Friday, August 17, 2018

கார்கில் நாயகன் என சங்கிகள் பிதற்றுகிறார்கள்

கார்கில் நாயகன் என சங்கிகள் பிதற்றுகிறார்கள்
கார்கில் போரின் வரலாறு தெரியுமா இவர்களுக்கு
நாட்டின் எல்லையை காக்கும் இராணுவ வீர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி அதாவது கடும் குளிர் காலம் வரும் போது அதனை எதிர்கொள்ள போதிய வசதியை ஏற்படுத்தி தராத காரணத்தால் இராணுவ வீரர்கள் எல்லையை விட்டு (மலை பிரதேசம் ) விலகி நாட்டிற்குள் தஞ்சம் புகும் நிலையை ஏற்படுத்திய அன்றைய பாஜகவின் வாஜ்பாய் அரசின் கவன குறைவாலும் திறம்பட செயல்படாத நிர்வாக திறனையும் நன்கு அறிந்த பாகிஸ்தான் அரசு நம் எல்லையில் ஊடுருவினர் அதன் பின்னர் சில மாதங்களாக இதனை அறியாத மத்திய பாஜக அரசிடம் ஒரு ஆடு மேய்க்கும் தொழிலாளி கூறிய பின்னர் சுதாகரித்து கொண்ட மத்திய அரசு நிலத்தை கையகபடுத்த வேறு வழி இன்றி பல ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார நிலையை மேம்படுத்தி வந்த முந்தைய காங்கிரஸ் அரசின் கஜானாவில் இருந்த பல ஆயிரம் கோடிகளை செலவழித்தும் காஷ்மீரத்து நிலத்தை பாகிஸ்தான் அரசிடம் இருந்து மீட்டனர்
அன்றைய கவனக்குறைவும் திறனற்ற பாஜகவின் நிர்வாகத்தாலும் நாம் இழந்தது இந்திய அரசின் வளர்ச்சியில் பெரும் சரிவு ...
இதனை அறியாத சங்கிகள் வரலாற்றை வெறும் சுண்ணாம்பு கொண்டு அடைக்க முயல்கின்றனர் ...
வரும் கால சந்ததிகள் இந்த வரலாற்றை அறியும் போது கோமியத்தை கொண்டு கழுவினாலும் நாற்றம் தான் எடுக்கும் என்பதை சங்கிகள் மறவ வேண்டாம் 

இந்த அய்யப்பன் எங்கே போனான்

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்
பெண்கள் கோவிலுக்குள் போக கூடாது என்று சொன்ன பார்பன நம்பூதிரிகள் வீட்டிற்குள் தண்ணீர் போகாமல் அய்யப்பன் புலியின் மீது வந்து பந்தோபஸ்த்து கொடுத்தானா
அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜால்ரா தட்டி மேல் ஜாதி இந்துக்கள் என்று சொல்லி கொள்ளும் நாயர் வீடுகளுக்குள் தண்ணீர் போகாமல் அய்யப்பன் அனை கட்டி தடுத்தானா
இயற்கை கொஞ்சம் அதிகமாக மழை பெய்து வருகிறது அவ்வளவு தான் அதற்கு அய்யப்பன் தான் காரணம் என்றால் ஜாதியை காட்டி இந்த ஜாதி மக்கள் இவ்வளவு தூரத்தில்இருந்து சாமி கும்பிட வேண்டும் என்று சொல்லி பெரும்பான்மை மக்களை வெளியே நிறுத்தியது யார் அய்யப்பனா ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யப்பன் கோவிலில் நம்பூதிரியை தொடாமல் பிரசாதம் வாங்கி கொள்ளவும் என்று இன்றும் தீண்டாமை வெறி கொண்டு மக்களை இழிவு படுத்தும் செயலை செய்வது யார் அய்யப்பனா
இன்னும் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் செய்தது தான் பார்பனியம்
உடன்கட்டை ஏற்றியது
மொட்டை அடித்து மூளையில் உட்கார வைத்தது
நம்பூதிரி பார்பனியத்திற்கு முன்னாள் பெண்கள் மாராப்பு போடக்கூடாது என்று சொல்லி கொடுமை படுத்தியது
தேவதாசி முறையை பயன்படுத்தி பெண்களை போக பொருளாக்கியது
அப்போதெல்லாம் இந்த அய்யப்பன் எங்கே போனான் பெண்களின் துன்பம் தெரியவில்லையா ???

Thursday, August 16, 2018

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், கலைஞரை மெரினாவில் அடக்கம் பண்ண அனுமதித்திருப்பாரா......?

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்,
கலைஞரை மெரினாவில் அடக்கம் பண்ண அனுமதித்திருப்பாரா......?
கிழவனுக்கு இழுத்துட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே, மெரினாவில் இனி யாரையும் அடக்கம் பண்ணக் கூடாதுன்னு அவசரச்சட்டம் கொண்டு வந்திருப்பார். ராஜாஜீ ஹாலில் ஒரு மாதத்துக்கு அரசு பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்.......
அடக்கம் பண்ண இடம் கிடைக்காமலும்,
பொது மக்கள் அஞ்சலி செலுத்த இடம் கிடைக்காமலும் செய்திருப்பார்.......
திமுகவினர் வழக்குப் போட்டாலும்,
அதை இழுத்தடித்து பிணத்தை நாறடித்திருப்பார்....
இப்படி ஒரு அதிமுக நண்பர் பதிவிட்டிருந்தார்......
முதலில் அவரை நாம் மனதார பாராட்ட வேண்டும், அம்மையாரின் உண்மையான குணாதிசயங்களை அப்படியே பொதுவெளியில் ஒளிவுமறைவில்லாமல் சொன்னதற்காக.........
அடுத்ததாக,
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கேற்ப,
அம்மையார் ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால், இந்நேரம் உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருப்பார் என்பதை மறந்தே போய் விட்டார் அந்த அதிமுக நண்பர்......
எல்லாவற்றுக்கும் மேலாக,
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடிருந்து,
சிறையில் கம்பி எண்ணாமல் முதல்வராக இருந்திருந்தால், கலைஞரின் உயிரற்ற உடலைப் பார்த்து அவரது மனைவி, மக்கள், பிள்ளைகள், பேரன், பேத்திகள் என அவரது குடும்பத்தார் கதறியழுததைப் பார்த்து, இப்படி ஒரு அன்பான அழகான பாசமான குடும்பம் நமக்கும் இல்லையே என்ற ஏக்கத்திலேயே புழுங்கித் தவித்து மனம் வெந்து நொந்து போயிருப்பார்........

வாஜ்பாய் தீவிர மதவெறியர்

‘ஜென்டில்மேன் வாஜ்பாய்’ என்று சில தமிழ் நாட்டு தலைவர்கள் அவரைப் புகழ்ந்தாலும் வாஜ்பாய் தீவிர மதவெறியர் அவரது வரலாறு.
சில சான்றுகள்:
1. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வாஜ்பாய் இவ்வாறு பேசினார்:
“நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கொண்டு, பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும்.
” இதன் பொருள் என்ன? மசூதியை இடித்து தரைமட்டமாக்கி சமன் செய்ய வேண்டும் என்பதுதானே!
மசூதி இடிப்புக்குப் பிறகு, ‘அவுட் லுக்’ பத்திரிகை அவரை சந்தித்து இந்தப் பேச்சு பற்றி கேட்டது. “நான் பேசியது உண்மைதான். அது நகைச்சுவைக்காக பேசப்பட்டது” என்றார், வாஜ்பாய்.
அடுத்த மதக்காரர் வழிபாட்டுத் தலத்தை இடித்து ‘சமன் செய்ய’ சொல்வது வாஜ்பாய்க்கு நகைச்சுவை பேச்சு போலும்!
2. குஜராத்தின் மோடி ஆட்சி 2002இல் இஸ்லாமியர் இனப்படுகொலையை நடத்தியபோது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாயுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, உடனே குஜராத்துக்கு இராணுவத்தை அனுப்பி, கலவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டார். வாஜ்பாய் அந்தக் கோரிக்கையை உதறித் தள்ளினார்.
3. பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுக்கு பயணம் போனபோது அங்கு ஸ்டேட்டன் தீவில் விசுவ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பேசும்போது இப்படி கூறினார்:
“ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். இப்போது எங்கள் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்திருக்குமானால் அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டியிருப்போம்” என்று பேசினார்.
4. ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ ஏடான ‘ஆர்கனைசரில்’ வாஜ்பாய், ‘ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் (7.5.1955). அதில் முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர மூன்று வழி முறைகளை முன் வைத்தார்.
இந்துக்களை அணி திரட்டி, முஸ்லிம்கள் அடை யாளங்களை இழக்கச் செய்து அவர்களையும் செரிமானம் (Assimilation) செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம்கள் இதற்கு ஒத்து வரா விட்டால், நாட்டின் ‘குடிமக்கள்’ என்ற நிலையி லிருந்து ஒதுக்கிட வேண்டும் என்றும் எழுதினார்.
5. மோடியின் குஜராத்தில் டாங்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்கள் கலவரம் செய்தபோது அங்கு நேரில் பார்வையிடச் சென்ற பிரதமர் வாஜ்பாய், கலவரத்தைக் கண்டிக்கவில்லை. மாறாக, மதமாற்றம் பற்றிய தேசிய விவாதம் தேவை என்று விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
6. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட லிபரான் ஆணையத்தில் மசூதி இடிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர் வாஜ்பாய்.
7. மொரார்ஜி பிரதமராக இருந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டுத் துறை அமைச்சராக இருந்தார் வாஜ்பாய். அப்போது யூதவெறி பிடித்த இஸ்ரேல் நாட்டுடன் தூதரக உறவு இந்தியாவுக்கு இல்லை. அதையும் மீறி இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ‘மோஷி தயான்’ என்பவரை ரகசியமாக இந்தியா வுக்கு வரச் சொல்லி சந்தித்தவர் வாஜ்பாய். மோஷி தயான் மாறு வேடத்தில் போலி ‘கடவுச் சீட்டில்’ இந்தியாவுக்கு வந்து, வெளியுறவுத் துறை அமைச் சராக இருந்த வாஜ்பாயை சந்தித்துப் பேசினார். முதலில் மறுத்த வாஜ்பாய், மொரார்ஜி பதவி விலகிய பிறகு சந்தித்ததை ஒப்புக் கொண்டார்.
8. 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக் கத்தையொட்டி ம.பி. மாநிலம் பட்டேசுவரத்தில் கலவரம் வெடித்தது. இதில் வாஜ்பாய், தனது சகோதரர் பிரேம் பிகார் லால் பாஜ்பாய் என்பவருடன் கலந்து கொண்டார். அப்போது கைது செய்யப்பட்ட வாஜ்பாய், சிறையிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்காக உள்ளூரில் ‘கலவரக்காரர்கள்’ பெயர்களை காவல் துறைக்கு காட்டிக் கொடுத்து விட்டு நீதிபதிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலை யானார். (வாஜ்பாய் எழுதித் தந்த மன்னிப்பு கடிதத்தை ‘பிரன்ட் லைன்’ ஏடு ஆவணக் காப்ப கத்திலிருந்து தேடிப் பிடித்து வெளியிட்டது)
வாஜ்பாய் சகோதரர் பீகார் லால் பாஜ்பாயும் ம.பி. அரசே நடத்திய ‘சந்தேஷ்’ எனும் பத்திரிகையில் இது உண்மைதான் என ஒப்புக் கொண்டு கட்டுரை எழுதினார் (12.5.1973 இதழ்).

Sunday, August 12, 2018

கலைஞர் கருணாநிதி தீர்க்கதரிசிதான்......

கலைஞர் கருணாநிதி தீர்க்கதரிசிதான்......

ஆயிரம் விமர்சனங்கள் கலைஞர் கருணாநிதி மீது உண்டு என்றாலும், "அவர் நம்ம ஆளு" என்பதை உணர மறுத்தால் இங்கு மதவாதிகள் உள்ளே வருவதை யாராலும் தடுத்துவிட முடியாது.....

கலைஞர் கருணாநிதியை நான் வியந்து பார்க்கும் இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானதாகும்.....

ஒன்று,
அக்டோபர் 2002 ல் ஆன்ரூ தேவாலய கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது "இந்து என்றால் திருடன்" என்று பேச்சின் போக்கில் அப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அப்போதைக்கு கடும் விமர்சனங்கள் நாடு முழுக்க எழும்புகிறது. குறிப்பாக, பா.ஜ.க மற்றும் இந்து அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவர் கலைஞர் தலைக்கு விலைவைத்து தலையைக் கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கவும் செய்தார்......

மற்றொரு புறம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருவர் வழுக்கும் தொடுக்கின்றனர்.  அன்றைய ஜெயலளிதா அரசாங்கம் அதற்கு பல வகையிலும் உதவி புரிந்தன என்பதெல்லாம் நினைவில் கொள்ளத்தக்கவை. இது ஒருபுறமிருக்கட்டும்........

ஆனால், கலைஞர் கருணாநிதி ஆதாரம்-தரவுகள் இல்லாமல் அப்படி பேசமாட்டார் என்பது இந்த முட்டாள்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைவரும் வாய்பிளந்து வாய்மூடிக் கொள்ளும்படியாக "விஷ்வகோஷ் தொகுந்த இந்தி அகராதியை" மேற்கோள் காட்டி, இந்து என்றால் திருடன் என்ற பொருளும் உண்டு, நீங்களே! படித்தறிந்து கொள்ளலாம் என்றார். பிறகு வழக்கு நிற்குமா, என்ன? வழக்கு தள்ளுபடியானது என்பது பிற்கால வரலாறு.......

இப்போது, வந்துகொண்டிருக்கும் செய்திகளை உற்று கவனித்தால் இந்து கடவுளைத் திருடியவர்கள் யாவரும் இந்துக்கள் என்பதை உணரலாம். அப்படியானால், கலைஞர் சொன்னது உண்மையல்லவா!......

இரண்டு,
சேது சமுத்திர திட்டம் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டம். 2007 என்று நினைக்கிறேன்.  அப்போது, பா.ஜ.க மற்றும் இந்து அடிப்படைவாதிகள் ராமர்பாலம் என்ற கதையை அவுத்துவிட்டார்கள். கலைஞர் கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?.....

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் வாழ்ந்தானாம்....
அவன் பெயர் ராமனாம்....
அவன் கட்டிய பாலம் ராமர் பாலமாம்.... அந்தப் பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாதாம்.......
அந்த ராமன் எந்தப் பொறியியல் கல்லூரிக்குச் சென்று படித்து விட்டு வந்து இந்தப் பாலத்தைக் கட்டினான்?.... அதற்கு ஆதாரம் இருக்கிறதா?.....
என்று, கலைஞர் கருணாநிதி கேட்டார்......

யோசித்துப்பாருங்கள் ஆட்சியின் அதிகாரபீடத்தை அடைந்த கலைஞர் கருணாநிதி கேட்டார் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. அரசு-ஆட்சி-அதிகாரம்- என்பதெல்லாம் எவ்வளவு சமரசங்களுக்கிடையில் இயங்கவேண்டியதிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த சமரசங்களுக்கிடையிலும் கொள்கைநெறி தவறாத தோழர் அல்லவா கலைஞர் கருணாநிதி......

இவரை நாம் விட்டுக்கொடுக்கலாகாது....
இவர் நம்முடையை தோழர்.....

விமர்சியுங்கள் அது உங்கள் உரிமை.....
கைவிட்டுவிடாதீர்கள் பா.ஜ.க கழுகு வானத்தில் வட்டமிடுகிறது.......