Friday, April 20, 2018

நடராஜன் - தமிழீழம் - வைகோ

நடராஜன் அதிகார பொறுப்பில் இருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும் : வைகோ
1989ல் கலைஞர் புலிகளுக்கு உதவுகின்றார் என மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியவரில் நடராஜன் பெயரும் உண்டு, அமைதிபடை காலத்தில் ஜெயாவுடன் ராஜிவ் கூட்டணி வைத்தபொழுது நடராஜனே சூத்திரதாரி
காங்கிரஸ் கூட்டணிக்காக ராஜிவின் நட்புக்காக அமைதிபடை மோதலை கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நடராசன்
ஜெயா ஆட்சியில் இருந்தபொழுதெல்லாம் நடராஜன் சொத்துகுவிப்பிலும் அதிகாரத்திலும் கவனம் செலுத்தினாரே அன்றி ஈழத்தில் அல்ல‌
இங்கு சசிகலா குவித்த கோடி பணங்களை எண்ணிகொண்டிருந்த நடராஜன் என்று ஈழம்பற்றி பேசினார்
2006ல் இருந்து கலைஞருக்கு நெருக்கடி கொடுக்க திடீர் ஈழ விசுவாசியாக வேடம் பூண்டு சீமான், வைகோவுடன் சுற்றிகொண்டிருந்தார் நடராஜன்
பிரபாகரனை தூக்கில் போடவேண்டும் என ஜெயா சொல்லும்பொழுது அமைதி காத்தவர் நடராஜன்
நடராசன் இந்திய பிரதமராக இருந்திருந்தால் கூட தமிழீழம் மலர்ந்திருக்காது
மிகபெரும் சுயநலவாதி ஒருவனை , அவன் அதிகாரத்தில் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் என சொல்லும் வைகோவின் மனநிலை எப்படி இருக்கும்?
வைகோவின் மனநிலை சரியில்லை என சந்தேகிக்கின்றோம் என தமிழிசை சொன்னது 100% சரி

No comments: