Friday, August 17, 2018

இந்த அய்யப்பன் எங்கே போனான்

நான் தெரியாமல் தான் கேட்கிறேன்
பெண்கள் கோவிலுக்குள் போக கூடாது என்று சொன்ன பார்பன நம்பூதிரிகள் வீட்டிற்குள் தண்ணீர் போகாமல் அய்யப்பன் புலியின் மீது வந்து பந்தோபஸ்த்து கொடுத்தானா
அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜால்ரா தட்டி மேல் ஜாதி இந்துக்கள் என்று சொல்லி கொள்ளும் நாயர் வீடுகளுக்குள் தண்ணீர் போகாமல் அய்யப்பன் அனை கட்டி தடுத்தானா
இயற்கை கொஞ்சம் அதிகமாக மழை பெய்து வருகிறது அவ்வளவு தான் அதற்கு அய்யப்பன் தான் காரணம் என்றால் ஜாதியை காட்டி இந்த ஜாதி மக்கள் இவ்வளவு தூரத்தில்இருந்து சாமி கும்பிட வேண்டும் என்று சொல்லி பெரும்பான்மை மக்களை வெளியே நிறுத்தியது யார் அய்யப்பனா ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அய்யப்பன் கோவிலில் நம்பூதிரியை தொடாமல் பிரசாதம் வாங்கி கொள்ளவும் என்று இன்றும் தீண்டாமை வெறி கொண்டு மக்களை இழிவு படுத்தும் செயலை செய்வது யார் அய்யப்பனா
இன்னும் பெண்களுக்கு பல்வேறு கொடுமைகள் செய்தது தான் பார்பனியம்
உடன்கட்டை ஏற்றியது
மொட்டை அடித்து மூளையில் உட்கார வைத்தது
நம்பூதிரி பார்பனியத்திற்கு முன்னாள் பெண்கள் மாராப்பு போடக்கூடாது என்று சொல்லி கொடுமை படுத்தியது
தேவதாசி முறையை பயன்படுத்தி பெண்களை போக பொருளாக்கியது
அப்போதெல்லாம் இந்த அய்யப்பன் எங்கே போனான் பெண்களின் துன்பம் தெரியவில்லையா ???

No comments: