Thursday, June 17, 2021

திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் ஆஷ்

 

  

ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதி வேறுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதியஉணவு உண்ண வேண்டும் எனவும் ஒரே பானையில் குடிநீர் அருந்த வேண்டும் என உத்தரவிட்டவரும்...

பலவருட பழக்கத்தை உடைத்து  குற்றால அருவியில் அனைத்து சாதியினரும் குளிக்கலாம் என உத்தரவிட்டு முன்னின்று நடத்திக் காட்டியவரும்...

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த அருந்ததி இனப் பெண்ணை தங்கள் தெரு வழியே அழைத்துச் செல்ல குறுக்கிட்ட பிராமணர்களை புறந்தள்ளி தன் வண்டியில் அப் பெண்னை ஏற்றி அதே தெருவில் சென்று மருத்துவமனையில் சேர்த்தவருமான

திருநெல்வேலி கலெக்டர் ராபர்ட் வில்லியம் ஆஷ்

1911-ம் வருடம், சனாதன தர்மம் காக்கும் பொருட்டு பாரத மாதா சங்கம் எனப்படும் ஓர் இந்து அமைப்பின் உறுப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று...