Wednesday, March 13, 2019

அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்த பாடங்கள்

அம்பேத்கர் 1913ல் உலகின் தலைச்சிறந்த பல்கலைக்கழகங்களின் ஒன்றான கொலம்பியா பல்கலைக்கழகத்தில் M.A படிக்க சென்றார். 2 1/2  -3 ஆண்டுகள் அவர் அங்கு இருந்தார். அவர் படிப்பதற்கு பரோடா மன்னர் ஒரு மாதத்திற்கு 11 பிரிட்டிஷ் பவுண்ட் என்ற அளவினாலான ஸ்காலர்ஷிப்ப அளித்திருந்தார். இந்த குறைந்த பணத்தை வைத்துக்கொண்டு அவர் 60 பாடங்கள் படித்திருக்கிறார்! வெறும் 10 பாடங்கள் படித்திருந்தாலே அவருக்கு M.A பட்டம் கொடுத்திருப்பார்கள். இது மிகப்பெரிய சாதனை. இந்த சாதனையை பாராட்டி அவருக்கு பேராசிரியர்கள் விருந்தளித்திருக்கிறார்கள். வெறும் வேலை வாய்ப்புக்காக தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்க அவர் படிக்கவில்லை. தனது படிப்பு யாருக்கு எதற்கு பயன்பட போகிறது என்று அறிந்தே பாடங்களை தேர்ந்தெடுத்து படித்திருக்கிறார். அம்பேத்கரை படிக்க படிக்க மனது வேறு எதிலும் கவனம் செலுத்த மறுக்கிறது. 20 ஆண்டுகள் முன் அம்பேத்கரை படித்திருக்க வேண்டும். மிகவும் வருந்துகிறேன்.

அவர் படித்த பாடங்கள் வருமாறு:

29 courses in economics, 11 in history, 6 in sociology, 5 in philosophy, 4 in anthropology, 3 in politics,  and 1 each in elementary French and German

COURSES TAKEN AT COLUMBIA

SUMMER 1913 
Economics s112  Money and Banking
Economics s120  Corporation Finance

SUMMER 1914 
Economics s205  Modern Economic Theories
Sociology s102  Principles of Sociology--Historical
Economics s125  The Classical Economists

SUMMER 1915 
French sA1  Elementary Course
German sA1  Elementary Course

1913-1914 
Economics 101-102  Science of Finance
Economics 125  The Economic Problems of Germany
Economics 201  Econ. Readings: Classical English Economists
Economics 207  Principles and Methods of Statistics
Economics 210  Social Statistics
Economics 204  History of Economics since Adam Smith
Sociology 151  Principles of Sociology--Analytical
Sociology 256  Social Statistics
Economics 206  Economic Theory
Economics 106  The Trust & Corporation Problem
Economics 205  Economic Theory
Economics 114  Marx & Post-Marxian Socialism
Economics 104  Commerce & Commercial Policy
Economics 304  Seminar in Political Economy & Finance
Sociology 258  The Theory of Social Evolution
Economics 303  Seminar in Political Economy & Finance
History 226  The Protestant Revolt

1914-1915 
Economics 105  The Labor Problem
Economics 108  Railroad Problems--Econ. Social & Legal
Economics 109  History of Socialism
Economics 242  Radicalism & Soc. Reform in 19th Cent. Lit.
History 103  History of India & of Persia
History 121  Hist. of Intellectual Class in Europe--I
History 122  Hist. of Intellectual Class in Europe--II
History 228  The Reforms of the French Revolution
Economics 119  Economic History
Economics 211-212  Statistical Economics
Politics 107  Comparative Politics & Government
Politics 108  Comparative Politics & Government
Sociology 255-256  Soc. Evol. Ethnic & Civil Origin--Lib. & Democracy
Philosophy 231  Psych. Ethics & Moral & Political Philosophy
History 155-156  Origins European Society: Soc. & Indust., Mod. Engl.
Economics 301-302  Seminar in Political Economics & Finance
History 226  Europe in the 12th & 13th Centuries
Economics 228  Types of Economic Theory

1915-1916 
History 169-170  The Expansion of Europe: 1st & 2nd Phases
History 223  Primitive Institutions in European History
Philosophy 179-180  Present Day Philos. & Problems of Evolution
Anthropology 137-138  General Ethnology--Primitive Man & Physic. Envir.
Anthropology 139-140  Gen'l Ethn. Prim. Religion & Mythology--Soc. Org.
Economics e183  Development of Railroad Transportation
Philosophy 131-132  Moral & Political Philosophy
Politics 214  The Principles of Politics


Source: Office of the Registrar, Columbia University.

“அவனுங்களை நடுரோட்டுல வச்சு எரிக்கணும், கல்லாலால அடிச்சுக் கொல்லணும், ஆணுறுப்பை வெட்டணும்”

சமூக வலைதளங்களில், பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி வரும் கருத்துக்கள் எல்லாம் “அவனுங்களை நடுரோட்டுல வச்சு எரிக்கணும், கல்லாலால அடிச்சுக் கொல்லணும், ஆணுறுப்பை வெட்டணும்” ங்கற ரேஞ்சுலதான் இருக்கு ஆனா உணர்ச்சிகளுக்கும், சட்டநடைமுறைகளுக்கும் வெகு தூரம்ங்கறதுதான் உண்மை.

நீதித்துறை……

மனிதன்னு சமீபத்துல ஒரு படம் வந்துச்சு, தீம்காவின் முன்றாம் கலைஞர் உதயநிதி நடிச்சது. அதுல ஒரு பணக்காரன் சாலையோம் படுத்துருக்கறவங்களை காரை ஏத்தி கொன்னுருவான். அந்த வழக்குல நம்ம ராம்ஜெத்மலானி மாதிரி ஒரு பெரிய வக்கில் (பிரகாஷ்ராஜ்) வழக்காடி அந்த கேசை ஒன்னுமில்லாம பண்ணிருவார் அப்புறம் நம்ம முன்றாம் கலைஞர் போராடி அந்த கேசுல சாட்சியை கோர்ட்ல ஆஜர்ப்படுத்துவார். அப்ப ஜட்ஜ் (ராதாரவி) ஒரு வசனம் பேசுவார்.

“கோர்ட்ல இங்க உட்காந்துட்டு இருக்கறவங்க மட்டுமில்ல, எல்லோருக்கும் தெரியும் இந்த ஆக்ஸிடன்டை யார் பண்ணதுன்னு, ஆனா நான் ஒரு ஜட்ஜ், மத்தவங்க நினைக்கறத வச்சு நான் தீர்ப்பு சொல்லமுடியாது, நான் சரியான தீர்ப்பு கொடுக்கணும்னா அதுக்கு சாட்சி, ஆதாரம் தேவை, ஆனா ஆதாரம்….. இந்த கேஸ் வந்த முதல் நாளே தெரியும், இதை யார் பண்ணதுன்னு, சரி அவனுக்கு தண்டனை கொடுக்கலாம்ன்னா அதுக்கு ஆதாரம் ? யாராவது ஆதாரம் கொடுப்பாங்களான்னு பாத்தா…..

வெயிட் பண்ணிட்டே இருப்பேன் ஆதாரம் அப்ப வரும் ஆதாரம் இப்ப வரும்ன்னு ஆனா ஆதாரம் ஒண்ணு கூட இருக்காது. பைல் மட்டும் குப்பை மாதிரி சேரும் அதுல ஒரு பேப்பராவது நான் திருப்தியா “ ஆமாண்டா, இதுதாண்டா ஆதாரம்” ன்னு சொல்ற மாதிரி இருக்காது. சாட்சிகளும் பணத்துக்கோ, பயத்துக்கோ விலை போயிடுவாங்க, அப்புறம் நான் என்ன பண்ண முடியும், குற்றவாளி கைய வீசிட்டு வெளிய போயிடுவான். இதுவரைக்கும் இதுதான் நடந்துருக்கு..”

காவல்துறை……

இந்த வழக்கில் ஊடகங்கள் எட்டு வருசம், 1500 பொண்ணுங்க லட்சம் வீடியோன்னு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு பெண்தான் புகார் அளித்துள்ளார். அதுவும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை காரில் அழைத்துச் சென்று மேலாடையைக் கழற்றி புகைப்படம் மற்றும்  விடியோ எடுத்து தங்கச் சங்கிலியை மிரட்டி பிடுங்கி கொண்டதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் தர புகாரை பெற்று கீழ்கண்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

354-A : ஒருப் பெண்ணை உடல் ரீதியான தொடுதல், உரசுதல் அல்லது தவறான எண்ணத்துடன் பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின் உடலைக் கையாளுதல் (தண்டனை :1 லிருந்து 4 ஆண்டுகள் வரை)

354-B :  ஓரு பெண்ணின் மீது தவறான எண்ணத்துடன், பலம் கொண்டு அவருடைய உடையை கலைந்து நிர்வாணமாக்குதல் (தண்டனை :1 லிருந்து 3 ஆண்டுகள் வரை)

392 IPC : செயினை பறித்தற்கு

66 (E ) SEXUAL ASSAULT ( பாலியல் தொல்லை)

அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட புகாருக்கு மேல் சட்டப்பிரிவுகள் இருந்தால் சார்ஜ் ஷீட் போட்ட இன்ஸ்பெக்டைரை குனிய வச்சு ராடை சொருகிடும் கோர்ட்.

ஒருவரிடம் புகார் பெறப்பட்டால் மட்டுமே, ஒரு தனிநபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்,

வீடியோவுல அவங்க முகம் தெரியுதேன்னு ஆரம்பிங்கறவங்களுக்காக.

2010 வருடம் என் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தாசுவாமிகள் ரஞ்சிதாவுடன் ஆன்மீக ஆராய்ச்சில இருந்தப்போ எடுத்த வீடீயோவை டெல்லி, மத்திய தடய ஆய்வகத்துக்கு அனுப்பி அவங்களும் அந்த வீடியோவ ஆராய்ச்சி பண்ணி அந்த வீடீயோ உண்மைதான் சொன்னது 2017 ஆம் வருசம். ஒரு வீடியோவை உண்மைன்னு சொல்லவே ஏழு வருசம். நாடே நாறின கேசுக்கே எழு வருசம்னா இந்த கேசுக்கு எத்தனை வருசம் ஆகும்ன்னு சொல்ல வேண்டியதில்லை.

எங்க ஊரு பப்ளிக்…………..

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தென்மாவட்டத்தில் நடந்தது.

“கைய ஏண்டா வெட்டின”

“நேத்து எந்தங்கச்சி காலேஜ் போயிட்டு வரும் போது, குறுக்காட்டி கைய புடிச்சு இழுத்துருக்கான் சார், வீட்டுல வந்து சொல்லிட்டு அழுதா அதான் இழுத்த கைய வெட்டிட்டேன்”

முதல் பாராவை படிங்க….

Modi ji often asks a question what congress has achieved for the country for the last 60 years.

For just facts:- Modi ji often asks a question what congress has achieved for the country for the last 60 years.

This is the answer for him.

 By JULIUS REBEIRO IPS(Retd)
(Former DGP, Maharashtra)

As a citizen of the country I felt it has to be conveyed to them.

Modi ji, there is no point in shouting standing in a stage and asking question that what is achieved in 60 years.

Dont think that the citizen of our country are fools.

You are a Prime Minister of a country which was under British rule for more than 200 years.

The people were living just like slaves.

Congress came to power in 1947 after independence started with zero.

 There was nothing in this country except the garbages left out by the British.

India didn't even had the resource to produce even a pin since Britishers left India.

The electricity was available only for 20 villages across the country.

Telephone facility was available only for 20 rulers (kings) in this country.

There was no drinking water supply.

 There was only 10 small dams.

No hospitals, no educational institutions.

No fertiliser, no feeds, no water supply for cultivation.

There was no job & only starvation in the country.

There was many infant death.

 Very few military staff in the border.

Only 4 planes, 20 tankers & fully open borders on all 4 sides of the country.

Very minimum roads & bridges.

Empty exchequer.

Nehru came power in these circumstances.

What is India after 60 years ?

World's largest army.

Thousands of war planes, tankers.

Lakhs of industrial institutions.

Electricity in all villages.

Hundreds of electic power stations.

Lakhs kilometre of national highways & over bridges.

New railway projects, Stadiums, super speciality hospitals, most of the Indian households with television, telephone for all the countrymen.

All infrastructure to work in and outside the country, Banks, Universities, AIMS, IITS, IIMS, Nuclear weapons, sub-marines, nuclear stations, ISRO, Navarathna Public sector units.

Indian Army barging till Lahore years back?

 Split Pakistan into 2 pieces ?

1 lakh of military & commanders surrendered to Indian army?

 India started exporting minerals & food items ?

Bank nationalisation by Mrs. Indira Gandhi?

Computer introduces to India & many job opportunities in India and outside the country?

You have become PM using information technology?

When you took over as the PM, India was the top 10 economies in the world?

 Apart from this, GSLV, Mangalyan, Monorail, Metro rail, International airports, Prithvi, Agni, Naag, Nuclear submarines....all these were achieved before you became PM.

Please do not come to people asking what Congress has achieved in 60 years.

Please tell people what you have achieved in the last 4 ½ years except changing names, doing statue and cow politics, failed demonetisation, poorly executed GST, and making people stand in long queues.

Hypocrite BJPians opposed FDI like anything and now BJP is supporting FDI shamelessly.

BJP is selling India to Ambani and Rafale deal to Anil Ambani's 2-month old company over HAL owned by government of India is a prime example of it.

BJP made petrol, diesel, and LPG price go up by putting more tax, while the price of crude oil became cheaper.

Modi government through SBI in the form of fine collected whopping Rs 1771 crore for not able to maintain minimum balance from the poor people of India.

Vikas is happening for Amit Shah's son, Amit Shah, Shaurya Doval, Ambanis, Adani, baba Ramdev's Patanjali group, and the people who sponsors BJP..

 3000 crores have been spent by BJP to clean river Ganga, this corruption each and everyone can find out by taking a dip in river Ganga.

This is not an advertisement for the Congress campaign.

 I’m an Indian first before anything else.

 I’m an informed voter who feels it is an insult to his intelligence each time the current government says our country has been no good over the last 60 years!

#திராவிடம் அறிவோம் (80)

தமிழர் சாதிவாரியாகப் பிரிந்து கிடப்பதால் எந்தவொரு குறிப்பிட்ட சூத்திர சாதியாரும் ஆதிக்க சாதியாகி விடக்கூடாது என்பதற்காகவும், அந்த சூத்திர சாதியார் ஆதிக்கத்தால் தாழ்த்தப்பட்டோர் அரசியலதிகாரத்தில் உரிய பங்கினைப் பெற முடியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் 1940 ஆகஸ்ட் 24, 25 இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தையும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதியை வலியுறுத்தும் தீர்மானத்தையும் நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

#திராவிடம் அறிவோம் (79)

திராவிடம் அறிவோம் (79)

’சுயராஜ்யமா? சுயமரியாதையா?’ என்ற கேள்வியை எழுப்பி ‘சுயமரியாதையை அடைவதே முதன்மையான இலட்சியம்’ எனப் பெரியார் இடைவிடாது கூறிவந்ததற்குக் காரணம், குடிமைச் சமுதாயத்தில் (civil society) மாற்றத்தை ஏற்படுத்தாமல் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்வதை அவர் எப்போதும் ஆதரிக்கவில்லை.


தமிழர்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதாக இருந்தாலும் கூட, பார்ப்பனர் ஆதிக்கத்தையும் பார்ப்பனியத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்காத ஒரு குடிமைச் சமுதாயத்தில் மீண்டும் பார்ப்பன-பார்ப்பனீய ஆதிக்கம் தொடரவே செய்யும் என்று அவர் இடைவிடாது கூறிவந்தார்.

#திராவிடம் அறிவோம் (78)

திராவிடம் அறிவோம் (78)

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது இன்னுயிரை ஈந்தவர்கள் நடராசன், தாளமுத்து ஆகியோர்.

போராட்டக் களத்தில் முதல் பலியானவர் நடராசன். ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கடுமையான வயிற்றுவலியால் சனவரி 15, 1939 – இல் மரணமடைந்தார்.

சிறைக்கொடுமையால் கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து, அதே ஆண்டு மார்ச் 12 – ஆம் நாள் உயிரழந்தார். மூலக்கொத்தளம் மயானத்தில் இருவருடைய உடல்களும் புதைக்கப்பட்டன. சாதிக்கொரு சுடுகாடு இருக்கிற நாட்டில், ஆதிதிராவிடரான  நடராசனும், நாடாரான தாளமுத்துவும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டது தமிழ் உணர்வுப் போராட்டத்தின் சான்று. அதை சாதித்துக் காட்டியது திராவிட இயக்கம்.

இன்று தோழர் தாளமுத்துவின் நினைவு நாள்.


#திராவிடம் அறிவோம் (77)

திராவிடம் அறிவோம் (77)

தந்தை பெரியார் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிய பின், தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்டிருந்த பல்வேறு சக்திகளும், நீரோட்டங்களும் சுயமரியாதை இயக்கத்துடன் வந்து சேர்ந்து சங்கமித்ததன் காரணமாக உருவானதுதான், தனித்தமிழ்நாடு(திராவிட நாடு) கோரிக்கையாகும். அந்த வரலாற்றுச் சூழலிணைவில்தான் ‘தமிழ்த்தேசியம்’ முதன்முதலாக உருவாகியது.

நூற்றாண்டு ! அன்னை மணியம்மையார் !

நூற்றாண்டு !
அன்னை மணியம்மையார் !

தந்தை பெரியார் அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கின்றார் . வந்து போவோர் அனைவரும் கவலையுடன் "அய்யா உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் , உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் " என்று சொல்கின்றார்கள் . பெரியார் மிகவும் கோபமாக " எல்லோரும் இதையே  தானே சொல்கின்றீர்கள் ! யாரவது எப்படி என்று சொல்கின்றீ ர்களா ? " என்கிறார் .

அடுத்த சில நாட்களிலே ஒரு பெண்மணி வருகின்றார் . அம்மா என்ன வேண்டும் என்கின்றார் ?
அய்யா நான் தங்களைக் கவணித்துக் கொள்ள வந்துள்ளேன் . அப்பா சொன்னார்கள் என்கின்றார் . அவர் சிரித்துக் கொண்டே " நீங்கள் சின்ன பெண்,வேறு வேலையில்லையா உங்கட்கு , வீட்டிற்குப் போங்கள் " என்கின்றார்.அவரோ முடியாது,தங்களைப் பார்த்துக் கொள்வது தான் என் வேலை   என்கின்றார். ஒவ்வொன்றாகப் பார்த்துச்  சரி செய்து  எள் என்றால் எண்ணையாக , அனைத்தையும் கவணித்துக் கொண்டு ,வந்தவர்களை ஒழுங்கு படுத்தி அவரது உணவு, ஓய்வு  என்று மிகவும் கண்டிப்பாக  பெரியரையே , இது உங்கட்கு ஒத்துக் கொள்ளாது  உண்ணக்  கூடாது என்று கண்டிப்புடன் இருக்கும் வரை அனைத்தும் அவரே என்ற அளவிற்கு பணி புரிகின்றார். பெரியார் அவரைப்  பல முறை நீங்கள் திருமணம் செய்து கொண்டு வாழும் படி , போகச்  சொல்லி முயற்சி செய்து பார்க்கின்றார் . அவரது தந்தையாரிடமும் சொல்கின்றார். அய்யா இப்போது  தான் நீங்கள் நலமுடன் இருக்கின்றீர்கள் . அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விடுகின்றார் .

முகம் சுளிக்காமல் பெரியாருக்கு அனைத்தையும் செய்து செவிலியராக, சமையல் காரராக ,( அதுவும் வேனில் பயணம் செய்யும் போதே காய்கறிகளை நறுக்கிவைத்துக் கொண்டு நிற்கும் இடத்தில் சமைத்து உணவு தயார் !), செயலராக , தாயாக, மகளாக அவருடைய கோவத்தை அடக்கும் அமைதியாளராக அவரையே கண்டிக்குக்கும் மருத்துவராக இப்படித் தன் வாழ் நாளே  பெரியார், தன் வாழ்க்கையே அவரது உடல் நலம் என்று வாழ்ந்து காட்டினார் ! எத்தனை ஆண்டுகள் ? உலகில் யாரும் இப்படி இருந்ததாக வரலாறே இல்லை ! நேரே பார்த்தவர்களுக்குத்தான் அதன் முழு ஆழமும் தெரியும் !
அவரை விட  அம்மா சிக்கனம் என்றால் சாப்பாட்டில் உள்ள மிளகும், கறிவேப்பிலையுங் கூட  அடுத்த சமையலுக்கு உதவும் என்ற அளவு சிக்கனம் ! எதையும் வீணாக்கியதாகச் சரித்திரமே இல்லை ! எளிமையின் சின்னம் அவர் !

உழைப்பு எப்போதும்  சுறு சுறுப்புடன் தான் ! வீணாக்க நேரங்கிடையாதே ! மாநாடு கூட்டங்கள் என்றால் அங்கே அவர்தான் புத்தக வியாபாரி ! கூட்டம் முடிந்ததும்  அய்யாவிடமிருந்து  முதல் கேள்வி  எவ்வளவு புத்தகம் விற்றது என்பது தான் !

அவர் பட்ட அவமானம் கொஞ்ச  நஞ்சமல்ல ! அனைத்தையும் தூசியாகத் தட்டி விட்டவர். தூற்றியவர்களே  பின்னர் போற்றினார்கள் என்பதுதான் வரலாறு !
கொள்கையிலே அய்யாவைப் போன்றே துணிவும், சமரசம் செய்யாத மானமும் ! திருசியிலே சிறையில் இறந்தவர்களின் உடலைத் தர மறுத்த போது முதல்வர் காமராசரை நேரிலே பார்த்து அவரே அஞ்சும்  படி கர்ச்சித்தவர் ! உடலைப் பெற்று ஊர்வலம் நடத்திக் காட்டியவர். இராவண லீலாவை நடத்திக் காட்டியவர் . அடக்குமுறையின் போது கழகத்தைக்  கட்டிக் காத்தவர்.

அங்கு நான்சென்றிருந்த போது அவ்வளவு பெரிய பெரியார் திடலிலே அம்மா வெறுந்தரையிலே அமர்ந்திருக்கின்றார்கள் . அருகே அய்யா ஆளவந்தார் மட்டுந்தான் இருக்கின்றார் . எனக்கோ அதிர்ச்சி ! ஆளவந்தார்  என்னை விரட்டுகின்றார் ! நீ ஏன் இங்கே வந்தாய், உடனே சென்று விடு என்கின்றார் ! அவ்வளவு கடுபிடி ! அதில் அம்மாவின் உடல் நலம் மிகவும் பாதிக்க வைத்து விட்டார்கள் எதிரிகள் ! கழகத்தை ஒழித்துவிட நல்ல தருணம் என்று எதிரிகள் கணக்குப் போட்டுத் துரோகிகளுடன் இணைந்து முயன்றனர். ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டனர் என்றே சொல்லும் அளவில் நிலை இருந்தது ! வருமான வரித்துறையின் மூலம் முடக்கப் பார்த்தனர்.

ஒரு சமயம் ஆசிரியர் அய்யாவிடம் உங்கள் உழைப்பிலேயே எதை மிகவும் மகிழ்ச்சியாக நினைவு கூறுகின்றீர்கள்   என்று கேட்டேன் .அப்போது  சொன்னார் வருமான வரி டிரிப்யூனலில் இருந்து மீண்டதைத்தான்  என்றார் ! மீண்டது மட்டுயமல்ல தொகையை வட்டியுடன் திரும்பப் பெற்றோம் என்றார் !

நாகம்மை குழந்தைகள் இல்லம் அம்மா அவர்களின்  இதய மகிழ்ச்சி ! அதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ! அந்தக் குழந்தைகளின் அம்மா அம்மா தான் அவர்க்குப் பிடித்த இன்னிசை !

அம்மாவின் கடைசி நாட்கள் சோதனைகள் நிரம்பியனவாக இருந்தாலும் அவர் ஆசிரியர் மீது வைத்திருந்த நம்பிக்கை அவருக்கு  ஆறுதலைத்  தந்தது என்று தான் சொல்ல வேண்டும் ! யாரிடம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் அம்மா நன்கு உணர்ந்து சொல்லியும் சென்றிருப்பார்கள் என்று தான் நம்புகின்றேன்.

நூற்றாண்டு  கொண்டாடுகின்றோம் என்றால் அது நன்றியும், மகிழ்ச்சியும் கலந்த நினைவுகள் . நேரிலே கண்டவர்கள் மறக்க முடியாது !
அவர் ஓர் உன்னதப் பிறவி ! அர்ப்பணித்த வாழ்க்கை ! மனதில் நிறைந்தவர் !
வாழ்க அம்மா !
வாழ்க  பெரியார் ! வளர்க  பகுத்தறிவு !