Friday, April 20, 2018

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்
அப்படியா(ணே)!! சரி"ணே" சரி"ணே"...
அப்போ நாடாரான நீங்கள் நினைத்தால் மட்டும் நாட்டை ஆண்டு கிழிச்சிடுவிங்களோ?? ஊரு உலகத்துல எல்லா சாதிக்காரனும் தான் நாடாள ஆசைப் படுறான்... ஆனா என் சாதிக்காரன் ஆசைப்பட்டா மட்டும் உங்களுக்கு ஏன் கை கால் எல்லாம் கிடு கிடுனு ஆடுது?? நரம்புத் தளர்ச்சியா??
அது இருக்கட்டும்... கீழே உள்ள படத்துல ஒருத்தன் கூட நின்னு கட்டிப் புடிச்சிகினு போஸ் கொடுக்குறிங்களே... அந்த பொறுக்கிப் பய யாரு??


இவன் பெயர் அரி! தென் மாவட்டத்து கூலிப்படைத் தலைவன் ராக்கெட் ராஜாவின் (நாடார்) கையாள், எடுபுடி, சசிகலா புஷ்பாவின் பாடிகார்ட் இத்யாதி இத்யாதினு பல முகங்கள் இவனுக்கு உண்டு..
என்கவுண்டரில் கொல்லப்ட்ட தூத்துக்குடி ரவுடி வெங்கடேஷ், பசுபதி பாண்டியன் கொலைக் குற்றவாளி சுபாஷ், வழிப்பறி & ஆட்கடத்தல் பேர்வழி செல்வின், ரவுடி ராக்கெட் ராஜா போன்ற சமூக விரோதிகளின் புகைப் படங்களை பயன்படுத்தி வண்ண வண்ண போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டி விளம்பரம் செய்து வருபவன்... நாடார் சாதி அமைப்பு ஒன்னு வச்சி நடத்துறான்...
சரி அவன் எப்படினா இருந்துட்டு போவட்டும், அதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லை! என்னோட கேள்வி எல்லாம் ஒன்னே ஒன்னு தான்...
தலை சிறந்த தமிழ்தேசியப் போராளி என்றும், செந்தமிழன் என்றும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் சீமானுக்கு இந்த பொறுக்கிப் பயலோட என்ன வேலை??
#குறிப்பு :- இது எதிர்பாராத ஒரு சந்திப்பு என்றும் எதார்த்தமாக எடுத்த படம் என்றும் யாரும் வந்து முட்டுக் கொடுக்காதிங்க.. இது போல பல இடங்களில் வெவ்வேறு சூழல்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை என்னால் காட்ட முடியும்..

ஆரியரும் பெண்களும்

ஆரியரும், பெண்களும்
ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வெகு தூரம் பயணப்பட்டு இந்தியாவிற்குள் நுழைந்த போது அவர்கள் தங்களுடன் பெண்களையும் அழைத்து வந்ததற்கு சான்று எதுவும் இல்லை.
அதேசமயம் சடங்குகளையும், யாகங்களையும் செய்து ஏய்த்து இங்கிருக்கும் மன்னர்களை மோசடி செய்து தேவதானா,அக்கிரகாரா என்று நிலங்களையும், பொண்முடிப்புக்களையும் தானங்கள் பெற்றது போல இந்த மண்ணைச் சேர்ந்த பெண்களை கன்னிகா தானம் பெற்றுத்தான் பெண்டாளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
இப்படி தன் இனத்தில் இல்லாத பெண்களை - காதலோ காமமோ கொள்ளாத பெண்களை அடிமைகள் போல தானமாய் பெற்றுதான் கலவி செய்வது அவர்களின் வழக்கமாய் இருந்திருக்கிறது.
எனவேதான் வேதத்தில் இவர்கள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போது,"பெண்கள் அனைவரும் சூத்திரர்களைப் போல அவர்களுக்குச் சமமாக நடத்தப் பட வேண்டியவர்கள்" என்றும் "பெண்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்" - என்றும் எழுதியும் போதித்தும் வைத்தார்கள்.
திராவிடச் சமூகத்தைப்போல தாய்வழிச்சமூகமாக அல்லாமல் அதற்கு முழுக்க முரண்பட்டு ஆணாதிக்கம் கொண்ட ஆண்வழிச்சமூகமாக ( Patriarchial society ) ஆரியச் சமூகம் வரலாற்று ஆசிரியர்களால் அடையாளம் காட்டப்படுவதும் இதனால்த்தான்.
இன்றைக்கு இந்துத்துவா கும்மல் எல்லா இடங்களிலும் வன்புணர்வு செய்து திரிவதற்கும், அவர்கள் அனைவருமே பெண்கள் தொடர்பாக மிகக் கீழ்த்தரமாக கருத்துக்கள் வைத்திருப்பதற்கும்- அதனை கூச்சமின்றி வெளியே பேசுவதற்கும் இந்த வரலாற்று அடிப்படையிலான காரணங்கள் முக்கியமானவைகளாகும்.

பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பவராகவோ முடியாது!

//பெரிய ஆட்களுடன் படுக்காமல் பெண்கள் ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பவராகவோ முடியாது! - பிஜேபி RSS எஸ்.வி.சேகர்//
பதட்டப்படாதேள்... அம்பி சொன்னா கரெக்டாதான் இருக்கும்... நானும் எப்படி இந்த ஊடகங்களில் 90% சதவீதத்த அவா கும்பல் ஆக்கிரமிச்சி இருக்கேன்னு யோசிச்சி இருக்கேன்.. காரணத்த நம்ப சேகர் புள்ளையாண்டான் புட்டு புட்டு வெச்சுட்டான்... அதுசரி, மன்னர், ஜமீன், வெள்ளைகாரன் காலத்திலிருந்தே இதே டெக்னிக் தானே.. அதுதான் கரெக்டா அவா நடைமுறைகள சொல்லுறா... விகடன், துக்ளக், கல்கி, தி இந்து, தினமலர், தினமணி, தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ, டெல்லி ஊடகங்கள்... இப்படி எங்க பாத்தாலும் அவா ராஜ்ஜியம் தானே.. இந்த ஊடகங்கள வெச்சித்தானே, தங்களுக்கு ஆகாத அரசியல் தலைவர்கள், கட்சிகள் மீது அவதூறுகளையும், பொய்களையும், வதந்திகளையும், அபாண்ட குற்றசாட்டுகளையும், ஆதாரமில்லாத செய்திகளையும் பரப்ப முடியுது..

இவர் ஐயர் - மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கில்லாடி

ஒரு நூற்றாண்டுக்கு முன் ஆமாண்டா.. நாங்கதாண்டா செஞ்சோம்.. அதுதாண்டா தர்மம்ன்னு சொன்னவனுங்க... இன்னைக்கு 'இது எனக்கு தெரியாம நடந்துடுச்சு.. என் அட்மின் செஞ்சிட்டான்'னு தப்பிச்சு ஓடுறதுக்கு காரணம் நாம வளர்த்தெடுத்த பகுத்தறிவு சமூகம்தான்..
பார்வர்ட் மெசேஜஸ காப்பி செஞ்சு பேஸ்புக்ல போட்டு அதுல தம்ஸ் அப்.. இந்திய கொடி ஸ்மைலிலாம் போடுவானாம்.. அனா படிக்கலயாம்.. இதுவே அந்த காலமா இருந்தா 'ஆமா ஆமா சாமி சொன்னா சரியாதான் இருக்கும்'ன்னு நம்புவானுங்க.. இப்போ பசங்க டெக்னிக்கலா கேள்வி கேக்குறானுங்க.. சமூக வளைதளத்துல தூக்கி போட்டு மிதிக்குறாங்க..
'இவர் ஐயர்.. படிக்கிறார்' ன்னு இவனுங்க மட்டும்தான் படிக்க பொறந்தா மாதிரியும் மத்தவனுங்க சண்ட போட.. தொழில் செய்ய.. கீழ்மையான வேலைகளை செய்ய பொறந்தா மாதிரியும் கடவுளு.. வேதம்.. மனுநீதின்னு ரூல்ஸ் போட்டானுங்க..இப்போ அந்த வர்ணாஸ்ரம கட்டமைப்பு தகர்ந்து போய் தங்களோட கன்ட்ரோல் தங்கள விட்டு போறத நெனச்சி புழுங்கி சாவுறானுங்க..
ரூபாய் நோட்ல லேஸ் சிப்ஸ் இருக்குன்னு சொல்ற அளவுக்கு இவனுங்க முட்டாள் என்பதும்.. படுக்காமல் பெண்கள் உயர்ந்த இடத்திருக்கு வரமுடியாது என்று பொதுவெளியில் பதியும் அளவிற்கு இவர்கள் கடைந்தெடுத்த பச்சை பொறுக்கிகள் என்பதும்தான் உண்மை..
சாவர்க்கர் முதல் சேகர் வரை மன்னிப்பு கடிதம் எழுதுவதில் கில்லாடிகள்... ஆனால் இனி இவர்களை நாம் மன்னிக்க கூடாதென்பதே அறிவார்ந்த செயலாகும்.. தவறு செய்பவனை திருத்தலாம்.. வன்மத்தில் எழுதுபவனை தண்டிச்சே ஆகனும்...
வேணும்னே சட்டையை திறந்துவிட்டு பூணுல் காட்டும் Cleavage சேகர்கள்.. இனி வெளியில் தலையை காட்ட கூட அஞ்சவைப்பதே நாகரீக சமூகத்தின் தலையாய கடமை...

பாம்பு... பார்பான்.. முதலில்... அடிக்க...

"பாம்பு... பார்பான்.. முதலில்... அடிக்க..." இந்த சொல்வாடை ஏன் வந்தது என்பது எச்ச ராஜா.. சேகர்.. சு.சாமி.. குருமூர்த்தி.. நாராயணன்.. கேடி ராகவன்... ராமசுப்பு.. தினமலம்.. துக்ளக் சோ.. போன்றவர்களின் செயல்பாடுகளை பார்த்ததும் புரிகிறதா?? இந்த காலத்திலேயே இப்படி என்றால், சில பத்தாண்டுகளுக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனீய கும்பல் எப்படியெல்லாம் நமது முன்னோர்களை ஏமாற்றி, ஏய்த்து, பொய்சொல்லி பிழைத்திருக்கும்??? எப்படியெல்லாம் ஆணவ திமிரோடு நடந்திருக்கும்?? புரிகிறதா??
அறிவியலுக்கு புறம்பான செய்திகளை உண்மை போல பரப்புவது.. புராண கற்பனைகளை உண்மை போல பேசுவது... இப்போதைய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை, பண்டைய பாரத சம்ஸ்கிருத அறிவாளிகள் கண்டுபிடித்துவிட்டதாக வாய் கூசாமல் சொல்லுவது... காலத்துக்கு ஏற்றவாறு பொய்களை மாற்றி, அக்காலகட்டத்துக்கு ஏற்ற கற்பனை மசாலாக்களை தூவி, தங்களது மோசடிகளை தொடர்வது.... இதெல்லாம் இந்த புரட்டு கும்பலின் செயல்பாடுகளுக்கு சில உதாரணங்கள்...
துணிந்து பொய்சொல்வது, அம்பலமான பின்னும் பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, உண்மை போலவே பொய்யைச் சொல்வது, சந்தர்பத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றிப் பேசுவது, அரை உண்மைகளைப் பேசுவது, உண்மையில் பொய்யைக் கலப்பது, பொய்யில் அவதூறுகளைக் கலப்பது, ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசுவது – இவையெல்லாம் பார்ப்பனீயத்தின் முதன்மையான பண்புகளில் சில என அண்ணா ஆரிய மாயையில் விளக்கியுள்ளார்..

பார்ப்பனத்திமிரை அடக்கும் வழிமுறையை கண்டறிந்தவரும் வென்றவரும்

பதிவு : தோழர் வழக்குரைஞர் அருள்மொழி
தோழர்களே..
பார்ப்பனஜாதி வெறியர்களான
எச்.ராஜாவும் எஸ்.வீ.ஷேக்கரும் எவ்வளவு வன்மமான
கருத்துக்களால் நம் பெண்களின்மீது
உளவியல் தாக்குதல் நடத்துகிறார்கள்
என்பதை கவனியுங்கள்.
அவர்கள் கையாளும் சொற்கள் ஆபாசமானவையல்ல..ஆனால் கருத்துகள் ஆபாசமானவை. கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியவை.
ஒரு தனிப்பட்ட பெண்ணை அல்ல .
சமூகத்தையே தாக்குவதற்கு
திட்டமிட்டு வீசப்படும் சொல்லம்புகள்.
தந்தை பெரியார் பார்ப்பனர்களுடன் நட்பில் இருந்தார். அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் சமூகத்தை சீர்திருத்தி சமன்செய்வது எளிது என்று
நினைத்து அதற்கான முயற்சியும் செய்தார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை..அது மட்டுமல்ல எல்லா வகையிலும் அதற்கு எதிராக
நின்றார்கள். இதை பலமுறை தந்தை பெரியார் பேசியிருக்கிறார்.
அதன் பிறகு தான் அவர் பார்ப்பனர்கள் மீது தீவிரமான கருத்துப் போரைத் தொடங்கினார்.
பெரியார் ஒரு ஜாதியை மட்டும் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்க வேண்டாம் என்று பேசும் நல்லவர்கள் பலர் இப்போது தெரிந்து கொள்ளலாம் பார்ப்பனத்திமிரை அடக்கும் வழிமுறையை கண்டறிந்தவரும் வென்றவரும் தந்தை பெரியார் ஒருவர் தான்.
ஏனிந்த பார்ப்பன ஜந்த்துக்கள் இப்போது இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். பொன்னாரும் அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த வாதிதான். ஆனால் தன்னை இந்து என்று நம்பி ஏமாறும் கூட்டத்தினைச் சேர்ந்தவர். அவரைப் போன்றவர்கள் தெளிவு பெறும் போது தமது ஜாதியை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எச்.ராஜாவும் சுப்பிரமணிய சாமியும் இல.கணேசனும் அந்த சித்தாந்தத்தின் பயனாளிகள். இந்தியாவை பார்ப்பன பனியா ஆதிக்க நாடாகவே வைத்திருக்கும் கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம். அதற்கு பெயர் தான் இந்து ராஷ்ட்ரம். அந்த ராஜ்யத்தை அமைக்க அவர்களுக்கு போர்புரியும் வீரர்களும் ஏவல் செய்யும் குரங்குப் படைகளும் தேவை. சீதைகள் இராமன் பெருமையைப் பேசலாம்..ஆனாலும் அவர்கள் தீயில் இறக்கப்படுவார்கள்...பின் காட்டில் தொலைக்கப் படுவார்கள். எனவே பார்ப்பன ஆதிக்கத்தைக் தாப்பாற்றும் ராமராஜ்யம் அமைவதற்கு எல்லா வேலையும் செய்வார்கள் நம் எதிரிகள்.
ஆனால் இன்று உலக வணிக நிறுவனங்கள் ஆதிக்கத்தில் அல்லவா அரசுகள் இயங்குகின்றன....அந்த ராமராஜ்யம் என்பது இதில் எப்படி சாத்தியம் என்று பார்த்தால்.. நம் பழைய பனியாக்களே அந்த பன்னாட்டு நிறுவனங்களாக ரிலையன்ஸ் அம்பானி சுரங்கம் அமைக்கும் அதானி என்று வலம் வருகிறார்கள். எப்போதும் போல் பார்ப்பனர்கள் அந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் உள்ளே வந்து நல்ல பதவிகளை பெற்று விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் எந்த மொழி இனப் பகுதி பாலைவனமாய்ப் போனாலும் அவர்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. பனியாக்களுக்கு உலகமே சந்தை..பார்ப்பனர்களுக்குப் படியளக்க உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்கள். அந்த நிறுவனங்கள் தான் தமிழ்நாட்டில் மண்ணுக்குள் இருந்து மேலிருக்கும் நீர் அடுத்து இருக்கும் நீர்ம எரிபொருள் அதன்கீழிருக்கும் காற்று என அடுக்கடுக்காக சுரண்ட வருகின்றனர். காலங்களைக் கண்டு நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை உடைத்து நியூட்ரினோ துகளைத் தேட வருகிறார்கள். அணு உலையும் உரத் தொழிற்சாலையும் அமைத்து உடல் நலத்திற்கும் பாதுகாப்புக்கும் பெரும் தீங்கு செய்கிறார்கள். உரிமையுள்ள ஆற்று நீரைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் பிச்சை எடுக்க வைக்கிறார்கள். கல்வி உரிமையைப் பறித்து மாணவர்களை தற்கொலை செய்ய த் தூண்டுகிறார்கள். தமிழர் என்ற எண்ண வராதபடிக்கு சாதிவெறியர்களாக மடை மாற்றுகிறார்கள். மக்களை மனநோயாளிகளாக மாற்றி சிறு பெண் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்து கொலைசெய்ய வைக்கிறார்கள்.
மேலே சொன்ன இந்தப் பட்டியலை
இன்னொருமுறை படித்துப் பாருங்கள். நாம் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.எதையெல்லாம் எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டியஇடத்தில் நிற்கிறோம்.
இந்த நேரத்தில் மீண்டும் பழைய திராவிட இயக்க வரவாற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தோழர்கள்,
தமிழ் நாட்டின் உரிமைகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தோழர்கள்சாதி ஒழிப்பை பெண்விடுதலையைப் பேச வேண்டிய தோழர்கள் மதவெறியின் முகமூடியை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய தோழர்கள் ஆகிய
அத்தனை பேரையும் தங்கள் கருத்து வன்முறைத் தாக்குதல் மூலம் திசை திருப்புகிறார்கள் இந்த பார்ப்பன ஆதிக்க வெறியர்கள்.
எதிர்வினைகள் தேவைதான்.
இலக்குகள் மாறிவிடக்கூடாது.

ஈழம் பிரச்சினை சர்வதேச அரசியல்

ஈழம் தமிழகத்தால் தீர்த்து வைத்து விட கூடிய பிரச்சினை அல்ல. அதன்பின் இருந்தது சர்வதேச அரசியல். இப்போதாவது படித்து பாருங்கள். இல்லையேல் திரும்ப திரும்ப பகிர்வேன். பொய் பரப்புரை செய்யும் உங்களுக்கே கூச்சம் இல்லாத போது உண்மையை சொல்லும் நாங்கள் ஏன் கூச்சப்பட வேண்டும்...
இன்றொரு வரலாறு
ஈழம் அதன்பின் உள்ள சர்வதேச அரசியல்
இன்றும் கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தை காப்பாற்றியிருக்க முடியும் என்று சொல்பவர்கள் உண்மையிலேயே அறிவற்று பேசுபவர்கள் தான். ஏனெனில் அன்றைய ராஜீவ் காந்தி இன்றைய சோனியா காந்தி என எவர் நினைத்திருந்தாலும் அவர்களால் ஈழப்போரை நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இங்கிருக்கும் யாரையும் நம்பி ஆரம்பிக்கவில்லை. அது தானாக எழுந்த காட்டுத்தீ.
அன்றைய இலங்கைப்போரில் பங்கு கொண்ட நாடுகள் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள். அந்த ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு காரணம். ஆனால் அனைவருக்கும் ஒரே லட்சியம் புலிகளை அழிப்பது மட்டுமே. இந்த நாடுகளுக்கு உள்ள காரணங்களை பார்ப்பதற்கு முன்னர் எல்லா போரிலும் பங்கெடுக்கும் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பங்கெடுக்காததற்கும் காரணங்கள் உண்டு. அதை முதலில் பார்ப்போம்.
இலங்கை. இந்திய பெருங்கடலில் அமைந்த ஒரு அழகான தீவு. அழகு என்பதை தாண்டி வாணிபத்திற்கு ஏற்ற மிக மிக முக்கியமான பல துறைமுகங்களை கொண்ட நாடு. ஆனால் இந்த துறைமுக இடங்களில் பல இடங்களில் வசித்து வந்தவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இந்த துறைமுகங்களின் மீது உலக நாடுகளுக்கு எப்போதுமே ஒரு கண் தான். கிழக்காசிய நாடுகளையும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளையும் இணைக்கும் இந்த நாட்டின் மீது எப்போதுமே எல்லா நாடுகளுக்கும் ஒரு கண்தான்.
ஈழப்போர் நடந்து கொண்டிருக்க அதை பார்த்து கொண்டிருந்த உலக நாடுகளுக்கு உண்மையை சொன்னால் ஒருவித பயம் தான். புலிகளின் போர்த்திறன் அப்படி. புலிகளுக்கு முன்னும் சரி பின்னும் சரி முப்படை வைத்திருந்த போராட்ட குழு உலகில் எவரும் இல்லை. இந்தோனேசியாவில் சுகர்னோ என்பவர் அவரின் போக்குவரத்திற்காக ஒரே ஒரு ஹெலிகாப்டர் வைத்திருந்தார். சண்டைக்கென போர் விமானங்கள் வைத்திருந்த ஒரே போராட்ட குழு புலிகள் தான். விமானம் வைத்திருந்ததை விட மிகப்பெரிய விசயம் அந்த விமானங்கள் எங்கே உள்ளன என்று எந்த சாட்டிலைட்டாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மொத்த விமானத்தையும் கழட்டி மூட்டை கட்டி வைத்து விடுவர். தேவைப்படும் போது மீண்டும் இணைப்பர்.
1999-ம் ஆண்டு செக் குடியரசிடம் இருந்து விமானங்கள் வாங்கினர். ஒரு நாட்டிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கும் அளவிற்கு அவர்களின் வளர்ச்சி இருந்தது. இந்த வளர்ச்சி தான் வளர்ந்த நாடுகளை அச்சுறுத்தியது. அதனால் தான் இவர்கள் ஜெயித்து வந்தால் நமக்கும் இடையூறு தான் பிற போராட்டக் குழுவினருக்கும் இது உத்வேகமாக அமைந்து விடும் என்ற எண்ணம் தான் அமெரிக்காவை வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்க்க வைத்தது.
அடுத்து இந்தியா சென்றதற்கு ஒரே காரணம் பெரியண்ணன் மனப்பான்மை தான். ஆசியாவில் சீனா வளரந்து வரும் நேரத்தில் இந்தியா இந்த பிரச்சினையை முடித்து வைத்தால் அதன் மதிப்பு உலக அரங்கில் உயரும். அதனால் தான்.
பாகிஸ்தான் வந்ததற்கு காரணம் இந்தியா தான். அது உருவானதில் இருந்தே தேசம் வளர்ந்ததோ இல்லையோ இந்தியாவின் மீதான வெறுப்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்தியா தாக்கும் அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இயற்கையாகவே வந்து விட்டது. அதன் வெளிப்பாடாகவே மற்ற அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாக இலங்கைக்கு உதவி செய்தது.
சீனா வந்ததிற்கு முக்கிய காரணமும் இந்தியா தான். செய்தித்தாள்களில் வருவது போல் சீனாவின் நீண்ட கால திட்டம் pearl chain எனப்படும் முத்து மாலை திட்டம் தான். ஏற்கெனவே பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் நல்ல உறவு உள்ளது. பர்மாவில் சீனாவிற்கு என துறைமுகமும் உள்ளது. இதில் இலங்கையையும் பிடித்து விட்டால் இந்தியாவுடன் போர் வந்தால் இந்தியாவை சுற்றி வளைக்க உதவியாக இருக்கும் என்ற எண்ணம் தான். இலங்கைக்கு இலங்கையை தமிழர்கள் அல்லாத சிங்கள தேசமாக மாற்ற வேண்டிய ஆசை. ஆனால் சீனாவிற்கோ இலங்கையை சீனாவின் தொங்கு தேசமாக மாற்றும் ஆசை.
இந்தோனேசியா வந்ததற்கு காரணம் வாணிபம் மட்டுமே. வாணிப தொடர்பு உள்ள ஒரு நாட்டிற்கு உதவி செய்யும் நோக்கத்தில் வந்தது.
ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகள் வந்ததற்கு காரணம் புலிகள் தான். 1990-ம் ஆண்டு புத்தளம் என்னும் ஊரில் இருந்த சில இஸ்லாமியர்கள் சிலர் சிங்களர்களுக்கு ஆதரவாக புலிகளை பற்றிய தகவல்களை அவர்களுக்கு அளித்து வந்தனர். அதை தெரிந்து கொண்ட பிரபாகரன் எல்லா இஸ்லாமியர்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டுமென 1990-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்து விட்டது. இருந்தாலும் இந்த முடிவிற்காக வருந்துகிறோம் என 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆண்டன் பாலசிங்கம் பிரபாகரனை பக்கத்தில் வைத்துக் கொண்டே சர்வதேச பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். இருந்தும் இதை ஏற்றுக்கொள்ள இஸ்லாமிய நாடுகள் தயாராக இல்லை. முடிவு அவர்களும் இலங்கை அரசுடன் இணைந்தனர்.
இப்படி பல சர்வதேச நாடுகளால் பிண்ணப்பட்ட சிக்கலான வலைதான் ஈழப்போர் என்பது. இதில் அடிப்படை அறிவு உள்ள எவனும் ஒரு நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்பட்ட மாநிலத்தின் முதல்வரால் இந்த போரை நிறுத்தியிருக்க முடியும் என்று கூற மாட்டான். அப்படி மீறி கூறினால் அவன் உங்களை ஏமாற்ற முயற்சிக்கிறான் என்பதறிக...

சில வருடங்களுக்கு முன்பு சில NGOக்கள் ஒரு புராஜக்ட்டை ஆரம்பித்தார்கள்

சில வருடங்களுக்கு முன்பு சில NGOக்கள் ஒரு புராஜக்ட்டை ஆரம்பித்தார்கள்.
அதன் நோக்கங்கள்
1) அது சாதி ஒழிப்பு பேசும் தலித் அல்லாத பெரியாரிஸ்ட்களை பிறப்பின் அடிப்படையில் சூத்திரின் என்று பிரித்து அவர்களை தலித்துக்களின் எதிரியாக காட்டுவது. இதன் மூலம் இடைநிலைச்சாதியினருக்கும் தலித்துகளுக்கும் என்றுமே எதிர் எதிர் அணியில் இருக்க வேண்டும் என்ற பார்ப்பனியத்தின் சூழ்ச்சியை செயல்படுத்துவது.
2) தந்தை பெரியாரை அண்ணல் அம்பேத்கருக்கு எதிராக முன்னிருத்துவது. இத்தனைக்கும் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரை தன் தலைவர் என்று அறிவித்தவர்.
3) விடுதலைச் சிறுத்தை ஆதரவாளர்களிடம் ஊடுருவி தந்தை பெரியாரை எதிரியாக முன்னிருத்துவது, இத்தனைக்கும் அண்ணன் திருமாவளவன் தான் இன்றைய கட்சித்தலைவர்களில் பெரியாரை நன்கு உள்வாங்கியவர்.
4) பிறப்பால் தலித் அல்லாதவர்கள் சாதி ஒழிப்பை பேசினாலும், அண்ணல் அம்பேத்கர் தந்தை பெரியார் கருத்துக்களை பேசினாலும் அவர்கள் பிறப்பால் பட்டியலினத்தவர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தலித்துகளிடம் விதைப்பது.
5) அண்ணன் திருமாவளவனை பலவீனப்படுத்த BSP கட்சியினரை பயன்படுத்துவது.
6) பார்ப்பனர்கள் நண்பர்கள், பெரயாரிஸ்ட்கள் எதிரிகள் என்று படித்த தலித் இளைஞர்களிடம் எண்ணத்தை விதைப்பது.
இந்த நோக்கங்களில் இப்பொழுது அவர்கள் ஓரளவிற்கு வெற்றிபெற்றுவிட்டார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பும்-பின்பும்

50 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் கரண்ட் கிடையாது. டவுனுக்குப் போனால்தான் பல்பையே பார்க்க முடியும். இப்போது ஒவ்வொரு கிராமத்து வீட்டிலும் கேபிள் இணைப்புடன் நைட்டு 11 மணி வரை சீரியல் பார்க்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் இருட்டில் பாம்பு கடித்தால் கை வைத்தியமும் வேப்பிலை மந்திரமும்தான். விதி இருந்தால்தான் பிழைக்க முடியும். இப்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எந்தக் கொடூர விஷக்கடிக்கும் மருந்து உள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து வீடு தேடி வரும் லெட்டரைப் படித்துக் காட்டுவதும் போஸ்ட்மேனுக்கான வேலையாக இருந்தது.. பண்ணையார்கள் பலரே கைநாட்டுதான். இப்போது அவரவரும் வாட்சாப்பில் மெசேஜ் பார்த்து உலக செய்திகளை அலசுகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் கிராமத்து தொழிலாளர்களை பண்ணை வீடுகளில் கட்டி வைத்து உதைப்பது எழுதப்படாத சட்டம். பெண்கள் மீதான பெரிய மனிதர்களின் ஆதிக்கம் சர்வசாதாரணம். இப்போது பண்ணை அடிமை முறை ஒழிந்து, கிராமத்து ஆணும் பெண்ணும் படித்து அவரவர் விரும்புகிற வேலைக்குச் செல்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன் நகரத்து வீடுகளிலேயே சைக்கிள்தான் பிரதான வாகனம். இப்போது கார்கூட சர்வசாதாரணம்.
50 ஆண்டுகளுக்கு முன் கோவிலில் தமிழ்ப்பண்டிதர்கள் கதாகலாட்சேபம் செய்தால் புளியோதரையும் தேங்காய் மூடியும்தான் மிஞ்சும். இப்போது டி.வி. பட்டிமன்றங்களில் தமிழ்ப் பேசத் தெரிந்தவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் காலரா போன்ற நோய்கள் வந்தால் ஊரே காலி. இப்போது எய்ட்ஸ்-கேன்சர் எது வந்தாலும் இயற்கை மற்றும் விஞ்ஞான மருத்துவம் சவால் விடுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் அடுப்பங்கரையை சாணி போட்டுமெழுகி, ஈரவிறகில் நெருப்பு பற்ற வைத்து, ஊதாங்குழலால் ஊதி ஊதி பெண்கள் சமைத்து முடிக்க அரை நாளாகும். இப்போது அரைமணியில் அடுப்படி வேலையை முடித்துவிட்டு அவர்கள் விரும்பும் வேலையை செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் மோசடி சாமியார்கள் கமுக்கமாக காமலீலை செய்தார்கள். இப்போது வீடியோவில் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் ரயிலை வேடிக்கை பார்ப்பதும்-வழி தெரியாதது போல வந்து செல்லும் பஸ்ஸில் ஏறுவதுமே பெரும்பயணம்.. இப்போது ஃப்ளைட்டில் பறப்பதும் எளிதாகிவிட்டது.
50 ஆண்டுகளுக்கு முன் பல வீடுகளில் காலை டிபன் கிடையாது. ஹோட்டலில் இட்லி, தோசை, பூரி என்பது காஸ்ட்லி அயிட்டம். இப்போது இயற்கை உணவோ, பாஸ்ட் ஃபுட்டோ வீட்டிலும் தயாராகிறது. ஹோட்டலிலும் கிடைக்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன் பெண்ணை சீரழித்தவனைக் காட்டிக் கொடுக்கப் பயந்து அவனுக்கே இரண்டாம்தாரம்-மூன்றாம் தாரமாக கட்டி வைத்த கொடுமைகள் நடந்தன. இப்போது அப்படிப்பட்டவனை டி.வி. கேமராக்கள் முன் கட்டி வைத்து உதைக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
50 ஆண்டுகளுக்கு முன் தெருவில் விற்றுவந்த நாலணா காய்கறியை பத்து பைசாவுக்கு பேரம் பேசும் பொருளாதார நிலை இருந்தது. இப்போது சூப்பர் மார்க்கெட்டில் ஒட்டப்பட்டுள்ள விலைக்கு பொருளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை மலடி என்று ஊர் தூற்றியது. இப்போது நாலு தலைமுறை சித்த வைத்தியம் முதல் நவீன மருத்துவம் வரை பிள்ளைப் பேறுக்கு உத்தரவாதம் தருகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் நொண்டி-முடம்-குருடு என்று இழிவுபடுத்தப்பட்டவர்களை இப்போது மாற்றுத்திறனாளிகள் என்று மரியாதை கொடுக்கிறோம்.
50 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குள் முடக்கப்பட்ட பெண்கள் இப்போது நாட்டை நிர்வாகம் செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் புயல்-வெள்ளம் என்றால் பேப்பரில் மட்டுமே படித்த வெளியூர் மக்கள் இப்போது நேரில் வந்து நிவாரண உதவி செய்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் பொதுத்தேர்தலில் ஓட்டுக்கு 10 ரூபாய் வாங்கி சத்தியம் செய்து கொடுத்த மக்கள், இப்போது இடைத்தேர்தலுக்கே 6000 ரூபாய் வாங்கியபிறகும் யாருக்கு வேண்டுனாலும் வாக்களிக்கும் தெளிவு பெற்றிருக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்றிருந்த சமுதாயம் இப்போது ஜல்லிக்கட்டு, காவிரி, நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ என எந்தப் பிரச்சினை என்றாலும் ஒன்றுதிரண்டு வீதிக்கு வந்து போராடுகிறது.
50 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் மட்டுமே டெலிபோனை பார்த்தவர்கள் இப்போது ஆளுக்கு ஒரு செல்போனில், ’அந்தக் காலம் போல வருமா’ என்று மெசேஜ் அனுப்புகிறார்கள்.
காலத்திற்கேற்ற வசதிகள் அனைத்தையும் அனுபவித்துக்கொண்டு, வாழ்க்கையின் சுகங்களை எல்லாம் இழந்துவிட்டதுபோல பேசுவது மட்டும் 50 ஆண்டுகளுக்கு முன்பும்-பின்பும் மாறவேயில்லை.
திருவள்ளுவர் ஆண்டு 2049 சித்திரை 6

திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி

திமுகதான் விமர்சிக்க வாகான கட்சி
...............................................................
திராவிட இயக்க வெறுப்பில் திமுகவை அழிக்க நினைக்கும் பார்ப்பனக்கூட்டம் ஒருபுறம்,
இன்னொருபுறம் இதன் தொடர்ச்சியாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வரும் ஜாதியவாதிகள்,
கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் பார்ப்பன கருத்தியலை மூளையில் ஏற்றிக்கொண்டு திராவிட இயக்கத்தை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் விமர்சிப்பவர்கள்,
திராவிட, தமிழ்த்தேசிய இசங்களுக்கு இடையே ஊசலாடும் முற்போக்கு ஜாதியவாதிகள்,
இசங்களுக்கு வெளியே என்ற பெயரில் இன்னும் சிலர்,
இப்படி எல்லோரும் திமுகவை அழிக்கநினைப்பது; குறைந்தபட்சம் பழிப்பது என்று இயங்குகிறார்கள்.
பார்ப்பன, தமிழ்த்தேசிய கம்பெனிகளுக்கு விமர்சிக்க காரணமே தேவையில்லை. 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியிலே... என்று உண்மைக்குப் புறம்பாக அவதூறு பரப்ப தயங்காதவர்கள்.
கம்யூனிஸ்ட்டுகளும் இத்யாதிகளும் மிக எச்சரிக்கையாக திமுகவை விமர்சிக்கும் கணங்களுக்காக தக்கைமீது கண்களாக காத்துக்கொண்டிருப்பவர்கள்.
இவர்களது விமர்சனங்களை சான்றுகளை முன்வைத்து விமர்சித்தால், ஒருபடி பின்வாங்கி அதிமுக பொருட்படுத்தத்தக்க கட்சியே அல்ல என்றும் கொள்கையற்ற அவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது என்றும் சொல்லிவிட்டு திமுகவை விமர்சிப்பதை மட்டும் கருத்தாக முன்னெடுப்பார்கள்.
பொருட்படுத்தவே முடியாத ஒரு கட்சியை சுகமாக வாழ அனுமதித்து, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையில் சந்திக்கும் சிக்கல்களைக் கடந்து ஒருபடி முன்னேற எப்போதும் விளைந்துகொண்டிருக்கும் ஒரு கட்சியின் மீதுதான் விமர்சனம் எனில் அது எத்தகைய அரசியல். யாரை வலுப்படுத்தும் அரசியல். உண்மையில் இத்தகைய சுயவிமர்சனங்கள் கூட அற்றவர்கள்தான் திமுகவினர் என்று கருதுவீர்களேயானால் அது எத்தகைய அறியாமை.
திமுகவை பொருட்படுத்தி விமர்சிப்பதெல்லாம் போதும். போய் ஆளுங்கட்சி தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அதற்கெதிராக களமாடுங்கள்.
நான்சென்ஸ்.

புலம்பெயர் ஈழத்தமிழ் 'வந்தேறிகளுக்கு' என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழக அரசியல் மீது இவ்வளவு அக்கறை

அதென்ன, புலம்பெயர் ஈழத்தமிழ் 'வந்தேறிகளுக்கு' என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழக அரசியல் மீது இவ்வளவு அக்கறை?
சின்னப்பிரபாகரன் சீமானை களமிறக்கி, இந்திய ஏகதிபத்தியத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, திராவிடத்தை தவிடுபொடியாக்கி, ஆரியத்தை அடித்து நொறுக்கி, ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் பூண்டுள்ள அடிமை விலங்கை உடைத்து, வந்தேறிகளை விரட்டி, தமிழ்நாட்டை பிரித்து, அதை ஈழத்தோடு இணைத்து.... யப்பப்பா.... மெய் சிலிர்க்கிறது.
நீ உன் இலங்கை அரசியலை கவனி, போதாதென்றால் நீ வந்தேறியாக குடியேறிய நாட்டில் நடக்கும் அரசியலை கவனி, எல்லாவற்றையும்விட உனது அடுத்த தலைமுறையை முன்னேற்றுவதற்கு வழியை பார். இங்க உள்ள அரசியல நாங்க பாத்துகிறோம்.
முடியாதா, ஒரு 28 கிலோ ஆமைக்கறியை சின்னப்பிரபாகரனுக்கு அனுப்பி வை. சிந்தாமல் சிதறாமல் தின்னு முடிப்பார்... அதை பண்டரிபாய் மாதிரி பாத்து ரசி. அத விட்டுட்டு...

புலம்பெயர் வந்தேறிகளால் முன்னெடுக்கப்படும் வந்தேறி அரசியல்

புலம்பெயர் வந்தேறிகளால் முன்னெடுக்கப்படும் வந்தேறி அரசியல் ! தமிழகத்தில் ஈழப் போராட்டமும் தமிழுணர்வும் கேலிப்பொருளாக ஆக இருப்பது காலத்தின் கட்டாயம் !
ஈழத்தமிழர்களை கீழுள்ளவாறு வகைப்படுத்தலாம்.
1. புலம்பெயர் தேசத்தில் அடைக்கலம் பெற்ற ஒரிஜினல் போராளிகள். ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள், ஊடகவியலாளர்கள், புலி அமைப்பு நிர்வாகிகள் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றுள்ளார்கள். இயக்கம் வலுவாக இருக்கும் வரை இவர்கள் புலப்பெயர் தேசங்களில் பல்வேறு இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு பணிகளை கவனித்தார்கள். சிந்திக்கக்கூடியவர்கள், விவரமானவர்கள். ஆனால் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே வர மாட்டார்கள், தங்களை அடையலாம் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
2. இலங்கையில் நன்றாகக் படித்து, நல்ல பணியில் இருந்தவர்கள். போர் மேகங்கள் சூழச் சூழ, அவர்கள் விரும்பிய சமூக அந்தஸ்தும், வாழ்க்கைச்சூழல் கட்டமைப்பும் கிடைக்காத காரணத்தால், வெளியேறியவர்கள். அவர்கள் ஓரளவு படிப்பும், வசதியும், தொடர்புகளும் பெற்றிருந்த காரணத்தால் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தவர்கள். வந்த நாட்டில், தங்களுக்கு இருக்கும் கல்வியறிவு, அனுபவம் அடிப்படையில் அந்நாட்டிற்கேற்ப மேற்படிப்பு, மொழி படித்து, அலுவலக வேலை செய்யும் அறிவு சார் தளத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள். வெள்ளைக்காரனுக்கு நிகரான சம அந்தஸ்து வாழ்க்கை வாழ்வது அவர்களது இலக்கு.
3. வெளியே செல்வதற்கு வசதியில்லாமல், சொந்த மண்ணிலே அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டச் சூழல் என்பதால் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொருளாதார வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருபவர்கள்.
4. இறுதி போர் முடிந்த கட்டத்தில், இலங்கை அரசால் சிறைப்படுத்தப்பட்டு, மறுவாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டவர்கள். இதில் சிலர், கடுமையான விசாரணை முறைகளுக்கு பயந்து , அப்ப்ரோவராக மாறி, புலிகள் அமைப்பின் உலகளாவிய கட்டமைப்பை தகர்க்க இலங்கை அரசுக்கு துணை போனவர்கள்.
5. புலிகளால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்கள். ஆரம்ப கட்டத்தில் பல்வேறு ஆயுதப்போராட்டக் குழுக்கள் இயங்கின. இறுதியில் புலிகள் அமைப்பு ஏகோபித்த பிரதிநிதியாக உருப்பெற்றது. அந்தப் பாதையில் பல்வேறு மாற்று அமைப்புகள் இரும்புக்கு கரம் கொண்டு நசுக்கப்பட்டன. அதில் பாதிப்புக்குள்ளாகி உயிர் பிழைத்து வேறு நாடுகளில் அடைக்கலம் பெற்றவர்கள். புலம் பெயர் தேசங்களில், இவர்கள் புலிகள் அமைப்புடன் எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். புலிகள் அமைப்பை இவர்களுக்கு பிடிக்காது, இவர்கள் புலிகளை விமர்சிப்பார்கள், புலி ஆதரவாளர்கள் இவர்களை குழப்பவாதிகள் என்பார்கள்.
6. அடுத்து வருவது முக்கியமான கேட்டகிரி. புலம் பெயர் தேசங்களில் வாழும் கணிசமானவர்கள் இவர்கள். போராட்ட சூழலை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டு, வெளிநாடுகளின் வசதியான வாழ்க்கைச் சூழலை நாடி இடம்பெயர்ந்தவர்கள். படிப்பறிவோ, உலகஞானமோ அற்ற பாமர மக்கள். அடைக்கலம் பெறுவதற்கு அடிப்படை தகுதி, தங்கள் நாட்டில் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என மெய்ப்பிக்க வேண்டும். அதற்கு ஏதாவது காரணம் கூறி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் அகதி அந்தஸ்து கிடைக்கும். இல்லையேல் திருப்பி அனுப்பப்படுவர். இதில் பலரும் கூறிய காரணம் " புலிகள் எங்களை பிடித்துக் கொண்டு போயி, சண்டை பிடிக்கச் செய்கிறார்கள். " என்பது. அடைக்கலம் பெறும் நாட்டின் பப்ளிக் பிராசிக்யூட்டர் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து வெளியேறி மற்ற இடங்களில் இவர்கள் வசிக்கலாம் . எனவே இவர்களுக்கு அடைக்கலாம் தரக்கூடாது என வாதாடுவார். இவர்களோ, சிங்கள பிரதேசத்திற்கு சென்றால் எங்களையும் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என கொடுமைப்படுத்துவார்கள் என மன்றாடுவார்கள். இறுதியில் அடைக்கலம் கொடுத்து, தங்குவதற்கு வீடு கொடுத்து, மொழி கற்பிக்க சலுகைகள் கொடுத்து, ஏதேனும் வேலையில் சேர்த்தும் விடுவார்கள். பெரும்பாலும் அறிவுசாரா கழுவல் , துடைத்தல் , துப்புரவு பணி , தொழில்சாலை பணி என பிஸிக்கல் லேபர் செய்வார்கள். மேற்கு நாடுகளில் உள்ள சமூக பொருளாதார இடைவெளி குறைவு என்பதால், இந்தப் பணிகளில் கிடைக்கும் வருவாய் கொண்டு ஓரளவு வசதியான வாழ்க்கை வாழலாம்.
இந்த கடைசி கேட்டகிரிதான் தற்போது எழுந்திருக்கிற சிக்கல்களுக்கு காரணம். கிடைக்கிற வேலையில் நிலைபெற்று வீடு வாசல் வாங்கி கொள்ளுவான். ஒரு கம்பியூட்டர் வைத்துக் கொள்வான். வேலை முடிந்து வந்ததும், லங்காசிறி போன்ற மசாலா ஊடங்களை வாசிப்பது. போரால் பாதிக்கப்பட்டு பின்தங்கிய சமூகத்திலிருந்து வரும் ஊடங்களின் தரம் மற்றும் ரசனை எவ்வாறு இருக்கப்போகிறது? அதில் சினிமா, அரசியல், கட்டுக்கதைகள் , அதாவது சேர்ந்து தமிழக செய்திகள் இடம்பெறும். அதில் சீமான் போன்றோரது உரைகளும் இடம்பெறும். பொழுதுபோக்காக பார்க்கிறவன் அந்த உரைகளை கேட்டு குளிர்ந்து போவான். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அவர்களிடம் இருந்து நன்கொடைகள் பெறப்படும். புலிகள் குறித்து பேசுவதை பார்க்கையில், புலிக்கொடியை பார்க்கையில், ஈழத்தைக் கடந்து தமிழகத்திலே நமக்கும் ஒரு பிரதிநிதித்துவம் இருக்கிறது என்கிற மாயையில் மயக்கம் கொள்வான். புலிகளை பயன்படுத்தி விசா பெற்ற தனது இழிசெயலுக்கு பிராயச்சித்தம் தேடுகிற செயலாக கூட இது இருக்கலாம். யாருக்குத் தெரியும்?!
இவர்கள் அறியாமை காரணமாக சீமான் போன்ற கழிசடைகளை களமிறக்கி, அறிந்தோ அறியாமலோ தமிழகத்தில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வந்தேறிகளாக இருப்பவர்களின் உதவி கொண்டு தமிழகத்தில் இருப்பவர்களை வந்தேறிகள் எனத் தரம் பிரித்து இங்கே நிலவும் அமைதியை, எழுந்து வரும் தமிழ் உணர்வை சீர்குலைக்கும் முயற்சி. புலிகள் எங்களை கடத்திக் கொண்டு போயி சண்டை போட வைக்கிறார்கள் என நீதி மன்ற ரிக்கார்டுகளில் பதிவானது, புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு என உலக நாடுகள் குற்றம்சாட்டக் காரணமானது. அவ்வாறு, புலிக்கொடியை வைத்துக் கொண்டு, வைகோ போன்ற பலர் ஈழம் குறித்து கட்டியெழுப்பிய ஆதரவு உணர்வுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு கேவலம் பிழைப்புக்காக அவரையே வசைபாடும் வாய்ச்சொல் வீரர்கள் என்னளவில் மிகப்பெரும் கோழைகள், துரோகிகள், ஈனப்பிறவிகள்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஈழப்போர் முடிந்த பிற்பாடு, நாடு கடந்த அரசு என ஒரு குழு, மற்றொருபுறம் இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் எடுத்து வைக்க வேண்டும் என ஒரு குழு, இன்னும் பல குழுக்களாக புலம்பெயர் சமூகம் பிளவுற்றுக் கிடந்த காலம். புலப்பெயர் அமைப்பில் இருந்த அறிவுசீவிகள் வைகோ அவர்களை தங்கள் பிரதிநிதியாக உலக அரங்கில் முன்னிறுத்த விரும்பினார்கள். 2008 ஆம் ஆண்டு போர்முனையில் இருந்த புலிகள், ஆஸ்லோவில் நடந்த அமைதி மாநாட்டிற்கு வைகோவைதான் அனுப்பிவைத்தார்கள். போர் முடிந்த பிறகு ப்ருசல்ஸ் நிகழ்வுக்கு அவரைத்தான் அழைத்தார்கள். ஏன்? காரணம், அவரது தொடர் ஆதரவு, தியாகம், 25 ஆண்டுகள் பாராளுமன்றவாதி என்கிற தகுதி , உலக அரங்கில் கருத்துக்களை எடுத்து வைப்பதற்கான தகைமை என பல காரணம். 2011 ஆம் ஆண்டு நான் இந்தியா வரும் பொழுது, அவரை சந்திக்க இருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு என்னிடம் இதை தெரிவிக்குமாறு கோரினார்கள். சரி, அதனால் என்ன என நானும் அவரை சந்திக்கையில் இக்கருத்தை தெரிவித்தேன்.
அதற்கு வைகோ அவர்கள் சொன்ன பதில் " தலைமை ஏற்கின்ற அளவிற்கு எனக்கு தகுதி இருக்கிறதா எனத தெரியவில்லை. ஈழத்தமிழர்களுக்கு இன்றும் என்றும் ஒரே ஒரு தலைவன்தான் அதுதான் தம்பி மேதகு பிரபாகரன். உங்களுக்கு ஆதரவாக இங்கே அண்ணன் நெடுமாறன் இருக்கிறார், நான் இருக்கிறேன், இங்கே பல உணர்வாளர்கள் நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நான் செய்ய வேண்டிய தலையாய பணி என்னவென்றால், இன்று இருக்கிற 30 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு ஈழப்போராட்டம் குறித்த புரிதலோ வரலாறே இல்லை, எனவே அவர்களுக்கு இது குறித்து எடுத்துச் செல்வதுதான் என் பணி . ஈழம் என்பது தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட உன்னதமான ஒரு போராட்டம். அது ஒரு நாள் வெல்லும் என நான் நம்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த கோரிக்கையை அனுப்பிய சகோதரர்களுக்கு நெகிழ்ந்து நன்றி கூறிக் கொள்கிறேன். எனக் கூறிவிட்டு, அதன் பிறகு ஈழப்போராட்டம் குறித்து சிடி தயாரிப்பதும் , அதை பள்ளி கல்லூரி வாசல்களில் நின்று விநியோகிப்பதுமாக தன் பணியைச் செய்தார்.
உலகளாவிய அளவில் ஈழத்தமிழர்களுக்கு தலைமையேற்கிற வாய்ப்பு தன்னை தேடி வந்த பொழுது அதை தவிர்த்தவர் வைகோ (ஆதாரம் உள்ளது). அவர் வேண்டாம் என நிராகரித்த பொறுப்புக்கு தன்னைத்தான் வலிந்து சின்னப்பிரபாகரன் எனப் பறைசாற்றிக்கொண்டு, அதே புலி பெயரை வைத்துக்கொண்டு, எச்சில் இலையில் பசியாற வந்தவர்கள் இன்றைக்கு அவரையே கிண்டல் செய்வது வன்மத்தின் உச்சம்.
இது ஒரு புறம் இருக்க, இந்த புலம்பெயர் புண்ணாக்குத் தமிழர்களுக்கு நான் விடுக்கும் கோரிக்கை / எச்சரிக்கை என்னவென்றால், உன் ஈழப்பிரச்சனை , உன் மேதகு பிரபாகரன் எல்லாம், வைகோ அறிமுகப்படுத்தும் வரை எனக்குத் தெரியாது. அவரது அரசியல் நேர்மையும், தனிமனித ஒழுக்கமும் தான் அவர் பரிந்துரையை என்போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளச் செய்தது. ஏற்றுக் கொண்ட அரசியல் தளத்தில், தன்னலம் பாராது மக்கள் பிரச்சனைகளுக்கு போராடுவதையே வாழ்க்கையாக கொண்ட வைகோவை ஒருவன் பெட்டி வாங்கி கொண்டான், வடுகப்பயல் என வாய்க்கூசாமல் மீம்ஸ் போட்டு விமர்சிக்க இயலுகிறதென்றால், உன் மேதகு பிரபாகரன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டன் இல்லை. நாங்களும் உன்னைப்போன்று படிப்பறிவற்ற பாமர வந்தேறிகள் இல்லை. நன்கு பயின்று, தொழில்நுட்பத்தில் பணியாற்றும், பல்வேறு தரவுகளை அலசி ஆராயும் நுண்ணறிவு பெற்றவர்கள்தான். வைகோ மீது வைக்கப்படும் விமர்சங்கள், கேலி கிண்டல்களைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கிண்டலாக உன் மேதகு மீது விமர்சனம் எழுத எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது. அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு காரணம், வைகோ தாங்கிப்பிடித்த ஈழக் கொடியை தாளாமல் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலத்தால் மறக்கப்பட வேண்டிய, மறக்கடிக்கப்பட்ட வேண்டிய தவறுகளை கீறி ரணமாக்க வேண்டாமே என்கிற கரிசனமும் ஒரு காரணம்.
மேலும், உண்மையான போராளிகள், அறிவுசீவிகளின் போராட்டம், இழப்பு மற்றும் எண்ணற்றோர் செய்த தியாகத்தை கொச்சைப்படுத்துவதாக ஆகி விடும் , அதற்கு நமது பண்பட்ட மனம் ஒத்துழைக்காது. புலம்பெயர் தேசத்தில் வாழும் எனக்கு அணைத்து தரப்பிலும் ஈழத்து நண்பர்கள், உறவினர்கள் உண்டு, அவர்கள் மனதை ஏன் புண்படுத்துவானேன் என்கிற எண்ணம் உள்ள காரணத்தால். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் வளர்ந்து வரும் ஈழ ஆதரவுக்கு, தமிழ் உணர்வுக்கு எதிராக உயர்மட்டத்தில் பின்னப்பட்டு களமிறக்கப்பட்டுள்ள திட்டமிட்ட சதிகளின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்கிறது. ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பொறுமையை சோதிக்கிற வேலையை தான் தமிழகத்திலே இந்த தற்குறிகள் செய்து கொண்டு திரிகின்றன. நாலு பேர் ஈழப்போராட்டம் குறித்து மீம்ஸ் போட்டால் அது பற்றிக்கொள்ளும், அதை கொண்டு இந்தக் கோமாளிகளுக்கு வந்தேறி வியாபாரம் சூடு பிடிக்கும். இறுதியில், ஒரு உன்னதமான போராட்டமும், எண்ணற்றோர் உயிர்தியாகமும் கேலிக்குரியதாகிவிடும். காலம்கடந்த பிறகு எங்களைக் கடிந்து கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. எனவே ஈழத்து 'ஒரிஜினல் போராளிகள்', தமிழகத்தில் உள்ள 'உண்மை' உணர்வாளர்கள் இதை கவனிக்க வேண்டும்.

8th July 1971, அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம்

படம் 1. பொய்ச் செய்தி.

படம் 2.
8th July 1971, அன்று அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம்
குறிப்பாக 14ஜூலை 1971ல் முதல்வர் பேசியதாக எந்த அவை குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

கச்சத்தீவு கதையறிவோம்.

கச்சத்தீவு கதையறிவோம்.
யார் என்னனென்ன செய்தார்கள்?
கட்சியை உடைத்துக் கொண்டு தனியே கட்சி நடத்திக் கொண்டிருந்த
புரட்சி தலைவர் எம்ஜிஆர், "பாடும் போது நான் தென்றல் காற்று" என்று மஞ்சுளாவோடும் லதாவோடும் டூயட் பாடிக்கொண்டிருந்தார் என்பதை நம்
முதல்வர் அறிந்திருக்கவில்லை போலும்.
1974ல் பிரதமர் இந்திராகாந்தி முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் குறிப்பிட்டது யாதெனில், 'இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க முடிவுசெய்துவிட்டோம். உங்களுக்குக் கருத்து ஏதும் இருக்கிறதா?'
என்பதே கடிதத்தின் பொருள்.
வாயே திறவாதிருந்தனர் முன்னாள் முதல்வர்கள் காமராஜரும், பக்தவச்சலமும். இத்தனைக்கும் அன்று எதிர் கட்சி ஸ்தாபன காங்கிரஸ்.
அனைவருக்கும் தெரியும் அது இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் தளம். இந்த செய்தி அறியாதவரா பிரதமர்?
சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு தனது நிலையை எடுத்து வைத்தார் முதல்வர்.
இருந்தும் பிரதமர் இந்திரா காந்திக்கு முறைப்படி கடிதம் எழுதினார் முதல்வர்.
உடனடியாக முதல்வர், அமைச்சர் செ. மாதவன் சகிதம் டெல்லி புறப்பட்டார். கைவசம் பல கோப்புகளை எடுத்துச்சென்றார். அத்தனையும் ஆதாரங்கள். கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். இந்தியாவின் நிலப்பகுதி என்பதற்கான ஆதாரங்கள். முக்கியமாக, இலங்கைக்கும் கச்சத்தீவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள். டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேசினார் கருணாநிதி.
ராமநாதபுர அரசர் அவருக்கு சொந்தமான தீவை குத்தகைக்கு விட்டு இருந்ததை சுட்டிக்காட்டினார். அனைத்து ஆதாரங்களையும் விளக்கினார், மீனவர்கள் வாழ்வாதாரம் பற்றி பேசினார். கச்சத்தீவு தாரை வார்க்கப்படக்கூடாது. தமிழக மீனவர்கள் வாழ்க்கையில் மண் விழுந்துவிடக்கூடாது என கேட்டுக் கொண்டார் முதல்வர் கலைஞர்.
சந்திப்பு மட்டுமே பலன் தராது என்று நினைத்தார் கலைஞர். தமிழகம் திரும்பியதும் கச்சத்தீவு தொடர்பான தமிழக அரசின் கருத்தை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தார் கலைஞர்.
முதல் அம்சம், கச்சத்தீவு பற்றிய ஆதாரங்கள் ஆராய்ந்து பார்த்தால் பலவிஷயங்கள் நமக்குச் சாதகமாகவே இருக்கின்றன. கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள்கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954ல் இலங்கை வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை.
இரண்டாவது அம்சம், கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குபகுதி கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்கு கப்பம் கட்டியதுகூட இல்லை.
ஆக, கைவசம் இருக்கும் இந்த ஆதாரங்களைக் கொண்டு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும். எனவே, இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வரும்பொழுது இந்த ஆதாரங்களை எடுத்துக்காட்டி ‘கச்சத் தீவு இலங்கைக்கு சொந்தமல்ல‘ என்று நிரூபிக்க முடியும் என்பதுதான் முதலமைச்சர் கருணாநிதி முன்வைத்த வாதம்.
முதல்வர் கருணாநிதியிடமிருந்து வந்த கடிதத்தை சடங்குக்கு வாங்கி வைத்துக்கொண்டு அடுத்தடுத்த வேலைகளை பார்க்கத்துவங்கினார் பிரதமர்.
26 ஜூன் 1974 அன்று இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் பிரதமர் இந்திராவும், இலங்கை சார்பில் சிரிமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்து போட்டனர்.
ஆம். கச்சத்தீவு தாரை வார்ப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் என்பதையும் இதில் மாநில முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை, கருத்து சொல்வதைத் தவிர என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார் பிரதமர் இந்திரா காந்தி.
பின்னர் மாவீரர் எம்ஜிஆர் ஆட்சியில் தான் இந்திய வரைபடத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இந்த செய்தி, நிகழ்வுகள் எதுவுமே தெரியாமல் கருணாநிதி கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டார் என்று புரளி பேசும் அனைவரும் அறிந்திடவே இப் பதிவு.
கலைஞர் எதிர்ப்பு நண்பர்களுக்கும் இந்த பதிவு ஒரு தெளிவுரையை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்.
ஐயா முதல்வர் ஆகிவிட்டேன் உங்களுடைய வேண்டுகோள் என்ன என்று காமராஜர் கேட்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு மந்திரியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமியுங்கள் என்கிறார்.
திரு. பரமேஸ்வரன் என்ற இளைஞரை காமராஜர் மந்திரியாக்குகிறார்.
இதை அண்ணா புகழ்ந்து எழுதுகிறார்;
பரமேஸ்வரன் மந்திரியானதும்
ஸ்ரீரங்க நாதரும் தில்லை நடராஜரும் பதறிய காட்சி கண்டேன், அந்த மாட்சி கண்டேன் என்றார்,
இதோ என் இனத்தைச்சேர்ந்த இளைஞன் ஆலயத்தினுள் அமர்ந்துவிட்டான் இதற்கு பெரியாரே காரணம் என்று அம்பேத்கர் மகிழ்ந்து கடிதம் எழுதினார். இது இந்தியாவில் எங்கேயாவது நடக்குமா அது பெரியார் மண்ணில்தான் சாத்தியம் ஆகும் என்றார்.
இதுதான் தி.க, திமுக, காமராஜர், அம்பேத்கர் வரலாறு.
இன்று காமராஜரும், அம்பேத்கரும் இல்லை.
ஆனால் தி.கவும், திமுகவும் இருக்கிறது, கடந்த காலம் போலவே, இப்போதும் செயல்படுகிறது.

ஈழப்பிரச்சனையில் திமுக என்ன பண்ணிருக்கணும்

ஈழப்பிரச்சனையில் திமுக என்ன பண்ணிருக்கணும்னு நினைக்கிறீர்களோ தெரியலை ஆனா நான் ஒரு ஈழத்தவன் எனக்கு அந்த வரலாறு அத்துப்படி நேரில் இருந்து பார்த்தவன் எனும் ரீதியில் சொல்கிறேன்.
இந்திய அமைதிப்படையை திருப்பி அழைத்தது திமுக அரசு அது திரும்பிய பொழுது ஒரு முதலமைச்சராக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு வரவேற்க போகவில்லை பதிலுக்கு அவர் சொன்னார் எனது மக்களை கொன்றுவிட்டு வரும் ராணுவத்தை நான் ஏன் வரவேற்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் ஆயுததாரிகளுக்கு ஆதரவான அரசு செயற்படுகிறது ஆட்சியை கலைக்கவேண்டும் என ஜனாதிபதி, கவர்னரிடம் முறைப்பாடுகள் செல்கின்றன அவை நிரூபணம் ஆகாமல் ஆட்சி தப்புகிறது
பின்னர் புலிகள் தமிழகத்தில் நுழைந்து இந்திய ராணுவத்துடன் வந்த பத்ம நாபா போன்ற 12 பேரை சென்னையில் சுட்டு கொலை செய்கிறார்கள், கொலை என்றால் என்னனு உங்களுக்கு தெரிந்திருக்கும் அதை விட மோசமான கொலைகள் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மறு நிமிடமே திமுக வின் ஆட்சி கலைக்கப்படுகிறது. இந்த கொலைகளில் திமுக ஆட்சியை இழந்தது தான் மிச்சம் அப்போ கூட திமுகவின் ஈழ கொள்கையில் மாற்றம் வரவில்லை.!
ஆட்சி கலைக்கப்பட்டு மறுபடியும் தேர்தல் வருகிறது அப்போதான் புரட்சித்தலைவினு ஒருத்தர் தமிழக முதல்வர் பதவிக்கு போட்டி போட ஆரம்பித்தார் ராஜீவ் காந்தி அவர்களுடன் கூட்டணி போட்டு அவர் ஆரம்பித்தார்.
மறுபடியும் ஒரு 12 பேரை கொலை செய்தார்கள் அந்த ஈழத்துக்காரர்கள் அதில் ராஜீவ் காந்தியும் அடங்குவர்.
பத்ம நாபா கொலையுடன் போன ஆட்சியாவது அடுத்த தேர்தலில் திரும்பி திமுகவிற்கு வந்திருக்கும் ஆனால் இம்முறை ராஜீவ் கொலைசெய்யப்பட்டவுடன் திமுகவிற்கு தமிழகத்தில் டெப்பாஸிட்டே காலி செய்யப்பட்டது இவ்வளவுக்கும் அந்த கொலைகள் எவற்றுக்கும் திமுகவிற்கும் எள்ளளவு கூட தொடர்பு இருக்கவில்லை.
இன்னமும் ஈழ கொள்கை நிலைப்பாட்டில் திமுகவிற்கு மாற்றம் நிகழவில்லை. ஒரே நாளில் அத்தனை திமுக கொடி கம்பங்களும் தமிழக்மெங்கும் வெட்டி சாய்க்கப்பட்டது.
2000 ஆரம்பங்களில் ஈழ சமாதான காலம் ஆரம்பமானது
அந்த பேச்சுக்களில் திமுக தமிழக பிரதிநிதியாக ஒரு மரியாதைக்கு தன்னும் அழைக்கப்படவில்லை. நார்வேயில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து போனார்கள். அப்போல்லாம் திமுகவிடம் ஈழ ஆதரவு போட்டது போலவே இருந்தது
தமிழ்செல்வன் மரணித்தபொழுது கூட தலைவர் இரங்கற்பா எழுதினார்.
அதே போல இன்னும் திமுகவின் ஈழ நிலைப்பாடு மாறாத ஒன்றாகவே இருக்கிறது.
ஆனால் புலிகள் எம்ஜியாரினால் உருவாக்கப்பட்டவர்கள் வளர்க்கப்பட்டவர்கள் அவர்களால் எம்ஜிஆர் இறந்த பின்னர் கலைஞரிடம் செல்ல முடியவில்லை. பதிலுக்கு ஶ்ரீ சபாவின் கொலையால் கலைஞர் மிகுந்த துயரம் அடைந்தார்.
ஸ்டாலினும் ஶ்ரீயும் இதோ இந்த மேஜையில் இருந்து காலை உணவு உண்டார்கள் என தலைவர் சொன்னார். ஆட்சியில் இல்லாத பொழுதும் பாலைவன ரோஜாக்கள் என்று படம் எடுத்த தலைவர், சபாரட்ணம் என ஹீரோவுக்கு பெயர்வைத்தார்.
ஈழம் என்பது திமுகவுக்கு இன்னமும் உயிருடன் இருக்கும் ஒரு கோட்பாட்டு அரசியல் அதை உங்களை போன்ற வரலாற்று தெளிவு இல்லாதவர்கள் பல்வேறுவிதமாக அறிந்து கொள்கிறீர்கள்.

ஒரு வயசாகியும் கல்யாணமாகாத ஐயங்காரின் குமுறல்.

பிஎச்.டி. வேண்டாம். புளித்துவிட்டது.
‘பையன் நல்லவன் தான். பார்த்தேன். ஆனா கொஞ்சம் அசடோ?’ என்றார்.
‘இல்லை, நல்ல பையன். சிங்கப்பூர்ல என்.யூ.எஸ்.ல படிச்சிருக்கான். கம்ப்யூட்டர்ஸ்ல மாஸ்டர்ஸ். அசடெல்லாம் இல்லை,’ என்றேன்.

இல்லை, நேத்திக்கு பார்த்தேன். சாப்ட்வேர்ல இருக்கேன்னான். ஆனால் நெத்திக்கி இட்டுண்டிருந்தான். அதான் கொஞ்சம் அசடோன்னு தோணித்து,’ என்றார்.
என் தூரத்து உறவுக்காரப் பையனைப் பற்றிச் சொன்னர் பெண்ணைப் பெற்ற இவர். பையன் நெற்றியில் வைணவ அடையாளமான திருமண் இருந்தது அவனுக்கு ‘அசடு’ பட்டம் பெற்றுத் தந்தது.
‘பையன் சூட்டிகை தான். நம்பி பொண் குடுக்கலாம்,’ என்றேன்.
‘அதுக்கில்ல, நேத்தி சாயந்திரம் அவாத்துக்குப் போனேன். பகீர்ன்னுது,’ என்றார். புரியாமல் விழித்தேன்.
‘பையனோட அப்பா குடுமி வெச்சிண்டிருக்கார். அம்மா மடிசார் கட்டிண்டிருக்கா. அதான் பயந்துட்டோம்,’ என்றார் அவருடன் வந்த பெண்ணின் தாயார்.
‘அதால என்ன? அப்பா தானே குடுமி வெச்சிண்டிருக்கார்?’ புரியாமல் கேட்டேன்.
‘நல்ல காலம் அவசரப்படல்ல. மாமியார் மடிசார், மாமனார் குடுமி. எம்பொண்ணு மாடர்னா வளர்ந்தவ. அட்லீஸ்ட் சுடிதார் போட்டுப்பா.
இவ்வளவு ஆசாரம் எல்லாம் அவளுக்கு ஆகாது. அதால சம்பந்தம் பத்தி அப்பறம் சொல்றோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்,’ என்றார் அந்த மாதுசிரோமணி.
‘அப்ப நான் என்ன பதில் சொல்றது பையனோட அப்பாவுக்கு?’ என்றேன் சற்று கடுப்புடன்.
‘பொண்ணு மேல படிக்கணுமாம் பிஎச்.டி. பண்றாளாம்னு ஏதாவது சொல்லுங்களேன்..’ அந்த மாது சிரோமணி.
பையனின் தந்தையார் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் வைதீக வாழ்வு வாழத் துவங்கினார். பையனின் தாயாரும் அப்படியே. இது தங்கள் பிள்ளைக்குக் கல்யாணம் நடக்க ஊறு செய்யும் என்று நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
பல ஐயங்கார் குடும்பங்களில் மடிசார் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. பாரம்பரியத்தைத் தொடர விரும்பும் ஓய்வு பெற்ற பெரியவர்கள் இதைக் கொஞ்சம் மனதில் கொள்ள வேண்டும்.
அது போலவே, பையன்கள் எவ்வளவு நாகரீகமாக இருந்தாலும் அவனது பெற்றோரும் அரை நிஜார் போட்டுக்கொண்டு நிற்க வேண்டும் என்று எதிர்பாப்பதும் நல்லதில்லை.
அவருக்குப் போன் செய்தேன்.
‘என்ன சொல்றாப்பா பொண்ணாத்துக்காரா? குடுமி, மடிசார் அதனால வேண்டாம்கறாளா?’ என்று துவங்கினார்.
‘இல்ல சார், அது வந்து பொண்ணு மேல படிக்கப் போறாளாம். யூ.எஸ்.ல பிஎச்.டி. சீட் கெடைக்கும் போல இருக்காம்..’ என்றேன்.
‘சரி சரி. வேற இடம் இருந்தா சொல்லு. எல்லா பொண்களும் இப்ப பிஎச்.டி. படிக்க அமெரிக்கா போறா போல இருக்கு. அமெரிக்காவுல ஐயங்கார் பொண்கள் தான் பிஎச்.டி. படிக்க வேணும்னு கேக்கறாப்ல இருக்கு. இதோட நாலு பொண்ணு அப்பிடி போயிட்டா..’ என்று முடித்தார்.
ஐயங்கார் குடும்பங்களில் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பு. அதுவும் மணல்கயிறு எஸ்.வி.சேகர் மாதிரி கட்டளைகள் போடுகிறார்கள். அவற்றில் சில:
மாமியார், மாமனார் இருக்கக் கூடாது. (உயிரோடு)
இருந்தாலும் கூட இருக்கக்கூடாது.
முடிந்தவரை யூ.எஸ். க்ரீன் கார்ட் பையனாக இருக்க வேண்டும்.
யூ.எஸ். குடியுரிமை பெற்றிருந்தால் விசேஷம்.
தன்னைவிட அதிகம் படித்திருக்க வேண்டும்.
தான் குறைந்தது முதுகலை (கணினிப் பொறியியல்). எனவே பையன் முனைவர் பட்டம்.
பையன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். இவற்றில் படித்திருக்க வேண்டும். மெட்றாஸ் ஐ.ஐ.டி, அகமதாபாத் ஐ.ஐ.எம். விசேஷம்.
அமெரிக்கப் பல்கலைகளில் ஒரு முதுகலையாவது படித்திருத்தல் வேண்டும்.எம்.ஐ.டி, கால்டெக் விசேஷம்.
சி.ஏ.வாக இருந்தால் அமெரிக்க சி.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்.
அமெரிக்காவில் வீடு இருந்தாலும் பையனுக்குக் கடன் இருக்கக்கூடாது. (2008ற்குப் பின்னான ஞானோதயம்)
முடிந்தவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்தியா வர வேண்டும். வந்தாலும் மாமியார் வீட்டில் சில நாட்கள் தான் தங்க முடியும்.
அமெரிக்காவில் தான் குழந்தைப் பிறப்பு. அதற்கு பெண்ணின் பெற்றோர் ஆறு மாதம், அதன் பின் கணவனின் பெற்றோர் ஆறு மாதம் வரலாம்.
ஆனால் இருவரும் ஒரே நேரத்தில் வரக்கூடாது.
அந்த உறவுக்காரப் பையனுக்கு வேறு நல்ல இடத்தில் கல்யாணம் நடந்து தற்போது இருவரும் அமெரிக்காவில். தந்தையும் தாயும் சென்னையில் குடுமியுடனும், பஞ்சகச்சத்துடனும். நிராகரித்த பெண் தற்போது அமெரிக்காவில் இன்னும் திருமணமாகாமல். அவளது தாயும் தந்தையும் இந்தியாவில் அதே பழைய பல்லவியைப் பாடிக்கொண்டு.
‘நீங்க அமெரிக்காவுல தானே இருக்கேள்? நல்ல வரனா இருந்தா சொல்லுங்கோ.
எம்பொண்ணு பெர்க்லில பிஎச்.டி. பண்ணி ண்டி ருக்கா. நம்மடவா பையனா நியம நிஷ்டையோட இருக்கற குடும்பமா இருந்தா சொல்லுங்கோளேன்..’ என்றார்.
என் முகம் அவருக்கு நினைவில் இல்லை என்று தெரிந்துகொண்டேன்.
கல்யாணப் பெண்களே! அடுத்த முறை வேறு ஏதாவது காரணம் சொல்லுங்கள். பிஎச்.டி. வேண்டாம். புளித்துவிட்டது.
படித்தேன் பிடித்தது பகிர்கிறேன்

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி

"பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி" என்பதை பெரியார் தான் சொன்னதாக கதை கட்டிவிடுவோர் அதற்கான தரவு எதையாவது கொடுத்துள்ளார்களா?

இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் அல்லது இந்த கூட்டத்தில் இன்ன தேதியில் பேசினார் அல்லது இந்த பத்ரிக்கையில் இன்ன தேதியில் எழுதினார் என்று..

கொடுக்கமாட்டார்கள்.. ஏனென்றால் அது பெரியாரின் சிந்தனை அல்ல..

இதை ஒரு "Ancient saying" என்று 1944-ல் "Verdict on India" என்ற புத்தகத்தில் "Beverley Nichols" குறிப்பிட்டுள்ளார்.. ஆனால் அவர் ஆங்கிலக் கைக்கூலி, இந்து மதத்தை தவறாக எழுதவே வந்தார் என்று வழக்கம்போல சிலர் கூறுவார்கள்..

நடராஜன் - தமிழீழம் - வைகோ

நடராஜன் அதிகார பொறுப்பில் இருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும் : வைகோ
1989ல் கலைஞர் புலிகளுக்கு உதவுகின்றார் என மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியவரில் நடராஜன் பெயரும் உண்டு, அமைதிபடை காலத்தில் ஜெயாவுடன் ராஜிவ் கூட்டணி வைத்தபொழுது நடராஜனே சூத்திரதாரி
காங்கிரஸ் கூட்டணிக்காக ராஜிவின் நட்புக்காக அமைதிபடை மோதலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நடராசன்
ஜெயா ஆட்சியில் இருந்தபொழுதெல்லாம் நடராஜன் சொத்துகுவிப்பிலும் அதிகாரத்திலும் கவனம் செலுத்தினாரே அன்றி ஈழத்தில் அல்ல‌
இங்கு சசிகலா குவித்த கோடி பணங்களை எண்ணிகொண்டிருந்த நடராஜன் என்று ஈழம்பற்றி பேசினார்
2006ல் இருந்து கலைஞருக்கு நெருக்கடி கொடுக்க திடீர் ஈழ விசுவாசியாக வேடம் பூண்டு சீமான், வைகோவுடன் சுற்றிகொண்டிருந்தார் நடராஜன்
பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என ஜெயா சொல்லும்பொழுது அமைதி காத்தவர் நடராஜன்
நடராசன் இந்திய பிரதமராக இருந்திருந்தால் கூட தமிழீழம் மலர்ந்திருக்காது
மிகபெரும் சுயநலவாதி ஒருவனை , அவன் அதிகாரத்தில் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் என சொல்லும் வைகோவின் மனநிலை எப்படி இருக்கும்?
வைகோவின் மனநிலை சரியில்லை என சந்தேகிக்கின்றோம் என தமிழிசை சொன்னது 100% சரி

வீரப்பன் - காவிரி பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லை

1991 ம் ஆண்டு காவிரி விகாரத்தின் பொழுது வீரப்பன் எங்கிருந்தார் என்று கேட்டால் ... யாருக்கும் பதிலிருக்காது ... 1995 ம் ஆண்டு சன் டிவி க்கு அவர் தேவைப்பட்டார் , அவர்கள் கொடுத்த பணம் வீரப்பனுக்கு தேவை பட்டது , பயன்படுத்திக்கொண்டார் , அப்பொழுதும் பார்த்தீர்கள் என்றால் காவிரி குறித்தெல்லாம் அவர் எதையும் பேசியிருக்க மாட்டார் . ஆனால் 1997 ம் ஆண்டு அவருக்கு கடுமையான பண நெருக்கடி ஏற்படுகின்ற சூழலில் தான் தமிழ் தேசிய இயக்கங்கள் சிலவற்றுடன் தொடர்புகள் ஏற்படுகிறது .... அதன் பின்னர் நடந்த ராஜ்குமார் , நாகப்பா விவகாரங்களை நாம் அறிவோம் . இதில் எங்கும் காவிரி என்கிற பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லை . கடைசியில் 2004 இல் அவர் கொல்லப்படுகிறார் ... அவர் சட்டப்படி காவல் துறையிலோ துணை ராணுவம் அல்லது ராணுவத்திலோ இணைந்திருந்தால் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு செல்லும் சாதுர்யம் கொண்டவர் என்பதில் மாற்றுக்கருதுமில்லை ஆனால் அவரை பெரிய மாவீரன் என்றும் காவிரியை அவர் மீட்டிருப்பார் என்றும் கட்டமைப்பதில் தான் நமது உணர்ச்சி குவியல்கள் சங்கமிக்கிறது .

ஒரு மோடி பக்தனின் புலம்பல்

நான் ஏன் பாஜக வை ஆதரிக்கிறேன்னு ஒருத்தர் சமீபத்தில் புக் போட்டார். இன்று அவர் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த புத்தகத்தை வெளியிட்ட பின் அவரது சொந்த வியாபாரத்தில் படு மோசமான நிலையில் இருக்கிறாராம். அவரது நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் 35 சதவிகித பேர் அவரை விட்டு சென்றுவிட்டார்கள் என புலம்பி இருக்கிறார்!
உண்மையில், தமிழ்நாட்டு மக்கள், பாஜக மீது எந்த அளவுக்கு வெறியில் இருக்கிறார்கள் என்பதற்கு, இது ஒரு உதாரணம் என நினைக்கிறேன். புக் போட்ட இவருக்கே இந்த நிலை என்றால் எச்சை ராஜாக்களும், சிப் சேகர்களும் அரசியல் அகதிகளாக தான் திரிய வேண்டும் போல.

------



 ★ ஒரு தொழில் செய்பவராக என் தனிப்பட்ட மனவேதனை என்னவென்றால் தமிழகத்தில் பிஜேபி கட்சியை ஆதரிப்பது ஏறக்குறையத் தற்கொலைக்கு சமமான முடிவு. 

★ எனது புத்தக வெளியீட்டுக்குப் பின் நான் சுமார் 35% எனது வெகுநாள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளேன்.


★ எனது வருமானம் பெரும் பாதிப்பை உணர்கிறேன். அத்துடன் அது தொடர்வதும் வேதனை அளிக்கிறது. 

★ "என் புத்தக வெளியீட்டுக்குக் கூட 5பைசா கூட ஆதரவு கொடுத்தவர்கள் கிடையாது இங்கே தமிழக பிஜேபி". நான் புத்தகம் வெளியிட விரும்புகிறேன் என்றதும் எனக்கு உதவியது முழுக்க பிஜேபி ஆதரவாளர்கள் கிடையாது. அவர்கள் மோடி ஆதரவாளர்கள். 

★ வெளியான என் புத்தகம் கூட சென்று சேர்ப்பதில் ஆர்வம் காட்டியது இல்லை இங்கே பிஜேபி என்பது வருந்த தக்க உண்மை.

★ "சார் நீங்கள் நிறைய நிர்வாகம் பொருளாதாரம் சார்ந்த விளக்கம் தந்து எழுதுறேங்க.. நான் வேணும்னா உங்கள் கட்டுரைகளை ஒரு தொகுப்பாக எடுத்து பிழைநீக்கம் செய்து தரவா" என்று முன் வந்தவர் ஒரு திமுக உறுப்பினர். 

★ வெறும் தொலைப்பேசியில் பாராட்டு மட்டுமே தெரிவித்த பிஜேபி தலைவர்கள் இங்கே அதிகம். வேறு எந்த உதவியும் கிடைத்தது கிடையாது. 

★ பிஜேபி கட்சியில் சேருங்கள் என்று அழைப்பு வந்ததே??? வந்தது. , ஏதாவது ஒரு அமைப்பின் கீழ் சேர்ந்து கொள்ளுங்கள். வேலை பாருங்கள் என்று அழைப்பு வந்தது. அவ்வளவு தான். 

★ வலதுசாரி கொள்கையும் , இந்த நாட்டை நேசிக்கும் அந்தக் குணத்திற்கும், இந்துதுவா சித்தாந்தமும் , வாஜ்பாய் மோடி போன்ற நல்ல நிர்வாகிகள் மீது கொண்ட அன்பால் நான் பிஜேபி கட்சிக்கு ஆதரவு உருவாக்க வேண்டும் என்று நினைத்தேனே ஒழிய அனைத்து பிஜேபி காரர்களுக்கும் வக்காலத்து வாங்குவது என் வேலை இல்லை. 

★ "இந்த விவரம் தெரிந்த ஒரு பிஜேபி கட்சிக் காரர் கூறுகிறார் - மாரிதாஸ் தியாகம் செய்யலாம் மாரிதாஸ் நாட்டுக்காகத் தியாகம் செய்யலாம்!!!!"... // எப்படி நானும் உன் குடும்பமும் என் அம்மாவும் நடுத்தெருவுக்கு வருவோம் நீங்க காரில் டாட்டா கட்டுவ டீவியில் பிரபலம் என்று திரிவ???? இவர் குடும்பம் சகோதரர்கள் தியாகம் செய்வார்களா??? எனவே 10பைசா உதவினது கிடையாது எனக்கு இந்த தமிழக பிஜேபி.//

★ நான் மோடியை ஆதரித்ததால் இழந்தது தான் அதிகம். ஆனா எப்படி இப்படிப் பேச முடிகிறது இவர்களால்? என்னை அவ்வளவு முட்டாள் என்று நினைத்துவிட்டனரா? 

★ ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மேம்பாட்டைச் சிந்திக்கும் குணத்தால் தான் நான் வலதுசாரிகளுடன் நிற்கிறேன். எவ்வளவு கேவலமான அட்வைஸ் இது!!!

★ என் தானிட்ட வாழ்வைப் பொருளாதார ரீதியாக வீழ்த்த ஒரு பெரும் கும்பல் கிளம்பியுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. Facebook , politics ஒரு தொழில் செய்பவனுக்குத் தேவையா என்று சிந்திக்கும் அளவுக்கு நான் எதோ ஒரு மன கஷ்டத்தை அடைந்துள்ளேன்.