Friday, December 24, 2021

சீமான் மாமனார் காளிமுத்து வேளாண் ஊழல்!

 ஜெயா  போலவே ஊழல் குற்றவாளி சீமான் மாமனார் காளிமுத்து


வேளாண் ஊழல்!


எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.


காளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது. 


1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.


இந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 


காலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 


32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.


இதில் ஹய்லைட்டே அவர் ஊழல் செய்தது விவசாய துறையில் ( அண்னனின் சின்னம் 😃)

No comments: