்கு வாழுபவர்கள் படித்த SC- ST க்கு பிறந்தவர்களா???
--
உயர் பதவியிலிருக்கும் SC- ST க்கள் மட்டும் தான் செவத்த தோலை கல்யாணம் பண்றாங்களா??மற்ற
வர்கள் அதாவது பி-சி- எம்-பிிசி - எப்-
சி க்களில் கருப்பாக உள்ள அனைவருமே கருத்த தோலைத்தான் கல்யாணம் பண்றாங்களா?? அல்லது பிசி -எம்-பி-சி-எப்-சி- அனைவருமே வெள்ளைக்காரனின் விந்துவில பிறந்தது போல வெளுவெளுவென இருக்கிறார்களா??
---
SC- ST மட்டும் தான் ரிசர்வேசன்ல படிச்சி வந்தவங்களா??மத்தவங்க எல்லாம் படிச்சி வந்தது எப்படி?? 69 சத இடஒதுக்கீட்டில SC- ST19 சதம் ரிசர்வேசன் போக மற்ற 50 சத ரிசர் வேசனை பயன் படுத்தி படிச்சி உயர்ந்தவன் எவன்??SC- ST யா??அல்லது SC- ST யின் விந்துவில் உதித்த மந்தி கூட்டங்களா??
--
ரிசர்வேசன்ல படிச்சி வந்தவங்க அவுங்க கம்யுானிட்டில பண்ண வேண்டியது தானே என்கிறாரே ?? அப்படி 50 சதம் ரிசர்வேசன்ல படிச்சி வ்நதவர்கள் அவர்கள் கம்யுானிட்டிியில மட்டும் தான் கல்யாணம் - அல்லது காதல் திருமணம் செய்கிறார்களா??அல்லது அவர்களில் வேறு கம்யுானிட்டிியில் கல்யாணம் செய்கிறவர்கள் SC- ST க்கு பிறந்தவர்களா,???
---
SC- ST யை தவிர எவருமே நாயுடு -பிராமணர் மற்றும் மேல் சாதி பெண்களை -மற்ற சாதியினர் திருமணம் செய்யவில்லையா,,அல்லது அப்படி செயதவர்கள் SC- STக்கு பிறந்தவர்களா???
-
-SC- ST யில மட்டும் தான் டாக்டராயிருந்தா-அதுக்கு கிழேயுள்ள நர்சை (மேல் சாதி பெண்)-இன்ஜினியராயிருந்த அதுக்“கு கீழேயுள்ள பெண்“ணை கல்யாணம் பண்றாங்களா?? பி-சி -எம்-பி-சி- எப்-சி -க்கள் அப்படி செய்வதில்லையா? அல்லது அப்படி செய்தவர்கள் அனைவருமே- SC- ST க்கு பிறந்தவர்களா???
-
ஆங்கில மருத்துவம் தான் சாதி இல்லை என விஞ்ஞான ரீதியாக நிரூபித்தது-8 வகை இரத்தத்தில் எது ஒசந்த சாதி இரத்தம் என எந்த மயி--ண்டியானாலும் நிரூபிக்க முடியாது என்பது உண்“மையாக மருத்துவம் படித்த எவரும் ஒப்புக்கொள்வர்-அரை வேக்காடுகள் தான் சாதிய திமிரில உளறிக்கொட்டும் டாக்டர் -திரு -ராமதாஸ் சொல்கிறார் தலித்துகள் - பேண்ட்-ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் போட்டு எங்கள் சாதி பெணணை மயக்கி நாடக காதல் செய்கிறார்கள் என்று இழிபடுத்துகிறார்
--
டாக்டர் -திரு சேது மாதவனோ படிப்பை காட்டி SC- ST மக்கள் செவத்ததோலை-மேல்சாதி பெண்ணை திருமணம் செய்கிறார்கள் என இழிபடுத்துகிறார்- டா்க்டர் திரு தமிிழிசை அவர்கள் பார்த்தாலே தீட்டுஎன்று சமூகத்தில மிக மிக (அன்று)இழிவாகயிருந்ததை மறந்து அவரும் தலித் வீட்டில நான் சாப்பிட்டேன் என்று சொல்லி பழைய கிடந்த கிடைமறந்து அவரும் மறைமுகமாக தன்னை உயர்த்தி தலித்தை இழிபடுத்துகிறார்-
--
மருத்துவம்“படித்தவர்களே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்??பி-சியும்- எம்-பி-சியும் படித்து உயரலாம் செவத்த தோலை உயர் சாதி
பெணணை மணம்முடிக்கலாம்- நகரத்தில் ஆடம்பரமாக வாழலாம் ஆனால் -SC- ST படிக்கவும் கூடாது செவத்த தோலை கல்யாணம் பண்ண கூடாது -காலங்காலமாக அவர்கள் மட்டும் அப்படியே எந்த மாற்றமுமில்லாமல் சேரியில் அடிமையாக கிடக்க வேண்டும் என்ற சாதி வெறியைத்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கொட்டுகிறார்கள்--
--
-படித்த- அழகான- உயர் பதவியில் இருக்கிற -கலை திறமையுள்ள- உடல் கட்டுடைய -பணபலமுள்ள SC- ST ஆண்கள் அல்லது பெண்கள் மட்டும் தான் தான் இங்கு ஆதுிக்க சாதிகளால்
காதலிக்கபடுகிறார்கள்-தங்களுக்“கு எதோ ஒரு வகையிலாவது லாபமில்லையென்றால்-பெருமையில்லையென்றால்- தங்களை விட உயர்ந்து நிற்க வில்லையெனறால் SC- ST க்கள் இங்கு காதலிக்கபட்ட வரலாறு கிடையவே கிடையாது
--
படிக்காத அழகற்ற உயர் பதவியில்லாத -கலை
திறமையற்ற-கட்டுடலற்ற- அல்லது இதற்கு மேலான தங்கள் சுய சாதி ஆண்களை காதலிக்க அல்லது திருமணம் செய்ய பி-சி- எம்-பிசி- எப்-சி-களுக்கல்லவா அறிவுரை ம---ரு வழங்க வேண்டும்??குற்றத்தை உங்கள் மேலும் வைத்து விட்டு SC- ST மக்களுக்கு மட்டும் அறிவுரை ம--ரு வழங்க- அல்ல அவர்களிடம் கேள்வி கேட்க என்ன தகுதி உங்களுக்கு?????
-
உங்கள் பொறாமைக்கும் வயிற்றெரிச்சலுக்கும்;-சாதிய திமிருக்கும்; ஒரு அளவேயில்லையா அரை வேக்காட்டு மருத்துவர்களே???

100 ஆண்டுகளுக்கு முன் தமிழனின் நிலை

100 ஆண்டுகளுக்கு முன் தமிழனின் நிலை
"கனம் முனிசாமி பிள்ளை, மதுரை, கள்ளழகர் கோவிலில் வாசலில் நின்று தரிசனம் செய்ததற்காக, அவர் கோயிலைச் சுத்தம் செய்ய வேண்டுமென்று மதுரை வருணாசிரம சங்கத் தலைவர் நடேச சாஸ்திரியார் கோயில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார் என்னும் செய்தி 26.01.1930 ஆம் நாளிட்ட ஆங்கில நாளேடு இந்துவில் வெளியாகியுள்ளது.
'கனம் முனிசாமிப் பிள்ளை'யின் நிலையே இதுவெனில், கனமில்லாத ஆதி திராவிடர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்?
காலில் கிடக்கவேண்டிய செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, கூனிக் குறுகி மனிதர்கள் நடந்த காலம் அது. எழுபது வயதுப் பெரியவரை 'ஏன்டா முனியா' என்று ஏழு வயது சேஷாசலம் அழைத்தால், அது கண்டு கோபம் கொள்ளாத காலம் அது.
மாடுகளை மேய்த்துக்கொண்டு நம் நாட்டிற்குள் வந்தவர்கள், நம்மைப் பார்த்து, "அபிஷ்டு, நோக்கெல்லாம் படிப்பு வராது, நீ எல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று கரித்துக் கொட்டிய காலம் அது.
"பொம்பளைக்கு செருப்பு ஒரு கேடா?' என்றும், "பாருங்கோ, அந்த பொம்மனாட்டி ஆம்படையானோட ஒட்டி ஒரசி நடந்து போயிண்டிருக்கா!" என்று ஒரு பெண் தன்கணவனோடு நடந்து போவதைப் பார்த்து அவதூறு பேசியும் திரிந்த காலம் அது!
அண்மையில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் குமாரலிங்கம் கிராமத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினேன். உடுமலைப் பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் (கவுசல்யா) ஊர் அது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, அந்த ஊரில் அக்கிரஹாரத் தெருவில் ஓர் அரசு அஞ்சல் நிலையம் இருந்துள்ளது. அந்தத் தெருவுக்குள் அஞ்சல் நிலையம் இருந்ததால், அதற்குள் ஆதி திராவிடர்கள் யாரும் உள்ளே நுழையவே முடியாது.
தெருமுனையில் நின்று, அஞ்சல் ஊழியர் வரும்போது, அஞ்சல் தலை வேண்டும் என்று கேட்டால், அடுத்த நாள் அதே நேரம் அதே இடத்திற்கு வந்து அவரிடம் அதனைப்- பெற்றுக் கொள்ளலாம்.
"இது என்ன நியாயம், எல்லோருடைய வரிப்பணத்திலும்தானே அரசும், அஞ்சல் நிலையமும் நடக்கிறது?" என்று 1924 செப்டம்பர் மாதம், சட்டமன்றத்தில் வீரையன் என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
நீதிக் கட்சி ஆட்சி நடந்ததால்தான் கேள்வியாவது கேட்க முடிந்துள்ளது. இறுதியில் அஞ்சல் நிலையத்தை வேறு தெருவிற்கு மாற்றியுள்ளனர்.
அதனையும் பின்னாளில், பெரியார் ஏற்கவில்லை. 7.3.1926 தலையங்கத்தில் இந்நிகழ்வைக் குறிப்பிட்டு, "இதென்னடா, சாத்தூருக்கு வழி கேட்டால், சாராயம் கிராம் அஞ்சனா என்பதுபோல் நடந்திருக்கிறதே!" என்கிறார்.
பொதுச் சாலையில் எல்லோரும் நடக்க உரிமை வேண்டும் என்பதுதான் முதலில், அஞ்சல் தலை வாங்குவது பிறகு.
பெண்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே திருமணங்கள் செய்து வைக்கப்பட்டன. இதனால் ஐந்து வயதுக்கு உட்பட்ட "விதவைகள்" சமூகத்தில் நிரம்பி வழிந்தனர்.
இதனைத் தடுக்க, ஆங்கிலேய அரசு ஒரு சட்ட முன்வடிவைத் .தந்தது. 1924 இல் அதனை ஒரு குற்றவியல் சட்டத் திருத்தமாக முன்மொழிந்தது. பிறகு 1927செப் 15 இல் சட்டமன்றத்தில் அது சட்ட முன்வடிவமாக வந்தது. ஹேபிலால் சார்டா முன்மொழிய மருத்துவர் முத்துலட்சுமி போன்றோர் ஆதரித்தனர். எம்.ஆர்.ஜெயகர், மதன் மோகன் மாளவியா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்தன. இது ஓர் அத்துமீறல் என்று 'தருல் இஸ்லாம்' குறிப்பிட்டது. இவ்வாறு ஓரிருவர் கூட ஆதரிப்பதற்கு இல்லாத நிலைதான் 1915க்கு முன்பு வரையில் இருந்தது.
சுபவீ...
இதையெல்லாம் மாற்றியது யார்??? பெரியாரும் அவரை பின்பற்றி உழைத்த திமுகவுமே .
இப்பொழுது உள்ள , புதிதாக முளைத்த எந்த தியாகமும் செய்யாமல், luxury வாழ்க்கை, வாய்சவடால் பேசும் சில அரசியல கட்சிகளுக்கும்
எந்த வரலாறும் கிடையாது,
தெரியவும் தெரியாது.

ஆமை கறி சைமன் - யாழ்பாணத்தார் தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல

ஆளாளுக்கு ஆமை கறி சைமன் என்கின்றார்களே தவிர, எனக்கு சிங்கவால் இறால் கறி கொடுத்தார் பிரபாகரன் என்ற ஜெகத் கஸ்பர் சாமியாரின் கட்டு கதையினையோ
"எனக்கு கோழிகறி கொடுத்தார் பிரபாகரன் நான் சைவம் என்றேன், இது என்ன சைவ சிறுத்தையா?" என காமெடி செய்தார் என சொன்ன திருமாவினையோ யாரும் கண்டுகொள்ளவில்லை
கஸ்பர் விட்டதும் கப்சா, திருமா விட்டதும் பெரும் ரீல் ஆனால் சீண்டுவாரில்லை
ஆனால் ஆமைகறி சைமன் மட்டும் மாட்டிகொண்டார், காரணம் அந்த வாய்
அன்றே புலிகள் மேல் ஒரு கவனம் இருந்தது, மற்ற போராளிகளை விட புலிகள் உணவிலே கவனமாக இருந்தனர், பிரபாகரனே நன்றாக சமைக்க கூடியவர்.
புலிகள் பயிற்சியில் சமையலும் ஒரு பாடம்
சந்திரிகா கடும் பொருளாதார தடை காலத்தில் புலிகளுக்கு உணவு தட்டுபாடு இருந்தது அப்பொழுது ஒரு கப்பல் புலிகளின் ஆயுதகப்பல் என பிடிபட்டபொழுது அதில் இருந்த பொருளை பார்த்து சிரிப்பாய் சிரித்தது சிங்களம்
ஆம், அது தாய்லாந்தில் இருந்து வந்த உடும்பு கறி
இப்படி புலிகளின் உணவு வெறி இன்னொரு பக்கம், அதை எல்லாம் புலிகள் கூடுமானவரை மறைத்தே வந்தனர்
இப்பொழுது ஆளாளுக்கு ஆமை, இறால், கோழி என சொல்லி அதனை திறக்கின்றனர்
புலிகளிள் இருந்தால் இப்படித்தான் பேசிகொண்டிருப்பார்கள், அதில் யாழ்பாண மேலாண்மையும் இருக்கும்
அன்றே நம்மை கள்ளதோணி என்றும், வழியற்றதுகள் என்றும் சொன்னவர்கள் யாழ்பாணத்தார் , தமிழக தமிழரை அவர்கள் எள்ளி நகையாடியது கொஞ்சமல்ல,
அவர்களுக்குள் இப்படித்தான் பேசியிருப்பார்கள்
"பாத்தியளே ஆமை கறிக்கும், இறாலுக்கும், கோழிக்கும் வக்கற்ற பயல்களை கூட்டி பேசியிருக்கோம். இவனுகள் வாழ்க்கையில் ஆமைகறி கூட பார்த்ததில்லை போல‌
இவைகள் எங்கிருந்து நமக்கு உதவும்?
சிங்களன் ஆட்டுகறி கொடுத்தால் அங்கே போய்விடுமோ என்ற கனத்த பயம் வந்துட்டு பாருங்கோவன்"

தொலைந்து போன ஆறுகள்


ஆளாளுக்கு காவேரி போயிற்று என பொங்குகின்றார்கள், காவேரி நிச்சயம் மீட்கபட வேண்டும் ஆனால் அப்படி தொலைந்து போன ஆறுகள் இங்கு நிரம்ப உண்டு
அதில் ஒன்று நெல்லை மாவட்டம் நம்பியாறு
ஒரு காலத்தில் அது மாபெரும் நதியாக இருந்திருக்கின்றது, வற்றாமல் ஓடியிருக்கின்றது , அதன் கரையில் பண்டை காலத்தில் மக்கள் பெரும் அடையாளங்களோடு குடியிருந்திருக்கின்றனர்
சித்தூர் மகாராஜா சாஸ்தா ஆலயம் அதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது, அதன் சந்ததிகள் என வரும் மக்கள் கூட்டம் அதை நிரூபிக்கின்றது
அப்பகுதியினை உற்று கவனித்தால் நாயக்கர் கால அடையாளம் உண்டு, ஆம் சித்தூர், முத்துலாபுரம், நாகலபுரம் எல்லாம் ஆந்திர பகுதி பெயர்கள்
தெற்கே வந்த நாயக்கர்கள் முதலில் ஆற்றங்கரையில்தான் அமர்ந்தார்கள், அவர்கள் நம்பியாற்றுபக்கமும் வந்திருக்கலாம் அப்படி அவர்கள் காலத்தில் இந்த பகுதியில் சில பெயர்கள் அவர்கள் பாணியில் மாற்றபட்டிருக்கலாம்
ஆக பெரும் நதியாக யாரெல்லாமோ வந்து வாழும் பகுதியாக செழிப்பாக இருந்ததுதான் நம்பியாறு
பின் ஏனோ அதில் நீரோட்டம் தடைபட்டது, தடைபட்டது ஏன் என இன்றுவரை தெரியவில்லை, ஆனால் காரணம் இருக்கின்றது என்கின்றார்கள்
காவேரியும், வைகையும், தாமிரபரணியும் , தென்பண்ணையும் வழி மாறாமல் பாயும் தமிழகத்தில் நம்பியாறு மட்டும் நின்றுவிட்டது என்றால் எப்படி?
அதன் உற்பத்தியிடம் மேற்கு தொடர்ச்சி மலை, சிற் சில ஓடைகள் இணைந்தே நதியாக உருவெடுக்கும், அப்படி நம்பியாற்றின் உற்பத்தி இடங்களில் ஏற்பட்ட சில இயற்கை தடைகளிலோ அல்லது செயற்கை தடைகளிலோ அந்த நதியின் முக்கிய நீர் ஆதாரம் மேற்கே சரிந்துவிட்டது என்கின்றார்கள்
யாரும் இதுவரை அந்த நீர் ஆதாரங்களை சோதித்ததுமில்லை, அதில் அவ்வளவு தூரம் செயல்பட யாரும் இல்லை. நம்பியாற்றில் நீர் இல்லை என சொல்லிவிட்டு அமைதியானார்கள்
ஆனால் ஆறு மேல்தான் நீர் ஓடவில்லையே தவிர, ஆற்று மணலுக்கு அடியில் அது சுரந்துகொண்டே இருந்தது. நம்பியாறு மிக சிறிய நீர்வீழ்ச்சியாக நம்பி மலையில் கொட்டும் கொஞ்சதூரம் வந்து காணாமல் போய்விடும்
அது ஆற்று மணலில் புகுந்து அது கடலில் கலக்கும் ஆத்தங்கரை வரை சென்றது
வைகை மட்டும் ஊற்றுபெருக்கால் நீர் ஊட்டும் ஆறு அல்ல, நம்பியாறும் அப்படியே
அக்காலத்தில் எந்த கோடையிலும் அந்த ஆற்றுமணலை 2 அடி தோண்டினாலே நீர் சுரக்கும், அற்புதமான ஆற்று நீர்
அதுவரை அந்த ஆறு பகுதி எல்லாம் குடிநீருக்கோ, நிலத்தடி நீருக்கோ சிக்கல் இல்லை
சிக்கல் மணற்கொள்ளை வடிவில் வந்தது, மகாபாரத போர் வேகத்தில் அள்ளினார்கள் , லாரி லாரியாக எறும்பு போல் தொடர்ச்சியாக அள்ளிகொண்டே இருந்தார்கள்
தடுத்தவர் மேல் கல்லை போட்டு, இல்லை வழக்கு போட்டு அள்ளிகடத்தினார்கள்
தடுத்து கதறியவர்கள் குரல் யார் காதில் கேட்டது? பல்லாயிரம் காலம் ஆண்டு அப்பகுதிக்கு நீர் ஊற்றிய நம்பியாறு, காலம் கெடுத்தாலும் அரைமயக்கத்தில் அடிவயிற்றில் இருந்து நீர் கொடுத்த அந்த நம்பியாறு கொல்லபட்டது
இன்று ஒரு கூடை மணல் கூட இல்லை, சுரண்டியாயிற்று
குடிநீர் தட்டுபாடும், நிலத்தடி நீர் தட்டுபாடும் தலைவிரிக்கின்றன‌
உலகில் எந்த நதிக்கும் இல்லா சிறப்பு நம்பியாற்றிற்கு உண்டு
அதன் தொடக்கம் புனிதமான நம்பியாழ்வார் கோவில் அவர் பாதத்தில் இருந்தே அது புறப்படும்
பின் திறுக்குறுங்குடி வழியாக சில ஆலயங்களை தொட்டு வரும்
பிரசித்தி பெற்ற சிறுவளஞ்சி ஆலயத்தை அது சுற்றி வணங்கும்
(ஜெயலலிதாவிற்கே அவர் ஆலயங்களில் ஆடுகோழி வெட்ட தடை என்றபொழுது "சீக்கிரம் உன் அட்டகாசம் ஒழியும்" என ஆருடம் சொன்ன சிறுவளஞ்சி ஆலயம் அதன் கரையில்தான் உண்டு, அது அப்படி சொல்லி 12 ஆண்டுகளில் ஜெயலலிதா இல்லை, மர்மமாக மறைந்தார்)
ஏர்வாடி தர்காக்கள் அந்த ஆற்றின் அருகே உண்டு
சித்தூர் எனும் மகா பழமையான சாஸ்தா கோவிலை அது வணங்கும்
அணைக்கரை எனும் கிறிஸ்தவர்களின் மிக பழமையான ஆலயத்தின் ஓரம் வந்து அது வளைந்து வணங்கும்
அப்படியே கடலில் கலக்கும் முன் இஸ்லாமியரின் புனிதமான ஆற்றங்கரை பள்ளிவாசலையும் தரிசித்துவிட்டு கடலில் கலக்கும்
இப்படி எல்லா மதத்தவருக்கும் மிக மிக நெருக்கமான நதி அது, அற்புதமான ஆறு
ஒரு காலத்தில் தாமிரபரணி போல் இருந்த‌ ஆற்றினை முதலில் மர்ம்மான முறையில் யாரோ கொன்றார்கள், ஏதோ நடந்திருக்கின்றது. ஆற்றுநீர் குறைந்திருக்கின்றது
அதன் பின் மண்ணில் ஊறி அந்த ஆறு தன் கடமையினை செய்திருக்கின்றது
அந்த அரைமயக்க நிலையில் அந்த ஆற்றினை கதற கதற கொன்ற கொடுமை அதிமுக ஆட்சியில் நடந்தது, இதனை சொல்ல ஒரு தயக்கமும் இல்லை
ராட்சத புல்டோசர்களும், பெரும் எந்திரங்களும் இரவெல்லாம் மணல் அள்ளும் போது ஏற்பட்ட அந்த பெரும் ஒலி அந்த ஆற்றின் மரண ஓலம்
லாரிகளில் நீர் வடிய வடிய அதனை ஏற்றிசென்றபொழுது அந்த ஆற்றின் ரத்தம் வழிந்து கிடப்பதாகவே பட்டது
காவேரிக்காக பொங்கும் யாரும் அழிந்துவிட்ட நம்பியாற்றை பற்றி பேசமாட்டார்கள்
நம்பியாறு தென்நெல்லை மக்களின் தாய், இன்று தொலைந்துவிட்ட அல்லது அடித்துவிரட்டபட்ட தாய்
அவள் இல்லை என்றாலும் அவளின் தடம் அப்படியே நிற்கின்றது, நீருமின்றி மணலுமின்றி அந்த பாறைகள் பழம் வரலாற்றையும், நிகழ்ந்துவிட்ட பெரும் கொடுமையினையும் சொல்லிகொண்டே இருக்கின்றன‌
புனிதமான நம்பிகோவிலின் அருகே பிரமாண்டமாக ஆர்பரித்த நம்பியாறு இன்று மிக சிறு அருவியாக கொட்டுகின்றது
அந்த சிற்றருவி ஆர்பரிக்காது மாறாக வாழ்ந்துகெட்ட ஒரு மூதாட்டி முணகி அழும் அழுகை ஒலி போலவே கேட்கும்
அப்படி மாபெரும் கொடுமை அந்த ஆற்றுக்கு நிகழ்ந்தது, இதனால் பாதிக்கபட்ட கிராமங்களும் மக்களும் கால் நடைகளும் ஏராளம்
இன்றும் மழை கொட்டினால் அந்த தாய் தன் மக்களை சந்திக்க ஆர்பரித்து வருகின்றாள் , ஆனால் 1 மாதத்திற்குள் அந்த நீர் வற்றிவிடுகின்றது, ஒரே ஒரு சிறு தடுப்பணை தவிர ஏதும் அந்த ஆற்றில் கிடையாது.
அக்காலங்கள் அவ்வளவு சுகமானவை
எந்த கோடை ஆனாலும் 2 அடியில் நீர் கொடுத்த மணல் அது. எந்த வெயில் காலமானாலும் இரவு துண்டை விரித்தால் ஏசி குளிமெத்தை கொடுத்த இரவுகள் அவை
இன்றும் அந்த ஆற்றுகரை ஆலயங்களில் விழா நடக்கின்றது, விமரிசையாக நடக்கின்றது. ஆனால் தள்ளி இருந்து அந்த ஆற்றின் குளிர்மணலில் இருந்து அந்த ஆலயத்தை நோக்கிய அந்த சுகமான அனுபவம் யாருக்குமில்லை
உணவை மட்டும் கொண்டு சென்று ஆற்றில் 2 அடி தோண்டி நீர்பருகிய காலமெல்லாம் போய் , அந்த மணலும் போய் இன்று வெற்றுபாறையில் வெற்று பாட்டில்களை வீசி வருகின்றார்கள்
இதெல்லாம் கண்டு நிச்சயம் அந்த ஆற்றின் ஆன்மா அழுதுகொண்டே இருக்கும்
அழ ஒரு காலம் உண்டென்றால், சிரிக்கவும் ஒரு காலம் உண்டு
அந்த ஆறு இன்று வரண்டு விட்டாலும், இன்னொரு நாளில் அதன் பழமையான காலம்படி ஆண்டுமுழுக்க செழித்து ஓடும், அந்த மலையில் அதன் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு அதனை மீட்டெடுத்தல் வேண்டும்
வந்தது மறையும், சென்றது திரும்பும் என்பது உலகவிதி, இது ஆற்றுக்கும் உண்டு.
ஆற்றை மீட்டுவிடலாம், காலம் வரும். நிச்சயம் வரும்
ஆனால் அந்த மணலை மீட்டெடுப்பது யார்?ஆற்றின் உயிர் நிச்சயம் அந்த மணல்தான்.
ஆற்றினை திருப்பி கொண்டுவந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உயிரை திருப்பிவிடலாம் , வருங்கால சந்ததிக்கு பாதுகாப்பாக விட்டுவிட்டு செல்லலாம்
தமிழகத்தில் காக்க வேண்டிய ஆறுகளில் நம்பியாற்றுக்கு மிக முக்கிய‌ இடம் உண்டு

1970களின் கலைஞரின் அசாத்தியமும் ஆற்றலும் அவர் எதிர்கொண்ட சிக்கலும்

எந்த சர்ச்சை வந்தாலும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கலைஞரை கொச்சைபடுத்துவது இங்கு புதிதல்ல, ராமசந்திரனாலும் பின் ஜெயாவினாலும் சில பிரச்சினைகளை சந்தித்த கலைஞரின் பின்னாளைய அரசியலில் சில சர்ச்சைகள் இருக்கலாம்
ஆனால் 1970களில் கலைஞரும் இந்திராவும் ஆடிய ஆட்டம் சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது. உலக நாடுகளுக்கே சவால்விட்ட இந்திராவினை கலைஞர் பல இடங்களில் திகைக்கவிட்டார்
திமுக இந்தியாவில் முதன் முதலில் ஆட்சிக்கு வந்த மாநில கட்சி, இது டெல்லியின் கண்களை உறுத்த பல சதிவலை பின்னபட்டது. அந்த நேரத்தில்தான் காவேரி சிக்கல் ஒப்பந்தமும் வந்தது
1972ல் கலைஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நர்மதா நீர் பகிர்வு, கிருஷ்ணா நீர் பகிர்வு போல முடிந்திருக்கும் விஷயம் அது, ஆனால் இந்திரா தந்திரம் செய்தார்
இதற்கெல்லாம் ஏன் வழக்கு? வழக்கினை வாபஸ் வாங்குங்கள் பேச்சு நடத்தலாம் என அழைத்தார்
இந்திய நீதிமன்றங்களின் தன்மையினை உணர்ந்த கலைஞரும் வழக்கினை வாபஸ் வாங்கினார், இந்திரா உறுதிமொழி கொடுத்தபடி பேச்சுகளும் தொடங்கின‌
இப்படி போக்குகாட்டிவிட்டு அப்பக்கம் ராமசந்திரனை இழுத்து கொண்டுவந்து கலைஞருக்கு சிக்கலை உருவாக்கினார் இந்திரா, இந்நிலையிலும் காவேரி உரிமைகளை மீட்க போராடினார் கலைஞர்
ஆனால் மிசா சட்டமும் அதனை தொடர்ந்து கலைஞரை விசாரிக்க வேண்டும் என மனுவோடு நின்ற ராமசந்திரனும் இந்திராவிற்கு சாதகமானவை
ராமசந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க சர்காரியா கமிஷன் அனுப்பபட்டது
எந்த கலைஞர் காவேரிக்காக வழக்கு தொடர்ந்தாரோ, அவரை வாபஸ் பெற சொல்லிவிட்டு அரசியல் ஆட்டம் ஆடி சர்ர்காரியாவினை அனுப்பினார் இந்திரா
எப்படிபட்ட தந்திரம் அது
அதன் பின் சர்காரியா தாடியினை பிய்த்து ஓடியதும், விஞ்ஞான ஊழல் நடந்தது என்பதும் உலகறியும்
விஞ்ஞானத்திற்கு தேவையே ஆதாரம்தான், ஆனால் ஆதாரமில்லா ஊழல் எப்படி விஞ்ஞான ஊழலாகுமொ தெரியாது
ஆக 1975ல் ஆட்சியினை விட்ட கலைஞர் திரும்ப வந்தது 1996ல் இடையில் 1.5 வருடம் இருந்தார் அது மிக குறுகிய காலம் அப்பொழுது மண்டல் கமிஷனுக்காக போராடி, அமைதிபடை மீட்புக்காக போராட்கொண்டிருந்தார்
அந்நிலையிலும் விபிசிங் மூலம் காவேரி நடுவர் மன்றம் அமைக்கவும் அவர் தவறவில்லை, அதன் பின் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது கன்னடம்,
கன்னட கலவரம் எல்லாம் முடிந்து ஒரு அமைதி திரும்பிய நேரமது, அதற்குள் கலைஞர் ஆட்சியும் முடிந்தது
பின்னாளில் டெல்லி முழுக்க காங்கிரஸ் கன்னடத்திற்கு ஆதரவாய் மாற, ஜனதாவும் அதனையே செய்ய, இப்பொழுது பாஜகவும் அதனையே செய்ய காவேரி சிக்கலில் வந்து நிற்கின்றது
இதில் பெரும் பொய் ஒன்று பரவுகின்றது
அதாவது சர்காரியா கமிஷனுக்கு பயந்து கலைஞர் காவேரி வழக்கினை வாபஸ் வாங்கினாராம்
1975க்கு பின் வந்த சர்காரியா கமிஷனுக்காக 1972களில் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கினாராம்
இதனையும் ஒரு கருத்தாக பலர் சொல்லி கொண்டிருக்கின்றான் பலர் ஆமாம் அவர் அப்படித்தான் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
சரி அடுத்து வந்த ராமசந்திரன் என்ன செய்தார், முல்லை பெரியாறு நீர்மட்டத்தையே 132 அடியாக குறைத்தவர் அவர், காவேரிக்கு என்ன செய்திருப்பார்? ஒன்றுமில்லை
பிற்கால கலைஞரில் சில சர்ச்சை இருக்கலாம் ஆனால் 1970களின் கலைஞரின் அசாத்தியமும் ஆற்றலும் அவர் எதிர்கொண்ட சிக்கலும் கொஞ்சம் அல்ல‌
அவரின் முகாமில் இருந்தே ராமசந்திரன் எனும் கோடரி காம்பினை எடுத்து டெல்லிவெட்டிய சதிகளையும் தாண்டித்தான் அவர் இவ்வளவுதூரம் வளர்ந்து நின்றார்
அந்த கோடரி காம்பு இன்னொரு தலைவலியினையும் அந்த தலைவலி சில கோமாளிகளையும் உருவாக்கிவிட்டது வேறுகதை
அந்த கோமாளிகளை இன்று டெல்லியின் பாஜக அட்டகாசமாக உருட்டி மிரட்டி ஆடுகின்றது

உலகம் புரியாத பிரபாகரன்

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது.
முன்பே நாம் சொன்ன விஷயம்தான் ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குபின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் ஆட்கள் பற்றாகுறை
யாழ்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்கும் பக்கம் பதிந்தது
இந்நிலையில் நார்வே வேறு பேசிகொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள்
பிரபாகரனோ நார்வேக்கு போக்குகாட்டிவிட்டு ஆட்களை திரட்டி யுத்தம் செய்ய முயன்றார், நார்வேயினை விரட்டிவிட்டு இந்தியா சமரசம் பேசவரவேண்டும் என்றார்
இனி புலிகள் யுத்தம் தொடர்வார்கள் என்றால் மிக கேவலமான தோல்வியினை சந்திர்ப்பார்கள் என்ற இலங்கைக்கான அமெரிக்க தூதர் எச்சரித்தும் புலிகள் கண்டுகொள்ளவில்லை
இந்நிலையில்தான் நார்வேயில் நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்தை பரிசீலிப்போம் , நல்ல தீர்வு ஏற்பட்டால் ஆயுதம் தொடமாட்டோம் என முடிவு சொல்லி வந்தனர் பாலசிங்கமும், கருணாவும்
உலகம் புரியாத பிரபாகரனுக்கு இது பொறுக்கவில்லை, போராட்டத்தை விற்றுவிட்டார்கள் என குதித்த அவர் பாலசிங்கத்தையே விரட்டினார், நார்வே தூதர் எரிக் சோல்கிம்மிடம் எதையும் புரியும் மனநிலையில் பிரபாகரன் இல்லை, இனி லட்சகணக்கான மக்கள் சாகும் என சொல்லிவிட்டு விடைபெற்றார்
கருணாவின் நிலை சிக்கல், காரணம் கிழக்கு மாகாணம் அவன் கட்டுபாட்டில் இருந்தது. கருணா அமைதிபடை காலத்தில் பிரபாகரனை காத்தது முதல், ஆனையிறவு வரை அபாரமாக சண்டையிட்டவன்
பிரபாகரனின் வலதுகை என்ற முறையில் அவன் தைரியமாக சொன்னான் "இனி யுத்தம் தொடர்வது சாத்தியமில்லை, இந்தியா வரவே வராது. இலங்கைக்கு உலகமே உதவுகின்றது, நமக்கோ யாருமில்லை.
தொடர்ந்து சண்டையிட்டால் அழிவே தவிர வேறு ஒன்றுமில்லை"
அவ்வளவுதான் பிரபாகரனின் பதில் சீறியது, "மாத்தையா மாதிரியே நீயும் பேசுகின்றாயா?",
யோசிப்போம் என சொன்னேன் என பதிலளித்த கருணா அதன் பின் சென்றுவிட்டான்
ஆனால் அந்த பிரபாகரனின் வார்த்தை அவனை உறங்கவிடவில்லை, மாத்தையா போல என்றால் என்ன அர்த்தம்?
மாத்தையா கருணா போல பிரபாகரன் வலதுகை, சுத்தமான வீரன். ஆனால் அமைதிபடை காலத்திற்கு பின் , ராஜிவ் கொலைக்கு பின் அவன் போரை தொடர விரும்பவில்லை, சமாதனமாய் செல்ல ஆசைபட்டான்
இது இந்திய ராவுடன் மாத்தையா தொடர்பு என திரிக்கபட்டு, பிரபாகரனை கொல்ல மாத்தையா சதி என சொல்லபட்டு மாத்தையா பிரபாகரனால் கொல்லபட்டான்
மாத்தையா பிரிவு போராளிகள் 700 பேர் புலிகளால் கொல்லபட்டனர்
இதனை நேரில் இருந்து பார்த்தவன் கருணா என்பதால் பிரபாகரன் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்பது அவனுக்கு புரிந்தது
கீழ்மட்ட தலமைகளுக்கு உறுதியாக சொன்னான், யாழ்பாணத்தான் எல்லாம் ஐரோப்பா சென்று வாழ கிழக்குமாவட்ட நாங்கள் மட்டும் போரில் சாகவேண்டுமா? ஆள் எல்லாம் திரட்டமுடியாது, ஆனதை பாருங்கள்
இங்கோ பிரபாகரனுக்கு சிக்கல், அவன் தான் ஒழிந்தான் அந்த படைகள் முக்கியம். கிழக்கு அணி உடனே வரவேண்டும் என கட்டளையிட்டார்
அவர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம், பலர் எங்கோ சென்றார்கள், உண்மையான போராளிகள் குழம்பி நின்றார்கள்
பிரபாகரனின் உத்தரவு எல்லோரும் கிளம்புங்கள் என கட்டளை இட்டனர், ஆனால் போராளிகள் கருணா உத்தரவும் வேண்டும் என்றனர். உடனே புலிகள் முடிவு செய்தனர் நீங்கள் எல்லாம் துரோகிகள், கருணா விசுவாசிகள்
ஆம் மாத்தையாவோடு கிட்டதட்ட 700 பேர் கொல்லபட்ட கொடூரம் மறுபடியும் அரங்கேறியது
வெறுகல் என்பது கிழக்கில் ஓடும் ஆறு, அங்கே கருணா தரப்பு போராளிகளுக்கும் புலிகளுக்கும் மோதியது
சிங்களனை எதிர்க்க கிளம்பியவர்கள் தங்களுக்குள் மோதினர்,
புலிகளுக்கோ மாத்தையா விசுவாசிகள் போல இவர்கள் கருணா விசுவாசிகள் , போதும் இவர்கள் சாகட்டும் என முடிவெடுத்தனர்
தண்டனை எனும் பெயரில் அந்த வெறுகல் படுகொலை அரங்கேறிற்று, கிட்டதட்ட 500 போராளிகள் கொல்லபட்டனர்
"அண்ணா, நாங்களும் போராட வந்தவர்கள், சகோதர தமிழர்கள் எங்களை கொல்லாதீர்கள்.." என கண்ணீரோடு நின்ற அவர்களை பிரபாகரன் உத்தரவின் பேரில் கொடூரமாக கொன்றவர்கள் புலிகள்
தன் படைபிரிவு தன் கண்முன்னாலே கொல்லபடுவதை கண்ட கருணாவிற்கு வேறுவழி இல்லை, மாத்தையா போல என்பதன் அர்த்தம் அவன் கண்முன் தெரிய ஆரம்பித்தது
என் படைபிரிவினை கலைக்கின்றேன் இனி நான் போராளி அல்ல என சொல்லிவிட்டு தன் உயிரை பாதுகாக்க தப்பினான். இந்தியா அவனை சந்தேக கண்ணோடு நோக்கிவிட்டு நீ திருந்தியது உண்மை என்றால் சிங்களன் பக்கம் போ என சொல்லிவிட்டு நகர்ந்தது
கோத்தபாயா அவனை அரவணைத்து கொண்டான்.
மாத்தையா சொல்லி கேட்காமல் அவனை 700 போராளிகளோடு விசாரணை என சொல்லி கொன்ற பிரபாகரனுக்கு கருணாவினை அப்படி கொல்லமுடியவில்லை
மாத்தையாவினை கொன்ற பாவம் பின்னாளில் கருணா மூலம் பிரபாகரனை பழிவாங்கிற்று
அடுத்து நடந்த யுத்தத்தில் கிழக்கு மாகாண போராளிகள் இல்லை , கருணா இல்லை
விளைவு படு மோசமான வீழ்ச்சியினை சந்தித்து புலிகள் இயக்கம் அழிந்தும் போயிற்று
ஜப்பான் முதல் அமெரிக்கா வரை பரந்த இவ்வுலகில் புலிகளுக்கு ஆதரவாக ஒரு நாடும் வரவில்லை என்றால் காரணம் இம்மாதிரி விஷயங்கள்தான்
இதை எல்லாம் வைகோ, பழநெடுமாறன், சைமன், திருமுருகன் காந்தி, வேல்முருகன் என எவனும் சொல்லமாட்டார்கள், அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல் கம்மென்று இருப்பார்கள்
ஆனால் மே 17 என்றாலோ நவம்பர் 26 என்றாலோ ஏ இந்திய தேசியமே என குட்டிகரணம் அடிப்பார்கள், அயோக்கியர்கள்
மே 17க்கு முன்பான மிக கொடுமையான நாள் ஏப்ரல் 10
ஈழம் அமைவதை யார் கெடுத்தார் என்றால் சாட்சாத் புலிகள்தான், ஒருவேளை அது அமைந்தால் கூட சிரியா போல் ஆகியிருக்குமே அன்றி அமைதி வந்தே இருக்காது
புலிகளின் தலமை எவ்வளவு கொடூரமான ரத்தவெறி பிடித்தது என்பது டெலோ ஒழிப்பு, பத்மநாபா படுகொலை, மாத்தையா கொலை, அமிர்ந்தலிங்கம் கொலை என வரலாறு எங்கும் காண கிடக்கின்றது
இதெல்லாம் புலிகள் தமிழரை கொன்ற கணக்கு, ராஜிவ் கொலை, அமைதிபடை பலி, சிங்கள பலி எல்லாம் தனி கணக்கு
இப்படி கொல்வது மட்டுமே கொள்கை என செயல்படுத்திய இயக்கம் எப்படி உருப்படும், உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து வெறிநாயினை அடிப்பது போல அடித்து கொன்றார்கள்
அந்த புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள் 500 பேர் வெறுகல் ஆற்றுகரையில் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று
இதே ஏப்ரல் 10ம் தேதி, 2004ல் அக்கொடுமை நடந்தது
இப்படி எல்லோரையும் கொன்று தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து இறுதியில் அழிந்தே போனது புலிகள் இயக்கம்
ஆனால் இங்கிருப்பவன் கலைஞர் கெடுத்தார்,காங்கிரஸ் கெடுத்தது என சொல்லிகொண்டே இருப்பான்
அந்த வெறுகல் ஆற்றங்கரையில் புலிகளால் கொல்லபட்ட அந்த தமிழ்போராளிகளுக்கு வீரவணக்கம்