Friday, December 24, 2021

சீமான் மாமனார் காளிமுத்து வேளாண் ஊழல்!

 ஜெயா  போலவே ஊழல் குற்றவாளி சீமான் மாமனார் காளிமுத்து


வேளாண் ஊழல்!


எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், வேளாண்துறை அமைச்சராக இருந்தார் காளிமுத்து. வேளாண்துறை நிதியை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதாகவும், அதற்குக் கைம்மாறாக அவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டுமெனவும் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, 1982-83-ம் ஆண்டில் வேளாண்துறை நிதி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டது.


காளிமுத்துவின் சிபாரிசில், அவரது நண்பர்கள் ராபின் மெயின், சாகுல் அமீது, சோமசுந்தரம் உள்ளிட்ட சிலர் ஒன்றரை முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்றனர். அந்தப் பணத்தில் 15 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் வாங்கியதாகவும் வங்கியில் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், அவர்கள் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. எனவே, அவர்கள் வாங்கிய வாகனங்களைப் பறிமுதல் செய்ய முயன்ற வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடன் பெற்றவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது உறுதிசெய்யப்பட, சி.பி.ஐ-யிடம் புகார் செய்யப்பட்டது. 


1984-ம் ஆண்டு இந்த வேளாண் ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காளிமுத்து மற்றும் அவரின் நண்பர்கள், அதிகாரிகள் உட்பட 32 பேர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். காளிமுத்துவின் நண்பர் ராபின் மெயின் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட, தமிழக அரசியல் களம் சூடுபிடித்தது. நாளிதழ் தலைப்புகளைத் தினமும் அதுவே ஆக்கிரமித்தது.


இந்த ஊழல் குற்றச்சாட்டுகளைவிடவும் பெரிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. `ஜெயலலிதாதான் (அப்போதைய அ.தி.மு.க கொள்ளைப் பரப்புச் செயலாளர்), இந்த ஊழல் புகாரை பரப்பியிருக்கிறார். இதன் பின்னணியில் இந்திரா காங்கிரஸ் வேலை செய்கிறது' என பகீர் புகார் ஒன்றை வெளியிட்டார் காளிமுத்து. இந்த வேளாண் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அவரது அரசு தொடர்ந்த நிலையில், இந்த ஊழல் புகார் அ.தி.மு.க ஆட்சிக்குத் தலைவலியாகவே இருந்தது. இந்த ஊழல் குறித்து எம்.ஜி.ஆர் புலம்பியதும் உண்டு. இந்நிலையில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா அணியில் சேர்ந்தார் காளிமுத்து. பிறகு, தி.மு.க-வில் சேர்ந்தவர் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். 2001-ம் ஆண்டு தன் ஆட்சிக்காலத்தில் காளிமுத்துவை, சபாநாயகராக ஆக்கினார் ஜெயலலிதா. 


காலங்கள் ஓடினாலும், இவ்வழக்கு `விடாது கறுப்'பாக தொடர்ந்தது. 2005-ம் ஆண்டு இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காளிமுத்துவுக்கு சம்மன் அனுப்பியது உச்ச நீதிமன்றம். `காளிமுத்து பதவி விலகவேண்டும்' என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப, `ராஜினாமா செய்யத் தேவையில்லை' என்றார் ஜெயலலிதா. இவ்வழக்கினால் உடல்நிலைப் பிரச்னைகளை எதிர்கொண்ட காளிமுத்து, 2006-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். 


32 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில், 2016-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. அப்போது, காளிமுத்து உட்பட இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட 16 பேர் உயிருடன் இல்லை. மற்ற 16 பேரில், 5 பேருக்கு மட்டும் சிறைத்தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.


இதில் ஹய்லைட்டே அவர் ஊழல் செய்தது விவசாய துறையில் ( அண்னனின் சின்னம் 😃)

Thursday, December 23, 2021

கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

 கஜினி முகமதுவை சோமநாதபுரம் கோயிலைக் கொள்ளையடிக்க அழைத்து வந்தது யார்?

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும்.

பெயர் முகமதுதான்.கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது.இந்தப்பதிவில் சொல்லப்போகும் கருத்துகள் எனது கருத்தல்ல.யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன்.அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்துவிடுவீர்கள்.

"இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி.இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப்பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.

இதன் சிறப்புக்காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை.எனவே சொல்லமுடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது.

குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக்கோவிலின் போஷகர்களாக இருந்தனர்.கோவிலின்
அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா?11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக்கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து இருந்தது

கஜினி படையெடுத்து வந்தபோதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச்செய்தனர்.கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு
காத்திருந்தான் கஜினி...

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் ஒரு கோரிக்கைவைத்தனர்.நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர்.கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்.எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர்.ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன்.அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள்.மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும்,காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும்,ஆனால் விசேஷமாய் ஹோமங்களும்,அன்னதானம்,சுவர்ணதானம்,கன்னிகாதானம்,ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி,அரசர்களிடம் அதைச்செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், பிராமனங் களிலும்,நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப் பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டார்.இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும்,யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறுகட்டளையிட்டு,யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி,குழிகளில் நெருப்பு வளர்த்து,நெய்,கோதுமை,சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்றவேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.

யாகசாலைகளில் நெருப்பு எரிவதையும்,ஆயிரக்கணக்கான குழிகளில் புகைவருவதையும்,நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள்.அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.
மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்)வேலை என்று சொல்லி,நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும்சேதி தெரிந்ததும்,11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும்,மேலும் பலரும்
அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது.அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும்.இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் "இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்"என்று கூறிவிட்டு,விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது.(நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு,எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை.சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற,அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க,அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்க்கும்,கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு,அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான்.மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக்கொடுக்கிறார்.

தலைமைகுருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது.இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது.கோவில் சாயத்துவங்க,அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள்,5000 ஆண்கள்,6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.

இன்னும் இருக்கு....
இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்?என்ன ஆதாரம்?அப்புடின்னு கேப்பீங்க.

இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம்.அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.
குஜராத்தி,உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து
நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல.வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிதான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர்.1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.1883 அக்டோபர் 30 இறந்தார்

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம்தான்.இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்துகொள்வது இதுதான்.

1.ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2.கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற அவாள் பருப்பு அங்கு வேகவில்லை.

3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை.பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4.விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி,லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

5.இந்துக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்புநடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் அரை டவுசர்கள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம்.இஸ்லாமியர்கள் மேல் பலி போடுவது நியாயம் அல்ல.

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் RSS பிரச்சாரம் செய்கிறது.ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச்சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர்.கி.பி.1192 ல் முகமது கோரியும்,கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும்,கி.பி.1296 ல் அலாவுதீன் கில்ஜியும்,கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும்,கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும்,கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும்,அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்,

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள்.முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல.
சாதியை ஒழிப்பதல்ல
அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே
ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள்.RSS சும் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்கவைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

இந்துக்கள் குறித்த அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு 11--1--1529 ல் எழுதிவைத்த உயில் இதுதான்.

அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்லவேண்டும்.ஆகவே.

உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும்.

மற்ற சமூகத்தின் வழிபாட்டுத்தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது.

அடக்குமுறை எனும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு.

இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலேபோய் மதவேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே "தீன் இலாஹி"என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை RSS-BJP செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா,பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல.மாறாக..

இப்போது வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள்மீது பகையை வளர்த்து,அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான சிந்தனை தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான இந்து சமய சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி விவேகானந்தர்
இராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
லாலா ஹன்ஸ் ராஜ்
நாராயண குரு
அய்யன் காளி
குருபிரசாத்
குருநானக்
குருசாயி
ஐயா வைகுண்டர்
ராமானுஜர்
இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

ஒரே கேள்வி தான்
இத்தனை இந்து சமய சீர்திருத்த வாதிகள்
போராடினார்களே எதற்கு?

பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே?

1925 ல் சித்பவன பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
கலவரம் செய்ததைத் தவிர வேறென்ன?

Wednesday, December 22, 2021

சண்முகநாதன்

 ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டுக்கொண்டு இருந்த போது திராவிட முன்னேற்ற தலைவர்கள் மேடையில் பேசுவதை குறிப்பிடுப்பதற்கு உளவுத்துறை போலீசார் மக்களோடு மக்களாக அமர்ந்து குறிப்பிடுப்பார்கள்!

ஏதேனும் வன்முறை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு தொடுக்க எடுக்கப்படும் குறிப்பு அது!

ஒரு தரம் பேராசிரியர் அன்பழகனும்,கலைஞர் அவர்களும்  ஒரு மேடையில் பேசியதை வைத்து அவர்கள் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது!

"நாம என்ன அப்படி தவறாக பேசினோம்"என யோசித்த கலைஞர் எதற்காக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது,நாங்கள் பேசியது என்ன என்பதை போலீசாரிடம் வாங்கி பார்த்து இருக்கிறார்!

அவரும்,அன்பழகனும் பேசிய வார்த்தைகள் ஒரு வரிகள் விடாமல் அழகான கையெழுத்துடன் எழுதப்பட்டு வழக்கு பதியப்பட்டு இருக்கிறது!

அதை பார்த்த கலைஞர் அசந்து போனார்!கோர்ட்டிலும் தாங்கள் பேசியது உண்மைதான் என ஒத்துக்கொண்டார்!

இந்த குறிப்பெடுத்த காவலர் யார் என விசாரிக்கிறார்!அவர் பெயர் சண்முக நாதன்!

பின்பு அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சர் ஆனபோது தனக்கு உதவியாளராக சண்முக நாதனை வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு,அவரை அழைக்க ஆள் அனுப்புகிறார்!

பயந்து கொண்டே தன்னை காணவந்த சண்முகநாதனிடம் விசயத்தை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்!

 

கிட்டதட்ட ஐம்பது ஆண்டு காலம்,கலைஞர் நிழல் போல் பயணித்தவர் சண்முக நாதன்!

Friday, December 17, 2021

முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப்

 அவுரங்கசீப் பற்றி எதுவும் தெரியாமல் வரலாற்றை புரட்டும் சங்கிக்கும்பல் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள்.. 


முகலாய வம்சத்தின் கடைசி பேரரசர் அவுரங்கசீப், நவ., 3, 1618ல் மும்பையிலுள்ள, 'டாஹோட்' என்ற இடத்தில் பிறந்தார். 'சக்ரவர்த்தி' என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் இவர்.


அவுரங்கசீப் மிகவும் பொல்லாதவர். தந்தையே சிறை வைத்தவர்; மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர்; மதம் மாற்றியவர் என்று தான் வரலாறு சொல்கிறது. ஆனால், அவரது உண்மை முகமே வேறு.

தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி, அதன்படி வாழ்ந்தவர்; மிகவும் நேர்மையானவர்.

ஷாஜஹானின் கடைசி காலத்தில், அவுரங்கசீப் அவரை கவுரவமான அரண்மனை சிறையில் வைத்திருந்தாரே தவிர, கொடுமை படுத்தவில்லை.

ஷாஜஹானின் உடல், உரிய மரியாதையுடனே அடக்கம் செய்யப்பட்டது. அதுவும், தாஜ்மஹாலில், அவரது பிரியத்துக்குரிய மும்தாஜ் உடலுக்கு அருகிலேயே வைக்கப்பட்டது.


அவுரங்கசீப், 24 மணி நேரத்தில், மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவார். வேலை தவிர, மீதமிருந்த ஓய்வு நேரங்களில் இஸ்லாமிய மார்க்க நூல்களை படிப்பதில் செலவிடுவார்; தரையில் தான் படுப்பார்; மாமிசம் உண்ணாதவர்.

அரசாங்க கஜானா பணம் மக்களுக்கு உரியது. அரச குடும்பத்தினர் செலவழிப்பதற்காக அல்ல என்பதில், மிகவும் உறுதியாக இருந்தார் அவுரங்கசீப். 


தன் சொந்த செலவுகளுக்காக, ஒருபோதும், அவர் கஜானாவை உபயோகித்ததில்லை.

எப்போதும் எளிமையான உடைகளையே அணிவார். ஆபரணங்களை அணியாதவர்; பொன், பொருள் மேல் ஆசையில்லாதவர். வெள்ளி, தங்க பாத்திரங்களை கூட உபயோகிக்க மாட்டார்.


பொதுவாக, மன்னர்கள் தங்கள் பிறந்த நாளில் தகதக உடையணிந்து, உடல் முழுவதும் ஜொலிஜொலிக்கும் நகைகள் அணிந்து மக்களுக்கு காட்சி கொடுப்பதை பாரம்பரியமாக வைத்திருந்தனர். ஆனால், எளிமை விரும்பியான அவுரங்கசீப், தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை எல்லாம் அனுமதிக்கவில்லை. அன்றைய தினத்தையும், சாதாரண தினமாகவே எடுத்து கொண்டார்.

அவுரங்கசீப்புக்கு குல்லா தைப்பதில் ஆர்வம் உண்டு. அதே போல, குர்-ஆனை தன் கைப்பட எழுதுவதில், அதீத விருப்பம் கொண்டவர். அந்த இரண்டையும் விற்று, கிடைக்கும் பணத்தில் தான், தனிப்பட்ட செலவுகளை பார்த்து கொண்டார்.


மதுவை, வெறுத்தவர். தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மதுவை தடை செய்தார்; அதே போல கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடினார்; உல்லாச நிகழ்ச்சிகள் நடத்த கூடாதென்று உத்தரவிட்டார்; போதைப் பொருள்களையும் ஒழித்தார்.


அன்றைய காலகட்டத்தில், இறந்த கணவனின் சடலத்தை எரிக்கும்போதே, அதே நெருப்பில், மனைவியும் குதித்து, தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும், 'உடன் கட்டை' ஏறும் பழக்கம் இந்துக்களிடையே இருந்தது. குறிப்பாக, ராஜபுத்திரர்களிடையே அதிகமாக இருந்தது.

ஒருமுறை, போர்க்களத்தில் இறந்த ஒரு வீரனின் உடலை எரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவன் மனைவியை அந்த நெருப்பில் குதிக்க சொல்லி, சுற்றியிருந்தவர்கள் கட்டாயப்படுத்தினர்.

அங்கு வந்த அவுரங்கசீப், அந்த செயலை தடுத்தார். தங்கள் மத விஷயத்தில் தலையிடக்கூடாதென்று அங்கிருந்தவர்கள் வாதம் செய்தனர். ஆனால், அவுரங்கசீப் விடவில்லை.

'இது அநியாயம். இனி இத்தகைய கொடுமைகள் முகலாயப் பேரரசில் நடக்கக்கூடாது. இந்த சடங்கை தடை செய்கிறேன்...' என்று உத்தரவு பிறப்பித்தார். அதற்காக பல்வேறு பிரிவினரிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்தது. மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சட்டத்தை செயல்படுத்தினர்.


'நவுரோஸ்' என்ற பண்டிகையை அக்பர் உருவாக்கியிருந்தார். மிகவும் உல்லாசமான திருவிழா அது. வண்ணமயமான கொண்டாட்டங்கள் நிறைந்தது. அந்த திருவிழாவின் இறுதியில் பேரரசரின் எடைக்கு சமமான பொன், வைர ஆபரணங்களை மக்களுக்கு கொடுக்கும் வழக்கமிருந்தது.

வீணாக அரசாங்க பணத்தை கேளிக்கைகளுக்காக செலவழிக்க விரும்பாத அவுரங்கசீப், நவுரோஸ் பண்டிகையை தடை செய்தார்.

ஒரு பேரரசராக இருந்தாலும், மிகவும் எளிமையாக வாழ்ந்தவர். 


அவ்வளவு செலவு செய்து, தன் தந்தை, தாய்க்காக தாஜ்மஹால் கட்டியதையே விரும்பாதவர். ஏனெனில், தாஜ்மஹால் கட்டுவதற்கு மக்களிடமிருந்த பணமெல்லாம் உறிஞ்சப்பட்டது; இக்கட்டட வேலையில் மக்கள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர்; உயிரிழப்புகளும் ஏற்பட்டன; அரசு கஜானா படுமோசமாகி போனது.

ஆனால், ஷாஜகானுக்கு மக்கள் முக்கியமாக தெரியவில்லை. தன் மனைவிக்காக கட்டும் கட்டடம் மட்டும் நினைவில் இருந்தது. 1632-ல் ஆரம்பித்த தாஜ்மஹாலின் கட்டடப் பணிகள், 1648ல் தான் நிறைவடைந்தன. தன்னுடைய அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்றிய சந்தோஷத்தில், கண்ணீர் வடித்தார் ஷாஜஹான்.

எளிமை விரும்பியான அவுரங்கசீப்பின் கண்களுக்கு, தாஜ்மஹால், அழகாக தெரியவில்லை; துயரமாகவே தெரிந்தது.

அதனால், இன்னொரு கருஞ்சலவைக்கல் மாளிகை கட்டுவதற்காக, ஷாஜஹான் எடுத்த முயற்சிகளை தடுத்தார். 


இருப்பினும் சில முக்கியமான நினைவு சின்னங்களை கட்டினார் அவுரங்கசீப்.

லாகூரில், 'பாட்ஷாய் மஸ்ஜித்' என்ற மிகப்பெரிய மசூதியை கட்டினார். மெக்காவுக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய வெளிப்புற வழிபாட்டு தளத்தை கொண்டது இந்த மசூதி.

டில்லி செங்கோட்டை வளாகத்தில், மோடி மஸ்ஜித் என்ற சிறிய மசூதி ஒன்றையும் கட்டினார். லாகூர் கோட்டையை சுற்றி யிருக்கும், 13 நுழை வாயில்களில் ஒன்றான, ஆலம்கீர் என்ற பிரம்மாண்டமான கட்டடம் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டது தான்.


அவர் எழுதிய உயில்:

நான் இறந்த பின், எனக்கு நினைவு சின்னங்கள் எதுவும் கட்ட கூடாது. என் கல்லறை மேல் அலங்காரங்களும் இருக்க கூடாது. நான் குல்லாக்கள் தைத்து, விற்று சேர்ந்த பணம் கொஞ்சம் இருக்கிறது. அந்த பணத்தை பயன்படுத்தி என் இறுதி சடங்குகளை செய்யுங்கள்.

அந்த பணத்துக்கு மேல் செலவழிக்க கூடாது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த வித ஆடம்பரமும் கூடாது. இது போக, திருக்குர்-ஆன் எழுதி, விற்று சேர்ந்த பணத்தை என் பையில் வைத்துள்ளேன். அது புனிதமான பணம். அதை ஏழை மக்களுக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இவ்வாறு எழுதி இருந்தார்.


அஹ்மத் நகரில், 1707 மார்ச், 3ல் அவரது உயிர் பிரிந்தது. அவரது உயில்படியே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன.

அவுரங்கசீப்பின் இரண்டாவது மகன் பகதூர் ஷா, அடுத்து ஆட்சியில் அமர்ந்தார். மிகப்பெரிய பேரரசைக் கவனிக்க அவருக்கு திறமையில்லை. அவுரங்கசீப் காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்த மராட்டியர்கள், அவரது மறைவுக்குப் பின், கொஞ்சம் கொஞ்சமாக முகலாயர்களின் இடங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். அதனால், முகலாயர்களின் ஆட்சி கலைந்தது.


எளிமையாகவும், நிர்வாகத்தில் கண்டிப்பாகவும் இருந்ததால் தான், அவுரங்கசீப்பால், முகலாயப் பேரரசை கட்டி காக்க முடிந்தது. அவை இல்லாததால் தான் அவருடைய வாரிசுகள் பேரரசை இழந்தனர்.

ஒரு மனிதரின் இன்னொரு பக்கம் இத்தனை இனிமையானதா என்று ரொம்ப ஆச்சர்யமா இருக்கு இல்ல.. யாரையும் மனிதர்களின் ஒரு முகத்தை மட்டும் பார்த்து அவர்களை எடை போடாதீங்க; அவர்களது இன்னொரு முகத்தையும் பாருங்க... சரியா!


- நன்றி Dinamalar

ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு

 மோடி அடிக்கடி மேற்கோள் காட்டும் ஓளரங்கஜேப்பின் உண்மை வரலாறு என்ன?


கேள்வி...

காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்தது அவ்ரங்கசீப்னு சொல்றாங்க உண்மையா ?


#இதுபற்றிய_வரலாறு_என்ன..?


அதிர்ச்சிகளின் அணிவகுப்புக்கு தயாராகுங்கள் சகோஸ்..!


அதிர்ச்சி 1


ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள். அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் லி ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரத்தன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் ஆகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.


அதிர்ச்சி 2


மேலும், அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.


அதிர்ச்சி 3


அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் முகலாய படையில் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?


அதிர்ச்சி 4


இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார். ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர். வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.


அதிர்ச்சி 5


ஒளரங்கசீப் ஒரு முஸ்லிம் என்பதால், "உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு" என்னும் இஸ்லாமிய கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர். இதனால் கட்டாய மத மாற்றத்தை இவர் செயற்படுத்தவில்லை. சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார். சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 ஆண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப்பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும். 


அதிர்ச்சி 6


அதேபோல் இராஜபுத்திர இராணி ஹாதி, 'ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினார். "அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன்" என்று அந்த இந்து அரசியே சொன்னபோது... அதனை ஏற்றுக் கொள்ளாது மறுத்தவர் ஒளரங்கசீப்.

 


அதிர்ச்சி 8


தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார். ''பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட்படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Islam and Indian Culture(1578 - 1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது. 


அதிர்ச்சி 9


''ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.


இனி, #காசி_கோயில்_பற்றிய_அதிர்ச்சியோ_அதிர்ச்சி 10

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து சிற்றசர்கள் மற்றும் தளபதிகள் வாரணாசியில் மொகலாய படை ஒரு நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஓர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.


தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இராணியை மட்டும் திரும்பவே இல்லை. 


இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த அரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் திடீரென வெளிப்பட்டன. அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் அரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள். விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.


நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இராணி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் ஒளரங்கசீப்பை வேண்டினர். 

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், #கற்பக்கிரகத்தின்_புனிதம்_அழிந்துவிட்டதாகக்கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டு, கர்பக்கிரக சாமி சிலை இல்லாத #தோஷம்பட்டக்கட்டிடம் (அந்தக்கோயில்) இந்து அரசர்கள் ஆதரவோடு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மாமன்னர் ஒளரங்கசீப்பின் ஒப்புதலுடன் இடிக்கப்பட்டது.


இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது. இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture) என்னும் நூலில் ஆதாரமாக தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மையான வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற பொய்யான வரலாறு வேறு. 


நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஓர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?


ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். அப்படியான ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும். இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

-----முனைவர் அ. தஸ்தகீர்.

(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

வரலாற்று ஆதாரம்: 

பிஷம்பர் நாத் பாண்டே,

சரித்திர ஆய்வாளர் மற்றும் முன்னாள் ஒரிசா மாநில கவர்னர்

'இஸ்லாமும் இந்திய கலாசாரமும்'

Page : 70,71

மேற்கண்ட அவமானகரமான துயரச் சம்பவம் குறித்து பி.என்.பாண்டே என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.


P.N.Pande

“Aurangzeb came to Know of it. He was very much enraged. He sent his senior officers to search for the Rani. Ultimately they found that the statue of Ganesh: which was fixed in the wall was a movable one. When the statue was moved. They saw a flight of stairs that led to the basement. To their horror, they found the missing Rani dishonoured and crying. The basement was just beneath Lord Vishwanaths seat. The Rajas expressed their vociferous protests. As the crime was heinous the Rajas demanded examplary action. Aurangzeb ordered that as the sacred precinets has despoiled. Lord Viswanath may be moved to some other place. The temple be razed to the ground and the Mahant be arrested and punished.”

P.N.Pande, Islam And Indian Culture, Page 55

இதனை தஸ்தாவேஜூகளின் சான்றுகளுடன் டாக்டர் பட்டாபி சீதாராமையா (The Feathers and the Stones)என்ற தனது நூலிலும் பாடனா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் பி.எல்.குப்தாவும் இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

Wednesday, December 15, 2021

ஒற்றை பார்ப்பான்

 இந்தியாவில் இருந்த யவான் சாங் தன் புத்தகத்தில், சமணர்களை கொல்ல பாண்டிய மன்னனை வெகுவாக வற்புறுத்திய ஒரு இந்து இராணியை பற்றி தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.


பார்பனர்கள் சமணர்களை அதிகஅளவில் அடையாளம் காட்டி கொன்றதில் இருந்து தான்


“வெளியே செல்லும் போது ஒற்றை பார்பானை பார்த்தல் நல்லதல்ல”


என்ற சகுனம் பார்க்கும் முறையே ஏற்பட்டிருக்கவேண்டும், ஏனெனில் அந்த காலத்தில் ஒரு சமணர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிரில் பார்பானை பார்த்தால் அவன் வீடு திருப்ப முடியாது, பின் தொடர்ந்து வரும் பார்பான் எங்காவது ஒரு வீரனிடம் அவனை சமணன் என்று அடையாளம் காட்டி அவன் கைது செய்யப்பட்டு கழுவில் ஏற்றப்படுவான்,  பின் பார்ப்பானே தன்னை பற்றி கேவலமாக ஒரு பழமொழியை சொல்லிக்கொள்வானா.  



சமணம் பார்த்தல் என்ற வார்த்தையே பிற்காலத்தில் சகுனம் பார்த்தல் என்று மாற்றம் அடைந்திருக்கும், இன்றும் நெல்லை குமரி மாவட்டங்களில் வயதானோர் சமணம் பார்த்தல் என்ற சொல்லாடலை பயன்படுத்துவதை பார்த்துள்ளேன்.



இதே ஞானசம்பந்தன், தன் உடன் மதம் பரப்ப வந்த நாவுக்கரசரை, பார்பனர் அல்ல என்பதால் அவரை தன் பல்லக்கை தூக்கும்படி செய்தது, செல்லும் வழியில் வயாதான முதியவர் நாவுகரசறை காலால் எட்டி உதைத்தது, நாவுக்கரசர் கடைசி காலத்தில் சமண மதம் திரும்பியது போன்ற சம்பவங்களை வேறு ஒரு பதிவில் காண்போம்      



ஆக நரசிம்மபல்லவன்,  சுந்தர பாண்டியனை வாதாபிக்கு சண்டை போட  அழைத்து சென்றிருந்தால், 63 நாயன்மார்களில் மூன்று பேர் குறைந்திருப்பார்கள்

Saturday, November 20, 2021

நீதிக்கட்சியின் 106 ஆவது பிறந்தநாள் இன்று (20.11.1916)

நீதிக்கட்சியின் 106 ஆவது பிறந்தநாள் இன்று (20.11.1916)


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அதாவது 1900 - 1920 ஆம் ஆண்டுகளின் இடையில் சென்னை மாகாணத்தில் வர்ணாசிரமப் பாதுகாப்புச் சங்கம், சனாதன தர்ம சங்கம், சனாதனச் சங்கம் என்ற பெயர்களில் கிராமங்கள் மட்டத்திலும் இயங்கக்கூடிய இந்துமதச் சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்து மதத்தின் பெயரால் உயர்வு தாழ்வுகளை உறுதிசெய்வதும், வேத, ஆகம, இதிகாச, புராணங்களின் பெயரால் மூடப்பழக்கங்கள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவை நிலை பெறுகின்ற அளவில் தொடர்ந்து பரப்புரை செய்வதும் இந்தச் சங்கங்களின் நோக்கங்களாக இருந்தன.


 1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் மிண்டோ - மார்லி சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய மாகாணங்களில் சட்டமன்றம் போன்ற ஒர் அமைப்பை ஏற்படுத்த வகை செய்தது. இதில் உள்ள 'இந்திய உறுப்பினர்'களுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை. விவாதங்கள் செய்யலாம். ஆனால் அதைப் பிரிட்டிஷ் கவர்னர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் இந்திய உறுப்பினர்கள் ஒரு சில இஸ்லாமியர், ஜமீன்தார்கள் தவிரப் பெரும்பான்மையோர் பார்ப்பனர்களாக இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கப் பதவிகளிலும் இதே நிலைதான் நீடித்தது.


 இந்தக் காலகட்டத்தில் சென்னையில் பி. சுப்பிரமணியம், எம். புருஷோத்தம நாயுடு என்னும் இரண்டு வழக்கறிஞர்கள் "மெட்ராஸ் பார்ப்பனரல்லாதார் சங்கம்" (Madras Non-brahmin Association) என்ற ஒர் அமைப்பை ஏற்படுத்தினர். 1912 ஆம் ஆண்டில், பார்ப்பன அரசு ஊழியர்களால் பிற சாதியினர் இன்னல் அடைவதைக் கண்டித்து "தி மெட்ராஸ் யுனைடெட் லீக்" (The Madras United League) என்ற ஒரு சங்கம் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட இது ஒரு தொழிற்சங்க அமைப்புப் போலச் செயல்பட்டது. இதன் செயலாளராக டாக்டர் சி. நடேசன் இருந்தார். இதற்கு அரசு, அரசு சாரா அமைப்புகளின் ஆதரவு ஓரளவு இருந்தது. 


மேற்கூறிய அமைப்பினர், பின்னாட்களில் இச்சங்கத்தின் பெயரைப் "பார்ப்பனரல்லாதார் சங்கம்" என மாற்றக் கருதினர். ஆனால் எதிர்மறைப் பெயராக இருக்கிறது என்பதால் "சென்னை திராவிட சங்கம்" என்று பெயர் மாற்றம் செய்தனர் (10.11.1912). டாக்டர் நடேசன் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்தார். பின்னர் சங்கத்தின் சார்பில் 1914 ஆம் ஆண்டில் திராவிட மாணவர் விடுதி நடத்தப்பட்டது. பொதுவாகப் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று குறிப்பிடும் வழக்கம் இதற்கு முன்பாகவே சமூக நிலைகளில் வழக்கத்தில் இருந்து வந்தது. இது அரசு ஆவணங்களிலும் எதிரொலித்தது. 1870-71 பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கல்வித்துறை அறிக்கையில் "பார்ப்பனர், இந்து பார்ப்பனரல்லாதார்" (Brahmins, Hindu's Non-brahmins) என்று குறிப்பிடப்பட்டது. 1891 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பிராமணர்கள், பிராமணரல்லாதார், தீண்டத்தகாதவர்கள் என்ற மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு அதன்படி கணக்கெடுக்கப்பட்டன.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலாம் உலக யுத்தம் குறுக்கிட்டது. அப்போது பார்ப்பனர்களைப் பெருவாரியாகக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, இந்தியாவுக்கு டொமினியன் ஆட்சி வேண்டும் என்று கோரி வந்தது. "அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால் தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பார்ப்பனர் ஆதிக்கமாகவே இருக்கும் என்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர். 


