Friday, March 02, 2018

பெரியார் சாதித்ததுதான் என்ன?

பெரியார் சாதித்ததுதான் என்ன?
வே. ஆனைமுத்து
ஏ கழுதை, எசமான் வர்றது கண்ணுக்குத் தெரியிலே? மடமடண்ணு வர்றியே வரப்பு மேலே!
போடா திரும்பி என்று உறுமி தீண்டாப்படாதவனை விரட்டிவிட்டுப் பண்ணையார்கள் விசுவநாத அய்யர், கிருஷ்ணசாமி ரெட்டியார், கந்தசாமிப்பிள்ளை, இராமசாமி முதலியார் இவர்களுக்குக் காரியஸ்தன் கந்தசாமி போன்றோர் பராக்குக்கூறிய காலம் 1940 வரை கூட நீடித்தது.
ஒரே வரப்பில் - ஒற்றையடிப் பாதையில் தீண்டப்படாதவன் எதிரே நடந்து வரக்கூடாது; மீறி நடந்தால் ஊர் பஞ்சாயத்துக் கூடி, மரத்தில் அவனைக் கட்டி வைத்துப் புளியன் வளாரினாலும், எருக்கங்குச்சியினாலும் செம்மையான அடி கொடுக்கப்பட்டது. இது அன்றைய சமூக நீதி - சாதி ஆசாரம்.
இந்த மிருகத்தனமான கொடுமைக்கு முடிவு கட்டியவர் பெரியார். டேய்! கொட்டாங்கச்சியிலே வாங்கிக்கோ. இல்லேண்ணா அந்த மூங்கிக்குழாயிலே குடிச்சுக்கோ.
தண்ணீர்ப் பந்தலிலும், தேநீர் விடுதியிலும் எல்லாச் சாதிக்காரர்களும் தீண்டப்பாடதவரை நடத்தியவிதம் 1950 வரையில் கூட இதுதான். இந்தக் கொடூரப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், பெரியார்.
மாடு மேய்க்கற பசங்கள்லாம் இங்க வந்து கழுத்தறுப்பு பண்றேளே! உங்களுக்கு எங்கடா படிப்புவரும்? எப்படிடா சரசுவதி கடாட்சம் கெடைக்கும்? முகரைக்கட்டயப்பாரு!கணக்கில் தடுமாற்றம் அடைந்த வீட்டுப் பாடத்தில் மட்டம் போட்டுவிட்ட திராவிடர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியார் புரோகிதர் வீராசாமி அய்யர், பிரைமரி பள்ளி ஆசிரியர் இராமசாமி அய்யங்கார் ஆகியோர் செய்த ஏகத்தாளமான அர்ச்சனை இது. 1942 வரையில்கூடக் காதாரக்கேட்டுக் கண்ணார நாம் கண்ட காட்சி இது.
இந்த ஓரவஞ்சனை தர்மத்தை அடியோடு தகர்த்து எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர், பெரியார்.
நீ சந்நிதிக்கு அப்பாலே தேங்கா, பழத்தட்டை வெச்சுடு; நீ கிராதிக்கு அன்னாண்டே தள்ளி நின்னுக்கோ; தீபாராதனையை வெளியே நின்று நீ பாத்துக்கோ என்று கூறி, மார்கழி முப்பது நாளும் குளித்து முழுகிக் கோலம் பூண்டு கோவில்களுக்குச் சென்று பக்தியைச் சுரந்த திராவிடர்களுக்குக் கோவில் அர்ச்சகன் தந்த மரியாதை 1950 வரையில்கூட இதுதான். இவற்றை அடியோடி மாற்றி.கர்ப்பக் கிருகத்துக்குள் நான் ஏன் போகக்கூடாது? என்ற ஒவ்வொருவரும் இன்று உரத்துக் கேட்கும் அளவுக்கு மானிட உரிமை உணர்வைக் கிளறிவிட்டவர், பெரியார்.
ஏய்! ஒங்க அண்ணாச்சி வந்திருக்கார்டீ. சட்டுப்புட் டுண்ணு ஆக்கி அரிச்சி காலாகாலத்திலே சாப்பாடு போடுடி!
காலமெல்லாம் கண்ணுக்கு இமைபோல் நிற்கும் காதல் மனையாளை நம் பாட்டனும் அப்பனும் விளித்த விதம் இப்படி. இந்தக் காட்டுமிராண்டிப் பழக்கம் இன்று பழங்கதையாகி வருவதற்கு அடிப்படையாக அமைந்தவர், பெரியார்.
பொட்டச்சி படிச்சா போச்சி. கள்ளப் புருசனுக்குத் திருட்டுக் கடுதாசி எழுதுவா.பொம்பளைக்கி சொத்து குடுத்தா அடங்கி இருக்க மாட்டா, இதெல்லாம் நம்ப சாதிக்கு அடுக்காது.தத்தம் சாதியிலிருந்து எல்லா இளங் கைம்பெண்களுக்கும் ஏக கதாநாயகனாக விளங்கிய அந்தந்தச் சாதி நாட்டாண்மைக்காரன் பெண்கல்விக்கும், பெண் சொத்துரிமைக்கும் போட்ட தடைச்சட்டம் அவ்வளவு கொடுமையானது.
இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று எல்லாநிலைக் கல்விக்கும், சொத்துக்கும் உரிமை உள்ளவர்களாக நம் பெண்களை ஆக்கியவர், தந்தை பெரியார்.
ஏலே! குடுத்ததை வாங்கிக்கிட்டுப் போவியா! அதை உட்டுட்டு, பண்ணையை நேராவே எதுத்துக்கேக்கி றியே! என்னா தெய்ரியம்டா ஒனக்கு? ஏழைத் தொழிலாளிக்கு உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்கக்கூட உரிமை கிடையாது என்று இருந்த இந்த அவலநிலையை மாற்றிவிட்டவர், பெரியார்.
அண்ணய்க்கி எழுதுனவன் அளந்ததுதான் நம்புளுக்கு தக்கும். வயிறார சோறு, இடுப்பாரத் துணி, ஓட்டு ஊடு இதெல்லாம் எல்லாத்துக்கும் வா...ண்ணா வருமா? என ஏங்கிக்கூறித் தன்னைத்தானே நம்மவர் தாழ்த்திக் கொண்ட நிலையை மாற்றி, நாட்டு வளங்கள் அனைத்தும் நாட்டிலுள்ள அனைவர்க்கும் சொந்தம் என்பதை 1925 முதலே சொல்லித் தந்து சமதர்ம சமஉரிமை உணர்வைத் தழைக்கச் செய்தவர், பெரியார்.
நாமள்லாம் நாற்காலியிலே ஒக்காந்துக்கிட்டு, பங்கா காத்து வாங்காணும்னா அது முடியுமா? அதுக்கிண்ணே பொறந்த வங்களுக்குத்தான் அது கெடைக்கும். இப்படி மூட வேதாந்தம் பேசிக்கொண்டு பங்கா இழுப்பது, எடுபிடி வேலை செய்வது, வாடா - போடா என்கிற கீழ்நிலை வேலைகளைப் பார்ப்பது என்பதே தங்களுக்குக் கொடுத்துவைத்த பாக்யம் என 1946 வரையில் நினைத்துக் கிடந்த மர மண்டைத்தனத்தை அடித்து நொறுக்கி, எழுத்தர் வேலை முதல் உயர் நீதிமன்ற உயர் நீதிபதி வேலை வரையில் திராவிடருக்கு இன்று வந்து சேர வழி வகுத்தவர், பெரியார்.

Thursday, March 01, 2018

திரு.மு.க.ஸ்டாலினைப் பற்றி

இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரிடம் உலகமே பின்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். ஃப்ரான்ஸ் கிட்டத்தட்ட ஹிட்லரிடம் விழுந்துவிட்ட சூழலில் இங்கிலாந்து பிரதமராக சர்ச்சில் பதவியேற்கிறார். ஆனால் இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆதரவில் இருந்து, கேபினேட்டின் ஆதரவு வரை சர்ச்சிலுக்கு அரைகுறையாகத்தான் கிடைக்கிறது. சர்ச்சில் மேல் பலர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். கேபினேட்டில் பலர் ஹிட்லருடன் சமாதானம் பேசி சரணடையச் சொல்கிறார்கள். சர்ச்சிலோ ஹிட்லர் போன்ற கொலைவெறி பிடித்த சர்வாதிகாரியுடன் எந்தக் காலத்திலும் சமாதானம் பேச முடியாது என்கிறார். அவர் பதவி பறிபோகுமோ என்கிற நிலை. சர்ச்சிலோ உறுதியாக நிற்கிறார். ஒரு நடு இரவில் சர்ச்சிலை அவரது வீடு தேடி சந்தித்த அரசர் சொல்கிறார், “இதுவரை நான் உங்களை அரைகுறையாக ஆதரித்திருக்கலாம். ஆனால் என் முழு ஆதரவும் இப்போது உங்களுக்கு உண்டு. நீங்கள் பிரதமர் ஆனது நம்மில் பலருக்கு பிடிக்கவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நீங்கள் பிரதமர் ஆனது ஹிட்லருக்கு துளியும் பிடிக்கவில்லை. ஹிட்லர் உங்களை அடி ஆழத்தில் இருந்து வெறுக்கிறார். அதனாலேயே உங்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்,” என்றார். பின்னர் சர்ச்சில் போரைத் தொடர்ந்ததும், ஹிட்லரை கூட்டுப்படைகள் தோற்கடித்ததும் வரலாறு. நிற்க.
கலைஞரின் மகன் என்பதைத் தவிர திரு.மு.க.ஸ்டாலினைப் பற்றி வேறெதுவும் தெரியாத காலம் அது. மிசாவைப் பற்றியெல்லாம் பின்னர் தான் அறிந்தேன். ஒருநாள் ஏதேச்சையாக டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது சென்னையின் மழை நிரம்பிய வீதிகளில் முட்டி வரை ஏற்றிவிடப்பட்ட பேண்டோடு அவர் தெருத்தெருவாக நடந்துபோய் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அவர் மேயராக இருந்த குறுகிய காலத்தில் வெறும் சென்னை சிங்காரச் சென்னை ஆனதும், இன்று சென்னையின் போக்குவரத்தைக் குறைக்கும் அத்தனை பாலங்களையும், சாலைகளையும் அவர் நிர்மாணித்ததும் வரலாறு. ஸ்டாலின் என்பவர் வெறுமனே கலைஞரின் மகன் மட்டுமல்ல, தந்தைக்கு சற்றும் குறையாத மிகச்சிறந்த நிர்வாகி என்பதும் எதிரிகளாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதும் அப்போதுதான். வளர்ந்த நாடுகள் குறித்த அவரது, ‘பயணம்’ என்னும் பயணக்கட்டுரைகள் நிறைந்த நூல் அதற்குச் சான்று. இன்றும்கூட சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்கள் பலருடன் பேசும்போது வளர்ச்சிப்பணிகள், தொழிற்சாலைகள் மீதான மு.க.ஸ்டாலினின் ஆர்வத்தை அவர்கள் வியந்து பேசுவதைப் பார்த்திருக்கிறேன். மேம்பால ஊழல் என்ற பெயரில் வாரண்ட் கூட இல்லாமல் கலைஞரை நடு இரவில் கைது செய்து ஆட்டம் போட்ட ஜெவுக்கு சூட்டோடு சூடாக, “தினமும் இரண்டுமுறை அந்த பாலத்தில் நீங்கள் சென்றுவருகிறீர்களே, அந்தப் பாலம் மிகவும் வலிமையானது என்பதற்கு அதைவிட என்ன சான்று வேண்டும்,”என கேட்டபோதுதான் அவர் முதன்முறையாக என் மனதில் நின்றார். பின்னர் அதற்காக கலைஞர் ஸ்டாலினை கடிந்துகொண்டதாகக் கூட கூறுவார்கள். ஜெ மருத்துவமனையில் இருந்தபோது அவரை ஸ்டாலின் சந்திததுதான் இளைஞர்கள் பலருக்குத் தெரியும். ஆனால் சுனாமியின் போதே அரசியல் நாகரீகத்தோடு ஜெவை நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்தவர் ஸ்டாலின். அரசியலில் என்றுமே எதிரிப்போக்கை கடைபிடிக்கக் கூடாது என்பது அவர் இன்றுவரை கடைபிடித்து வரும் கொள்கை. அதனால்தான் ஆன்மீக அரசியலுக்கு ஆசீர்வாதம் வாங்க பகுத்தறிவுக்கோட்டைக்கு வருகின்றவர்களை வரவேற்ற கையோடு, ஆன்மீக அரசியலுக்கெல்லாம் தமிழ்நாட்டில் இடமில்லை என பேட்டியும் தர முடிகிறது.
கலைஞர் ஆக்டிவாக இருந்தபோது துக்ளக், தினமலர் போன்ற ஏடுகளில் ஸ்டாலின் தலைவரானால் திமுகவை ஆதரிக்கலாம் என்றும், கலைஞர்தான் அவர்களுக்கு ஒரே பிரச்சினை என்றும் அடிக்கடி எழுதியதை பலர் கவனித்திருக்கலாம். மறைந்த பிரபல மிடாஸ் அதிபர் சோ கூட பலமுறை தன் கேள்வி பதில் பதிவுகளில் ஸ்டாலின் திமுக தலைவரானால் தன் ஆதரவு உண்டு என எழுதியிருக்கிறார். ஆனால் அவர் செயல்தலைவர் ஆனபின் என்ன ஆனது? எங்கே போனது அந்த ஆதரவு? ஏன் சதாசர்வ காலமும் ஸ்டாலினை இந்த ஏடுகள் விமர்சிக்கின்றன? ஏன் தன் குரு சோவின் முடிவை குருமூர்த்தி பின்பற்றவில்லை? இத்தனைக்கும் திமுக ஆட்சிக்கு கூட வரவில்லை எனும்போது ஸ்டாலின் மீதான தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை ஏன் இவர்கள் மாற்றிக்கொண்டார்கள்? காரணம் மிக எளிது. ஸ்டாலின் கலைஞரைப் போல சமூகநீதியைப் பேசுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஸ்டாலின் தமிழ்நாட்டை பெரியார் மண் என அழைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. “திராவிட இயக்கத்தை ஒரு கொம்பனாலும் அசைக்கமுடியாது,” என ஸ்டாலின் சூளுரைப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மோடியே வீட்டுக்கு தேடி வந்தாலும், அடுத்தநாள் மேடை போட்டு மோடியை ஸ்டாலின் கிழிப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மொத்தத்தில் அவர்கள் ஸ்டாலின் எல்லாவற்றிலும் ‘கலைஞரின் மகன்’ ஸ்டாலினாக இருப்பார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதனால்தான் எப்படியாவது ஸ்டாலினை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். தொட்டதெற்கெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறார்கள். கிண்டல் செய்கிறார்கள். பாஜக கதவுகளை எல்லாம் ஒன்றுவிடாமல் தட்டிவிட்டு எதுவுமே திறக்கப்படவில்லை என்றவுடன் திருவோட்டை தூக்கிப்போட்டுவிட்டு வீரவசனம் பேசும் தினகரனை எல்லாம் பாஜகவின் பெரிய எதிரியாக ஊடகங்கள் சித்தரிக்கும் காரணமும் அதுதான். ரஜினி, கமல் என யார் யாரையோ அரசியல் மாற்று என சித்தரிக்கிறார்கள். ஜெவுக்கே பயந்து அறைக்குள் முடங்கிய இந்த கிழட்டுக் கன்றுக்குட்டிகள் மோடிக்கோ, மத்திய அரசுக்கோ பயப்படாமல் மார்பிலா பாய்வார்கள்? கொஞ்சமாவது லாஜிக் என்பது வேண்டாமா? எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்க்கும் தான் ரஜினியும் கமலும் மாற்றாக இருப்பார்களேயொழிய கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் அல்ல.
இன்று நாட்டை நிர்மூலமாக்கும் மதவாத சக்திகள், ஃபாசிஸ்டுகள், தமிழ்நாட்டை விற்கும் அடிமைகள், சமூகநீதி விரோதிகள், மோடி ஆதரவு ஏடுகள், RSSயின் கட்சி சார்பற்ற சமூக ஆர்வலர்கள் என அனைவரும் எப்படியாவது ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என ஏன் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்களோ, அதே காரணத்திற்காகத்தான் நாம் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டும்! நாம் ஏற்கனவே மநகூ என்கிற பெயரில் மாபெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினோம். மீண்டும் அதே தவறுக்கு இடம் கொடுக்காதீர்கள். முதல் பத்தியில் உள்ள வரலாற்றைப் படியுங்கள். யார் ஸ்டாலினை ஆதரிக்கிறார்கள் எனப் பார்க்காதீர்கள். யாரெல்லாம் முதல்வரிசையில் நின்று எதிர்க்கிறார்கள் எனப் பாருங்கள். நாம் ஸ்டாலினை ஆதரிக்க வேண்டிய காரணம் புரியும்.
காரிருள் முடியட்டும். சூரியனால் விடியட்டும்.

யார் இந்த காஞ்சி காம கேடி ஜெயேந்திரன்?

யார் இந்த காஞ்சி காம கேடி ஜெயேந்திரன்?
கைதே செய்வதானாலும் தலித் (DSP) என்னைத் தொட்டுவிடக்கூடாது என்ற புண்ணியவான்!
நம்பி வரும் பெண்களை தவறாக அனுபவித்த நல்லவர்!
மடத்தின் மேலாளரை கொலை செய்த வல்லவர் !
இதோ விளக்கமுடன் :
காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பணியாற்றிய சங்கரராமன், 68வது சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி மறைந்ததும் பொறுப்புக்கு வந்த ஜெயேந்திரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மடத்திலிருந்து வெளியேறினார், பின்னர் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக பொறுப்பேற்றார்.
3.9.2004இல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சதி திட்டமிட்டதாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.....
ஆந்திராவில் இருந்த ஜெயேந்திரர், விஜயேந்திரர் 11.11.2004ல் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
அந்த கைது கால கட்டத்தின் இடைவெளியில் நடை பெற்ற நிகழ்வுகளை தாங்கிய பதிவு இது....
அந்த படுகொலை நடந்த போது அப்போதைய்ய காஞ்சி SP பிரேம்குமார்... முதல்வர் "J".
இந்த கொலை குறித்த தகவல் முழுமையாக தனக்கு வேண்டும் என அம்மா அவர்கள் spயிடம் கேட்கிறார்....
அதற்கு முன்பே காஞ்சி காமகோடி மடத்தின் பக்தர் செட்டிநாடு குழுமத்தின் தலைவர் Spic-முத்தையா செட்டியார் மனைவி அங்கு நடந்த நிகழ்வுகளை அம்மாவிடம் தான் அங்கு சென்றபோது...
"ஜெயேந்திரன் அறையில் பெண்கள் அணியும் ஜட்டி- ப்ரா போன்ற உள்ளாடைகள் ஒரு மூலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியுடன் திரும்பிவிட்டேன்" என அம்மாவிடம் பகிர்ந்து இருந்தார்....
பல கட்ட விசாரணைக்கு பிறகு காஞ்சி SP அவர்கள் "சங்கர ராமனை" கொன்றது ஜெயேந்திரன் & கோ தான் என்ற ஆதாரபூர்வமான ஆவணங்களை சமர்பித்து விட்டு... அம்மா அவர்கள் ஒரு பெண் என்பதால் மிகவும் தயக்கத்துடன்
"அம்மா அங்கு ஒரு சிடியும் கிடைத்துள்ளது, அது இந்த வழக்கிற்கு தேவையில்லை எனினும் கைப்பற்றியுள்ளேன் " என தயக்கத்துடன் சமர்பிக்கிறார்....
'J' அவர்கள் வெளியே காத்து இருங்கள் நான் அழைக்கிறேன் என கூறிவிட்டு...
சில நிமிடங்கள் கழித்து மிகவும் கடும் கோபத்துடன் அவர் எந்த மூலையில் இருந்தாலும் உடனே கைது செய்துவிட்டு வந்து என்னை பாருங்கள் என கட்டளையிடுகிறார்...
சரிங்க அம்மா என கூறிவிட்டு SPஅவர்கள் வெளியே வந்த போது... மீண்டும் அவரை அழைத்து காஞ்சி DSP மூர்த்தியை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், அவர்தான் ஜெயேந்திரனை கைது செய்ய வேண்டும் என மிக உறுதியாக கட்டளையிடுகிறார்..... SP அவர்களும் ஒன்றும் புரியாமல் சரி என ஏற்றுக் கொண்டு காஞ்சி DSP மூர்த்தியுடன் உடன் ஆந்திரா மாநித்தில் ஜெயேந்த்திரன் உள்ளான் என அறிந்து புறப்படுகிறார்...
ஒரு வழியாக ஜெயேந்திரன் ஆந்திரா மாநிலம், திருப்பதியில் ஒழிந்து கொண்டு இருப்பதை அறிந்து அங்கு சென்ற SP அவர்கள் உங்களை கைது செய்ய போகிறேன் என தெரிவித்த போது ஜெயேந்திரன் உட்பட மறுத்து தகராறு செய்கிறான்....
'J' 'வின் கட்டளைப்படி DSP மூர்த்தி அவர்களிடம் ஜெயேந்திரன் வர மறுக்கிறான்! அம்மா அவர்கள் நீங்கள் தான் கைது செய்ய வேண்டும் என உத்தரவு போட்டு இருக்கிறார் அவனை கைது செய்து வாருங்கள் என கைது-வாரண்டை கொடுத்து உத்தரவு பிறப்பிக்கிறார்.
DSP மூர்த்தி அவர்களும் மிகுந்த குழப்பத்துடன் ஏன் அம்மா எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்? நான் இது வரை நேராக சந்தித்தது கூட கிடையாதே என சக அதிகாரிகளிடம் புலம்பிவிட்டு செல்கிறார்....
DSP மூர்த்தி அவர்கள் ஜெயேந்திரனிடம் உங்களை கைது செய்ய வந்துள்ளேன் என்றதும்... அதுவரை கைதுக்கு அடம்பிடித்த ஜெயேந்திரன் கடும் கோபத்துடன் "என்னை நீ தொடக்கூடாது".. நான் ஒத்துழைக்கிறேன் என சொன்னதும் SP அவர்களுக்கு பெரும் ஆச்சர்ய்யம் நான் இவ்வளவு விளக்கியும் வராதவன் மூர்த்திக்கு கட்டுபட்டுவிட்டானே என்று.....
கைது செய்து தமிழ்நாடு பயணிக்கும் போதுSPஅவர்கள் DSPயிடம் கேட்கிறார் எப்படிய்யா நீ சொன்னவுடன் அவன் வந்துட்டான் என கேட்கிறார்... (அதற்க்குள் DSP "என்னை நீ தொடக்கூடாது" என ஜெயேந்திரன் சொன்னதின் அர்த்தத்தை யூகித்து விட்டார்) அது ஒன்னும் இல்லை சார்....
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்த்தவன் நான் தொட்டால் தீட்டு ஆகிவிடும் என்று நினைப்பான் என்று தான் அவன் ஒத்துழைப்பு கொடுத்தான் இப்படி எல்லாம் இவன் அடம்பிடிப்பான் என உணர்ந்து தான் அம்மா அவர்கள் என்னை உங்களுடன் வைத்து கொள்ள கட்டாய படுத்தி இருக்கிறார்.... இதை கேட்ட SP அவர்கள் அப்படியே உறைந்து போய் விட்டாராம்.
பிற்காலத்தில் சிறையில் வாழை இலையில் தான் "பீ போவேன்" என முரண் பிடித்த கதைகள் எல்லாம் வேறு.
இன்று வரை ஜெயேந்திரன் கைது வரலாற்றில் ஒரு மைல்கள்
அப்படி அந்த CDயில் என்ன தான் இருந்தது என ஆர்வமாக இருக்கும் நெட்டிசன்ஸ்...
ஜெயேந்திரன் மடத்திற்கு வரும் பெண்களிடம் காம களியாட்டம் நடத்தியதை வீடியோ எடுத்து சுய இன்பம் அடைந்தவை தான் அந்த வீடியோ...
SP மிகவும் கூச்ச நாச்சம் கருதி அதை எடிட் செய்தே சமர்பித்தாறாம்.
இந்த மனிதர் தான் இறந்திருக்கிறார் !

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்

சிரியாவில் என்ன நடக்கின்றது என்பதன் சுருக்கம் இதுதான்
சிரியாவில் ஆட்சியினை மாற்றலாம் என கருதி போராளிகளை உருவாக்கியது அமெரிக்கா. ஆனால் சிரியா மக்கள் அரசை எதிர்க்கவில்லை, அதிருப்தி உணரவில்லை இதனால் போராளிகளுக்கு வரவேற்பில்லை
போராளி குழுக்களில் ஒன்றான அல் நுஸ்ரா என்னவென்று நினைக்கின்றீர்கள்? அல் கைதாவின் ஒரு பிரிவு.
பின் எப்படி ஆதரவு கிடைக்கும்?
இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தின் அட்டகாசம் பெருகி சிரியாவில் குழப்பம் வெடித்தது. அமெரிக்கா ராக்கா நகரில் வீசிய குண்டில் செத்த குழந்தைகள் கணக்கில்லாதவை, அதெல்லாம் பற்றி பேசமாட்டார்கள்
காரணம் அது தீவிரவாததிற்கு எதிரான போர்
இப்பொழுது சிரிய அரசு படை முன்னேறுகின்றது, கிழக்கு பகுதியினை தீவிரவாதிகளிடமிருந்து மீட்கின்றது. ஆனால் அவர்கள் புலிகள் முள்ளிவாய்க்காலில் மனித கேடயம் வைத்திருந்தது போல் வைத்திருக்கின்றார்கள் அந்த கொடூர தீவிரவாதிகள்
அறிந்து சொன்னாரோ அறியாமல் சொன்னாரோ சீமான், அதே நிலைதான் இங்கேயும்
தீவிரவாதிகளை ஒழித்து கட்ட சிரிய அரசு எடுக்கும் நடவடிக்கையில் பலர் சாகின்றனர், அந்த தீவிரவாதிகளும் மக்களை விடுவதாக இல்லை
இந்த பகுதி அமெரிக்க சவுதி ஆசிபெற்றவர்கள் கட்டுபாட்டு பகுதி என்பதால் எல்லா படங்களும் உலகிற்கு கிடைக்கின்றன‌
முன்பு அமெரிக்க படுகொலைகளை வெளியிட்ட அல் ஜசீராவும் அதற்கு அடைக்கலம் கொடுத்த கத்தாரும் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல, கத்தார் சிக்கல் வர முதல் காரணமே இதுதான்
அமெரிக்கா செய்தால் தீவிரவாதத்திற்கு எதிரான போர், ஆனால் சிரியா செய்தால் மானிட கொடூரம்
சிரியாவிற்காக அழுபவர்கள் எவனாவது அமெரிக்க படையால் கொல்லபட்ட சிரிய மக்களுக்ககாகவும், இஸ்ரேலால் கொல்லபடும் பாலஸ்தீன சிறுவர்களுக்காகவும் அழமாட்டான்
ஏமனில் சவுதியால் கொல்லபடும் சிறுவர்களுக்காக அழமாட்டான்
மாறாக அமெரிக்க பிடி சிரியாவில் சரியும்பொழுது மட்டும் அழுவான் அல்லது அழவைகபடுவான்
ஏனெனில் சிரியா செய்தால் "மானிட படுகொலை" மற்றபடி அமெரிக்கா, துருக்கி, சவுதி எல்லாம் செய்தால் அது "போர்"

இலங்கையில் தமிழ் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள்

இராணுவ சோதனை சாவடிகளில் உள்ளாடையை நீக்கி காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்த சில விசமிகள் களம் இறங்கிவிட்டதாகவே தெரிக்கின்றது.
இலங்கையில் தமிழ் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தமிழையும் சிங்கள பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தையும் தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். 95% முஸ்லிம்களுக்கு இரு மொழிகளையும் அறிவார்கள். இஸ்லாமிய தமிழர் , சைவதமிழர், கத்தோலிக்க தமிழர், காப்பிலி தமிழர் என்றெல்லாம் இங்கு கிடையாது. அவ்வாரே இஸ்லாமிய சிங்களவர்களும் கிடையாது. இப்படி கூறினால் சிங்களவன் கட்டி வைத்து உதைப்பான். ஏன் முஸ்லிம்களிடம் சென்று நீங்கள் தமிழர்தானே என கூறினால் ஆசையாக கூட்டிச்சென்று அந்த மலட்டு கொத்துரோட்டியை உண்ண வைத்துவிடுவார்கள். இது தான் இலங்கையின் இன்றைய யதார்த்தம்.
முஸ்லிம்கள் இலங்கையில் இப்போது தமக்கென்று ஒரு மொழியை உருவாக்கி கொள்ள அரபியை ஆங்காங்கே தாம் செறிந்து வாழும் பகுதிகளில் எழுதி வைக்க தொடங்கியுள்ளனர். இன்னும் 30-40 ஆண்டுகளில் இவர்கள் தமது மொழியாக அரபு மொழியை பேசக்கூடும்.
முஸ்லிம்கள் இலஙுகையில் தனியான ஒரு இனமாகவே வாழ்வதில் அவர்களுடைய இனப்பற்றை ஏனைய இனத்தினர் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. சிங்கள இன வெறியர்கள், தமிழ் இனவெறியர்கள் போன்று முஸ்லிம் இன வெறியர்களும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இனம் ஏனைய இனங்களுக்கு எதிராக silent killers ஆக செயற்படுவதாக குற்றசாட்டை யாராவது சுமத்தினால் வழமையான பசப்பு வார்த்தைகளை அரசும் அதன் ஆதரவாளர்களும் கூறிக்கொண்டிருக்காமல் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நாட்டு மக்களை பாதுகாக்க முயலவேண்டும்.
இல்லாவிட்டால் இராணுவ சோதனைச்சாவடிகளில் உள்ளாடையை கழற்றி காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இலங்கை மக்களுக்கு ஏற்படலாம்.
இன்று Save Syria என்று profile pic போடுபவர்கள் நாளை இலங்கையில் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருப்பார்கள்.
இது தேவையா?

Wednesday, February 28, 2018

இத்தேசத்தின் அருமை அந்நொடியில் உங்களுக்கு விளங்கும்

ஏதோ சிரியாவில் புதிதாக குழந்தைபலி நடப்பது போல பலர் பொங்குகின்றார்கள், கடந்த 7 வருடமாக நடக்கும் சோகம் அதுவும் சமீப 3 ஆண்டுகள் மகா மோசம்
அங்கு அமைதி திரும்ப வேண்டுமானால் முதலில் அவர்கள் மனம் மாற வேண்டும். அந்நிய நாட்டு தூண்டுதலினால் நாசமாய் போனோம் என்ற எண்ணம் அங்கிருக்கும் போராளிகள் மனதில் உண்டாகமல் சாத்தியமில்லை
சிக்கல் அவர்கள் அரசை எதிர்த்து ஆயுதம் தூக்கியதில் தொடங்கியது, ஆட்சி மாற்றம் வேண்டுமாம். உடனே அவர்களுக்கு அமெரிக்க ஆயுதங்கள் தடையின்றி கிடைத்தன‌
இதே அமெரிக்கா சவுதி, குவைத், ஐக்கிய அரபு நாடுகளில் மக்களாட்சி வேண்டும், ஜனநாயகம் வேண்டும் என பேசுமா? பேசாது, ஆனால் சிரியாவில் மட்டும் புரட்சி வேண்டுமாம், இவர்கள் ஆதரிப்பார்களாம்
சிரிய சிக்கல் இன்று வந்ததல்ல அதன் மூலம் சதாம் காலத்திலே தொடங்கிற்று, சதாம் அமைக்க முயன்ற அணுவுலையினை இஸ்ரேல் நொறுக்க பின் ஷியா தேசம் என்றும் பாராமல் சில சதாமின் உதவி மூலம் சிரியா செய்ததும் பின் அதனையும் இஸ்ரேல் நொறுக்கியதும் வரலாறு
இதை எல்லாம் விட மகா முக்கியமான விஷயம், சதாமின் பணம். பின்லேடனை தொலைப்பதற்கு முன் சதாமினை தொலைத்தே தீரவேண்டும் என்ற வெறியில் அமெரிக்கா பாய அப்பொழுது சதாமின் ஏராளமான பணங்கள் சிரியாவில் பதுக்கபட்டதாகவும், அமெரிக்கா அதனை கேட்டபொழுது சிரியா மறுத்ததாகவும் செய்திகள்
இதுவும் ஒரு கோணம்
இன்னொரு கோணம்தான் அரபு அரசியலின் இன்னொரு முகத்தை வெளிபடுத்துகின்றது, அது அசிங்கமானது
அதாவது ஷியாக்களின் கை ஓங்குவது சன்னிகளுக்கு பிடிக்கவில்லை. ஈரானின் செல்வாக்கு இன்று அங்கு ஓங்குகின்றது, ஏமனில் அவர்கள் ஆதரவுடனே யுத்தம் நடக்கின்றது, ஈராக் ஈரானுடன் ஐஎஸ் ஒழிப்பில் இணைந்தே நிற்கின்றது , சிரியாவும் ஈரானுடன் நெருக்கமான நாடு என்பதால் ஷியாக்கள் பலம் பெறுகின்றார்கள் இதில் லெபனானின் ஹிஸ்புல்லாவும் இணைகின்றது
இந்த ஷியாக்களின் எழுச்சி சன்னி நாடுகளுக்கு உவப்பானது அல்ல, இன்று சதாம் போல தைரியமான சன்னி தலைவர்களும் இல்லை, அவர்கள் எல்லாம் அமெரிக்காவின் பின் ஒழிந்து ஷியாக்களை அழிக்க சொல்கின்றார்கள்
சரி ஷியா கூட்டணி இணைந்ததில் என்ன இருக்கின்றது என்றால் குர்துகள் தனிநாடு பெற கூடாது என்ற அரசியலும் உண்டு இதனை துருக்கி ஆதரிக்கின்றது
ஐஎஸ் இயக்கம் இதில் இன்னொரு கொடுமை, எல்லாம் எங்களுக்கே என எல்லோருடனும் சண்டையிடும் அமைப்பு அது, குழப்பம் இங்கே கூடுகின்றது.
இதில் எண்ணெய் வியாபாரம், அரபு அரசியல் என பல விஷயங்களை கணித்து புட்டினீன் ரஷ்யாவும் வந்து நிற்கின்றது. நாங்கள் இல்லா காலத்தில் சதாமினை கொன்றுவிட்டீர்கள் இனி அப்படி விட முடியாது என பகிரங்கமாக வந்துவிட்டது ரஷ்யா
பொதுவாக ஈராக்கோ, ஆப்கனோ , சிரியாவோ பலமில்லா அரசுகள் மீது தங்கள் நவீன ஆயுதங்களை பரிசீலிப்பது அமெரிக்க வழக்கம். அங்கும் அதுதான் நடக்கின்றது
ரஷ்யா விடுமா? அதுவும் நேரடி யுத்தகளத்தில் அதனைத்தான் செய்கின்றது, ஐஎஸ் இயக்க ஒழிப்பு என வந்த ரஷ்யா சந்தடி சாக்கில் அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது தாக்கிவிட்டு இலக்கு குறி தவறிற்று என சொல்லிகொள்கின்றது
அமெரிக்காவும் நவீன ஆயுதங்களை கொடுத்து ரஷ்ய விமானங்களை வீழ்த்த சொல்கின்றது, பதிலுக்கு ரஷ்ய ஆயுதங்கள் சிரியா வழியாக இஸ்ரேலிய விமானங்களை வீழ்த்துகின்றன‌
இப்படியாக பல கோணங்களில் நடக்கும் யுத்தம் அது. இப்பொழுது சிரிய அரசை அகற்றமுடியா பட்சத்தில் அந்நாட்டை இரண்டாக பிரிக்கலாமா என யோசிக்கின்றது அமெரிக்கா , காரணாம் எண்ணெய் குழாய் கொண்டு செல்ல கொஞ்ச இடம் போதாதா?
ஆனால் சிரியா பிரிந்தால் தனக்கு ஆபத்து என எண்ணும் துருக்கி கடுமையாய் எதிர்கின்றது, இதில் அமெரிக்கா அப்செட்
இப்படி எல்லா தேசமும் , எல்லா தீவிரவாத இயக்கமும் சிரியா பக்கம் பிசி என்பதால் ஹேப்பியாக இருக்கும் ஒரே நாடு இஸ்ரேல்
இப்பொழுது அங்கு ஏதும் குண்டுவெடிப்பு, ஹமாஸ் தாக்குதல், கலவரம் என ஏதும் செய்தி வருமா? வராது. காரணம் இதுதான்
அதெல்லாம் இருக்கட்டும் 5 ஆண்டுகளாக நடக்கும் யுத்தம் இப்பொழுது மட்டும் ஏன் இப்படி பரபரப்பு பெற வேண்டும்? குழந்தைகள் கொல்லபடுகின்றார்கள் என ஏன் ஒப்பாரி வைக்க வேண்டும்?
இதுதான் ஊடக போர்
லிபியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் கொல்லபடும் மக்களும் குழந்தைகளும் கணக்கில்லாதவை, ஆப்கன் எல்லையில் என்ன நடக்கின்றது என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும் ரகசியம்
ஆனால் சிரியாவினை மட்டும் முன்னிறுத்துவது ஏன்? அதுவும் மிக சமீபமாக?
விஷயம் இதுதான் அமெரிக்கா குண்டுவீச்சில் கொல்லபட்டால் ஒரு படமும் வராது, அவர்கள் உலக ஊடக பலம் அப்படி. வியட்நாம் யுத்தத்தில் ஒரு சிறுமி ஆடையின்றி ஓடிவந்ததை கண்டு அமெரிக்கர்களே பொங்கி எழுந்து அவர்கள் ராணுவத்தை திரும்பபெற்றனர்
அதிலிருந்து தன் கொடூர தாக்குதலில் நடைபெறும் அழிவுகளை அமெரிக்கா வெளிவராமல் பார்த்துகொண்டது, எப்படி படமெடுக்க முடியும், அவர்கள் அனுமதித்தால்தான் உண்டு.
சிரியாவில் ரஷ்ய குண்டுவீச்சில் செத்த குழந்தைகளை மட்டும் படமெடுத்து உலகெல்லாம் ஒளிபரப்புவார்கள், உலகில் அவர்கள் கட்டுபாட்டில் உள்ள எல்லா ஊடகமும் அதற்கு பலம் சேர்க்கின்றன‌
அரபுநாட்டின் உண்மை செய்திகளை சொல்லும் ஒரே ஊடகமாக அல் ஜசீரா இருந்தது. ஆப்கனிலும் லிபியாவிலும் அமெரிக்கா செய்த அத்தனை அட்டகாசங்களையும் அதுதான் சொன்னது
ஆனால் அதனை எல்லாம் பெரும் செய்தி ஆக்காமல் பார்த்துகொண்டார்கள், அல் ஜசீராவிற்கு தொந்தரவு பெருகிற்று, இப்பொழுது அதுவும் பழைய வீச்சு இல்லை
அதனால் வல்லவன் வைத்ததே நீதி, வல்லவன் நடத்தியதே போர், அவன் சொன்னதே செய்தி என உலகெல்லாம் ஏதோ இப்பொழுதுதான் சிரியா எரிய தொடங்கி இருப்பது போல பிம்பம் காட்டுகின்றார்கள்.
அன்றே சொன்னதுதான் எண்ணெய் இருக்கும் வரை அங்கு எரிவது நிற்காது, அதனை தாண்டி நிற்க வேண்டுமென்றால் அந்த மக்கள் சிந்திக்க வேண்டும், ஒரே ஒரு வரியில் சிந்தித்தால் போதும், உண்மை விளங்கும்
ஈராக் அழிந்து கிடக்கின்றது, ஐஎஸ் இயக்கம் தாண்டவமாடுகின்றது, ஏமனில் யுத்தம், சிரியா கேட்கவே வேண்டாம். இந்த மாபெரும் அழிவிலும் ஒரே ஒரு விஷயம் தங்கு தடையின்றி நடக்கின்றது
அது என்ன? கச்சா எண்ணெய் வியாபாரம். எந்த யுத்தமும் அதனை பாதிப்பதில்லை ஏன்?
இந்த புள்ளியில் சிந்தித்தால் அவர்கள் திருந்துவார்கள், மாறாக ஷியா, சன்னி, அல்லாவி, அகமதியா, குர்து, பெர்ஷியா என பேசிகொண்டே இருந்தால் அமைதி திரும்பவே திரும்பாது
இவ்வுலகில் நாடோடிகளாகவும், தங்களுக்குள் அடித்துகொண்டும் இருந்தவர்களை ஒன்றாக்கி மாபெரும் பேரரசை கட்டியது ஒருவர் ஒருவன் செங்கிஸ்கான் இன்னொருவர் நபி பெருமான்
செங்கிஸ்கான் வாள் முனையில் அதனை செய்தான், ஆனால் இறை தூதரான‌ நபிபெருமான் தன் அன்பான கண்ணியமான‌ போதனையால் செய்தார்
இஸ்லாம் வாள்முனையில் எல்லாம் பரப்பபடவில்லை, ஆப்கன் எனும் அலெக்ஸாண்டர் செங்கிஸ்கான் கலப்பினத்தில் வந்த முரட்டு கூட்டத்தின் போர்களில் அப்படி சொல்லபடமாலே தவிர தொடக்கம் அப்படி அல்ல‌
நபி பெருமான் வலிய ஒரு யுத்தமும் செய்தவர் அல்ல, தற்காப்பிற்காக இரு யுத்தம் செய்தார். மெக்காவினை பிடித்தபொழுது ஒரு சொட்டு ரத்தமும் அவர் சிந்தவிடவில்லை மாறாக அவர்களை மன்னித்தருளினார்
அந்த பெருந்தன்மைதான் பின்னாளைய கலீபாக்கள் மாபெரும் சாம்ராயத்தை உருவாக்க வைத்தன. அந்த சாம்ராஜ்யத்தில் யூதரும், கிறிஸ்தவரும் வாழ்ந்தனர். துளி கலகமுமில்லை
சலாவுதீன் போன்றவர் ஆட்சியில் ஜெருசலேமில் யூதருக்கும் கிறிஸ்தவருக்கும் எந்த குறையுமில்லை அப்படி எல்லாம் காலமிருந்திருக்கின்றது, நபிபெருமானின் பெரும் சாதனை அது. அவர் போதனையின் தாக்கம் அப்படி இருந்திருக்கின்றது
இதெல்லாம் ஓட்டோமன் சாம்ராஜ்யம் வரை தொடர்ந்திருக்கின்றது
பின் எங்கு சிக்கல் வந்தது என்றால் எண்ணெய் வளம் வந்ததில் இருந்து, அதில் வெளிநாடுகள் தலையிட்டதில் இருந்து
ஆம் அதுவரை இஸ்லாமியர்களாக ஒன்றுபட்டு இருந்த இனங்கள், புது பணக்காரர்கள் ஆனபின்பு அந்த பணத்திலும் வசதியிலும் நிலைக்க மீண்டும் முகமது நபி காலத்திற்கு முற்பட்ட அந்த இன குழு மோதலுக்கு திரும்பிவிட்டார்கள்.
"தங்கள் ஒற்றுமைக்கும் நலனுக்கும் தானே இறைவன் நபிபெருமானை அனுப்பினான், அதனால் மாபெரும் அமைதி சாம்ராஜ்யம் எல்லாம் கண்டோமே, மதங்களை ,இனங்களை எல்லாம் தாண்டி மகா ஒற்றுமையாக இருந்தோமே இன்று ஏன் மோதிகொள்கின்றோம்?" என அவர்கள் சிந்தித்தல் வேண்டும்.
இந்த எண்ணெய் பணத்தின் வசதியும், அதிகாரமும் அல்லவா அந்த நபிபெருமானின் போதனைகளை மீறி நம்மை சண்டையிட வைக்கின்றது என அவர்கள் சிந்தித்தாலே அங்கு அமைதி நங்கூரமிடும்
தங்கள் வரலாற்றையும், தங்களை ஒற்றுமையும் அன்பும் சமாதானமும் நிறைந்த சமூகமாக மாற்ற நபிபெருமான் செய்த முயற்சிகளையும் , அதன் பின் இன்றளவும் பெருமையாக பேசபடும் அந்த தூய கலீபாக்களின் ஆட்சியினை கண்ட அந்த காலத்தையும் நினைத்தாலே போதும்,
அவர்கள் மனம் மாறும் அரபுகளின் காதில் விழும் வெடிசத்தம் நிற்கும், தேசங்களின் அழுகை நிற்கும்.
அந்த பிஞ்சுகளின் முகமும் பூக்கும்
கூடவே பாலஸ்தீன அழுகையும் புன்னகையாக மாறும்
இந்த உலகில் அமைதியான நாடுகள் குறைவு, அதில் நம் பாரத தேசம் எவ்வளவோ கொடுத்து வைத்தது. ஓரளவு பாதுகாப்பான தேசத்தில் அமைதியாக வாழ்கின்றோம்
பிழைக்க வெளிநாடு சென்றிருப்போமே அன்றி இத்தேசத்தில் வாழமுடியாது, பாதுகாப்பு இல்லை என்ற நிலை வந்ததில்லை. இத்தனைக்கும் ஏகபட்ட மதம், மொழி,இனம் என பல விஷயங்கள்
அதனை தாண்டி நிலைத்து நிற்பதுதான் இத்தேசத்தின் மகா சிறப்பு
சுதந்திர போராட்ட காலத்தில் கூட இந்திய அகதிகள் என யாரும் உருவாகவில்லை, இனி எக்காலத்திலும் உருவாக விடவும் மாட்டோம்
உலகின் பல நாடுகளை பாருங்கள், சிரியா, லிபியா ஏமன் என பலவற்றை பாருங்கள்,குறிப்பாக அக்குழந்தைகளையும் நம் குழந்தைகளையும் காணுங்கள்
பள்ளிக்கு சென்றுவிட்டு வீதியில் விளையாடும் நம் குழந்தைகளையும், மாலையில் நம் தோளோடு விளையாடும் அக்குழந்தைகளையும். சிரியாவிலும் ஈராக்கிலும் மழலை மொழியில் ரத்தம் வழிய "எங்க வீட்டுல குண்டு விழுந்து ஆனா நான் சாகலை அப்பா செத்துபோனாங்க" என அப்பாவியாய் சொல்லும் அக்குழந்தைகள் பேச்சையும் கேளுங்கள்
இத்தேசத்தின் அருமை அந்நொடியில் உங்களுக்கு விளங்கும், தானாக இத்தேசத்தை கைஎடுத்து வணங்குவீர்கள். இந்தியா என்பது மகா இனிமையாக கம்பீர்கமாக, பெருமையாக‌ உங்கள் காதுகளில் ஒலிக்கும்"

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்
காஷ்மீரில் ஏன் இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை ஏற்கவிலை என்பதும், பாகிஸ்தான் ஏன் அப்படி வேண்டும் என அடம்பிடிப்பதும் புரியும்
மூன்றாம் நாட்டை அனுமதித்தால், நான்காம் நாடு ரகசியமாக வரும், பின் கூடவே ஆயுதமும் வரும். பின் என்ன மாபெரும் அழிவுதான்
காஷ்மீரில் அந்த அழிவினை கூடுமானவரை தவிர்த்தே இந்தியா தக்கவைத்து வருகின்றது, இதனால் இந்திய ராணுவம் சந்திக்கும் இழப்பும் அதிகம்
எப்படியாவது மூன்றாம் நாடு அதில் தலையிட வேண்டும், அச்சூழல் வரவேண்டும் என பாகிஸ்தானை தூண்டிவிட்டு சிலநாடுகள் செய்யும் சூழ்ச்சியினை நம் வீரர்கள் உயிர்கொடுத்து முறியடிக்கின்றனர்
ஈழத்தில் இன்னொரு நாட்டுபடை வந்து குதறிபோட்டிருக்கும் நிலையில்தான் இந்தியபடை சென்றது. சர்ச்சைகள் கூட புலிகள் மோதலுக்கு பின்பேதான்
அதுவும் இந்திய ராணுவம் பொறுப்போடு இருந்தது, அங்கு அன்றே முள்ளிவாய்க்காலை நிகழ்ந்த்த இந்திய ராணுவத்திற்கு சில நொடி ஆகியிருக்காது , ஆனால் மக்கள் அழிவை எண்ணி கைகளை கட்டிகொண்டு அடிவாங்கியது
இதனை எல்லாம் பின்பு முள்ளிவாய்க்காலில் சிங்களன் மொத்தமாக கொள்ளிவைத்தபொழுதுதான் எல்லோருக்கும் புரிந்தது
சில கணக்குகளை புரிந்துகொள்ள தகுந்த உதாரணம் வேண்டும்
சிரியாவினை நன்கு பாருங்கள், கவனியுங்கள். ஈழ விவகாரம் முதல் காஷ்மீர் வரை இந்தியா எவ்வளவு நிதானமாக அழிவுகளை குறைக்க பாடுபடுகின்றது எனபது புரியும்
இந்த தேசத்தின் பெருந்தன்மையும், அதன் மாபெரும் முன்னெச்செரிக்கையும், தியாகமும் புரியும்.
ஜெய் ஹிந்த்.

கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது

இங்கே ஆளாளுக்கு கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் வாழ்க என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், டிரம்ப் கூட ஜெருசலேமிற்கு அமெரிக்க தூதரகத்தை மாற்றுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார்
ஆனால் அங்கே நிலை என்ன?
கிறிஸ்துவை யூதர்களுக்கு கொஞ்சமும் இன்றுவரை பிடிக்காது, அவர் தங்கள் பெருமையினை கெடுக்க வந்த கோடாரி காம்பாகவே கருதுகின்றார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் இயேசு எனும் குட்டிசாத்தானே முழு காரணம் என்பது அவர்களின் மனமார்ந்த நம்பிக்கை
அதனால் ஜெருசலேமில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயங்களை எல்லாம் கண்டுகொள்வதில்லை, சிலவற்றை பல்லை கடித்துகொண்டு பொறுத்துகொள்கின்றார்கள்
ஆனாலும் அவ்வப்போது பழிவாங்க தவறவில்லை, இப்பொழுது இயேசு கல்லறை அமைந்த ஆலயத்தில் வில்லங்கத்திற்கு வந்தாயிற்று
அந்த ஆலயம் இன்று ஒரு இஸ்லாமிய குடும்பத்தால் நிர்வகிக்கபடுகின்றது, அவர்கள்தான் அந்த பாரம்பரிய புனிதமான இடத்தின் தற்போதைய அதிகாரம் கொண்டிருப்பவர்கள்,சாவி அவர்களிடம் தான் உண்டு
அவர்களால் இன்றுவரை ஒரு சிக்கலும் இல்லை
இஸ்ரேல் அரசு அந்த புனிதமான ஆலயத்தை ஆலயம் என்ற வரிசையில் கொண்டுவராமல், வியாபார நிலையம் என்ற வரிசையில் கொண்டு வந்து பெரும் வரிகளை சுமத்திற்று
இது ஆலயம், கர்த்தராகிய தேவன் உயிர்த்தெழுந்த ஆலயம் , இதுவா வியாபார நிலையம் என கிறிஸ்தவர்கள் கேட்டும் இஸ்ரேல் இறங்கவில்லை அவர்கள் கிறிஸ்தவ வெறுப்பு அப்படி
இதனால் கோவில் பூட்டபட்டது, சுற்றுபயணிகள் பாதிக்கபட்டனர், விஷயம் கொஞ்சம் வெளியில் வந்தது 3 நாட்களில் விஸ்வரூபமெடுத்தது
மேற்கு நாடுகள் எங்களிடமே உங்கள் வேலையினை காட்டுவீர்களா என முறைக்க இப்பொழுது வரிவிலக்கு அளித்துள்ளது இஸ்ரேல் இதனால் ஆலயம் திறக்கபட்டுள்ளது
இயேசு வாழ்ந்த காலத்தில் யூத ஆலயம் வியாபார தலமானதை எதிர்த்து எல்லோரையும் அடித்து விரட்டினார். அதற்கு 2030 வருடம் கழித்து அவர் கல்லறையினை வியாபார தலம் என அறிவித்து பழிவாங்குகின்றார் இஸ்ரேலியர்
இங்கு இது தெரியாமல் பல கிறிஸ்தவர் "இஸ்ரேல் வாழ்க, தேவன் இஸ்ரேலை பாதுகாத்தார் அல்லேலூயா.." என அழிச்சாட்டியம் செய்கின்றார்கள்
பரிதாபத்திற்குரிய கூட்டம் இது

Tuesday, February 27, 2018

சமணர் கழுவேற்றம்


சிரியாவின் தற்போது நடைபெறும் முஸ்லிம் இனகுழு தீவிரவாதம் போல வேறு மதத்தில் உண்டா..

வைணவர்களும் சைவர்களும் 8~10 நூற்றாண்டில் சிரியா முஸ்லிம் மதக்குழு போல மோதி கொண்டதாக நயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாறு சொல்கிறது ..
சிரியாவை விட மோசமாக எழாம் நூற்றாண்டில் மதுரை வட்டத்திலே சுமார் 8000 ஜைன் மதத்தினரை சிவனை கும்பிடும் சைவ மதத்தினர் கொடுரமாக கழுவேற்றி கொன்று உள்ளனர் .
சமணர் கழுவேற்றம் என்பது நின்றசீர்நெடுமாறன் எனும் மன்னன் மதுரையை ஆண்ட காலத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறிய முடிகிறது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் சம்பந்தர் பிறந்தார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் சைவ சமயத்தைத் தழுவ மறுத்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்லப்படுகிறது.
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.
அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனை பிடித்து நிர்வாணமாக்கி, அவனை குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணைதடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும்.
கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவார்க்ள்.
சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்டவர்களுக்கு இது கிடையாது.
கழுவிலேற்றப்பட்ட உடல் பறவைகளுக்கும்,நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். கழுமரம் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் அதனைக் கழுமரம் என்று குறிப்பிட்டனர். இரும்புக் கழுவும் இருந்தது. இந்த இரும்புக் கழுமரத்தை வெங்கழு என்று குறிப்பிட்டனர். இந்த வெங்கழு தமிழகத்தில் ஈரோடு காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள 'அய்யனாரப்பன் கோவிலில்' இன்றும் உள்ளது.
தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில் திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்
"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும் எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம் மாற்றுக்கருத்துகள் உண்டு.
ஆனால் சமணரைக் கழுவேற்றிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 63ஆவது படலமாகும். இப்படலம் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
இப்படலத்தில் பாண்டிய மன்னனின் சுரத்தினை திருஞானசம்பந்தர் தீர்த்தபின்பு நிகழந்தவைகளை குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னின் நோயைக் குணப்படுத்த முடியாத சமணர்கள் திருஞானசம்பந்தரை அனல் மற்றும் புனல் வாதத்திற்கு அழைப்பதும், அதில் தோற்றுப்போனால் தங்களை கழுவேற்றலாம் என வாக்குறிதி அளிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மதுரையில் கூன்பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கொடுமைக்கான ஆதாரங்கள் என மூன்று சான்றுகளை அறிஞர்கள் வைக்கின்றனர் .
முதல் சான்று:
சுவரோவியங்களும் சிற்பங்களும். முதலில் சமணர்களைக் கழுவேற்றியதை அன்றைய ஆட்சியாளர்கள் வெற்றியாகவே கருதினர். அதனால்தான் அதுகுறித்த ஓவியங்களை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் சுவர் களில் தீட்டி வைத்துள்ளனர்.
இரண்டாவது சான்று:
கந்தர்சஷ்டி கவசங்களில் கொலைக்களத்துக்கு வெகு அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை கவசம் பாடிய தேவராயக் கவிராயர் ‘எண்ணாயிரம் சமணர்களை எதிர்கழுவேற்றி’ எனப் பாடுவார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் திருஞான சம்பந்தரின் கீர்த்தியாக இந்தக் கழுவேற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.அதில் மதமாற்றம், அதாவது சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறும்படியான பாண்டி யனின் கட்டளையை ஏற்காத எண்ணாயிரம் சமணர்கள் ஆனைமலை மற்றும் இதர மலைகளிலிருந்து இறங்கிக் கழுவேறினர் என்கிறது.
ஞானியான சம்பந்தர் சைவ மடங்களின் நலனுக்காகவே இந்தக் கழுவேற்றத்தை நிறைவேற்றினார் என் கிறது. பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணமும், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணமும் அதைப் பெருமிதமாகவே பேசுகின்றன.
மூன்றாவது சான்று:
வெகு மக்களின் சடங்குகள் வழியாகக் கைமாற்றப்படும் நினைவு வரலாறு. இது நாட்டார் பாடலாகவும் திருவிழாவின் பகுதியான சடங்காகவும் நிகழும். இன்று வரை மதுரை மேற்கில் இருக்கும் மேலக்காலில் இருந்து கிழக்கில் இருக்கும் திருப்புவனம் வரை சிவன் கோயில் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கமாக, கழுவேற்றம் என்னும் சடங்கு தவிர்க்க முடியாத வகையில் நிகழ்ந்துவருகிறது.
அது நிகழும் இடம் திருப்புவனத்தில் ‘கழுவேற்றப் பொட்டல்’என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இன்னும் மிச்சமாகப் பல்வேறு திருவிழாக்களின் பகுதியான சடங்காக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’நிகழ்த்தப்படுகிறது.
மொத்தத்தில் தீவிரம் + வாதம் உடன் மதம் கலக்கும் போது அது தீவிரவாதம் ஆகிறது ..
அதில் சிரியா என்ன .. திருஞானசம்பந்தர் என்ன .. பின்லேடன் என்ன ஞானபெண்ணே ..
நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி 🙏
Data Complied by #Savera based on References
பெரியபுராணம் முலமும் உறையும் - மூன்றாம் பாகம், புலவர்.பி.ரா.நடராசன், உமா பதிப்பகம், சென்னை
சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்
சேக்கிழார். பெரியபுராணம். பாடல் எண் - 2751.
John Cort (1998). Open Boundaries: Jain Communities and Culture in Indian History. SUNY Press.
Steven Paul Hopkins Associate Professor of Religion Swarthmore College in Pennsylvania .
Singing the Body of God : The Hymns of Vedantadesika in Their South Indian Tradition: Oxford University Press.

மகா கணபதிம்

மகா கணபதிம்
==========
எங்கள் பயிலகம் ஒரு பரந்த அரச மரத்தடியில் நடக்கிறது. அந்த அரசோடு ஒரு வேம்பும் பிணைந்து வளர்ந்து நிற்கிறது.
அங்கு வினாகயருக்கு ஒரு சிலையும் மேடையும் அமைத்திருக்கின்றனர்.
அங்கு வரும் குழந்தைகள் படிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். சில சமயம் படம் பார்க்கிறோம். வானம் பார்க்கிறோம். மிகுந்த விருப்புடன் பாடக் கற்றுக்கொண்டு குழுவாகப் பாடுகிறார்கள்.
பாரதியின் 'எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி' பாடலை மிக ஆர்வமாகப் பாடுகின்றனர்.
வினோபாவின் சர்வசமயப் பாடலான ‘ஓம் தத் சத்’ பாடுகிறார்கள். அதை ஆங்காங்கே தமிழொலிப்பு கொண்ட வடமொழி/சர்வமொழிப் பாடல் எனலாம்.
அகர முதல எழுத்தெல்லாம் பாடுகிறார்கள்.
எங்களிடம் வருபவர்களில் பெரும்பாலானோர் தலித் மாணவர்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் ஓரிரு வாரங்களிலேயே நின்றுவிட்டார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் ஓரிரு தலித் மாணவர்களும் அடுத்த சில வாரங்களில் நின்றுவிட்டார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் பிற சாதி மாணவர்கள் மேலும் சில வாரங்களில்.
அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வந்துவிட்டது. ஒரு சிலர் தமிழ்வழியிலும், ஒரு சிலர் ஆங்கிலவழியிலும் படிக்கிறார்கள். ஐந்தாவதுக்குள் இருக்கும் பெரும்பாலனவர்கள் ஓரளவு நன்றாக ஆங்கிலம் படிக்கப்பழகிவிடுகிறார்கள், எதுவும் புரியாமலே. அண்மையில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த குழந்தைகள்-மனோதத்துவ நிபுணரோடு, நாங்கள் சென்றிருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில், பட்டவகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட ஆங்கிலத்தில் பேசமுடியவில்லை. நாங்கள் ஆங்கிலம்-தமிழ்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியிருந்தது.
எங்கள் பங்குக்கு எங்கள் குழந்தைகளுக்கு நாங்களும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். ஷேக்ஸ்பியரின் Where the bee sucks பாடுகிறார்கள். Flyய்ய்ய்ய்ய்ய் என்று இழுக்கும்போதும், Merrily, merrily shall I live now என்னும் போதும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை படித்துப் பழகாதவர்களும் சேர்ந்துகொள்கிறார்கள்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே விரும்பிப் பாடுகிறார்கள். ஒளி படைத்த கண்ணினாய் பாடுகிறார்கள்.
மிக அதிக ஆரவாரத்துடன், 'தன்னன்ன னாதினும்' என்று பூஞ்சோலைக்கு வரும் ஆத்தாவைக் கூவி அழைக்கிறார்கள். இது என்ன சந்தைக் கடையா, மீன் விற்கிறாங்களா என்று தினமும் ஒரு எட்டு வயதுக் குழந்தை கேட்கிறாள்.
ஒரு சிலர் சர்ச்சுக்கும் போவதாகச் சொல்கிறார்கள்.
இந்தப் பாடல்களையெல்லாம் அவர்களுக்குக் கற்றுத் தரும் எங்கள் மகள், சகவாச தோசத்தால் எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. திருமுறை பாடக்கற்றுத்தரும் அவளது ஆசிரியை சொல்லும்போது மட்டும் எப்போதாவது திருநீறு இட்டுக்கொள்கிறாள். நிறைய கல்லூரிகளில் இறைவணக்கம் பாடிவிட்டாள்.
பயிலகம் தொடங்கிச் சில நாட்களில் ஒரு பெரியவரும் வேறு சிலரும், கோயில் மேடையின் மீது அமரக்கூடாது, கீழேதான் அமர வேண்டும் என்று பிரச்சனை செய்ய ஆரம்பித்தனர். "சீட்டாடுவதற்கும் தண்ணி அடித்துவிட்டும் மேடை ஏறினால் பிரச்சனை இல்லையா?" என்று கேட்டோம். 'ச**** பசங்கள மேல ஏத்திட்டீங்களா?' என்று பொங்கினார்கள். கொஞ்ச நாள் போராடிப் பார்த்துவிட்டு, 'நீங்களாச்சு உங்க கோயிலாச்சு, கிடைத்த இடத்தில் இவர்களைப் படிக்க வைப்பது முக்கியம்' என்று இப்போது கீழேயே அமர்ந்துகொள்கிறோம்.
பொங்கலின் போது எங்கள் குழந்தைகளெல்லாம் புத்தாடையுடனும் முகமெங்கும் அப்பிய புன்னகையுடனும், ஒரு சிலர் பெரியவர்களோடு சேர்ந்து வெவ்வேறு வகைத் தாள வாத்தியங்களை அடித்துக்கொண்டும், ஊர்வலமாக ‘பூ நோம்பி’க்கு மாதங்கியம்மன் கோவிலுக்குச் சென்றார்கள். கோயில் வாசல் ஒரு வடிகட்டியானது. எங்கள் குழந்தைகள் அனேகரும் குதூகலம் குன்றாமல் வெளியில் தான் நின்றனர். குதூகலம் வற்றிப்போய் நாங்களும் வெளியில் நின்றுகொண்டோம்.
கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளாமல் கிராமத்தோடு ஒன்றவே முடியாது என்று அனுபவசாலி நண்பர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றைக்குக் காளியாத்தா கோயில் திருவிழா. மீண்டும் இதே காட்சிகள் அரங்கேறும். சென்ற ஆண்டு பக்கத்து கிராமத்தில் இருந்தோம். மஞ்சள் நீராட்டின் போது, ஊர் முழுக்க வலம் வந்த அம்மன், காலனிக்கு வெளியிலேயே நின்று, எல்லாரும் ஆடிய பின்னர், திரும்பினாள். இங்கும் இவ்வாறான வடிகட்டிகள் மேலும் இருக்கும். யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கிராமத்தில் எல்லாரும் இருக்கிறார்கள்.
நாங்கள்தான் கலகம் செய்யவும் மனமில்லாமல், கலந்து கொள்ளவும் மனமில்லாமல் கிராமத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறோம்.

https://www.facebook.com/story.php?story_fbid=10155453974437894&id=739692893

Monday, February 26, 2018

சீமான் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றிய கதை



2009 ஈழ இனப்படுகொலைக்கு பிறகு எழுந்த மிகப்பெரிய எழுச்சியை வைத்து தொடங்கப்பட்டது நாம் தமிழர் இயக்கம். இதை பெரியாரிய இயக்கங்கள் தான் வளர்தெடுத்தது . அந்த சமயத்தில் சீமானுக்கு பெரிய ரோல் எதுவும் கிடையாது . அண்ணன் சுப.முத்துகுமாரை வைத்தே இயக்கம் நடந்து வந்தது. இந்த சமயத்தில் தான் நாம் தமிழர் இயக்கம் 2010 ஆம் ஆண்டும் சுப.முத்துகுமார், சீமான் மற்றும் பெரியாரிய இயக்கங்கள் இணைந்து மதுரையில் நாம் தமிழர் கட்சியை அறிவித்தனர். நிற்க
அண்ணன் சுப முத்துகுமார் அவர்கள் தமிழ்தேசியத்திற்காகவே உழைத்தவர் . விடுதலை புலிகளுக்கு உதவியதாக சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் புலிகளுக்கு உதவி செய்தவர் . இது இந்திய உளவுத்துறையின் கண்ணை உருத்தியது . அண்ணன் சிறிது நாள் தலைமறைவாக இருந்து வந்தார் .

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தவுடன் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துகுமாரின் மேல் அனைவருக்கும் மதிப்பு அதிகமாவதை பொறுத்துகொள்ள முடியாத சில அல்லறை சில்லைறைகளும்,சீமானும் சேர்ந்துகொண்டனர் . கட்சி தொடங்கி சில மாதங்களிலே சுப. முத்துக்குமாரை கூலிப்படை கொலைசெய்கிறது .முத்துகுமாரின் ஊர்வலத்தில் அண்ணன் சீமான் கண்ணீர் மல்க வீரவசனம் பேசினார். ஆனால் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் ஊத்தி மூடப்பட்டது .இதில் தான் அண்ணனின் சூச்சமம் இருக்கிறது .

கட்சியில் இருந்த சுப.முத்துகுமாரின் தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க அதற்கு பதில்சொல்ல முடியாமல் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். கட்சியை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டுவருகிறார். சீமானின் சுயரூபம் தெரிந்தவுடன்
நாம் தமிழரின் ஆதரவு தளம் உடைகிறது .ஈழத்துக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுக்காகவும் இரவுபகல் பாராமல் உழைத்த அத்தனை தோழர்களும் தன்னுடைய பேச்சுக்கு உடன்படாதவர்களையும் சில அல்லறை சில்லறைகளை வைத்து அவதூறு பரப்பச்செய்து தோழர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி கட்சியை விட்டு நீக்குகிறார். சீமானின் போக்கை கண்டித்து கட்சியை விட்டு உண்மையாக நாம் தமிழர் கட்சி உருவாகக் காரணமாக இருந்த முக்கியமான நபர்கள் அதிகமானோர் வெளியேறுகிறார்கள்.தற்போது அந்த கட்சி எதற்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாத சில்லறைகள் தான் அந்த கட்சியை இயக்கி கொண்டு இருக்கிறது .அனைத்து முக்கிய தோழர்களும் வெளியே வந்தவுடன் அது சில குறிப்பிட்ட சாதி பற்றாளர்களின் கொட்டமாக மாறிவிட்டது .அதன் பிறகு தான் சில்லறைகளின் பேச்சை கேட்டு பெரியாரிய எதிர்ப்பை பேச தொடங்குகிறார் .இப்போது அந்த கட்சியை சில பார்ப்பனர்களும், சாதி பற்றாளர்களும் வழி நடத்திகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் இதற்கு அஜண்டா போட்டு எழுதி கொடுக்க அதை சீமான் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார். அந்த பின்னாடி இருந்து கண்டண்ட் கொடுக்குற குரூப் சங்கர் அப்பா, கல்யாண சுந்தரம் ,இடும்பாவனம் கார்த்தி இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கட்சி தொடங்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

அந்த கட்சியில் இருந்து வெளியே வந்த முக்கிய தோழர்கள் :-

1)மதுரை செந்தில்
2)திருநெல்வேலி கரிகாலன்
3)அதியமான்
4)அம்பத்தூர் சுந்தரமூர்த்தி
5)டேவிட் பெரியார்
6)திருநெல்வேலி மணிகண்டன்
7)கோயம்புத்தூர் சந்திரன்
8 )பெரம்பலூர் வீரமுத்துகுமார்
9)ராமநாதபுரம் திருமுருகன்
10)ஐயநாதன்
11)சிபி சந்திரன்
12)தூத்துக்குடி பிரபு
13)தஞ்சாவூர் நல்லதுரை
14)நீலகிரி ஆனந்தன்
15)வேலூர் திருமலை
16)விழுப்புரம் சைலேந்தர்
17)கூடலூர் ஆனந்த

இன்னும் பலர் உள்ளனர் . நாம் தமிழர் இயக்கம் தொடங்கி கட்சிக்காக உழைத்த அத்தனை தோழர்கள் மீதும் சில்லறைகளை வைத்து அவதூறு பரப்ப செய்தவர் சீமான் .

எதற்காக கட்சி தொடங்கப்பட்டதோ சிலரின் சுயநலத்திறகாக அந்த கட்சி பண வேட்டைக்கு பயண்பட்டுகொண்டு இருக்கிறது . கட்சியை உருவாக்க பாடுபட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்துள்ளார் சீமான். சுப.முத்துகுமார் அண்ணனின் கனவு அனைத்தும் இன்று பணத்திற்காக விற்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

ஏழாம் அறிவு விஷம் தோய்ந்த வசனம்

சன் டிவியில் ஏழாம் அறிவு திரைப்படம் ஒடிக் கொண்டிருக்கிறது.
அதில் ஸ்ருதிஹாசன் கேரக்டர்
“நம்ம நாடு ரிசர்வர்வேசன் ரெக்கமெண்ட்டேசன் பண்றதாலத்தான் திறமையானவங்க வெளிநாடு போறாங்க” என்று சிபாரிசுடன் சமூகநீதி விஷயமான இடப்பங்கீட்டையும் சேர்த்து விடுகிறார்.
எவ்வளவு விஷம் தோய்ந்த வசனம் இது.
இதை இயக்கிய முருகதாசும் சரி,
படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினும் சரி நிச்சயமாக பார்ப்பனர்கள் அல்ல.
ஆனால் பார்ப்பனியத்தை இவ்வசனம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
உதயநிதி இப்படத்தை பார்த்திருப்பார்தானே.
இந்த வசனம் அவரை உறுத்தவில்லையா என்ன ?
உதாரணமாக ஒரு வில்லன் கதாபாத்திரத்துக்கு
கருணாநிதி என்று முருகதாஸ் பெயர் கொடுத்திருந்தால் உதயநிதி பெயரை மாற்ற சொல்லி இருப்பார்.
ஏனென்றால் உதயநிதியின் உணர்வும் அறிவும் அதைப் புரிந்து கொள்கிறது.
ஆனால் உதயநிதியின் காதுகள் ரிசர்வேசன் வசனத்தை புரிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு அடிப்படை சமூகநீதியை கருணாநிதியோ, ஸ்டாலினோ கற்றுக் கொடுக்கவில்லை.
இவர் நாளை திமுக தலைவராகவும் ஆகிவிட்டால் இதே பார்ப்பனிய அறிவோடுதான் எந்தப் பிரச்சனையையும் கையாள்வார்.
வெளங்கிரும்.
திராவிட கழகத்தினர் முதலில் கலைஞர் ஃபேமிலி குழந்தைகளுக்கு ஸ்பெசல் டியூசன் எடுங்கப்பா.
முதல்லேயே அவுங்கள தயார் படுத்துங்க. நாட்டுக்கு அதுதான் நல்லது.
சுப வீரபாண்டியன ஹோம் டியூசன் சொல்லிக் கொடுக்க அனுப்பி வைங்க.
டியூசன் ஃபீஸ் வேணா கலெக்ட் பண்ணி தரோம்.

சாதி இங்கே ஒரு மனநிலையாக கெட்டியாகிவிட்டது. its a state of mind. நாம் அனைவரும் அந்த நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.”

ஒரு ஆட்டோ டிரைவர் தன்னை தேவர் ஜாதியை சேர்ந்தவர் என்று முன்னிலைப்படுத்திக் கொண்டவர்
மிக வெள்ளந்தியாய் பேசிக் கொண்டு வந்தார்.
தன் மகன் குரூப் 4 தேர்வு எழுதிருப்பதாக சொன்னார்.
“அப்படியா சூப்பர். என்ன படிச்சிருக்காரு” நான்
“பி.ஈ முடிக்க போறான்” அவர்
“அப்ப எதாவது கோச்சிங் கிளாஸ் சேர்ந்து பெரிய லெவல் தேர்வு எழுதச் சொல்லுங்கண்ணே”
“கோச்சிங் கிளாஸா எவ்ளோ செலவாகும்”
“ஐம்பதாயிரம் ஆகட்டுமே. ரெண்டு பவுன போட்டுத்தள்ளுங்க. வித்திருங்க. எதாவது தேர்வுல மாட்டிக்கும். உங்க பையன் நல்லா இருப்பாரு”
“எனக்கும் அதான் ஆசை”
“நீங்க கள்ளரா”
”இல்ல அகமுடையார்”
“அகமுடையார்னு சொல்றது ஒரு பெருமை உங்களுக்கு. இன்னும் நீங்களே மூணு சாதி ஒண்ணு சேந்து தேவரா ஆகல பாருங்க”
“ஹா ஹா ஹா அப்படி இல்ல தம்பி. தேவர்ல்லாம் ஒண்ணா சேந்தாச்சு”
‘சத்தியமா சொல்லுங்க பொண்ணு பாக்கும் போது அதெல்லாம் பாக்க மாட்டேன்னு”
“ஹா ஹா அது வசதியா அமைறதப் பொறுத்து. நீங்க எந்த ஊரு தம்பி”
“எந்த ஊரா ? எந்த ஜாதியா?” கேட்டேன்
“ (சிரிப்பு)”
“நா நாடார் சாதிண்ணே. ஆனா இப்ப நாடார் தேவர் Clash எல்லாம் வருதாண்ணே நம்ம ஊர் பக்கம்” (அவர் சிவகங்கை)
“சச்சே அது அந்த காலத்துல இப்ப அதெல்லாம் இல்ல”
“இப்ப எல்லா ஊர்லையும் எஸ்.சி கூட தான் Clash அப்படித்தாணன்னே”
“ஆமா ஆமா. எப்பவும் எதாவது பிரச்சனை”
“சட்டமும் அவுங்களுக்கு துணைண்ணே”
”ஆமா.. ஐயோ ரொம்ப தம்பி”
“எனக்கு ஒரு டவுட்டுண்ணே. இப்ப ஒரு தேவர் தலைவர் பள்ளர்கள் மாநாட்டுக்கு போறாரு. அது எப்படி ? அப்புறம் தேவர் சாதில இருந்து ரெட்டியார் சாதி பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினா மட்டும் எதுவும் சொல்ல மாட்டீங்களாம். என் ஃப்ரெண்டு சொன்னான்”
“அவரு எந்த ஊர்”
“அருப்புக்கோட்டை”
“அது ரெட்டியார் சாதின்னா கொஞ்சம் மேலத்தான. அது பிரச்சனை இல்லை. வேற சாதிதான் இங்க பிரச்சனை”
“வேற சாதின்னா எஸ்.சி ய சொல்றீங்க”
“ஆமா, அப்புறம் பள்ளர்கள் மாநாட்டுக்கு போனாருன்னு சொன்னீங்களே. ஊர்ல எல்லாம் இந்த குடும்பத்துக்கு வேலை செய்றது இந்த குடும்பம்னு இருக்கும்”
”ஒஹ் இந்த குடும்பத்துக்கு வேலை செய்றதுக்கு இந்த சாதிக் குடும்பம்னு இருக்கும்”
“ஆமா. அப்ப ஒரு குடும்பத்துக்கு வேலை செய்ற கிழ்சாதிக்காரன இன்னொரு தேவன் குறை சொன்னா இவன் கேப்பான்ல. எப்படி எனக்கு வேலை செய்றவன நீ திட்டலாம்னு. அப்படித்தான் நீங்க சொல்ற சாதிக்காரங்க மேல ஒரு அக்கறை”
“வேலை செய்றவங்க அதே கீழ்மட்ட வேலையே செய்துட்டு இருந்தா நீங்களும் அவுங்க மேலதான் அக்கறையா இருக்கீங்க. எல்லை மீறும் போதுதான் ரெண்டு தட்டி தட்டி கீழ இறக்கி விட வேண்டியதிருக்கு அப்படித்தான”
“அதேதான்”
“எல்லா இந்த கட்சித்தலைவர்கள் செய்றதுண்ணே எஸ்.சி ஆட்கள தூண்டி விடுறாங்கண்ணே”
“ஆமா என்னத்த சொல்ல. சிட்டிக்குள்ள (சென்னை) அவுங்க அட்டகாசம்தான். யாரு கேக்க முடியுது. ஊர்ல பிரெசிடெண்டா இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது”
“உங்க ஊர் பிரசிடெண்ட் எஸ்.சியா”
“ஆமா”
“அது எப்படி”
“எல்லாம் சட்டம்தான்”
“ஆமாண்ணே அத அமெண்ட்மெண்ட் 73 ன்னு சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இரநூறு ஏதோ ஆர்ட்டிகிள் வரும்னு படிச்சிருக்கேன். ஒஹ் பிரசிடெண்ட் ஆனாலும் அவரு ஒப்புக்கு சப்பாண் மாதிரி இருப்பாரு என்ன?”
“ஆமா”
“அப்ப யாரு பவரு”
“அதான் நம்மாளு வைஸ் பிரசிடெண்ட் இருப்பாருல்ல”
“ஒஹ் வைஸ் பிரசிடெண்ட் தேவரா. சும்மா பிரசிடெண்ட்ட அண்ணேன்னு சொல்லிட்டு. வைஸ் பிரசிடெண்டுக்கு முழு பொறுப்பு கொடுத்திருவீங்க. இப்ப புரியுது”
“அவன நான் ஏன் அண்ணேன்னு சொல்லப் போறேன். அப்படின்னா அப்படித்தான் நிக்கனும். பேசக் கூட பயப்படுவாங்க”
“பதவி இருந்தாலும் பவர் உங்கக்கிட்டத்தான் வெச்சிருக்கீங்க”
“ஆமா”
இப்படியாக தேவர் சாதியைச் சேர்ந்த அவரும் நாடார் சாதியைச் சேர்ந்த நானும் ஒண்ணுமண்ணாக அண்ணன் தம்பியாக பேசி பழகி சென்று கொண்டிருந்தோம்.
1.அந்த ஆட்டோ டிரைவர் அண்ணன் பொருளாதாரத்தில் நலிந்த இடத்தில்தான் இருக்கிறார். ஆனால் சாதி என்று வரும் போது மிகுந்த பெருமை கொண்டு பேசினார். சாதி பெருமிதம் அவருக்கு ஒரு இன்பம். சிறுவயதிலேயே ஏன் எதற்கு என்று தெரியாமல் அந்த வெறியை அவருக்குள் ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
2.அவர் சொன்ன பிரசிடெண்ட் கதையை ஒரு வன்னியர் கார் டிரைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பிரசிடெண்டாக இருந்தாலும் தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்தவர் அங்கே அதிகாரமில்லாமல்தான் இருப்பார்.
3.சாதியை தவிர்த்து வாழ்க்கையில் அறநெறிக்கு கட்டுப்பட்டவராகவே அவர் இருக்கிறார்.
4. மேல் சாதி சம சாதி பற்றிய அன்பு அவருக்கு இருக்கிறது. ரெட்டியார் சாதி பற்றி பேசும் போது ரெட்டியார் சாதி பொண்ணுங்க சிவப்பா இருப்பாங்க அதனால நம்ம ஆட்கள் கட்டிக்கிடுவாங்க என்று பெருமை பொங்க சொன்னார். இதற்கு முன் பேசிய ஒரு வன்னியர் கார் டிரைவர் தான் ஒரு வேளாளர் பெண்ணை லவ் செய்து திருமணம் முடித்ததை அவ்வளவு பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.
5.நான் தேவரா என்று அறிய அதிக ஆவல் கொண்டிருந்தார். நான் நாடார் என்றதும் ஒரு விநாடி தடுமாறி சுதாரித்துக் கொண்டதைப் பார்த்தேன். நாடார்களை விட தேவர்கள் வீரம் விளைந்தவர்கள் என்று சொன்னதும் அவர் குழந்தை மாதிரி குஷி அடைந்தார்.
6. அவர் சாதிக்கு மேல் உயர்சாதியினர்தான் அவரை ஆள்கிறார்கள் என்பது பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்.
7. பிரசிடெண்டை அவர் அண்ணே என்று விழிப்பார் என்று நான் புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் காட்டிய வேகம் அவர் சாதி உள்ளத்தைக் காட்டியது.
”உயர் சாதி எனப்படும் சாதிகளில் 200 சாதிகள்தாம் உண்டு. அதற்கு கீழே சூந்திர சாதிகளில் மூவாயிரம் சாதிகள் உண்டு. இங்கே ஒவ்வொரு சாதிக்கும் மேலே கொஞ்சம் சாதிகளும், கீழே கொஞ்சம் சாதியும் உண்டு. கீழே உள்ளவர்களோடு ஒப்பிட்டு நாம் பெரியவர்கள் என்று சிலாக்கிக்கும் அதே வேளையில் தம்மை விட மேல் சாதியினரிடத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு “நான் ஒசந்துட்டேன்” என்று சொல்லிக் கொள்வார்கள். சாதி இங்கே ஒரு மனநிலையாக கெட்டியாகிவிட்டது. its a state of mind. நாம் அனைவரும் அந்த நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறோம்.”
பேராசிரியர் சத்யபால் பேசிய உரை நினைவுக்கு வந்தது.
பின்குறிப்பு : நீங்கள் சாதி பேசியிருக்கிறீர்கள் என்று மொக்கை கமெண்ட் செய்தால் ப்ளாக் செய்துவிடுவேன்.
சும்மா தலைவர்கள் பேசிய சாதி எதிர்ப்பு கொட்டேசன்ஸ் மட்டும் எப்போதும் எழுதிக் கொண்டிருக்க முடியாது.