Wednesday, February 27, 2019

பார்ப்பனர்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.

‘பார்ப்பனரல்லாதவர்கள்தான் ஊழல் செய்கிறார்கள். பார்ப்பனர்கள் நேர்மையின் சிகரம்’ என்கிற பொதுப்புத்தியை உருவாக்க ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களிலும் பார்ப்பனர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழக அரசியல் சூத்திரர்களை சார்ந்திருப்பதால் ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்கே குதிரைப்பேர அரசியலை முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி. பார்ப்பன தந்திரத்துக்கு பலியான முதல் சூத்திரக் கட்சி காமன் வீல் பார்ட்டி. மைனாரிட்டி காங்கிரஸ் அரசுக்கு முதல்வராக பொறுப்பேற்ற ராஜாஜி, மெஜாரிட்டி காட்டுவதற்காக செய்த தகிடுதத்தங்கள்தான் இன்றைய எல்லா அரசியல் முறைகேடுகளுக்கும் பிள்ளையார் சுழி.