இக்காலகட்டத்தில் நிலவிய சனாதன சங்கங்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு ஆதரவாகப் பார்ப்பன ஏடுகளின் அச்சுறுத்தல்களும் பார்ப்பனர் அல்லாதவருக்குக் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்நிலையில் டாக்டர் டி. எம். நாயர், பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசன் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் விளைவாகச் சென்னை வேப்பேரியில் 20.11.1916 அன்று பார்ப்பனரல்லாத தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இங்குதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) தோற்றம் பெற்றது. இதில் பார்ப்பனர் தவிர்ந்த அனைத்துச் சாதியினரும் கலந்து கொண்டனர். பிட்டி தியாகராயர், டாக்டர் டி. எம். நாயர், டாக்டர் நடேசன், ராவ்பகதூர் எம். சி. ராஜா, திரு ஜான் ரத்தினம், வரதராஜுலு நாயுடு, முத்தையா முதலியார் உள்ளிட்ட 26 தலைவர்கள் ஒன்று கூடி முடிவெடுத்து திரு. ராஜரத்தினம் முதலியார் தலைமையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தினைத் தோற்றுவித்தனர். 



இவ்வமைப்பு, "திராவிட சங்கம்" அல்லது "பார்ப்பனர் அல்லாதார் சங்கம்" அல்லது "தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஆந்திரப் பிரகாசிகா (தெலுங்கு), திராவிடன் (தமிழ்), ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) என்னும் மூன்று பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. ஆங்கிலப் பத்திரிகையான ஜஸ்டிஸ் அந்நாளில் பிரபலமாகவே, இந்த இயக்கத்தின் பெயரும் ஜஸ்டிஸ் பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்டது. அதுவே தமிழில் நீதிக்கட்சி என்று வழங்கலாயிற்று. தமிழில் வெளிவந்த பத்திரிகையான திராவிடன் என்ற பெயரால் திராவிட இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.


நீதிக்கட்சியின் தோற்றத்திலும், அதன் தொடக்ககாலச் செயல்பாடுகளிலும் தந்தை பெரியாருக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த பெரியார், 1925 ஆம் ஆண்டு குடி அரசு இதழைத் தொடங்கினார். பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சுயமரியாதை இயக்கத்தின் மாபெரும் போராட்டமான இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டில், அவர் நீதிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி

Friday, November 19, 2021

’ஜெய் பீம்’ முழக்கம் எப்படி தொடங்கியது.அதை முதலில் வழங்கியது யார்?

 ’ஜெய் பீம்’ முழக்கம் எப்படி தொடங்கியது.அதை முதலில் வழங்கியது யார்?

🐘☸️🐘✳️🐘
வாழ்த்துக்கூறல் மற்றும் மரியாதையைக்குறிக்கும் இந்தச்சொல் புரட்சிகர உணர்வின் அடையாளமாக எப்படி மாறியது? இந்தப்பயணம் மிகவும் சுவாரசியமானது. இந்த முழக்கம் எப்படி உருவானது, இந்தியா முழுவதும் எப்படிப்பரவியது?

📖✍🏾📚✍🏾📖

கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது.

மகாராஷ்டிராவில்பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரிய சிந்தனை இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அவருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை முடுக்கிலும் ஜெய் பீம் என்ற சொல் குறித்து ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இந்தச்சொல் திரைப்படத்தின் வாயிலாக வெகுஜன(பகுஜன) மக்களிடையே பிரபலமாகிறது.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உண்மையான பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அவருடைய சிந்தனை இயக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் அவரை கெளரவிக்கும் வகையில் அவரை 'ஜெய் பீம்' என்று அழைக்கின்றனர். ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்துச் சொல் மட்டுமல்ல, இன்று அது அம்பேத்கர் சிந்தனை இயக்கத்தின் முழக்கமாக மாறிவிட்டது.  இயக்கத்தின் உயிர்நாடி ஆகும்.

 ஜெய்பீம் முழக்கத்தை அளித்தவர் யார்?

ஜெய் பீம் என்ற முழக்கம் முதன்முதலில் அம்பேத்கரிய சிந்தனை இயக்கத்தின் தொண்டரான பாபு ஹர்தாஸ் எல்என் (லக்ஷ்மண் நாக்ராலே) என்பவரால் 1935 இல் உருவாக்கப்பட்டது. பாபு ஹர்தாஸ் மத்திய மாகாண - பரார் பரிஷத்தின் உறுப்பினராகவும், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களைப் பின்பற்றும் உறுதியான தொண்டராகவும் இருந்தார்.


நாசிக்கின் காலாராம் கோவில் நுழைவு உரிமை போராட்டம் மற்றும், சவ்தார் மஹத் குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமைபோராட்டம்  காரணமாக டாக்டர் அம்பேத்கரின் பெயர் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்தது. இதற்குப் பிறகு, மகாராஷ்டிராவில் டாக்டர் அம்பேத்கரால் முன்னணிக்கு கொண்டு வரப்பட்ட தலித் தலைவர்களில் பாபு ஹர்தாஸும் ஒருவர். ராமச்சந்திர க்ஷிர்சாகரின் 'தலித் மூவ்மெண்ட் இன் இண்டியா அண்ட் இட்ஸ் லீடர்ஸ்' என்ற புத்தகத்தில், பாபு ஹர்தாஸ் முதலில் 'ஜெய் பீம்' கோஷத்தை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜாதிவெறியர்களை கட்டுக்குள் கொண்டு வரவும், ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவக் கருத்துகளைப் பரப்பவும் டாக்டர் அம்பேத்கர், ' சம்தா சைனிக் தளத்தை'(SAMTA SAINIK DAL) நிறுவினார். சம்தா சைனிக் தளத்தின் செயலராக இருந்தவர் பாபு ஹர்தாஸ்.


'ஜெய் பீம்' முழக்கம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு பதிலளித்த தலித் சிறுத்தைகள் அமைப்பின் இணை நிறுவகர் ஜே.வி.பவார், "பாபு ஹர்தாஸ், கமாட்டி மற்றும் நாக்பூர் பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்களின் ஒரு அமைப்பை உருவாக்கினார். ஒருவரையொருவர் சந்திக்கும்போது நமஸ்கார், ராம் ராம் அல்லது ஜௌஹர் மாயாபாப் என்பதற்குப் பதிலாக 'ஜெய் பீம்' என்று கூறி வாழ்த்துமாறு இந்த அமைப்பின் தொண்டர்களை அவர் கேட்டுக் கொண்டார்,"என்று குறிப்பிட்டார்.

" முஸ்லிம்கள் 'சலாம் அலைக்கும்' என்று சொல்லும்போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக 'அலைக்கும் சலாம்' என்று சொல்லப்படுவது போல, 'ஜெய் பீம்' என்ற வாழ்த்துக்கு பதில் சொல்லும்போது 'பால் பீம்' என்று சொல்ல வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார், அவர் உருவாக்கிய பாதை லட்சியப்பாதையாக மாறியது."என்று அவர் கூறினார்.

ராஜா தாலே, நாம்தேவ் தசல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதோடு, கூடவே பவார், தலித் சிறுத்தைகள் அமைப்பு பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார்.

"1938 ஆம் ஆண்டு, அவுரங்காபாத் மாவட்டத்தின் கன்னட் தாலுகாவில் உள்ள மக்ரான்பூரில் அம்பேத்கர் இயக்கத்தின் தொண்டரான பாவுசாகேப் மோரே, ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரும் கலந்துகொண்டார். பாபு ஹர்தாஸ் இந்த முழக்கத்தை எழுப்பியபோது பாவுசாகேப் மோரே இதை ஆதரித்தார்,"என்று அவர் மேலும் தெரிவித்தார்.


 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நேரடியாக 'ஜெய் பீம்' என்று அழைக்கப்பட்டபோது .

பாபாசாகேப் டாக்டர்
அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலேயே 'ஜெய் பீம்' என்ற வாழ்த்து தொடங்கியது. இயக்கத்தின் ஆர்வலர்கள் ஒருவரையொருவர் 'ஜெய் பீம்' என்று அழைத்துக் கொண்டனர். ஒரு ஆர்வலர்  
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை நேரடியாக 'ஜெய் பீம்' என்று அழைத்தார் என்று மகாராஷ்டிர மாநிலமுன்னாள் நீதிபதி சுரேஷ் கோர்போடே, கூறுகிறார்.

சுரேஷ் கோர்போடே, செஷன்ஸ் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், விதர்பாவில் உள்ள தலித் இயக்க அறிஞரும் ஆவார். பாபு ஹர்தாஸின் பணிகள் பற்றி எழுதியுள்ள அவர், அது குறித்து விரிவுரையும் ஆற்றியுள்ளார்.

"மஹாராஷ்டிரா முழுவதும் தலித்துகளின் மேம்பாட்டிற்காக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தொடங்கிய இயக்கத்தில் பல இளைஞர்கள் தாமாக முன்வந்து பங்கேற்றனர். அவர்களில் ஒருவர் பாபு ஹர்தாஸ் எல்என்,"என்று அவர் கூறுகிறார்.

 ஜெய் பீம் கோஷம் உருவாக்கிய பாபு ஹர்தாஸ் எல்.என்.

"பாபு ஹர்தாஸ் இளமைப் பருவத்திலிருந்தே சமூகப் பணியில் ஆர்வம் கொண்டிருந்தார். 1904ல் பிறந்த அவர் 1920ல் சமூக இயக்கத்தில் சேர்ந்தார். நாக்பூரில் உள்ள பட்வர்தன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்தார். அவர் 'ஜெய் பீம் கோஷத்தை உருவாக்கியவர்' என்று அவர் அழைக்கப்படுகிறார். பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பாபு ஹர்தாஸ், 1924 இல் கமாட்டியில் 'சந்த் சோக்மேலா தங்கும்விடுதியை' நிறுவினார். இது கிராமப்புற மாணவர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியது. பகலில் வேலை செய்யும் மாணவர்களுக்கு இரவுப் பள்ளிகளையும் அவர் தொடங்கினார். ஆங்கிலம் கற்றுத்தரவும் ஆரம்பித்தார்,"என்று சுரேஷ் கோர்போடே குறிப்பிட்டார்.

"அவர் 1925 இல் பீடித் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். விதர்பாவின் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தேந்து இலைகளை சேகரித்து, பீடி ஆலைகளில் வேலை செய்தனர், கூடவே வீடுகளிலும் பீடி தயாரித்தனர். பீடி தயாரிப்பாளர்களும் ஒப்பந்தக்காரர்களும், தொழிலாளர்களைச் சுரண்டினர். தொழிலாளர்களுக்கு உரிய பணத்தைக்கொடுங்கள் என்று அப்போது அவர் கூறினார்."

பீடி தொழிலாளர் சங்கத்தின் பணி விதர்பாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராமச்சந்திர க்ஷிர்சாகரின் 'தலித் மூவ்மெண்ட் இன் இண்டியா அண்ட் இட்ஸ் லீடர்ஸ், 1857-1956' என்ற புத்தகத்தில் , 1930-ல் மத்தியப் பிரதேச பீடி தொழிலாளர் சங்கத்தை ஹர்தாஸ் நிறுவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"1932 ஆம் ஆண்டு கமாட்டியில் 'தீண்டப்படாதார் ' இயக்கத்தின் இரண்டாவது அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வரவேற்புக் குழுவின் தலைவராக பாபு ஹர்தாஸ் இருந்தார். அவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு பெரிய வரவேற்பு அளித்தார்,"என்று கோர்போடே தெரிவித்தார்.


1927ல் 'மஹாரத்' என்ற சிறு இதழை ஹர்தாஸ் ஆரம்பித்ததாக வசந்த் மூன் தனது 'பஸ்தி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பும் கிடைக்கிறது. கெயில் ஓம்வெட்த்,' பஸ்தி' என்ற சொல்லை 'தீண்டப்படாதவராக வளர்வது' என்று மொழிபெயர்த்துள்ளார்.


 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சொன்னார் - என் வலது கை போய்விட்டது.

1931-1932ல் இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டின் விளைவாலா 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம் உருவாகி அடுத்து நடைபெறும் முதல் தேர்தலில் கலந்து நமது பிரதிநிதிகளை உருவாக்க சுதந்திர தொழிலாளர் கட்சியை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
 ஏற்படுத்தினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் ஹர்தாஸை வேட்பாளராக நிறுத்தியதாக வசந்த் மூன் எழுதுகிறார். ஒரு செல்வந்தர் அவருக்கு எதிராக போட்டியிட்டார். இந்த நபரை வசந்த் மூன் 'லாலா' என்று அழைக்கிறார்.


ஹர்தாஸைத் தொடர்பு கொண்ட ஒருவர் வேட்புமனுவை திரும்பப்பெறச் சொன்னார். இதற்காக அவருக்கு பணம் தருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஹர்தாஸ் அதை மறுத்துவிட்டார்.

 *"நான் பாபாசாகேப் டாக்டர்
அம்பேத்கருக்காக நிற்கிறேன்.இப்போது எங்களுக்கான உரிமை கிடைக்கும்."என்று அவர் சொன்னார்.*

வசந்த் மூனின் புத்தகத்தில் உள்ள இந்தக் கதை இத்துடன் முடிவடையவில்லை. லாலா, பாப்பு உஸ்தாத் என்ற வலிமையான மல்யுத்த வீரரை பாபு ஹர்தாஸிடம் அனுப்பினார். அவர் பாபு ஹர்தாஸிடம், "உங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்காக சேட்ஜி பத்தாயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதை நீங்கள் வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அவர் உங்களைக் கொன்றுவிடுவார்," என்று கூறினார்.

"எனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர் தப்ப மாட்டார் என்று எனக்குத் தெரியும்," என்று ஹர்தாஸ் பதிலளித்தார். "அது வேறு விஷயம். ஆனால் நீங்கள் இறந்துவிட்டால் அதனால் உங்களுக்கு என்ன பயன்," என்று பாப்பு உஸ்தாத் கூறினார். அப்படியும் ஹர்தாஸ் பின்வாங்கவில்லை. "அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்," என்று கூறிவிட்டு பாப்பு உஸ்தாத் வெளியேறினார்.


 சேட்டின் பணமும் அதிகார பலமும் இருந்தபோதிலும், பாபு ஹர்தாஸ் தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மாகாணங்களின் கவுன்சில்-பரார் உறுப்பினரானார். 1939 இல் காசநோய் காராணமாக அவர் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தலித்துகள் மற்றும் தொண்டர்கள் திரண்டிருந்தனர். கமாட்டி மற்றும் நாக்பூர் பகுதியில் இருந்து தலித்துகள் வந்திருந்தனர். இதனுடன், பண்டாரா மற்றும் சந்திரபூர் பகுதிகளைச் சேர்ந்த பீடித் தொழிலாளர்களும் இறுதி அஞ்சலி செலுத்த கமாட்டிக்கு வந்தனர்.


 "அவரது மரணத்திற்குப் பிறகு, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், 'எனது வலது கை போய்விட்டது' என்று கூறினார்," என குறிப்பிடுகிறார் ஓய்வுபெற்ற நீதிபதி கோர்போடே.

கமாட்டியில் உள்ள கர்ஹன் ஆற்றங்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஹர்தாஸின் நினைவிடம் கமாட்டியில் அமைந்துள்ளது.

"ஹர்தாஸ் ஒரு விடி வெள்ளியைப் போல வானத்தில் பிரகாசித்தார். அவருடைய ஒளி மற்றவர்களுக்கு பாதையைக்காட்டியது. ஆனால் ஒரு நொடியில் அவர் மறைந்துவிட்டார்,"என்று மூன் எழுதியுள்ளார்.

சுபோத் நாக்தேவின் மராத்தி திரைப்படமான 'போலே இந்தியா ஜெய் பீம்' , பாபு ஹர்தாஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

 'ஜெய் பீம்' , ஏன் சொல்லப்பபடுகிறது?

"பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அவரது பெயரை சுருக்கமாக உச்சரிக்கும் வழக்கம் ஆரம்பத்தில் மகாராஷ்டிராவில் இருந்தது. படிப்படியாக இந்தியா முழுவதும் அவர் ஜெய் பீம் என்று அழைக்கப்படலானார்," என்று எழுத்தாளர் நரேந்திர ஜாதவ் விளக்குகிறார்.

டாக்டர் ஜாதவ் 'Ambedkar- Awakening India's Social Conscience ' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்நூல் 'அம்பேத்கரின் கருத்தியல் தன்மை' என்று அழைக்கப்படுகிறது.

"ஜெய் பீம் என்ற சொல்லை கொடுத்தது பாபு ஹர்தாஸ். இது எல்லா மக்களுக்கும் வெற்றிக்கு குறைவானதல்ல.
 *பட்டியலின, பழங்குடி இன மற்றும் பிற்படுத்தப்பட்ட
மக்களின் சுயமரியாதையைத் தூண்டி,மனிதர்களாக வாழ்வதற்கான உரிமையையும் வழியையும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஏற்படுத்திக் கொடுத்தார்,"* என்று டாக்டர் ஜாதவ் தெரிவித்தார்.

 'ஜெய் பீம் ஒரு முழுமையான அடையாளம்'

ஜெய் பீம் என்ற முழக்கம் ஒரு அடையாளமாக மாறிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான உத்தம் காம்ப்ளே கூறுகிறார்.

 *"ஜெய் பீம் என்பது வெறும் வாழ்த்து மட்டும் அல்ல. அது ஒரு முழுமையான சமூக சமத்துவத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.இந்த அடையாளத்தின் பல்வேறு நிலைகள் உள்ளன.'ஜெய் பீம்' என்பது சமூக சமத்துவ மற்றும் சுயமரியாதைக்கான
போராட்டத்தின் பகுதியாக மாறியது. அது ஒரு பண்பாட்டு அடையாளமாகவும், சமூக-அரசியல் அடையாளமாகவும் ஆனது. சமூக அரசியல் பண்பாட்டு மாற்றத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக அது மாறிவிட்டது.*

 'ஜெய் பீம்', முழக்கம் பகுஜன் இயக்கத்தின்  அடையாளம் ஆகும்.

 சூர்யாவின் படத்தைப் பார்த்தால் 'ஜெய் பீம்' என்ற வார்த்தை நேரடியாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது தெரியும்.

 *ஜெய் பீம் என்பது சமூக- பண்பாட்டு-அரசியல்
மாற்றத்தின் அடையாளமாகும்.*

"'ஜெய் பீம்' என்று சொல்வது வணக்கம் என்று சொல்வது போல எளிதானது அல்ல. ஒருவர் அம்பேத்கரின் சித்தாந்தத்துடன் நெருக்கமாக இருக்கிறார் என்பது இதன் பொருள். 'போராட வேண்டிய அவசியம் உள்ள இடத்தில் 'நான் போராடுவேன்' என்று இந்த வார்த்தை சொல்கிறது," என்று மது காம்ப்ளே சுட்டிக்காட்டுகிறார்.

 மகாராஷ்டிராவிற்கு வெளியே 'ஜெய் பீம்' கோஷம் எப்போது தொடங்கியது?

உத்தரபிரதேசம், பிகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் 'ஜெய் பீம்' முழக்கத்தை எளிதாகக் கேட்க முடிகிறது.

அம்பேத்கரின் கருத்துகள் பஞ்சாபிலும் பரவியுள்ளன. இங்கு கோஷங்கள் எழுப்பப்படுவது மட்டுமல்லாமல், பிரபல பாடகி கின்னி மாஹியும், 'ஜெய் பீம்-ஜெய் பீம், போலோ (சொல்லுங்கள்) ஜெய் பீம்' என்று பாடியுள்ளார்.

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் அதாவது CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தபோது, முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பாளர்கள் டாக்டர் அம்பேத்கரின் படங்களை கையில் ஏந்தியிருந்தனர். 'ஜெய் பீம்' என்ற முழக்கம் எந்த ஒரு சமூகத்திற்கும், புவியியல் எல்லைக்கும் மட்டுமே சொந்தமானதல்ல என்பதை இது உணர்த்துகிறது.

இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பதில் அளித்த டாக்டர் நரேந்திர ஜாதவ், "பாபாசாகேப்பின் முக்கியத்துவம் மற்றும் கருத்துக்கள் பரவியதால், இந்த முழக்கம் எல்லா இடங்களுக்கும் பரவியது. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, நாட்டில் ஒரு கருத்தியல் எழுச்சி ஏற்பட்டது. தலித்துகள் மத்தியில் மட்டுமல்ல, எல்லா ஒடுக்கப்பட்ட,சுரண்டலுக்கு ஆளான அனைத்து பகுஜன்
மக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்பட்டது," என்று குறிப்பிட்டார்.

 JAI BHIM.

https://youtu.be/ZhYRz-v6fTc

Monday, October 25, 2021

சிலருக்கு மெக்காலே என்றால் வெறுப்புணர்வு தோன்றக் காரணம்

 இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள்.
அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள்.

“இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம்.

குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகை நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?
கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான்:
லார்ட் தாமஸ் பபிங்க்ட்டன் மெக்கலே.

அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தி லேயே நிறவேற்றுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்.இந்தியாவிற்கு வந்தபோது ம் அதே செக்யூலர் மனப்பாண்மையை இங்கும் பரப்பியவர்.

அது வரை இந்தியாவில் கல்வி என்றால்:
1) வேத பாட சாலை
2) இஸ்லாமிய மதராசா
3) கிறுஸ்வ மிஷினரி

இந்த மூன்றும் வெறும் மதக்கல்வியை மட்டுமே கற்பிக்கின்றன. இதற்கு இங்கி லாந்து அரசு செலவு செய்வது பொது மக்களுக்கு போய் சேரவில்லை. வெறும் மூடநம்பிக்கைகளை மட்டுமே வளர்க்கிறது...என்று முதன் முதலில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல், தாய் மொழி என்கிற ஐந்துவித பாடங்களை உள்ளடக்கிய பொது கல்வியை கொண்டு வந்தவர் மெக்கலே.

இதற்கு அடுத்து அவர் எடுத்துக்கொண்ட பிராஜெக்ட் இன்னும் சிறப்பானது. அது வரை இஸ்லாமியருக்கு ஷரியா சட்டம், இந்துக்களுக்கு மனுச்மிருத்தி என்றிருந்த சட்டத்தை, அனைவருக்கும் ஆன “இந்தி யன் பீனல் கோடு” IPC யை கொண்டு வந்தவர் இதே லார்ட் மெக்கலே தான்.

இன்றளவும் சிலருக்கு மெக்காலே என்றால் வெறுப்புணர்வு தோன்றக் காரணம்,  அவர் ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின, தீண்டத் தகாதோர்க்கு பொன் பொருளை கொடுத்திருந்தால் கூட தாங்கிக் கொண்டிருப்பார்கள்..மாறாக அறிவை பெருக்கும் அழியாத கல்வியை கொடுத்து விட்டார், தங்களுக்கான அடிமை சமூகத்தை இல்லாமல் ஆக்கிவிட்டார் என்ற வயிற்றெரிச்சல் தான்...

லார்டு மெக்கலே திருமணம் ஆகாதவர். அவருக்கு genetic சந்ததியினர் இல்லை. ஆனால் நாம் எல்லாம் அவருடைய memetic வாரிசுகள்!

அவரைப் பற்றி, ஆயிரம் அவதூறுகள் வல்லாதிக்க சக்திகள் பரப்பினாலும், அவர் வகுத்த கொள்கையினால் பயன்பெற்ற படித்தவன், ஒருநாளும் அவர் புகழ் பாடாமல் உறங்க மாட்டான்...

நமக்கெல்லாம் கல்வியையும், சட்டத்தையும் கொடுத்த நம் ஞானத்தலைவன்,
மாமனிதர் மெக்கலே!

மனம் கனிந்த நன்றியுடன், பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!💐💐💐💐

Tuesday, October 05, 2021

வாலி சுக்கிரிவன் உண்டான கதை

 *"அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை"!*

இராமாயணத்திலிருந்து ஒரு அத்திப்பழம்

பிரம்மா ஒருநாள் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது அவனுடைய கண்களிலிருந்து வீரியம் பெருகியது. அவன் அதை கைகளில் ஏந்தி பூமியில் விட்ட பொழுது பிறந்தவன் தான் "ரிட்சரஜஸ்". ஒரு நாள் அவ்வானரன் மேரு மலையிலிருந்த ஒரு நீரோடையில் மூழ்கி எழுந்தபொழுது அழகிய பெண்ணாக மாறிவிட்டான். பிரம்மாவை கண்டு பேசிவிட்டு வான்வழியாக திரும்பிக் கொண்டிருந்த இந்திரனும் சூரியனும் இக்கன்னியைக் கண்டு கீழ் இறங்கினர். தேவேந்திரனுடைய வீரியம் அக்கன்னியின் வால் பகுதியில் விழுந்ததால் "வாலி" உண்டானான். சூரியனுடைய வீரியம் அவளுடைய கழுத்தில் விழுந்ததால் "சுக்கிரிவன்" உண்டானான். பிரம்மனிடம் சென்று அப்பெண் முனையிட்டாள். அவர் அதைக் கேட்டு சிரித்து, "நீ இக்குழந்தைகளுடன் இதோ இங்குத் தோன்றும் ஏரியுள் மூழ்கு வாயாக"என்றான். அவள் அவ்வாறே மூழ்கி எழுந்தவுடன் மீண்டும் பழைய வானர வடிவைப் பெற்றாள்.

(யுத்த காண்டம், சருக்கம் 67)

👉 கண்ணில் காம நீர் வடியுமா?
👉 நீரோடையில் குளித்தெழுந்தால் ஆண் பெண்ணாக மாறிவிடுவானா?
👉 கழுத்திலும் வாலிலும் ஏன் வீரியத்தை விடனும்?
👉 கழுத்திலும் வாலிலும் விழந்த வீரியத்தால் குழந்தைகள் பிறக்குமா?
👉 தேவர்களுக்கெல்லாம் அரசனான தேவேந்திரனின் ஒழுக்கம் இது தானா?
👉 சூரிய பகவானின் யோக்கியதை இதுதானா?
👉 களவுக் காமத்திலும் கூட்டா? என்றெல்லாம் உங்கள் சிந்தனை வேலை செய்கிறதா?
👉ஆபாசம்; அநாகரிகம்; அபத்தம் என்கிறீர்களா?

Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - முதல் உலகப்போரில் இந்தியா கொடுத்த ஒத்துழைப்பு

இந்தியாவிற்கு அதிகப்படியான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்க பிரிட்டன் முன் வந்தது.

இந்திய மந்திரி எட்வின் மாண்டேகு , பிரிட்டிஷ்  நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் இந்திய மக்களுக்கு அரசியலில் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு பொருப்பு ஆட்சி வழங்கப்படும் அதை படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன். நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாக பங்கெடுத்துக் கொள்ளச் செய்து - சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சியுறச் செய்யும் என்றது அந்த அறிக்கை 1917 ஆகஸ்ட் 20 ஆம் நாள் இந்திய அரசின் சிறப்பு அரசிதழிலும்அது வெயிடப்பட்டது இந்திய விடுதலைக்கு பிரிட்டன் காட்டிய  முதல் அடையாளம் அது.

காங்கிரஸ் அறிக்கை
-----------------------------------.
அந்த அறிக்கை பற்றிய இந்தியர்களின் கருத்தறிய இந்திய மந்திரி எட்வின் மாண்டேகுவும் அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லார்டு செமஸ்போர்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பிரிட்டிஷாரின் அடிமை என்ற நிலையிலிருந்து பிரிட்டிஷாருக்கு சமமான நாடு என்ற நிலைக்கு இந்தியா வரவேண்டும். அதற்கு சுயாட்சி அமைவதுதான் தீர்வு அதற்கான ஆணையை பிரிடிஷ் அரசு வெளியிட வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது காங்கிரஸ் ,முஸ்லீம் லீக்கும் அதே கருத்தைக் கூறியது. இந்திய தேசியக் காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டு கட்சிகளின் கருத்தை ஆதரிக்கிறோம் என்றது சென்னை மாகாண சங்கம்.

1917 டிசம்பர் 24ம் நாள் அக்குழு சென்னை வந்தது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சார்பாக திவான் பகதூர் ராஜரத்ன முதலியார் தலைமையில் ராவ் பகதூர், பிட்டி தியாகராயர் அக்குழுவிடம் ஒரு அறிக்கை கொடுத்தார் பிரிடிஷ் அரசு அறிவித்துள்ள பொருப்பு ஆட்சி முறை உயர் சாதி வாகுப்பினரான பார்ப்பனர்களுக்கு அதிகாரமும் ஆதிக்கமும் கொடுப்பதாகவும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களுக்கு திங்கு விளைவிப்பதாகவும் அமையும்.
சமூக சீர்திருத்தம் ஏற்பட்டு, சாதிப்பிரிவுகள் அனைத்தும் அடியோடு ஒழிகின்ற காலம் வரை - அரசின் நிர்வாகத் துறைகள் அத்தனையிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இடா ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ஒவ்வொரு சமூகப் பிரிவு நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் விதத்தில் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கொடுத்து சட்டாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அந்த அறிக்கையின் சுருக்கம்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 54 to 55.

1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!

 1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!
          -ப.திருமாவேலன்

"புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்ட தாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன் முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக் கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒரு சேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது.  காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார் போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர். ‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரிய கோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி ( சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என்.இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை - திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30 ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டிய காலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தன. இது தான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங் களில் ஜாதிபேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்ல வேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு ஜாதி ஒரு காரண மாக இருக்கக் கூடாது. அந்த அடிப்படை யில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். "அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். ‘அர்ச்சகர் களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம்' என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறை வேற்றப்பட்டது. "இந்து சமய அறக்கட் டளை திருத்த மசோதா” என்று இதற்குப் பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத் தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். "பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். "அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் ஜாதியின ரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப் பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு - 16.12.2015 உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக் குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்ற வில்லை. உரிய பயிற்சி பெற்ற வர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித் தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டு களுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தின் மீதேறி’ என்று சொல் வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படு வார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

திராவிடம் அறிவோம் - சென்னை மாகாண சங்கம்

பிராமணர் அல்லாத பெருங்குடி மக்களே ! நாங்கள் தான் உங்களுடைய உண்மையான பிரதநிதிகள், எங்களை நம்புங்கள் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போட்டி இயக்கம்,1917 செப்டம்பர் 15 ம் நாள் கோகலே மண்டபத்தில் கூடியது. காங்கிரஸில்  உள்ள பார்ப்பனர் அல்லாதாருக்கான தனி அமைப்பு என்றும் வலைவீசியது.

தலைவர் தூண்டிலில் மாட்டியவர் திவான்பகதூர் கேசவ பிள்ளை. 1885 -ல் ஆலன் ஆக்டோவியன் ஹியும்,  காங்கிரஸ் கட்சியை துவங்கியபோது அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.துணைத் தலைவர்களாக லாட்கோவிந்த தாஸ், சல்லா குருசாமி செட்டியார் ஈரோடு ராமசாமி நாயக்கர்(பெரியார்) நாகை வி.பக்கிரிசாமி பிள்ளை . சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சாவூர் சீனுவாச பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கோபால்சாமி முதலியார், குருசாமி நாயுடு, டாக்டர் வரதராசலு நாயுடு, சர்கரைச் செட்டியார், கல்யான சுந்தர முதலியார், (திரு,வி,க.) ஆகியோர் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..

இதில் பெரியார் அப்போது காங்கிரஸில் உறுப்பினராக இல்லை . காங்கிரஸ் தலைவர்களான சி, ராஜகோபாலாச்சாரியார், அன்னிபெசன்ட், டாக்டர் வரதராஜலு, கருணாகரன் மேனன் ஆகியோரிடம் நல்ல தொடர்பில் இருந்தார், இராஜகோபாலாச்சாரியார், வாரதராஜலு நாயுடு இருவரும் வற்புறுத்தி அழைத்து சென்னை மாகாண சங்க துணைத்தலைவராக்கினார்.

பார்ப்பனர் அல்லாதார் நலன் என்ற நோக்கத்துடன் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அமைக்கப்பட்டவுடன், ஆகாயத்திற்கும் பூமிக்குமாக அலறிக் குதித்து எதிர்ப்பு தெரிவித்த இந்து ஏடும், நியூ இந்தியா ஏடும், காங்கிரஸில் உள்ள பார்ப்பனரல்லாதாருக்கான அமைப்பு என்று உறுவாக்கப்பட்ட சென்னை மாகாண சங்கத்தை வரவேற்று எழுதின. இப்படி ஒரு சங்கம் தேவை, பார்ப்பனரல்லாதாருக்கான நிரந்தர அமைப்பு வளர்ந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை - தற்காலிகம் என்ற சொல்லாக வெளிவந்தது,

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை,
பக்கம் ; 52 to 53.

திராவிடம் அறிவோம் - இந்தியா என்பது ஒரு நாடல்ல, துணைக்கண்டம்

இந்தியா என்பது ஒரு நாடல்ல, துணைக்கண்டம். குறிப்பாக தென்னிந்தியாவில் திராவிடரும் - பார்ப்பனரும் வெவ்வேறு இனத்தவர்.

மதத்தாலும், வருணாசிரம தருமத்தாலும் பிளவுபட்டுத் திணறும் மாபெரும் திராவிடச் சமுதாயம்.
யானைப் பாகனிடம் அடங்கிப்போயி பழக்கப்பட்ட யானையைப் போன்று இருக்கிறது.
எண்ணிக்கையில் குறைவான பார்ப்பனர்கள், யானைப் பாகனைப் போல்திராவிடச் சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாகவே வஞ்சகமாக அடக்கி வைத்திருக்கிறார்கள்.

என்றறேனும் ஒருநாள் யானைப் பாகனை விரட்டும், திராவிடர்களின் எழுச்சி பார்ப்பனர்களைப் பணிய வைக்கும்.
எங்களை ஆளத்தான் பிரிட்டிஷாருக்கு உரிமை உண்டு. விற்க உரிமை இல்லை. தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் தகுதியை பெரும்பான்மை மக்களாகிய திராவிடர்கள் இன்னும் பெறாத நிலையில்.

ஹோம் ரூலையோ சுயராஜ்யத்தையோ பார்ப்பனர்களிடம் கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு கப்பலேருவது அப்பாவி ஆட்டுக் குட்டிகளை - வஞ்சனையும் ரத்த வெறியும் கொண்ட பார்ப்பன ஓநாய்களிடம் ஒப்படைக்கும் துரோகம் ஆகும்,

1919 ஆம் ஆண்டு டாக்டர் நாயர் தயாரித்து தந்த குறிப்புகளை வைத்து இங்கிலாந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் கே,வி.ரெட்டி 5 மணி நேரத்திற்கும் மேல் வாதாடிய உரையின் ஒரு பகுதி.

மூவாயிரம் ஆண்டுகள் தேவ அசுரப் போராட்டத்தில் அசுரர்கள் கை ஓங்கக் கண்டு பூசுரர்கள் கூட்டம் அலறியது வழக்கமான பிரித்தாலும் சூழ்ச்சியை அவிழ்த்து விட்டது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் கொள்கை அறிக்கைதேசிய நலனுக்கு ஆபத்து விளைவிப்பது தேசிய எதிரிகளுக்கு துணை போவது என்று புலம்பியது பின்னாளில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று குத்தூசி குருசாமியால் அழைக்கப்பட்ட இந்து ஏடு
தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஒரு விஷாமத்தனமான இயக்கம். அந்த சங்கம் நாட்டின் எதிரிகள் என அலறியது அன்னிபெசன்டின் நியூ இந்தியா ஏடு.

நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 51 to 52.

திராவிடம் அறிவோம் - சமூக நீதி அரசாணைக்கு 100 வயது!

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! செப்டம்பர் 17 - தந்தை பெரியார் பிறந்தநாளும் கழகம் தோன்றிய நாளும்! இரண்டுக்கும் இடைப்பட்ட செப்டம்பர் 16 க்கும் சிறப்பு இல்லாமல் இருக்குமா? இதோ இருக்கிறது!

செப்டம்பர் 16 ஆம் நாள்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புரிமை உத்தரவு போடப்பட்ட நாள்! சமூக நீதி அரசாணைக்கு இன்று 100 வயது!

M.R.O. public ordinary  sevice G.O.no 613. dated 16.9.1921 - என்பது இந்த அரசாணைக்குப் பெயர். அப்போது சென்னை மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வந்த கட்சி நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆகும். நீதிக்கட்சி ஆட்சியின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற பனகல் அரசர் ஆட்சியில் தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டது.

1919 சட்டப்படி இரட்டை ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அதன்படி நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் முதலமைச்சராக 1921 ஜனவரியில்  கடலூர் ஏ,சுப்பராயலு தலைமையில் அமைச்சரவை அமைந்தது. பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் என்று  நீதிக்கட்சி உறுப்பினர் ஏ,தனிகாசலம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இது பெண்ணினத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதனிடையே உடல்நிலை குன்றியதால் முதலமைச்சர் ஏ,சுப்பராயலு ஜூலை 11 பதவி விலகினார், அதைத் தொடர்ந்து பணகல் அரசர் முதல்லமைச்சராக ஆனார். அவரது ஆட்சி அமைந்ததும். ஆகஸ்ட் 5 - ம் நாள் சட்டமன்றத்தில் டாக்டர் நடேசனார் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். பார்ப்பனரல்லாதாருக்கு நியாயமான விகிதாச்சார அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கவேண்டும், என்று தீர்மானம் கொண்டுவந்தார், அரசே இதை ஆணையாக வெளியிட உள்ளது என்று பனகல் அரசர் சொன்னதன்  அடிப்படையில் நடேசனார் இந்த தீர்மானத்தை திரும்ப பெற்றார்,. அதனடிப்படையில் நீதிக்கட்சி அமைச்சரவையின் முதல் வகுப்புரிமை அரசாணை 16.9.1921 அன்று போடப்பட்டது.

கல்வி, வேலைவாய்ப்பு, சட்டசபை ஆகிய மூன்றிலும் மக்களின் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் உதயமானது, வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், சமூக மருத்துவர்களுமான டி,எம், நாயரும், நடேசனாரும், இணைந்து உருவாக்கிய அமைப்பு இது.

1912 ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் தொடங்கினார் நடேசனார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு விடுதிக்கு வெளியே சோற்றுப் பொட்டலத்தைப் தூக்கிப் போட்டதைப் பார்த்து நொந்த நடேசனார். ஒடுக்கப்பட்டவர் உட்கார்ந்து சாப்பிடவும், தங்கிப் படிக்கவும் உருவாக்கிய இல்லம் தான்  திராவிடர்  இல்லம், இந்த இல்லத்தில் மாதந்தோரும் ஒன்றுபட்ட சிந்தனை கொண்டவர்களை அழைத்து பேச வைத்தார், அங்கு பேசவந்தவர்கள் தான் தியாகராயரும், நாயரும்.

திராவிடம் அறிவோம் - அன்னை கண்ணம்மாள்

அன்னை நாகம்மையார் என்று சொல்லும்போதே, சேர்த்து உச்சரிக்கப்பட வேண்டிய இன்னொரு பெயர் கண்ணம்மாள் ஆகும். அன்னை கண்ணம்மாள் அய்யா பெரியார் அவர்களின் உடன் .பிறந்த தங்கை ஆவார். அவருடைய கணவரின் பெயர் காரணமாக அவர் எஸ்.ஆர். கண்ணம்மாள் என்று அழைக்கப்படுகிறார். நாகம்மையார் அவர்களும் சேர்ந்துதான் இயக்க வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். கள்ளுக்கடைஎதிர்ப்பு போராட்டமாகட்டும், கதருக்கான போராட்டமாக இருக்கட்டும், இவை அனைத்திலும் எப்படி அன்னை நாகம்மையார் முழுமையாக ஈடுபட்டு அவற்றை எதிர்கொண்டாரோ அதே வேகத்தில் அண்ணை கண்ணம்மாள் அவார்களும் முழுமையாக ஈடுபட்டு எதிர் கொண்டார் என்பதை முக்கியம்மாக சொல்லவேண்டும். இதில் கண்ணமாள் அவர்களிடம் பார்க்கும் ஒரு படிநிலை வளர்ச்சி அன்னை நாகம்மையார் அவராக மேடையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது. ஏதோ ஒரு கட்டத்தில் பெரியார் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, குடியரசிலே அன்னை நாகம்மையார் பெயரிலே அறிக்கை வெளிவந்திருக்கிறது. வாசகர்கள் தோழர்கள் தோழர்கள் ஒத்துழைப்பு தருமாறு என வந்திருக்கிறது . மற்றபடி கட்டுறையோ, மேடைபேச்சாகவோ அவருடைய பங்களிப்பு இல்லை.

ஆனால் கண்ணம்மாள் அவர்களைப் பொருத்தவரை  சொற்பொழிவாளராகவும், கட்டுரையாளராகவும் இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல பத்திரிக்கையின் பொறுப்பில் இருந்தபோது " இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும் ?" என்கிற தலைப்பிலே கட்டுரை வெளிவருகிறது. இன்றைக்குப் பலர், பெரியாரும், அம்பேத்கரும் ஆங்கிலேய அரசின் அடிவருடிகலாக இருந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த அரசாங்கமும் ,ஆட்சியும் ஒழிய வேண்டும் என்று  கட்டுரை எழுதியதற்காக அந்தப் பத்திரிக்கை நடத்துவதே கேள்விக்குள்ளாகி, பெரியார் அவர்களையும், கண்ணம்மாள் அவர்களையும் அரசாங்கம் கைது செய்து கடுங்காவர் தண்டனை விதித்தது. இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண் பத்திரிகையாளர் கைதாவது இதுவே முதல் முறை.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்,
பக்ககம் ; 84 to 85.
எழுத்தாளர் ; ஓவியா.

திராவிடம் அறிவோம் - T. M. நாயர்

1910 ஆம் ஆண்டு, பாலக்காடு நகரமன்றம் கலைக்கப்பட்டது. உள்ளாட்சி  நிர்வாகங்களில் மக்கள் பங்கு பெற வேண்டும் என்ற அழுத்தமான நம்பிக்கை கொண்ட நாயர், அதற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை தலைமையேற்று நடத்தி, கலைக்கப்பட்ட நகரமன்றத்திற்கு உயிரூட்டினார்.

அப்போது நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில்  பேசும்போது காவல்துறை அதிகாரி ஒருவர் ரகசியமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்ததார். இதை கவனித்த நாயர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, "இந்த தீர்மானம் - குறிப்பெடுத்த ரகசிய போலீஸ் அதிகாரி தவிர மற்ற எல்லோராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.

1912 மார்ச் 14 ம் நாள், சென்னை விக்டோரியா மண்டபத்தில் நமது உடனடி  அரசியல் கண்ணோட்டம் என்ற தலைப்பில் நாயர் பேசினார், நோயுற்றிருந்த நான் உடல் நலத்தோடு திரும்பி வரக்கூடாது, சாக வேண்டும் என்று சில புத்திசாலிகள் பிள்ளையாருக்கு நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்தார்கள் என்று கேள்விபட்டேன்,
எனது மலபார் மாவட்டத்தில் விலையும் தேங்காய்களுக்கு தற்போது நல்ல விலையில்லை என்று அங்கே உள்ள தென்னை விவசாயிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமது புத்திசாலி நண்பர்கள் மலபார் மாவட்ட தேங்காய்களுக்கு ஒரு புதிய சந்தையை ஏற்படுத்தி கொடுத்ததற்கு நன்றி என்று மூடநம்பிக்கையை  கேலிப் பொருளாக்கினார்.

1914, முதல் உலகப்போரின் போது பிரிட்டனுக்கு உதவ சென்னை மாகாணம்  சார்பாக இந்திய சிற்றரசர்கள், பொதுமக்கள் நன்கொடையில் மருத்துவ உதவிக் கப்பல் ஒன்று கொடுக்கப்பட்டது, அதன் பெயர் எஸ்,எஸ், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் அந்தக் கப்பலில் பணியாற்றினார்கள். அதே கப்பலில் லெப்டினன்ட் தகுதியுடன் மருத்துவராக பணியாற்றிய நாயர் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை பயிற்றுவித்தார். மாணவர்களின் தேர்வுக்கு அது பெரிதும் உதவியது. இதை பாராட்டிய பிரிட்டிஷ் அரசு, கேசரி இந்து என்ற பட்டம் கொடுத்ததுடன் அவரது மரணத்துக்குப் பின்னரும் தங்கப் பதக்கம் வழங்கி மரியாதை செய்தது.

நூல்   ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 29 to 30.

திராவிடம் அறிவோம் - 1929 - ல் பிப்ரவரி 13 ம் நாள் செங்கற்பட்டுலே மாநாடு

1929 - ல் பிப்ரவரி 13 ம் நாள் செங்கற்பட்டுலே மாநாடு நடந்தது. . சென்னைப் பட்டணத்துலே, தியாகராயர் சதுக்கத்துலே இருந்து ஊர்வலம் புறப்பட்டு, 35 கல் தொலைவிலே உள்ள செங்கற்பட்டுக்கு அந்த காலத்திலே வந்து சேர்ந்தது!"

இன்றைய நடப்புக்கு எல்லாம் விதை போட்ட மாநாடு செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு! அன்னைக்கு அந்த மாநாட்டுல போட்ட தீர்மானத்தையும், இன்னைக்கு நம்ம ஊரு நடப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது தான், அங்கே போட்ட விதை தான், இப்ப நாடு முழுதும் செடியா, மரமா வளர்ந்து பலன் தருவதை பார்க்கிறோம்! சடங்குகளை விலக்கிக் கல்யாணம் நடத்துறது பெண்ணுங்களை எல்லாம் படிக்க வைக்கிறது. அவங்களை வேலை பார்க்க அனுப்பி வைக்கிறது, இன்னைக்கு நமக்கு சுளுவான காரியமா தோணலாம்!

என் மருமகளா இருக்கிற தமிழரசி படிக்கிறதுக்குக் காரணமா இருந்ததே, அந்த மாநாடுதான்! நம்ம கந்தசாமி பொண்ணுக்கு , நம்ம நற்பணி மன்றத்துப் புள்ளைங்க எல்லாம் கல்யாணம் நடத்தி, எதிர்ப்புகளை எல்லாம் அடக்குனது குறைச்சு மதிக்கிற காரியம் இல்லே!" சின்னதம்பி தீண்டத்தகாதவர்னு ஒதுக்குபுறமா தள்ளி வச்சவங்க குடியிருக்கிற இடத்துலே தான், நம்ம ஊருலே ஒரு "கலைமணி" இஞ்சினியரா மாறிகிட்டு இருக்கிறதை இப்போ நாம பார்க்கிறோம்! வெளுக்கிற குலம்னு சொல்ற குடும்பத்துலே பொறந்த மணிமுத்து, டாக்டர் படிப்பை முடிக்கப் போறதை, நாம பார்த்துகிட்டு இருக்கிறோம்! அவங்க எல்லாம் மேலெழுத்து வரதுக்கு, அந்த மாநாட்டுலே உதவித் தொகை போட்ட தீர்மானங்கள் எல்லாம் சட்டம்மா மாறுனதுனாலே தான் சமுதாயத்துலே நாம மாற்றத்தை பார்த்துகிட்டுதான் இருக்கோம்!

ஒரு காலத்துலே தீண்டத் தகாதவங்களா மதிக்கப்பட்டவங்க தான் நாடாருங்க! அவங்களை நல்லது கெட்டதுகளில் விலக்கி வைச்ச நாடு தான் இந்த நாடு! அவங்க தொட்டதை சாப்பிடாத காலம் கூட இருந்துச்சி! அந்த சுயமரியாதை மாநாட்டுலே தான், அந்த நாடாருங்க சமைச்சு எல்லாமே சாப்பிட்டது நடந்தது! அப்போ அது பெரிய புரட்சியாவே இருந்தது!

இன்று இந் அம்பது நாலுலே, அந்த நாடார் குலத்துலே வந்த காமராசரு முதலமைச்சர்னு நினைச்சு பார்க்கிற பொழுது, எவ்வளவு மகிழ்ச்சி.

நூல்   ; பயணம் 2,
பக்கம் ; 1046 to 1047.

திராவிடம் அறிவோம் - மதுரையிலே டி,வி.எஸ். நிறுவனக் கட்டிடத் திறப்பு விழாவிலே காமராசர் பேசியது

"மதுரையிலே டி,வி.எஸ். நிறுவனக் கட்டிடத் திறப்பு விழாவிலே காமராசர் பேசியது, சூத்திரன் செய்யவேண்டிய மோட்டார்த் தொழிலைப் பிராமணன் செய்வதாக ஆச்சாரியார் பேசினார். அப்பொழுதுதான் ஆத்திரப்பட்டார் காமராசர். அது மட்டுமல்லே வாயதான சுந்தரம் அய்யங்கார் தமது மகன்களிடம் தொழிலை ஒப்படைத்திருக்கிறார் நான் பாராட்டுகிறேன் என்றார் ஆச்சாரியார்.

அப்பொழுதுதான் கமராசர் தன் கொதிப்பைப் பேச்சிலே வெளியிட்டார். வர்த்தகத்துலே மட்டுமல்லாமல் அரசாங்கம் நடத்துரதுலேயும் அந்த வழியை வயோதிகர்கள் பின்பற்றினால் நாட்டுக்கும் நன்மை ஏற்படும்னு கருத்தை வெளியிட்டார்!" என்றார் பாண்டியன்.

"அந்தப் பேச்சுதான் எங்களைப் போன்றவங்களை எல்லாம் வேகமாகச் செயல்பட வச்சது. எங்க டாக்டர் வரதராசுலு , அண்ணாமலைப் பிள்ளை போலவங்க எல்லாம் அதுக்குப் பின்னாலே முனைப்பா கையெழுத்து வாங்குரதுலே ஈடுபட்டாங்க! ஆச்சாரியாருடைய உடம்பும் கெட்டது. கட்சிக் கூட்டம் நடந்தது! அந்தக் கூட்டத்துலே கல்வித் திட்டத்தின் மீது ஓட்டெடுத்து என்னை அவமானப்படுத்த வேண்டாம். நான் விலகிக் கொள்கிறேன்! என்றார் ஆச்சாரியார்,

எங்கத் தலைவரும் வாக்குக்கு விடாமே கூட்டத்தை ஒத்தி வைச்சாரு இது நடந்தது சனவரி 6ல் என்றார் தியாகியார்.
"பின்னே ஏன்  அப்பவே விலகாம இருந்தாரு"! என்று கேட்டார் ஆறுமுகம், "மேலிடத்திலே உள்ளவாங்க என்று தியாகியார் சொன்னார்.
எங்களுக்கு மேலிடம்னா டெல்லி தானே! மேலிடம் தன்னையே இருக்க சொல்வார்கள் என எதிர்பார்த்தார்! ஆனால் அது நடக்குல. சட்டசபை நடந்துகிட்டு இருந்த பொழுது மார்ச் 23 ஆம் தேதி உடல்நிலைக் காரணம் காட்டி, நான் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்!" என்றார்.

"சட்டசபை நடக்கரை வரையிலும் இரண்டு மாதத்துக்கு மட்டும் சுப்ரமணியம் அவர்களை முதன்மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்னு காமராசரிடத்துலே சொன்னவரு கட்சித் தலைவர் தேர்தல்லே இரண்டு மாசம்னு குறிப்பிட்டுச் சொல்லாமே சுப்பிரமணியம்  இனி முதன்மந்திரியாய் இருப்பார்னு சொல்லவே காமராசர் இந்த ஏற்பாடு இரண்டு மாதத்துக்கு மட்டும் தான்னு சொல்லுங்க என்ற பொழுது கூட்டத்துலே ராஜாஜி அதை ஏத்துக்கலே!.

30 ம் தேதி தேர்தல் நடந்தது ஆச்சாரியார் காமராசர் நிப்பார்னு நினைக்கலே! ஆனால் எங்க டாக்டர் வரதராஜுலு காமராசர் பெயரைச் சொல்லிட்டார். எங்கத் தலைவருக்கு 93ம், சுப்பிரமணியத்துக்கு 41 வாக்கும் கிடைத்தது,  முதல்வர் ஆனார் காமராசர்.

நூல்    ; பயணம் -2.
பக்கம் ; 1026 to 1028.

திராவிடம் அறிவோம் - காமராசரு நினைச்சிருந்தா இந்தக் குலக்கல்வித் திட்டத்தை தொடக்கத்துலேயே தடுத்திருக்கலாம்

"அய்யா நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்கக் கூடாது காமராசரு நினைச்சிருந்தா இந்தக் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தொடக்கத்துலேயே தடுத்திருக்கலாம். ஆனால் அந்த எதிர்ப்பை வளரவிட்டு அதுலே தன் நினைப்பை நிறைவேற்றி கிட்டாருனு ஒரு கருத்துச் சொல்றாங்ளெ! நீங்கள்  என்ன சொல்கிறீர் என்றார் செங்குட்டுவன்.

தியாகியாரு,  எங்கத் தலைவருக்கு அப்படிப்பட்ட எண்ணம், அந்தத் திட்டம் வந்த தொடக்கத்துலே, இருக்கிறதுக்கு வாய்ப்பில்லே! ஆனால் பெரியாரும் அண்ணாவும் நாட்டிலே பேசிவந்த பார்ப்பான், சூத்திரன், வர்ணாசிரமம் இதெல்லாம் இந்த நூற்றாண்டுக்குப் பொருந்தாத நினைப்புனு நினைச்சுகிட்டு இருந்த எங்கலைப் போலவங்களுக்கே, அந்த நினைபை உண்டாக்கி வைச்சாரே ஆச்சாரியாரு!" என்றார் தியாகியார்.
எப்படி அய்யா சொல்றீங்க என்றார் ஆறுமுகம்.
"குலக்கல்வித் திட்டம்!  அது நீங்க கொடுத்த பேரு இல்லையா? புதுக்கல்வி திட்டம் வந்தப்போ எங்களிடத்துலே கல்வித்திட்டம் சரியா? தப்பா? இந்தக் கேள்விக் கூட முதல்லே வரலே! இந்தத் திட்டத்தைக் கொண்டு வரதுக்கு முன்னாலே இதைப்பத்தி கல்வி மந்திரி கிருஷ்ணாராவுக்கு கிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லலே! இது அடிப்படையிலே பெரிய மாறுதலை உண்டாக்குகிற இந்த ஏற்பாட்டை கட்சியிலே, சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்துலேயும் கேட்டுச் செய்யாமே, தானா செஞ்சாரு ஆச்சாரியாரு! அந்தக் கல்வித் திட்டத்தை விட அது எங்களைக் கொதிப்படைய வச்சது.
அவரை பார்த்துக் கேட்டபோது  சங்கரரும், ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை மற்றவங்களைக் கலந்து கொண்டா வெளியிட்டாங்கனு அவர் சொன்னது எங்களை எல்லாம் குமுற வச்சது!" என்றார் தியாகியார்.

"பின்னே தடுத்திருக்கலாமே , மாத்தியிருக்கலாமே!" என்றார் ஆறுமுகம்.

"ஆறுமுகம்! ஒடம்பிலே "குறுப்பு" வந்ததுன்னா மருந்து போட்டு அமுக்குறதும் உண்டு. சிலதைப் பத்துப் போட்டு கட்டியாக்கி பழுக்க வச்சு "முளைப்பையே" எடுத்திடறதும் உண்டு இல்லையா! எங்கத் தலைவரு, இந்த முளையை எடுக்கிறதுலே கண்ணும் கருத்துமா இருந்திருக்கிறாரு! அதனாலேதான் கட்சியிலே ஓட்டெடுப்பு வந்த பொழுது எல்லாம் அதை தடுத்துகிட்டே வந்தாரு. ஆந்திராவும் தனியாகப் பிரிஞ்சப்பின்னே கட்சிக்குள்ளே ஆட்சாரியாறை ஆதரிக்கிறவங்க, தாங்கரவங்க குறைஞ்சு போனதை நல்லா தெரிஞ்சிகிட்ட பின்னே தான், அவர் வெளிப்படையாக வெளியிட்டார், என்றார் தியாகியார்.

நூல்    ; பயணம் -2.
பக்கம் ; 1025 tp 1026.

திராவிடம் அறிவோம் - பெரியாரும் அண்ணாதுரையும்

மருத்துவக் கல்லூரியிலே, 318 இடத்துலே 104 இடம் பார்ப்பனர்களுக்கு, நாம் போராடிப் பெற்ற வகுப்புரிமையின் குரல்வளை நெரிக்கிறாரு! இப்படித்தான் துணை நீதிபதிகளை, மாவட்ட நீதிபதிகளை, அய்.ஏ.எஸ். நியமனங்களிலே, கல்வித்துறையிலே, பாதிக்கு மேலே அவங்க இனத்து ஆட்களையை நியமித்திருக்கிறார். அதற்கெல்லாம் ஈடுகொடுத்து தலையெடுப்பதற்கு ஐம்பது, ஆறுபது ஆண்டுகள் போனாலும்  முடியாது.

"அதணால் தான் அரும்புலேயே  நெருப்பபை  அள்ளிப்  போட்டுட்டா, அதன் வேர்கூட மிஞ்சாது இல்லையா? அதனால தான் ஆணி வேறையே ஒழிக்கிற மாதிரி, குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தாரு" இதை நம்ம மக்கள் புரிஞ்சிக்காம இருக்கிறார்களே" என்றார் ஆறுமுகம்.

"அது மட்டுமில்லே ஆறுமுகம், அவரை ராஜாஜினு கூடச் சொல்றதில்லே, நம்மாளுங்க அவர் ராஜரிசினேசொல்லிக் கால்லே விழறாங்கே! அவர் கையைத் தூக்கி ஆசிர்வாதம் என்பார்!" என்றார் ஆசிரியர் கந்தப்பன்.

எங்க தலைவரை உண்மையிலேயே முதல் மந்திரியா ஆக்குனவங்க, நாங்க இல்லே! நீங்கள் தான் என்றார் தியாகியார், பெரியாரும் அண்ணாதுரையும் தான்! நீங்கள் இந்த ரெண்டு வருசமா வெளியிலே போட்டது வெறும் சத்தமில்லே! ஆச்சாரியாருக்கு வெச்ச வேட்டு என்றார் தியாகியார்,

பெரியாரும் அண்ணாவும் பேசாம இருந்திருந்தா, உங்கத் தலைவர் (காமராசர்) முதல் மந்திரியா வந்திருக்க முடியாது, அப்படி தானுங்களே" என்றார் ஆறுமுகம்.
"அந்த உண்மையை மத்தவங்க ஒத்துகிறாங்களோ இல்லையோ, நான் ஒத்துக்குவேன், நாங்க அண்ணாத்துரை கட்சியைத் தொடங்குனப்போ அது அற்பாயுசு கட்சின்னு தான் நினைச்சோம்! அதுமட்டுமில்லே பெரியாரும், அண்ணாத் துரையும் மோதிகிட்டே இருப்பாங்க! நமக்கு வேலை குறைச்சலுனு எங்க ஆளுங்க பலர் நினைச்சாங்க!

ஆணால் இந்தியை அழிக்கிறதுலே இரண்டு பேரும் முன்னே போனதும், குலக்கல்வித் திட்டம்னு வர்ணாசிரமத்தை நிலை நாட்டுறத் திட்டம்னு ஓயாமே ஊர்வலம், மறியல்னு அண்ணாதுரை ஒரு பக்கம் மும்முனைப் போராட்டம்னு நடத்துனா, பெரியாரு மாநாடு போட்டுக் கண்டிக்க நாகப்பட்டினத்துலே இருந்து நடைப்பயணம்னு புறப்பட்டு வர, நாள் தவராம அரசாங்கத்துக்குத் தலைவலியை உண்டாக்கிட்டு நீங்க ஓயாம போராடாம இருந்தா, எங்க தலைவர்முதல் மந்திரியா பொறுப்பு  எளிதில் ஏத்துகிட்டு இருக்க முடியாது.

நூல்     ; பயணம் - 2.
பக்கம் ; 1023 to 1025.

திராவிடம் அறிவோம் - ஆச்சாரியார் அவங்க ஆட்களை நிரப்பி...

"இப்ப வந்து பொறுப்பு ஏத்துகிட்டாரே, என்ன செஞ்சாரு? அரசாங்கத்துலே திறமை உள்ளவங்களுக்குப் பஞ்சமா? அரசாங்க வேலையிலே ஓய்வு பெற்றுப் போனவங்கள்லே, எத்தனைப் பேரை உள்ளே உட்கார வச்சிருக்காரு? நினைச்சுப் பாருங்கள்!"
"பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னே ஓய்வு பெற்றவரு வயசும் ஏழுபதுக்கு மேலே ஆனவரு, ஆர்.வி, கிருஷ்ணய்யரு! அவருக்கு ஏன் சட்டசபை காரியதரசி வேலையைப் போட்டுக் கொடுத்தாரு?
"வெங்கடகிருஷ்ண அய்யர்னு ஒருத்தரு , அவர் தலைமை இன்ஜினியரா இருந்தவரு! அவரும் ஓய்வு பெற்று ஆண்டு பத்துக்கு மேலே ஆயிடுச்சு, வீட்டுக்குப் போனவரைக் கூப்புட்டுகிட்டாரே! இப்படி எத்தனையோ பேரை, விதிமுறைகளுக்கு மாறா சேர்த்துக்கிட்டதுக்கு எது காரணம்".

"பாண்டியன் படிச்ச, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தராப் போடச் சொல்லி யார் பெயரை வற்புறுத்தினார்ரு, சி.பி. இராமசாமி அய்யரைத் தானே?! வேலையில்லா விட்டாலும் வேலையை உண்டாக்கி , அய்யருமாருங்களைக் கொண்டு வந்து உட்கார வச்ச ஆச்சாரியாரு, நம்மாளுங்களுக்குச் செஞ்ச கொடுமைகளை நாம மறக்காம நினைச்சுப் பார்க்கனும்! என்றார் வேலாயுதம்,

"பெரிய நிபுணர், பொருளாதாரத்திலே என்று பாராட்டப்படுபவரு டாக்டர் பா,நடராசன் என்பவர்! அவர் அரசாங்கத்திற்கு நிதித் துறை ஆலோசகரா இருந்தாரு! அவரு நம்ம ஆளு! அந்தப் பதவியே தேவை இல்லைனு, அவரை வெளியேத்துனவர் தானே இவரு!

அரசாங்க நிர்வாகத்துலே, ஆச்சாரியார் அவங்க ஆட்களை நிரப்பியும், நம்ம ஆட்களை விரட்டியும், அவங்க ஆட்களை மேன்மைபடுத்தியும் காட்டறதுக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கு! அதை எல்லாம் நாம தெரிஞ்சுக்கணும். இப்பொழுது படிச்சு கிட்டு  இருக்கிற மாணவர்கள் சேர்க்கையை எண்ணிப் பார்த்தா, மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது! டாக்டருக்குப் படிக்கிற மணிமுத்து வினுடைய பேராசிரியர் கிட்டே பேசிகிட்டு இருந்தேன் அவர் ஒரு பட்டியலைக் காட்டுனாரு! பொறியியல் கல்லூரியிலே 378 இடமாம், அதுலே பார்ப்பனப் பிள்ளைகள் மட்டும் 160 பேராம்" என்றார் பாண்டியன்.

நூல்     ; பயணம் -2
பக்கம் ; 1022 to 1023.

திராவிடம் அறிவோம் - சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவக் கல்லூரியில் இடம்

1840 ஆம் ஆண்டுதான் சென்னையிலும், பம்பாயிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

திராவிட மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு விதியை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த சனாதன விதி 1920 இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த போது நீக்கப்பட்டு, திராவிட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன.
அயராத உழைப்பால் நாயர் அஞ்சல் கல்வி மூலமே சமஸ்கிருதம் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தார். இதற்கு உதவியாக அவரது தாயார் கண்மணி அம்மாளும், சகோதரி தராவத் அம்மாளும் இருந்தனர்.

அந்நாளில் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை சுதேசி என்று ஏளனமாக அழைப்பது வழக்கம் (சுயதேசம் - சுதேசி, பரதேசம் - பரதேசி, வேறு தேசம்- விதேசி) நாயரின் தன்மான உணர்வு அதற்குப் பாடம் கற்பிக்க விரும்பியது, ஒருமுறை இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நாயர், நான் ஒருவன் மட்டும்தான் விதேசி. நீங்கள் அனைவரும் சுதேசிகள், என்று அங்கிருந்த பிரிட்டிஷ் காரர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில் புலமை பெற்றிருந்த நாயர், தாய்மொழியான மலையாளத்திலும் பற்றுடையவராக இருந்தார். எடின்பரோ மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது, கள்ளிக்கோட்டையிலிருந்து வெளிவந்த கேரளப் பத்திரிகா என்ற ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதி வந்தார். அந்த ஏட்டில் சந்துமேனன் என்பவர் எழுதிய இந்துலேகா என்ற நாவிலின் மதிப்புரை ஒன்று வெளிவந்தது நாவாலின் கதாநாயகன் பெயர் மாதவன், நாயகியின் பெயரஇந்துலேகா அந்த மதிப்புரையைப் படித்த நாயர் நூலின் ஆசிறியருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதினார். நான் வெகு தூரத்தில் இருப்பதால் இந்துலேகாவைப் பார்க்க முடியவில்லை, ஆணால் இந்துலேகா ஒரு நாள் மாதவனிடம் வருவாள் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் கடிதத்தைப் படித்து வயிறு குலுங்ச் சிரித்த சந்துமேனன் உடனே ஒரு இந்துலேகா புத்தகத்தை தபால் மூலம் தாயாருக்கு அனுப்பி வைத்தார்.

படம்   ; T.M. நாயர்.
நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 27 to 29

திராவிடம் அறிவோம் - ராஜா சர் முத்தையா செட்டியார்

1934 ஆம் ஆண்டு சென்னை நகராட்சி, மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது அப்போது தலைவராக இருந்த ராஜா சர் முத்தையா செட்டியார் முதல் மேயரானார். அது முதல் மேயரை வணக்கத்திற்குரிய மேயர் (Worshipful Mayer) என்று அழைக்கப்படும் சம்பிரதாயம் ஏற்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு வணக்கத்திற்குரிய மேயர் என்ற சொல்லிற்குப் பதிலாக மரியாதைக்குறிய மேயர் (Respected Mayer) என்று மாற்றி அமைத்தது.

சென்னை மாமாநகராட்சியின் மேயர் பதவி வகிப்பவர்கள் அணியும் தங்கச்சங்கிலி, வெள்ளிச்செங்கோல், மேயர், துணை மேயர்களின் இருக்கைகள், மாமன்ற உறுப்பினர்களின் அறை அத்தனையும் ராஜா சர் ராஜா முத்தையா செட்டியார் மாநகராட்சிக்கு அன்பளிப்பாக வழங்கியவை இதற்கு மரியாதை செய்யும் விதமாக அவருக்கு தனியே வரிவிலக்கு சலுகை அளிக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் அத்தனைக்கும் பத்து ரூபாய் மட்டுமே அப்போது மாநகராட்சி வரியாக விதிக்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டூ முத்தையா செட்டியாரின் சகோதரர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் மேயராகப்பதவி ஏற்றார். மாநகராட்சிக்கென தனிக்கொடி உறுவாக்கியவர் அவர் தான். மூவேந்தர்களின் சின்னமான வில், புலி, கயல் மூன்றையும் நீலநிறப் பின்னனியில் பொறித்து உருவாக்கப்பட்ட கொடி மேயர் சென்னையில் இருக்கும்போது மாநகராட்சி மன்றத்தில் பறக்கும் இல்லாத போது கொடி இறக்கப்படும் இந்த நடைமுறையை ஏற்படுத்தியவரும் அவர்தான்.

நகருக்கு வரும் பிரபலங்கள் எவராக இருந்தாலும் அவரை மேயர்தான் முதலில் வரவேற்க வேண்டும். என்ற ஒழுங்கு முறை இன்றும் நடைமுறையில் இருக்கிறது சுழற்சி முறையில் ஒவ்வொரு வகுப்பாரும் ஓராண்டு மேயராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நடைமுறை ராஜா சர் முத்தையா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. இப்போது மேயரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என மாற்றப்பட்டுவிட்டது.

படம்    ;ராஜா  சர் முத்தையா.
நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 20 to 21.

திராவிடம் அறிவோம் - சென்னை நகராட்சி

1871 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள் தொகை நான்கு லட்சத்திற்கும் குறைவு . அதற்கு 180 ஆண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்டது சென்னை நகராட்சி.


29.9.1688 -ல் சென்னை எர்ரபாலு செட்டித் தெருவில் ஒரு வீட்டில் துவக்கப்பட்ட சென்னை நகராட்சி துறைமுகப்பகுதியை மட்டும் எல்லையாகக் கொண்டிருந்தது. அப்போது கவர்னராக இருந்த லிட்டன் பிரபு நகராட்சி மன்றத்தை வெள்ளையர்களின் கொள்ளைக் கூடாரமாக்கிக் கொண்டிருந்தார்.

1880 -ல் ஜார்ஜ் பிரடரிக் சாமுவேல் ஜான்சன் என்ற இயற்பெயர் கொண்ட ரிப்பன் பிரபு கவர்னராக வந்தார். உள்ளாட்சி மன்றங்கள் மக்களின் அடிப்படைத் தேவைக்காக உருவாக்கப்பட்ட மக்களின் மன்றங்கள் என்ற தெளிவான நோக்கத்துடன் - ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த நகராட்சி நிர்வாகத்தில், இந்தியர்களைப் பங்கு பெற வைத்தார்.

இன்று கம்பீரமாக எழுந்து நிர்க்கும் சென்னை மாநகராட்சி மாளிகை அவரது 10 ஆண்டுகால உழைப்பால் கட்டப்பட்டது. அவரது மக்களாட்சி கோட்பாடுகளால் கவரப்பட்ட மக்கள் "ரிப்பன் எங்கள் அப்பன்" என்று போற்றினர். அவர் எழுப்பிய மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்றுப் பெயர்வைத்து கட்டிட வளாகத்திற்குள் அவரது சிலையையும் வைத்தார்கள்.

தென்னகத்தின் தனித்த அடையாளமாக வேண்ணிரமாக ஒளிரும் அந்த மாளிகைக்கு, வெள்ளை மாளிகை என்று ஒரு பெயரும் உண்டு.

1919 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை நகர முனிசிபல் சட்டப்படி, 1919 முதல் 1923 வரை சென்னையின் முதல் நகராடீசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் தியாகராயர். அதைத் தொடர்ந்து திருமலைப்பிள்ளை முகமது உஸ்மான், தனிகாசலம் செட்டியார், சர்.ஏ,ராமசாமி முதலியார்:- ஆகிய நீதிக்கட்சியின் தலைவர்கள் நகராட்சித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். சென்னை தியாகராயர் நகரில் இந்த தலைவர்களின் பெயரால் தெருக்கள் அமைந்துள்ளன.

படம்   ; சர். ஏ. ராமசாமி முதலியார்.
நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 19 to 20.

திராவிடம் அறிவோம் - தியாகராயரின் தன்மானத்தை உரசிப் பார்த்தது ஒரு நிகழ்ச்சி

கடவுள் உருவங்களை வீட்டில் வைத்து. பார்ப்பன புரோகிதர்களை வைத்து  - திணமும் பூசை செய்யும், பழுத்த வைதீகராக இருந்த தியாகராயரின் தன்மானத்தை உரசிப் பார்த்தது ஒரு நிகழ்ச்சி.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குடமுழுக்குக்கு ரூபாய் 10000 நன்கொடை கொடுத்தார் தியாகராயர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடிக்கும் மேல். நன்கொடை பெற்றுக் கொண்ட பார்ப்பனர்கள் அழைத்த காரணத்தால் குடமுழுக்கிற்க்கு சென்றார்.

அங்கே அவரிடம் வேலை செய்து சம்பளம் வாங்கும் பார்ப்பனர்கள், மேடையில் உட்கார்ந்து கொண்டு "சூத்திரனெல்லாம் மேடைக்கு வரக்கூடாது கீழே நில்" என்றார்கள்.

டாக்டர் நடேசனாரின் தொடார்பு, டாக்டர் நாயரின் அறிவுபூர்வமான பார்ப்பன எதிர்ப்பு வாதங்கள் காரணமாக படிப்படியாக வைதீகத்தின் பிடியில் இருந்து விடுபட்டு வந்த தியாகராயர் வெகுண்டெழுந்தார். காரோட்டியை அழைத்து "நாயரின் இல்லத்திற்கு காரை விடு என்றார்.

1916 டிசம்பர் 20 ம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கை விளக்கக் கூட்டம் சென்னை விக்டோரியா மண்டபத்தில் மண்டபத்தில் நடைபெற்றது. தென்னகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மக்கள் திரள் வாழ்த்தொலிகளை எழுப்ப -  நிறுவனர்களில் ஒருவரான சர்,பி. தியாகராயர் கொள்கை விளக்க அறிக்கையை வெளியிட்டார்.

திராவிடர் இயக்கதின் விடுதலை சாசனம் என்று இன்றளவும் போற்றப்படும் அந்த அறிக்கை;

இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 4 கோடி 50 லட்சம்மாகும். அதில் 4 கோடிக்கு குறையாதவர்கள் பார்ப்பனரல்லாதார், வரிசெலுத்துவோரில் பெரும்பான்மையோரும் அவர்களே, மேலும் குறுநில மன்னர்கள், பெருநிலக் கிழார்கள், விவசாயிகள் ஆகியோரும் பார்ப்பனரல்லாதவரே.

உண்மையில் அரசியல் என்ற பெயரால் நடைபெறும் இயக்கங்களில் பங்குகொள்ள உரிமை இருந்தும் அவர்கள் அதில் பங்கு கொள்ளவில்லை. மக்களிடையே அவர்களுக்குள்ள செல்வாக்கை நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிதும் அவர்கள் பயன்படுத்தவில்லை.

அவர்களுடைய சார்பில் உண்மையை வெள்ப்படுத்துவதற்கு அவார்களிடம்பத்திரிகைகளும் இல்லை, 15 லட்சம்பேர்களே உள்ள பார்ப்பனர்களின் நிலையைக் கவனிக்கும்  போது, இவர்களுடைய அரசியல் வாழ்க்கை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 41 to 42.

திராவிடம் அறிவோம் - நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்

நாகம்மாள் மறைவை நான் மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபகரமான காரியத்திற்க்கும் பயன்படுத்திக் கொள்கிறேனோ அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிராகவே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமை தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவார்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றமையே முக்கிய காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவது நமது "புதிய வேலை திட்டங்களை" உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் " கூற்றாக" நின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு ஆபத்து, பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். 2,3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல , பண வசூலுக்காக அல்ல,) சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனிவீடோ அல்லது குறிப்பிட்ட  இடத்தில் நிரந்தர வாசம் என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆணால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்க வில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள, இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குறிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்,

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 82 to 83.

திராவிடம் அறிவோம் - நாகம்மாள் மறைவால் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை  நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வாந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால் நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநலச் சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்கமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான் நாகம்மாள் நான் காங்கிரஸில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டும்மா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டும்மா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டும்மா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டும்மா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியேயென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு நாற்பத்தெட்டு வாயதே ஆன போதிலும், அது மனித வாழ்வில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய இருபத்து மூன்று வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் உண்மையென்று கருதுகிறேன்.

எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களோ இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அதைக் கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை" ஒழிந்தது என்கின்ற இரு உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 81 to 82.

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் மறைவு

 அம்மையார் மரணமடைந்த போது, நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள். பல்வேறு இடங்களில் படத்திரப்பு நிகழ்வுகளும், இரங்கல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. அவர் மரணமடைந்த அன்றே பெரியார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ச் செல்கிறார். அடுத்த நாள் 144 தடை உத்தரவு மீறி சிறைக்குச் செல்கிறார். ஆனால் நாடே நாகம்மைக்கு அஞ்சலி செலுத்தியது. இயக்கத் தொண்டர்கள் சொந்த ன்னையை இழந்தது போல் அழுது பரிதவித்தார்கள், இயக்கம் துயருற்றது. இவையெல்லாம் நாகம்மையாருடைய தொண்டின் சிறப்பை காட்டுகிறது. பெண்கள் இயக்க வரலாற்றில், நாகம்மையார் முதல் முத்தாகத் திகழ்கிறார். சுயமரியாதை இயக்க வரலாற்றில், அதணைத் தோற்றுவித்த மாபெரும் பணியில் நாகம்மையாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரைத் தவிர்த்துவிட்டு இந்த இயக்க வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது.

நாகம்மையார் மறைவையொட்டி அய்யா எழுதிய இரங்கல் உரை இலக்கிய நயம் மிக்கது. இதுவரை இப்படியொரு இரங்கல் பா யாரும் எழுதியிருக்க மாட்டார்கள்!.

எனதருமை துணைவி, ஆருயிர் காதலி நாகம்மாள் 11.5.33. தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார், இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் நாகம்மாளை "மணந்து"வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்துவிட்டேன்.

நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை, சுயநல வாழ்வில் "மைனராய், காலியாய், சீமானாய்" வாழ்ந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய்இருந்த காலத்திலும், எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரம்மாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம், பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ, அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாளுக்கு நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால் நாகம்மாளோ பெண்ணடிமை விஷாயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும், மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 80 to 81.

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் கலந்துகொண்டுட கூட்டங்களில் பெண்கள்

பேராசிரியர் மங்கல முரகன் எழுதிய நூலில்லிருந்து நாகம்மையார் மேடை ஏறிப் பேசியதில்லை . ஆனால் அவர் கலந்துகொண்டுட கூட்டங்களில் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டார்கள். அம்மையார் பெரியாரின் அருகில் இல்லாமலிருந்தால், என்னதான் பெண்ணுரிமைக் கருத்துக்களை பேசியிருந்தாலும் கூட, பெண்கள் அதிகளவில் திரண்டிருப்பார்களா என்பது கேள்வி குறி.  அறிவுக்கருவூலம், தலைமை அய்யா அவர்கள் தான், ஆனால் அதனை ஏதுவாக்கி காட்டியதில் அம்மா அவர்களின் பங்கு இருக்கின்றது. அன்றைய தினம் அவர்களின் குடம்பச் சொத்துதான் இயக்கத்திற்கு இருந்த ஒரே சொத்து. ஆணால் உவப்புடன் அனைவரையும் அரவனைத்து அன்னமிட்டு ஆதரித்தார்கள்,குடியரசு இதழின் பதிப்பாசிரியராகவும் நாகம்மையார் இருந்தார்கள்.

பதிப்பாசிரியர் என்பது வெறுமனே பத்திரிக்கையில் பெயர் போட்டுக்கொள்வது மட்டுமல்ல, அப்போது குடியரசு பத்திரிகை காவல் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த நிலை. பத்திரிகைகளில் வெளிவரும் விசயங்களுக்கு விளக்கம் கேட்கப்படலாம், கைதுகூடா செய்யப்படாலாம். இது போன்ற பொருப்பு தான் அம்மையார் ஏற்றுக்கொண்டார். குடியரசு மட்டுமல்ல, ரிவோல்ட் என்கின்ற ஆங்கிலப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரும் இவாரே, அந்த ஏட்டில் குஞ்சிதம் குருசாமி, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

குஞ்சிதம் அம்மையார், நீலாவதி ஆகியோர் செய்துகொண்ட சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களுக்கு, விதவை திருமணங்களுக்கு நாகம்மையார் அவர்களும், அவர்களின் தாய் தகப்பன் நிலையிலிருந்து திருமணப்பத்திரிக்கை அடித்து அழைப்பு விடுத்திருக்கிறார்கள். 1930 களில் நடந்த - இராமசுப்பிரமணியம் திருமணம் தாலி மறுப்பு திருமணம் கூட, சுயமரியாதை இயக்கத் திருமணங்கள் இங்கிருந்துதான் தொடாங்குகிறது. முதன்முதலில் தாலி மறுப்பு திருமணம் நடைபெற்ற செய்தியை குடியரசு இதழில் எழுதும்போது "இன்று முதல் தாலி ஒழிந்தது" என்று எழுதினார்கள் . திருமணத்தை புரட்சிக்காண ஆயுதமாக மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை திருமணம் பெரிய அளவில் நடத்தப்படுவதற்கு காரணம் அந்த திருமண நிகழ்வில்தான் தாய்மார்களை சந்திக்க முடிகிறது என்றார் பெரியார்.

அய்யாவின் வெளிநாட்டு சுற்றுபயணங்களான மலேசியா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு அம்மாவும் செல்கிறார். இரண்டாவது முறை அய்ரோப்பா சுற்று பயணத்தின் போது அம்மா செல்லவில்லை. இங்கு இருந்து இயக்க வேலை தொய்வில்லாமல் செயல்படுத்தினார். அய்யாவை வரவேற்பதற்காக இலங்கை சென்று அய்யாவை அழைத்து வாந்தார். திருமணத்திற்கு பின் இதுவே முதல் முறை அய்யாவை அம்மா பிரிந்தது. தனது நாற்பத்தெட்டாவாது வயதில் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்.

நூல்     ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 70 to 80.

திராவிடம் அறிவோம் - நாகம்மையார் போராடியவை

நாகம்மையார் நான் சாதி சொல்ல மாட்டேன் என்று மட்டும் சொல்லியிருந்தால் அது தட்டையான பதில், என்ன நோக்கத்திற்காக கேட்கிறார்கள் என்று புரிந்து கொண்டு, அந்த நோக்கம் நிறைவேற ஒத்துழைக்க மாட்டேன் என்று விளக்கமாகப் பதில் சொல்கிற தன்மை இருக்கிறதே, அங்கு தான் பெரியார் கொடுத்த பயிற்சியின் வெற்றியை நாம் பார்க்கிறோம்,. நாகம்மையார் போராடிய போது , கோவில் இருந்த தெருவில் நுழைவதற்காகத் தொடாங்கிய போராட்டம்,கோயில் நுழைவு போராட்டமாகவே மாறிவிடக்கூடிய சூழலை எட்டியது. அப்போது காங்கிரஸ் இயக்கதில் இருந்தார்கள் காந்தியினுடைய இராட்டையை எடுத்துக்கொண்டு, அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டு, நடத்திய போராட்டத்தின் வல்லமை பெண்களுக்கு முன் உதாரணம் .

இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய போராட்டம் காங்கிரஸ்காரர்கள் மறக்கப்பட்டாலும். கூட கேரளத்தில் உரிய மரியாதையுடன்  இன்றளவும் நினைவுகூரப்படுகிறது. பெரியாரையும், நாகம்மையும் அழைத்து சிறப்பு செய்திருக்கிறார்கள் . அன்மை காலத்தில் அய்யா அவர்களின் சிலை திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி அய்யா சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தார்.

1920 லிருந்து 1925 வரை காங்கிரஸ்சில் உழைத்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலிருந்து பரிந்துறைக்கப்பட்ட முதல் பெண் பிரதிநிதி ஆவார். காங்கிரஸ் இயக்க வரலாற்றில் அவருக்கு நிகரான பெண் போராளிகளைக் காண்பது அரிது. பட்டாடைகளையும் மாளிகை வாசத்தையும் புறந்தள்ளி, வீரியமிக்க, போராட்டங்கள் மிக்க, துண்பங்கள் நிறைந்த, அவமானங்களையும், ஏச்சுகளையும், பேச்சுகளையும் உள்ளடக்கிய பொதுவாழ்க்கையில் நுழைந்தது எத்தகைய பக்குவம்.

பிறகு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. அதிலும் நாகம்மையாரின் பங்கு அலப்பரிமது, ஏனென்று கேட்டால் பெரியார் ஒரு குடும்பமாகத்தான் இயக்கத்தை கட்டுகிறார், அந்தக் குடும்பத்தின் அன்னையாக நாகம்மை திகழ்கிறார். அத்தகைய அன்னை கிடைக்காமல் போயிருந்தால் அப்படிப்பட்ட இயக்கத்தை கட்டியிருக்க முடியுமா? பெண்களை ஈர்த்திருக்க முடியுமா? அவ்வளவு தோழர்களை உருவாக்கி இருக்க முடியுமா? திராவிடர் இயக்கம் குடும்பம் குடும்பமாக வளர்ந்த இயக்கம். அத்தனை குடும்பங்களையும் ஆதரித்து அரவணைக்கும் அன்னையாக திகழ்ந்தார்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் , 77 to 79.

திராவிடம் அறிவோம் - நாகம்மையாரின் பங்களிப்பு

ஆச்சாரம்மாக, வெகுளித்தனமாக இருந்த நாகம்மையார் பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த போதும் , சுயமரியாதை இயக்கத்தை துவங்கிய போதும் நாகம்மையாரின் பங்களிப்பு மகத்தானவை. நாளடைவில் கணவரை பின்பற்றி சுயமரியாதை வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட நாகம்மையார்.  1920 களில் கள்ளுக்கடை போராட்டம் தொடங்கியது. கள்ளுக்கடைகளை மூடச்சொல்லி போராட்டம் தொடங்க வேண்டும் என்கின்ற தீர்மானம் பெரியாரின் வீட்டில் காந்தியார்ரின் தலைமையிலே நிறைவேற்றப்படுகிறது. போராட்டத்திற்காக தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீத்தினார். 500 தென்னைமரங்களின் மதிப்பு சாதாரணம் அல்ல, வட நாட்டில் கூட ஈச்சமரங்கலைத்தான்  வெட்டினார்கள்.

போராட்டத்தில் பெரியார் கைது செய்மப்பட்ட பிறகு நாகம்மையார் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார். அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இப்போது இருப்பதுபோல் ஊருக்குள்  கிடையாது. ஊருக்கு வெளியில் சுகாதாரமற்ற இடங்களில் அமைந்திருக்கும். அத்தகைய இடங்களுக்கு சென்று நாகம்மையாரும், பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும்  மரியலில் ஈடுபட்டது எப்படிப்பட்ட புரட்சிகரமான  செயல். காங்ரசில் இருக்கும்போது நடந்த போராட்டம், ஆணால் காங்கிரஸ்காரர்கள் தங்கள் இயக்கத்து போராளிகள் பெயரை பேசியதுண்டா?
 மது ஓழிப்பு போராட்டங்கள் ஏராளமாக நடக்கிறது, காந்தியவாதி இயக்கம், கம்யூனிஸ்ட் காரர்கள்,  ஆணால் மது ஒழிப்பு போராட்டத்தின் முன்னோடிகள் என்று இரு பெண்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

1924 ல் வைக்கம் போராட்டாம் நடக்கிறது கேரளாவிலே அங்கு இருக்கிற வீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து போக முடியாது. இதணால் வழக்கறிஞர் வழக்கறிஞர் தொழில் செய்வோர் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். காரணம் அந்த வீதியை தாண்டி தான் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது அதணால் வழக்கறிஞர்கள் போராட்த்தை துவங்கிய திருமிகு மாதவன் மற்றும் கே,பி. கேசவமேணன் இருவரும் கைது செய்து சிறை செல்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்படி பெரியாருக்கு கடிதம் வருகிறது. பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்படுகிறார்.
 பிறகு நாகம்மை போராட்டத்தை தொடார்கிறார், வெளிமாநிலம் மொழி காலாச்சாரம் வேறு, இன்றைய காலத்தில் படித்து வேலைக்கு செல்லும் பெண்களே கணவர் துணையின்றி வெளியில் வர தயங்குகிறார்கள், நாகம்மையார் போராட்டத்தை தொடர்கிறார். காவாலர்கள் உன்னுடைய சாதி என்ன என்று கேட்கிறார்கள்? ஏன் நான் தாழ்த்தப்பட்ட சாதி இல்லை என்றால் என்னை மட்டும் உள்ளே விடலாம் என நினைக்கிறீர்களா? நான் சாதி சொல்ல முடியாது?

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 75 to 77.

திராவிடம் அறிவோம் - அன்னை நாகம்மையார்

திராவிட வரலாற்றில் பெண் போரளிகள். அன்னை நாகம்மையார்.

பெரியாருக்கு திருமணம் ஆகும்போது பெரியாருக்குப்  பத்தொன்பது வயது, நாகம்மையாருக்கு பதிமூன்று வயது. இன்றைய கணக்கில் குழந்தை திருமணம் தான். பெரியார் வாசதியான குடும்ப பின்னனி கொண்டவர் நாகம்மையார் இவர்களை விட வசதி குறைவான குடும்பத்தை சேர்ந்தவர். இருவீட்டார் குடும்பத்திலும் இந்த திருமணம் செய்ய விருப்பம்மில்லை, இருந்தாலும் இருவரின் பிடிவாதத்தால் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், அந்தக் காலத்தில் நடந்த காதல் திருமணம்.

நாகம்மையார் சராசரி பெண்களைப் போல் சடங்கு, சம்பிராதயங்களோடு வளர்ந்தவர்.சம்பிரதாயங்கள் நிரம்பிய குடும்பத்தில் மாமியார், மாமனார்ரை திருப்திபடுத்தவேண்டும், ஒரு புறம்  சடங்கு, சம்பிரதாயத்தை ஒழிக்க நினைக்கும் கணவார்,  இருதரப்பையும் திருப்தி படுத்தவேண்டுய கடமை அந்த சின்ன பெண்ணிற்கு ஏற்படுகிறது. முதலில் அவர் மாமியார் தரப்பில் நிற்கிறார், பெரியார் அவரை மாற்றுவதற்காக முதலாவதாக சாப்பாட்டிலிருப்து துவங்குகிறார்.  நாகம்மையார் சைவ சாப்பாடு சாப்பிடவேண்டும், விரதம் இருக்க வேண்டும். பெரியாருக்கு கண்டிபாக அசைவ உணவு  தாயார்செய்துவிட்டு, அந்தத் தீட்டை போக்குவதற்காகக் குளித்து, அதன் பிறகு அவர் சாப்பிட வேண்டும். இதற்கு இடையில் பெரியார் தான் சாப்பிட்டு விட்டு எழும்புத்துண்டுகளை அந்த உணவுக்குள் சொருகி வைத்துவிடுவார். குளித்து விட்டு மாமியாரும் மருமகளும் சாப்பிட உட்கார்ந்தால் சாப்பாட்டிலிருந்து எழும்பு துண்டுகள் விழும், தன் மகனை கட்டுப்படுத்த முடியாத என்று முடிவு செய்த தாயார் . தன் மருமகளிடம் இனிமேல் நீ எந்த விரதமும் இருக்கவேண்டாம் என்று விரதங்களில் இருந்து விடுதலை கொடுத்தார். அன்றிலிருந்து, விரதங்களுக்க விடுதலை கொடுத்தார்.

நாகம்மையார் தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளவர் எப்படி தடுப்பது என்று சிந்தித்தா, மைனர் நண்பர்களிடம் தன் மனைவி என்று சொல்லாமல் நம் ஊருக்கு தாசி வந்திருப்பதாகவும் கோவிலுக்கு சென்றால் பார்க்கலாம் என்றார், அவ்வாறே அவரது நண்பர்களும் நாகம்மையார் செல்லும்போது கேலியும், கிண்டலும் செய்ய பயந்து போன நாகம்மையார் வீட்டிற்கு வந்து அழுதிருக்கிறார். பிறகு அய்யா கோவில் என்றால் அப்படிதானம்மா இருக்கும் என்று சொல்லி கோயில் பற்றிப் புறிந்து கொண்ட அம்மையார் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிட்டார். படுக்கைக்கு செல்லும்போது புருசன் இருக்கும் போது தாலி எதற்கு என்று சொல்லி தாலியை கழட்ட செய்தார்,. பக்கத்து வீட்டு பெண்கள் தாலி இல்லாததை பார்த்து கேலியும், கிண்டலும் பேச, என் கணவர் அருகில் இருக்குபோது தாலி எதற்கு என்று  எதிர் கேள்வி கேட்டு ஊரார்கள் பேசுவார்கள் என்ற அச்சத்திலிருந்து விடுபட்டார்.

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 72 to 74.