Friday, February 03, 2023

குரைக்கும் வாய்கள்

 *குரைக்கும் வாய்கள்* 👇


கோடிக் கணக்கில் செலவழித்து ஜெயலலிதா கொட நாட்டிற்கு ஹெலிகாப்டரில் போகும் போது வராத கோபம் ..


அப்போலோ மருத்துவமனையில் ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்ட போது வராத கோபம்..


ஒரு முதலமைச்சரை 75 நாட்கள் மருத்துவமனையில் யாரையும் பார்க்க விடாமல் ரகசியமாய் கூத்தடித்து இட்லிக்கு தேங்காய் சட்னி தொட்டு கொண்டார் என்றும், இல்லை இல்லை வெங்காய சட்னி தான் தொட்டுக் கொண்டார் என்றும் மக்களை இளிச்சவாயர்களாக்கிக் கேவலப்படுத்திய போது வராத கோபம்...


வளர்ப்பு மகனின் திருமணத்தை அரசு உயர் அதிகாரிகளை வேலைக்காரனாக்கி, 100 கோடிக்கு மேல் செலவழித்து நடத்திய போது வராத கோபம்...


மக்களின் லட்சக்கணக்கான வரிப் பணத்தை 0 ஓட்டு வாங்கும் மாநிலக் கட்சித் தலைவருக்கு Z பிரிவு பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிக்கும் போது வராத கோபம்.....


மூன்று முறை நீதிமன்றத்தால் "ஊழல் குற்றவாளி" என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதும், நாட்டை ஆண்ட கோமாளிகளால் அரசுப் பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து, நினைவு மண்டபம் கட்டிய போது வராத கோபம்.... 


"எம்ஜிஆர் நூற்றாண்டு விழா" என்ற பெயரில் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்து, *தரையில் தவழ்ந்து சென்றே ஆட்சியைப் பிடித்த அடிமைகள்* கொள்ளை அடித்த போது வராத கோபம்... 


8500, கோடியில் தனி விமானம் வாங்கி அதில் போகும் போது வராத கோபம்... 


3000 கோடி ரூபாய் செலவில் படேல் சிலை வைத்தபோது வராத கோபம்....


 ஆவணப் படங்கள் கொடூர கொலைக் குற்றவாளிகள் என்று சொல்லும் போது வராத கோபம்.....


மக்களின் வரிப் பணத்தை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு வாரி வாரிக் கொடுக்கும் போது வராத கோபம்......


தமிழர்களின் தன்மானத்தைத் தலை நிமிரச் செய்த ஒரு பேனா வைக்கும் போது மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது என்றால்❓❓❓❓


ஏதோ வீசும் எச்சில் இலைச் சோற்றுக்கு பெற்ற தாயை விற்கத் துணியும் ஈனர்கள் செயல் இது என்றும்,


சிந்தனையில் சீழ் பிடித்த மனநோயாளிகளின் பிதற்றலே இது என்றும்,


வீசும் காசின் அளவுக்கேற்பக்குரைக்கும் பிராணியின் செயல் இது என்றும் *பேனா கொண்டு எழுதத் தெரிந்தவர்களால்* எண்ணத் தோன்றுகிறது.


குரைப்போர் குரைக்கட்டும். 


பிஸ்கெட் வீசிக்கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை.  


*அறிவை விரிவு செய்வோம்* 


🔥 *"வாள் முனையை விட பேனா முனை வலியது"*🔥

பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!

பார்ப்பனீயம் எதிர்க்கும் பேனா நினைவுச் சின்னம்!



“1944 இசைச் சித்தர்,வெங்கலகுரலோன் சிதம்பரம் ஜெயராமனின் தங்கையான பத்மாவதி அம்மையாரை திருமணம் செய்து முடிந்து தேனிலவுக்காக மாமானார் வீடான சிதம்பரம் செல்ல ஆயத்தமான நிலையில் 144 தடையுத்தரவு!! 


அதுவும் இந்திய வரலாற்றில் தனி ஒரு மனிதனுக்காக பிறப்பித்தது ஆச்சரியமான செய்தி!


ஆம்! கருணாநிதி என்ற 22 வயது புது மாப்பிள்ளைக்கு தான் !!


ஏன் தெரியுமா? 

அன்றைக்கு பார்ப்பனீய அமைப்புக்கள் சார்பாக சிதம்பரத்தில் வர்ணாசிரம மாநாடு அதை கண்டித்து தனது முரசொலியில் கலைஞர் எழுதுகிறார்;


"பரணி பல பாடி பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரனையில்லா சுயநலத்துச் சோதர்கள் ஒன்று கூடி வர்ணத்தை நிலைநாட்ட வகையின்றி

கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியில் நின்று மானங்காத்திட மறத்தமிழா போராடு"!


இந்த வரிகள் தான் வர்ணகும்பல்களை கலங்கடித்தது மாநாட்டை சீர்குலைக்க சதி என்று முரசொலி மீது புகார் அளித்து சிதம்பரம் நகருக்குள் நுழைய கலைஞருக்கு தடையாணையை பிறப்பித்தது

அன்றைய அரசாங்கம்! 


அதனால் தான்


 அன்று முதல் இன்று வரை பார்ப்பனீயம் கலைஞரை எதிர்க்கிறது அந்த ஆரியத்தையும் அதன் சூத்திர அடிவருடிகளையும் சுட்டெரித்தது கலைஞரின் பேனா !! 


அதை நினைவுச் சின்னமாக அமைத்தால் அவர்களுக்கு எரியத்தானே செய்யும்!!!


யவன குமாரன்