Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - பின்தங்கிய சமூகத்தினருக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளை பெற

பின்தங்கிய சமூகத்தினருக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளை பெருவற்கு அது அப்போதைய அரசைப் பயன்படுத்திக் நூல் கொண்டது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பின்தங்கிய வகுப்பினரின் சமுதாய விடுதலை இயக்கமாகையால் வெள்ளையர் செய்கிற எந்தச் சீர்திருத்தம் காரணமாகவும் முன்பே முன்னணியில் - தயார் நிலையில்  - இருந்த பிராமணர்கள் கையில் அனுகூலங்கள் அனைத்தும் கிடைத்தது.
மேலும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களும், அதில் அப்போது பங்கு பெற்றவர்களும் பழுத்த மிதவாதிகள், படிப்படியான அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட அணுகுமுறையில்தான் "சுயராஜ்யம்" கிடைக்கவேண்டும் என்பதிலே திடாமான நம்பிக்கை கொண்டவர்கள்.

மிதவாதிகளில் ஒருவரான சீனிவாச சாஸ்திரி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தூதுவரானார். தேஜ் பகதூர் சாப்ரு 1923 - ல் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது "என்னுடைய நாடுதான் (பிரிட்டிஷ் ) சாம்ராஜ்யத்தை ஒரு சாம்ராஜ்யமாக உருவாக்கிறது என்பதை நான் பெருமையோடு கூற முடியும்" என்று சொன்னார்.

"அரசியல் சட்டத்திற்குட்பட்ட முறைகளின்பால் நாடு வெகுண்டிருந்த நேரத்தில் நீதிக்கட்சி ஜனநாயக, அரசியல் முறைகளைப் பின்பற்றியது. கடுமையான சமுதாயப் பாகுபாடுகளால் இடர்ப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதையும், அதணால் ஏற்பட்ட பொருளாதார வாய்ப்புகளில் இழைக்கப்பட்ட அநீதியைப் போக்குவதும் நீதிக்கட்சியின் லட்சியம்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 153 to 155.

No comments: