Wednesday, December 15, 2021

ஒற்றை பார்ப்பான்

 இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்


“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”


என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  



சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.



இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      



ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்

No comments: