Tuesday, September 01, 2020

தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால்...

தமிழர்களிடம் நாலு காசு கையில் சேர்ந்தால் சில விடயங்களில் தேடிப்போய் தூக்கி சுமப்பார்கள்.
*ஜாதி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆண்ட பரம்பரை கனவில் மிதப்பது.
*கோவில் கட்டுவது(சாய்பாபா இவர்களின் லேட்டஸ்ட் க்ரேஸ்)
*விட்டிற்கு ஆரிய புரோகிதர்களை அழைத்து யாகம் வளர்த்து, அவர்களின் காலில் வயது வித்யாசமில்லாமல் விழ்ந்து வணங்குவது.
*சாமிகளின் பேருக்கு பின்பு "ஸ்ரீ" என்று போட்டு ஆரிய தூய்மைவாதம் காட்டுவது.
*ஞாயிற்று கிழமை தவிற மற்ற நாட்களை எல்லாம் சுத்த சைவ நாட்களாக மாற்றிக்கொண்டு பஜனை பாடுவது.
*கையில் ராசிக்கல் போட்டுக்கொள்வது.ஒவ்வொரு ராசி கல்லுக்கு ஒவ்வொரு கோளுக்கு தொடர்பு இருக்கிறது என்று WhatsApp விஞ்சானம் பேசுவது. சிலர் பத்து விரலுக்கு பன்னிரெண்டு ராசிக்கும் ராசிக்கல் போட்டுக்கொள்கிறார்கள்.
ஏன் அப்படி?அதாவது பன்னிரெண்டு கோளையும் நட்பு சக்தியாக வைத்துக்கொள்வது.
*அரசு பள்ளி கல்லூரியில் படித்து,இட ஒதுக்கீட்டை அனுபவித்து பல்நாட்டு நிறுவத்தில் வேலை கிடைத்த பின்பு ஆரியர்களிடன் இணைந்து " இட ஒதுக்கீட்டால் வீழ்ந்தோம் ஒறவே" என்று நரி ஊளையிடுவது.
*தன் பிள்ளைகளை ICSE சேர்த்துவிட்டு சூத்திர ஜாதி வன்முறையை,சக மனிதர்களை தன் முன்னோர்கள் இழிவாக நடத்தியதை ஜாதி பெருமையாக ஊட்டி வளர்ப்பது.அவர்களின்
உழைப்பை திருடி தின்றதை கௌரமாக நினைப்பது.
"நாய் வளர்ப்பு(அரை டவுடர் மாட்டிக்கொண்டு ஏரியாவில் நாய் மேய்த்து " நாங்களும் வி.ஐ.பி." தான் என்று கெத்து காட்டுவது)
*இறுதியில் அக்ரஹாரத்தில் நமக்கொரு வீடு கிடைக்குமா என்று அலைந்து திரிந்து அரை பார்ப்பனராக மாறுவது.