Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்

நாகம்மாள் மறைவை நான் மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபகரமான காரியத்திற்க்கும் பயன்படுத்திக் கொள்கிறேனோ அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிராகவே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமை தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவார்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றமையே முக்கிய காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவது நமது "புதிய வேலை திட்டங்களை" உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம், ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்குக் " கூற்றாக" நின்றது என்றால் இனி இவற்றைவிட மேலானதான பிரிவு ஆபத்து, பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். 2,3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல , பண வசூலுக்காக அல்ல,) சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனிவீடோ அல்லது குறிப்பிட்ட  இடத்தில் நிரந்தர வாசம் என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆணால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்க வில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள, இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குறிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகும்,

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 82 to 83.

No comments: