Friday, April 20, 2018

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்

முதல்வர் ஆனதும் பெரியாரை காண காமராஜர் வருகிறார்.
ஐயா முதல்வர் ஆகிவிட்டேன் உங்களுடைய வேண்டுகோள் என்ன என்று காமராஜர் கேட்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு மந்திரியாக ஒரு தாழ்த்தப்பட்டவரை நியமியுங்கள் என்கிறார்.
திரு. பரமேஸ்வரன் என்ற இளைஞரை காமராஜர் மந்திரியாக்குகிறார்.
இதை அண்ணா புகழ்ந்து எழுதுகிறார்;
பரமேஸ்வரன் மந்திரியானதும்
ஸ்ரீரங்க நாதரும் தில்லை நடராஜரும் பதறிய காட்சி கண்டேன், அந்த மாட்சி கண்டேன் என்றார்,
இதோ என் இனத்தைச்சேர்ந்த இளைஞன் ஆலயத்தினுள் அமர்ந்துவிட்டான் இதற்கு பெரியாரே காரணம் என்று அம்பேத்கர் மகிழ்ந்து கடிதம் எழுதினார். இது இந்தியாவில் எங்கேயாவது நடக்குமா அது பெரியார் மண்ணில்தான் சாத்தியம் ஆகும் என்றார்.
இதுதான் தி.க, திமுக, காமராஜர், அம்பேத்கர் வரலாறு.
இன்று காமராஜரும், அம்பேத்கரும் இல்லை.
ஆனால் தி.கவும், திமுகவும் இருக்கிறது, கடந்த காலம் போலவே, இப்போதும் செயல்படுகிறது.

No comments: