Wednesday, December 22, 2021

சண்முகநாதன்

 ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருந்த போது திராவிட முன்னேற்ற தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பிடுப்பதற்கு உளவுத்துறை போலீசார் மக்களோடு மக்களாக அமர்ந்து குறிப்பிடுப்பார்கள்!

ஏதேனும் வன்முறை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு தொடுக்க எடுக்கப்படும் குறிப்பு அது!

ஒரு தரம் பேராசிரியர் அன்பழகனும்,கலைஞர் அவர்களும்  ஒரு மேடையில் பேசியதை வைத்து அவர்கள் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது!

"நாம என்ன அப்படி தவறாக பேசினோம்"என யோசித்த கலைஞர் எதற்காக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது,நாங்கள் பேசியது என்ன என்பதை போலீசாரிடம் வாங்கி பார்த்து இருக்கிறார்!

அவரும்,அன்பழகனும் பேசிய வார்த்தைகள் ஒரு வரிகள் விடாமல் அழகான கையெழுத்துடன் எழுதப்பட்டு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது!

அதை பார்த்த கலைஞர் அசந்து போனார்!கோர்ட்டிலும் தாங்கள் பேசியது உண்மைதான் என ஒத்துக்கொண்டார்!

இந்த குறிப்பெடுத்த காவலர் யார் என விசாரிக்கிறார்!அவர் பெயர் சண்முக நாதன்!

பின்பு அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சர் ஆனபோது தனக்கு உதவியாளராக சண்முக நாதனை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு,அவரை அழைக்க ஆள் அனுப்புகிறார்!

பயந்து கொண்டே தன்னை காணவந்த சண்முகநாதனிடம் விசயத்தை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்!

 

கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம்,கலைஞர் நிழல் போல் பயணித்தவர் சண்முக நாதன்!

No comments: