Friday, April 20, 2018

பார்ப்பனத்திமிரை அடக்கும் வழிமுறையை கண்டறிந்தவரும் வென்றவரும்

பதிவு : தோழர் வழக்குரைஞர் அருள்மொழி
தோழர்களே..
பார்ப்பனஜாதி வெறியர்களான
எச்.ராஜாவும் எஸ்.வீ.ஷேக்கரும் எவ்வளவு வன்மமான
கருத்துக்களால் நம் பெண்களின்மீது
உளவியல் தாக்குதல் நடத்துகிறார்கள்
என்பதை கவனியுங்கள்.
அவர்கள் கையாளும் சொற்கள் ஆபாசமானவையல்ல..ஆனால் கருத்துகள் ஆபாசமானவை. கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடியவை.
ஒரு தனிப்பட்ட பெண்ணை அல்ல .
சமூகத்தையே தாக்குவதற்கு
திட்டமிட்டு வீசப்படும் சொல்லம்புகள்.
தந்தை பெரியார் பார்ப்பனர்களுடன் நட்பில் இருந்தார். அவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் சமூகத்தை சீர்திருத்தி சமன்செய்வது எளிது என்று
நினைத்து அதற்கான முயற்சியும் செய்தார். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை..அது மட்டுமல்ல எல்லா வகையிலும் அதற்கு எதிராக
நின்றார்கள். இதை பலமுறை தந்தை பெரியார் பேசியிருக்கிறார்.
அதன் பிறகு தான் அவர் பார்ப்பனர்கள் மீது தீவிரமான கருத்துப் போரைத் தொடங்கினார்.
பெரியார் ஒரு ஜாதியை மட்டும் அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்க வேண்டாம் என்று பேசும் நல்லவர்கள் பலர் இப்போது தெரிந்து கொள்ளலாம் பார்ப்பனத்திமிரை அடக்கும் வழிமுறையை கண்டறிந்தவரும் வென்றவரும் தந்தை பெரியார் ஒருவர் தான்.
ஏனிந்த பார்ப்பன ஜந்த்துக்கள் இப்போது இந்த வேலையைச் செய்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். பொன்னாரும் அதே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த வாதிதான். ஆனால் தன்னை இந்து என்று நம்பி ஏமாறும் கூட்டத்தினைச் சேர்ந்தவர். அவரைப் போன்றவர்கள் தெளிவு பெறும் போது தமது ஜாதியை எப்படி ஏமாற்றி இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எச்.ராஜாவும் சுப்பிரமணிய சாமியும் இல.கணேசனும் அந்த சித்தாந்தத்தின் பயனாளிகள். இந்தியாவை பார்ப்பன பனியா ஆதிக்க நாடாகவே வைத்திருக்கும் கொள்கைதான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம். அதற்கு பெயர் தான் இந்து ராஷ்ட்ரம். அந்த ராஜ்யத்தை அமைக்க அவர்களுக்கு போர்புரியும் வீரர்களும் ஏவல் செய்யும் குரங்குப் படைகளும் தேவை. சீதைகள் இராமன் பெருமையைப் பேசலாம்..ஆனாலும் அவர்கள் தீயில் இறக்கப்படுவார்கள்...பின் காட்டில் தொலைக்கப் படுவார்கள். எனவே பார்ப்பன ஆதிக்கத்தைக் தாப்பாற்றும் ராமராஜ்யம் அமைவதற்கு எல்லா வேலையும் செய்வார்கள் நம் எதிரிகள்.
ஆனால் இன்று உலக வணிக நிறுவனங்கள் ஆதிக்கத்தில் அல்லவா அரசுகள் இயங்குகின்றன....அந்த ராமராஜ்யம் என்பது இதில் எப்படி சாத்தியம் என்று பார்த்தால்.. நம் பழைய பனியாக்களே அந்த பன்னாட்டு நிறுவனங்களாக ரிலையன்ஸ் அம்பானி சுரங்கம் அமைக்கும் அதானி என்று வலம் வருகிறார்கள். எப்போதும் போல் பார்ப்பனர்கள் அந்த நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் உள்ளே வந்து நல்ல பதவிகளை பெற்று விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியாவில் எந்த மொழி இனப் பகுதி பாலைவனமாய்ப் போனாலும் அவர்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. பனியாக்களுக்கு உலகமே சந்தை..பார்ப்பனர்களுக்குப் படியளக்க உலகெங்கும் பன்னாட்டு நிறுவனங்கள். அந்த நிறுவனங்கள் தான் தமிழ்நாட்டில் மண்ணுக்குள் இருந்து மேலிருக்கும் நீர் அடுத்து இருக்கும் நீர்ம எரிபொருள் அதன்கீழிருக்கும் காற்று என அடுக்கடுக்காக சுரண்ட வருகின்றனர். காலங்களைக் கண்டு நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை உடைத்து நியூட்ரினோ துகளைத் தேட வருகிறார்கள். அணு உலையும் உரத் தொழிற்சாலையும் அமைத்து உடல் நலத்திற்கும் பாதுகாப்புக்கும் பெரும் தீங்கு செய்கிறார்கள். உரிமையுள்ள ஆற்று நீரைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் பிச்சை எடுக்க வைக்கிறார்கள். கல்வி உரிமையைப் பறித்து மாணவர்களை தற்கொலை செய்ய த் தூண்டுகிறார்கள். தமிழர் என்ற எண்ண வராதபடிக்கு சாதிவெறியர்களாக மடை மாற்றுகிறார்கள். மக்களை மனநோயாளிகளாக மாற்றி சிறு பெண் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்து கொலைசெய்ய வைக்கிறார்கள்.
மேலே சொன்ன இந்தப் பட்டியலை
இன்னொருமுறை படித்துப் பாருங்கள். நாம் எதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.எதையெல்லாம் எதிர்த்து மக்களைத் திரட்ட வேண்டியஇடத்தில் நிற்கிறோம்.
இந்த நேரத்தில் மீண்டும் பழைய திராவிட இயக்க வரவாற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தோழர்கள்,
தமிழ் நாட்டின் உரிமைகளைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய தோழர்கள்சாதி ஒழிப்பை பெண்விடுதலையைப் பேச வேண்டிய தோழர்கள் மதவெறியின் முகமூடியை கிழித்து மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய தோழர்கள் ஆகிய
அத்தனை பேரையும் தங்கள் கருத்து வன்முறைத் தாக்குதல் மூலம் திசை திருப்புகிறார்கள் இந்த பார்ப்பன ஆதிக்க வெறியர்கள்.
எதிர்வினைகள் தேவைதான்.
இலக்குகள் மாறிவிடக்கூடாது.

No comments: