Thursday, August 01, 2019

தமிழனுக்கு மதம் கிடையாது!

தமிழனுக்கு மதம் கிடையாது!
தமிழனுக்கு மதம் என்பது ஒன்று இருந்ததாக ஆதாரம் கிடையாது. மதம் என்கிற சொல் தமிழ்ச் சொல் இல்லை. மனிதன் மற்றொரு மனிதனிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய பண்புகளைத் தான் நமது முன்னோர்கள் நெறி, ஒழுக்கம், நீதி, கோட்பாடு என்கின்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்கள். அன்றி மதம் என்ற சொல்லுக்கும் தமிழனுக்கும், தமிழுக்கும் சிறிதும் சம்பந்தம் கிடையாது. தமிழனுக்கு ஜாதியும் இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் திருக்குறளில் கடவுள், மதம், ஜாதி முதலியவை இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழில் அதற்கு சொல் இருக்க வேண்டும்.
(பெரியார், குடி அரசு - 07.05.1949)

சங்கராச்சாரிகள் எப்போதும் கையில் தண்டம் (புனித கோல்) வைத்திருப்பார்கள்

சங்கராச்சாரிகள் எப்போதும் கையில் தண்டம் (புனித கோல்) வைத்திருப்பார்கள். "எந்த சூழலிலும் அதைவிட்டு பிரியக்கூடாது"என்பது அவர்களுடைய விதிமுறைகளில் ஒன்று.

அந்த புனித கழியில் இருந்து அதை பிடித்திருக்கும் கைகளுக்கு நேரடியாக புனித சக்தி ஒன்று ஊடுருவிக் கொண்
டே இருப்பதாக அவர்கள் ஐதீகம் கூறுகிறது.

அந்த தண்டத்தை போட்டுவிட்டுதான் காஞ்சி மடத்தைவிட்டு திருட்டுத்தனமாய் ஓடிப்போனார் ஜெயேந்திர சரஸ்வதி. அவரை காணவில்லை என இந்தியா முழுவதும் பதற்றமானது.

3 வது நாளில் தலை காவிரியில் கண்டுபிடிக்கப்பட்ட அவரிடம், "தண்டத்தை ஏன் விட்டு சென்றீர்கள்?" என்று பத்திரிகையாளர்கள் அறிவார்ந்த (?) கேள்வியை கேட்ட போது,

"தண்டத்தின் சக்தியை நான் உடலில் ஏற்றுக் கொண்டுதான் சென்றேன்" என்றார் சங்கராச்சாரி. ஒரு பத்திரிகை நிருபருக்கு கூட அதை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியவில்லை. அந்த அற்புத சக்தியை தாங்கிக் கொண்டே சிலை கடத்தல்கள், பாலியல் குற்றங்கள், பணம் கையாடல், கொலைகள் வரை நடத்தினார் சங்கராச்சாரி.

அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அதே சக்தியை (தண்டம்) வைத்திருக்க அவருக்கு சலுகை அளிக்கப்பட்டது. ஆச்சாரமாக சமைக்க சமையல்காரர், மலத்தை நேரடியாக கழிப்பறையில் இருப்பதற்கு பதில் ஆச்சாரமாக வாழை இலையில் மலம் கழிக்கும் சங்கராச்சாரி என்பதால் அதற்கும் அனுமதி.

இப்படி ஏக போக மரியாதையுடன் அரசு ஆதரவோடு குற்றவாளிக்குரிய எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல், அதே சங்கராச்சாரி கௌரவத்தோடு சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் நடந்து கொண்டார்.

சங்கராச்சாரியிடம் இருந்த அந்த சக்திக்கு அத்தனை மதிப்பு. அந்த புனித சக்திக்கு சக்கரை நோய் டோஸ் மிக அதிகரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதே நாளில் சங்கராச்சாரியோடு இறந்தும் போனது.

சிலை கடத்தல்கள் குறித்து கூறியிருந்தோம் அல்லவா?

சங்கராச்சாரி ஒருகோயில் இருந்து திருடிய 11 சிறிய லிங்க சிலைகளில் ஒன்று இதோ ஆஸ்ரேலியா மருத்துவமனையில் கிடக்கிறதே இந்த சக்தியிடம் உள்ளதாம்.... எப்படியும் அந்த பெரும் வலிமையுள்ள லிங்க சிலை காப்பாற்றிவிடும் என்றால் எதற்காக இது வெளிநாட்டு மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்கிறது?

பார்ப்பன்யம் பார்ப்பனீயத்தை மட்டும் சுவிகரித்துக் கொள்ளவில்லை. பார்ப்பனீய மோசடியில் பெரும் வெற்றியை பெறும் பார்ப்பனரல்லாத மோசடி பேர்வழிகளையும் அல்லவா கொண்டாடுகிறது? நாட்டின் பிரதமர் முதல் குடிமகன்கள் வரை கொண்டாடும் அந்த சக்திக்கு இப்போது எங்கே போயிற்று அற்புத சக்தி?

ஆனால் ஈஷா கும்பல், குரு வெளிநாடுகள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அவரை குறித்து வரும் செய்திகள் அவருக்கு திருஷ்டி கழிப்பது போன்று என உளறுகிறார்கள். தண்டம் வைத்திருந்த சக்திக்கே சக்கரை அளவு அதிகரித்து அட்டாக்கில் இறந்து போனான். இந்த கஞ்சா குடிக்கி எம்மாத்திரம்?