Thursday, August 16, 2018

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், கலைஞரை மெரினாவில் அடக்கம் பண்ண அனுமதித்திருப்பாரா......?

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்,
கலைஞரை மெரினாவில் அடக்கம் பண்ண அனுமதித்திருப்பாரா......?
கிழவனுக்கு இழுத்துட்டு இருக்குன்னு தெரிஞ்சதுமே, மெரினாவில் இனி யாரையும் அடக்கம் பண்ணக் கூடாதுன்னு அவசரச்சட்டம் கொண்டு வந்திருப்பார். ராஜாஜீ ஹாலில் ஒரு மாதத்துக்கு அரசு பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்திருப்பார்.......
அடக்கம் பண்ண இடம் கிடைக்காமலும்,
பொது மக்கள் அஞ்சலி செலுத்த இடம் கிடைக்காமலும் செய்திருப்பார்.......
திமுகவினர் வழக்குப் போட்டாலும்,
அதை இழுத்தடித்து பிணத்தை நாறடித்திருப்பார்....
இப்படி ஒரு அதிமுக நண்பர் பதிவிட்டிருந்தார்......
முதலில் அவரை நாம் மனதார பாராட்ட வேண்டும், அம்மையாரின் உண்மையான குணாதிசயங்களை அப்படியே பொதுவெளியில் ஒளிவுமறைவில்லாமல் சொன்னதற்காக.........
அடுத்ததாக,
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதற்கேற்ப,
அம்மையார் ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால், இந்நேரம் உடன்பிறவா சகோதரி சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருப்பார் என்பதை மறந்தே போய் விட்டார் அந்த அதிமுக நண்பர்......
எல்லாவற்றுக்கும் மேலாக,
ஒருவேளை ஜெயலலிதா உயிரோடிருந்து,
சிறையில் கம்பி எண்ணாமல் முதல்வராக இருந்திருந்தால், கலைஞரின் உயிரற்ற உடலைப் பார்த்து அவரது மனைவி, மக்கள், பிள்ளைகள், பேரன், பேத்திகள் என அவரது குடும்பத்தார் கதறியழுததைப் பார்த்து, இப்படி ஒரு அன்பான அழகான பாசமான குடும்பம் நமக்கும் இல்லையே என்ற ஏக்கத்திலேயே புழுங்கித் தவித்து மனம் வெந்து நொந்து போயிருப்பார்........

No comments: