Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவக் கல்லூரியில் இடம்

1840 ஆம் ஆண்டுதான் சென்னையிலும், பம்பாயிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

திராவிட மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு மருத்துவக் கல்லூரியில் சேரவேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு விதியை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த சனாதன விதி 1920 இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த போது நீக்கப்பட்டு, திராவிட மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியின் கதவுகள் திறக்கப்பட்டன.
அயராத உழைப்பால் நாயர் அஞ்சல் கல்வி மூலமே சமஸ்கிருதம் படித்து சென்னை மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தார். இதற்கு உதவியாக அவரது தாயார் கண்மணி அம்மாளும், சகோதரி தராவத் அம்மாளும் இருந்தனர்.

அந்நாளில் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை சுதேசி என்று ஏளனமாக அழைப்பது வழக்கம் (சுயதேசம் - சுதேசி, பரதேசம் - பரதேசி, வேறு தேசம்- விதேசி) நாயரின் தன்மான உணர்வு அதற்குப் பாடம் கற்பிக்க விரும்பியது, ஒருமுறை இங்கிலாந்தில் ஆங்கிலேயர்களின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நாயர், நான் ஒருவன் மட்டும்தான் விதேசி. நீங்கள் அனைவரும் சுதேசிகள், என்று அங்கிருந்த பிரிட்டிஷ் காரர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில் புலமை பெற்றிருந்த நாயர், தாய்மொழியான மலையாளத்திலும் பற்றுடையவராக இருந்தார். எடின்பரோ மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது, கள்ளிக்கோட்டையிலிருந்து வெளிவந்த கேரளப் பத்திரிகா என்ற ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதி வந்தார். அந்த ஏட்டில் சந்துமேனன் என்பவர் எழுதிய இந்துலேகா என்ற நாவிலின் மதிப்புரை ஒன்று வெளிவந்தது நாவாலின் கதாநாயகன் பெயர் மாதவன், நாயகியின் பெயரஇந்துலேகா அந்த மதிப்புரையைப் படித்த நாயர் நூலின் ஆசிறியருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்று எழுதினார். நான் வெகு தூரத்தில் இருப்பதால் இந்துலேகாவைப் பார்க்க முடியவில்லை, ஆணால் இந்துலேகா ஒரு நாள் மாதவனிடம் வருவாள் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் கடிதத்தைப் படித்து வயிறு குலுங்ச் சிரித்த சந்துமேனன் உடனே ஒரு இந்துலேகா புத்தகத்தை தபால் மூலம் தாயாருக்கு அனுப்பி வைத்தார்.

படம்   ; T.M. நாயர்.
நூல்     ;திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 27 to 29

No comments: