Friday, December 17, 2021

முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப்

 அவுரங்கசீப் பற்றி எதுவும் தெரியாமல் வரலாற்றை புரட்டும் சங்கிக்கும்பல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள்.. 


முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப், நவ., 3, 1618ல் மும்பையிலுள்ள, 'டாஹோட்' என்ற இடத்தில் பிறந்தார். 'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்.


அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.

தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, அதன்படி வாழ்ந்தவர்; மிகவும் நேர்மையானவர்.

ஷாஜஹானின் கடைசி காலத்தில், அவுரங்கசீப் அவரை கவுரவமான அரண்மனை சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமை படுத்தவில்லை.

ஷாஜஹானின் உடல், உரிய மரியாதையுடனே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும், தாஜ்மஹாலில், அவரது பிரியத்துக்குரிய மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.


அவுரங்கசீப், 24 மணி நேரத்தில், மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவார். வேலை தவிர, மீதமிருந்த ஓய்வு நேரங்களில் இஸ்லாமிய மார்க்க நூல்களை படிப்பதில் செலவிடுவார்; தரையில் தான் படுப்பார்; மாமிசம் உண்ணாதவர்.

அரசாங்க கஜானா பணம் மக்களுக்கு உரியது. அரச குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில், மிகவும் உறுதியாக இருந்தார் அவுரங்கசீப். 


தன் சொந்த செலவுகளுக்காக, ஒருபோதும், அவர் கஜானாவை உபயோகித்ததில்லை.

எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். ஆபரணங்களை அணியாதவர்; பொன், பொருள் மேல் ஆசையில்லாதவர். வெள்ளி, தங்க பாத்திரங்களை கூட உபயோகிக்க மாட்டார்.


பொதுவாக, மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்கு காட்சி கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். ஆனால், எளிமை விரும்பியான அவுரங்கசீப், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும், சாதாரண தினமாகவே எடுத்து கொண்டார்.

அவுரங்கசீப்புக்கு குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்-ஆனை தன் கைப்பட எழுதுவதில், அதீத விருப்பம் கொண்டவர். அந்த இரண்டையும் விற்று, கிடைக்கும் பணத்தில் தான், தனிப்பட்ட செலவுகளை பார்த்து கொண்டார்.


மதுவை, வெறுத்தவர். தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுவை தடை செய்தார்; அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்; உல்லாச நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்று உத்தரவிட்டார்; போதைப் பொருள்களையும் ஒழித்தார்.


அன்றைய காலகட்டத்தில், இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும்போதே, அதே நெருப்பில், மனைவியும் குதித்து, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும், 'உடன் கட்டை' ஏறும் பழக்கம் இந்துக்களிடையே இருந்தது. குறிப்பாக, ராஜபுத்திரர்களிடையே அதிகமாக இருந்தது.

ஒருமுறை, போர்க்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவன் மனைவியை அந்த நெருப்பில் குதிக்க சொல்லி, சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்தினர்.

அங்கு வந்த அவுரங்கசீப், அந்த செயலை தடுத்தார். தங்கள் மத விஷயத்தில் தலையிடக்கூடாதென்று அங்கிருந்தவர்கள் வாதம் செய்தனர். ஆனால், அவுரங்கசீப் விடவில்லை.

'இது அநியாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக்கூடாது. இந்த சடங்கை தடை செய்கிறேன்...' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பல்வேறு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சட்டத்தை செயல்படுத்தினர்.


'நவுரோஸ்' என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமயமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்த திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்கு சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கமிருந்தது.

வீணாக அரசாங்க பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத அவுரங்கசீப், நவுரோஸ் பண்டிகையை தடை செய்தார்.

ஒரு பேரரசராக இருந்தாலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 


அவ்வளவு செலவு செய்து, தன் தந்தை, தாய்க்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர். ஏனெனில், தாஜ்மஹால் கட்டுவதற்கு மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது; இக்கட்டட வேலையில் மக்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன; அரசு கஜானா படுமோசமாகி போனது.

ஆனால், ஷாஜகானுக்கு மக்கள் முக்கியமாக தெரியவில்லை. தன் மனைவிக்காக கட்டும் கட்டடம் மட்டும் நினைவில் இருந்தது. 1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப் பணிகள், 1648ல் தான் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில், கண்ணீர் வடித்தார் ஷாஜஹான்.

எளிமை விரும்பியான அவுரங்கசீப்பின் கண்களுக்கு, தாஜ்மஹால், அழகாக தெரியவில்லை; துயரமாகவே தெரிந்தது.

அதனால், இன்னொரு கருஞ்சலவைக்கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளை தடுத்தார். 


இருப்பினும் சில முக்கியமான நினைவு சின்னங்களை கட்டினார் அவுரங்கசீப்.

லாகூரில், 'பாட்ஷாய் மஸ்ஜித்' என்ற மிகப்பெரிய மசூதியை கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டு தளத்தை கொண்டது இந்த மசூதி.

டில்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் என்ற சிறிய மசூதி ஒன்றையும் கட்டினார். லாகூர் கோட்டையை சுற்றி யிருக்கும், 13 நுழை வாயில்களில் ஒன்றான, ஆலம்கீர் என்ற பிரம்மாண்டமான கட்டடம் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.


அவர் எழுதிய உயில்:

நான் இறந்த பின், எனக்கு நினைவு சின்னங்கள் எதுவும் கட்ட கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்க கூடாது. நான் குல்லாக்கள் தைத்து, விற்று சேர்ந்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அந்த பணத்தை பயன்படுத்தி என் இறுதி சடங்குகளை செய்யுங்கள்.

அந்த பணத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த வித ஆடம்பரமும் கூடாது. இது போக, திருக்குர்-ஆன் எழுதி, விற்று சேர்ந்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இவ்வாறு எழுதி இருந்தார்.


அஹ்மத் நகரில், 1707 மார்ச், 3ல் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில்படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

அவுரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா, அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப்பெரிய பேரரசைக் கவனிக்க அவருக்கு திறமையில்லை. அவுரங்கசீப் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதனால், முகலாயர்களின் ஆட்சி கலைந்தது.


எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான், அவுரங்கசீப்பால், முகலாயப் பேரரசை கட்டி காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

ஒரு மனிதரின் இன்னொரு பக்கம் இத்தனை இனிமையானதா என்று ரொம்ப ஆச்சர்யமா இருக்கு இல்ல.. யாரையும் மனிதர்களின் ஒரு முகத்தை மட்டும் பார்த்து அவர்களை எடை போடாதீங்க; அவர்களது இன்னொரு முகத்தையும் பாருங்க... சரியா!


- நன்றி Dinamalar

ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு

 மோடி அடிக்கடி மேற்கோள் காட்டும் ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு என்ன?


கேள்வி...

காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?


#இதுபற்றிய_வரலாறு_என்ன..?


அதிர்ச்சிகளின் அணிவகுப்புக்கு தயாராகுங்கள் சகோஸ்..!


அதிர்ச்சி 1


ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.


அதிர்ச்சி 2


மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.


அதிர்ச்சி 3


அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?


அதிர்ச்சி 4


இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.


அதிர்ச்சி 5


ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். 


அதிர்ச்சி 6


அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.

 


அதிர்ச்சி 8


தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. 


அதிர்ச்சி 9


''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.


இனி, #காசி_கோயில்_பற்றிய_அதிர்ச்சியோ_அதிர்ச்சி 10

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.


தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை. 


இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.


நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர். 

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், #கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத #தோஷம்பட்டக்கட்டிடம் (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.


இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு. 


நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?


ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

-----முனைவர் அ. தஸ்தகீர்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

வரலாற்று ஆதாரம்: 

பிஷம்பர் நாத் பாண்டே,

சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்

'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71

மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.


P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

Wednesday, December 15, 2021

ஒற்றை பார்ப்பான்

 இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்


“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”


என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  



சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.



இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      



ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்