Friday, December 24, 2021

சீமான் மாமனார் காளிமுத்து வேளாண் ஊழல்!

 ஜெயா  போலவே ஊழல் குற்றவாளி சீமான் மாமனார் காளிமுத்து


வேளாண் ஊழல்!


எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.


காளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது. 


1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.


இந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 


காலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 


32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.


இதில் ஹய்லைட்டே அவர் ஊழல் செய்தது விவசாய துறையில் ( அண்னனின் சின்னம் 😃)

Thursday, December 23, 2021

கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

 கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும்.

பெயர் முகமதுதான்.கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது.இந்தப்பதிவில் சொல்லப்போகும் கருத்துகள் எனது கருத்தல்ல.யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன்.அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்துவிடுவீர்கள்.

"இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி.இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப்பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.

இதன் சிறப்புக்காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை.எனவே சொல்லமுடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது.

குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக்கோவிலின் போஷகர்களாக இருந்தனர்.கோவிலின்
அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா?11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக்கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து இருந்தது

கஜினி படையெடுத்து வந்தபோதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச்செய்தனர்.கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு
காத்திருந்தான் கஜினி...

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் ஒரு கோரிக்கைவைத்தனர்.நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர்.கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்.எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர்.ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன்.அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள்.மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும்,காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும்,ஆனால் விசேஷமாய் ஹோமங்களும்,அன்னதானம்,சுவர்ணதானம்,கன்னிகாதானம்,ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி,அரசர்களிடம் அதைச்செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், பிராமனங் களிலும்,நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப் பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டார்.இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும்,யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறுகட்டளையிட்டு,யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி,குழிகளில் நெருப்பு வளர்த்து,நெய்,கோதுமை,சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்றவேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.

யாகசாலைகளில் நெருப்பு எரிவதையும்,ஆயிரக்கணக்கான குழிகளில் புகைவருவதையும்,நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள்.அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.
மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்)வேலை என்று சொல்லி,நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும்சேதி தெரிந்ததும்,11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும்,மேலும் பலரும்
அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது.அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும்.இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் "இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்"என்று கூறிவிட்டு,விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது.(நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு,எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை.சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற,அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க,அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்க்கும்,கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு,அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான்.மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.

தலைமைகுருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது.இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது.கோவில் சாயத்துவங்க,அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள்,5000 ஆண்கள்,6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.

இன்னும் இருக்கு....
இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்?அப்புடின்னு கேப்பீங்க.

இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம்.அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.
குஜராத்தி,உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து
நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல.வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிதான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர்.1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.1883 அக்டோபர் 30 இறந்தார்

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம்தான்.இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்துகொள்வது இதுதான்.

1.ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2.கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற அவாள் பருப்பு அங்கு வேகவில்லை.

3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை.பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4.விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி,லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

5.இந்துக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்புநடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் அரை டவுசர்கள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம்.இஸ்லாமியர்கள் மேல் பலி போடுவது நியாயம் அல்ல.

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் RSS பிரச்சாரம் செய்கிறது.ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச்சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர்.கி.பி.1192 ல் முகமது கோரியும்,கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும்,கி.பி.1296 ல் அலாவுதீன் கில்ஜியும்,கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும்,கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும்,கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும்,அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்,

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள்.முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல.
சாதியை ஒழிப்பதல்ல
அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே
ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள்.RSS சும் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்கவைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

இந்துக்கள் குறித்த அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு 11--1--1529 ல் எழுதிவைத்த உயில் இதுதான்.

அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்லவேண்டும்.ஆகவே.

உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும்.

மற்ற சமூகத்தின் வழிபாட்டுத்தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது.

அடக்குமுறை எனும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு.

இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலேபோய் மதவேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே "தீன் இலாஹி"என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை RSS-BJP செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா,பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல.மாறாக..

இப்போது வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள்மீது பகையை வளர்த்து,அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான சிந்தனை தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான இந்து சமய சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி விவேகானந்தர்
இராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
லாலா ஹன்ஸ் ராஜ்
நாராயண குரு
அய்யன் காளி
குருபிரசாத்
குருநானக்
குருசாயி
ஐயா வைகுண்டர்
ராமானுஜர்
இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

ஒரே கேள்வி தான்
இத்தனை இந்து சமய சீர்திருத்த வாதிகள்
போராடினார்களே எதற்கு?

பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே?

1925 ல் சித்பவன பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
கலவரம் செய்ததைத் தவிர வேறென்ன?

Wednesday, December 22, 2021

சண்முகநாதன்

 ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருந்த போது திராவிட முன்னேற்ற தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பிடுப்பதற்கு உளவுத்துறை போலீசார் மக்களோடு மக்களாக அமர்ந்து குறிப்பிடுப்பார்கள்!

ஏதேனும் வன்முறை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு தொடுக்க எடுக்கப்படும் குறிப்பு அது!

ஒரு தரம் பேராசிரியர் அன்பழகனும்,கலைஞர் அவர்களும்  ஒரு மேடையில் பேசியதை வைத்து அவர்கள் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது!

"நாம என்ன அப்படி தவறாக பேசினோம்"என யோசித்த கலைஞர் எதற்காக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது,நாங்கள் பேசியது என்ன என்பதை போலீசாரிடம் வாங்கி பார்த்து இருக்கிறார்!

அவரும்,அன்பழகனும் பேசிய வார்த்தைகள் ஒரு வரிகள் விடாமல் அழகான கையெழுத்துடன் எழுதப்பட்டு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது!

அதை பார்த்த கலைஞர் அசந்து போனார்!கோர்ட்டிலும் தாங்கள் பேசியது உண்மைதான் என ஒத்துக்கொண்டார்!

இந்த குறிப்பெடுத்த காவலர் யார் என விசாரிக்கிறார்!அவர் பெயர் சண்முக நாதன்!

பின்பு அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சர் ஆனபோது தனக்கு உதவியாளராக சண்முக நாதனை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு,அவரை அழைக்க ஆள் அனுப்புகிறார்!

பயந்து கொண்டே தன்னை காணவந்த சண்முகநாதனிடம் விசயத்தை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்!

 

கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம்,கலைஞர் நிழல் போல் பயணித்தவர் சண்முக நாதன்!