Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - காங்கிரஸ்சை துவங்கியதின் நோக்கம்

 அதிருப்தி உள்ளுக்குள்ளே அமுங்கினால் பிரிட்டிஷ் ஆட்சிக்கே அபாயம் நேரலாம்மென்று ஹியூம் கருதினார்.
அபாயம் நேரிடவிருந்ததாக அவர் நம்பினார். அபாயத்தினால் இந்தியாவில் ஆங்கில துரைத்தனத்தைக் காப்பதற்காக காங்கிரஸ்சை துவங்கியதின் நோக்கம்மாகும்.  (பக்கம்.154)

காங்கிரஸ் துவக்கியவர்களின் நோக்கம் இந்தியாவில் ஆங்கில ஆட்சி நிரந்திரமாக இருத்தல் இந்தியாவின் நன்மைக்கே  என்று கருதினார்கள், ஆதலால் அபாயத்திலிருந்து காப்பதோடு அல்லாமல் பலப்படுத்தவும் இயன்றதை செய்தார்கள். அரசியல் முன்னேற்றமும், அரசியல் குறைகளை நீக்குதலும் இரண்டாந்தர நோக்கம்மாக இருந்தது.   ( பக்கம். 156).

ரானடே, திலகர், நவ்ரோஜி, டபிள்யூ. சி. பானர்ஜி, அயோத்தியாநாத், தயாப்ஜி ஆகியோர் ஆங்கிலேயர்களின் கருவியாக இருந்தார்கள் என சொல்லமுடியாது.  அவர்கள் உண்மையான தேசபக்தர்கள்.      (பக்கம் . 164)

காங்கிரஸ் மகா சபையை கண்ட இந்தியர்களும், ஆரம்பத்தில் எந்த விதமான  இடையூரும், எதிர்ப்பும் இன்றித் துவங்கவேண்டும் என்ற ஆசையில் தங்களது சரித்திர ஞானத்தை மறந்துவிட்டார்கள்" அதணால் தான் ஆங்கிலையர்களின் தூண்டுதலாலோ, ஆதரவினாலோ, காங்கிரஸ் அமைக்கும் "முரன்பாடான காரியத்தில் ஈடுபட்டனர். என்று லாலா லஜபதிராய் எழுதியுள்ளார்.  (பக்கம். 166).

டப்ரின் பிரபு கூரிய இந்த ஆலோசனையை எல்லோரும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அரசாங்க உத்தியோகஸ்தர்களும் இனக்கமாக இருந்ததால் முதல் காங்ரஸ்சை பம்பாய் கவர்னராக இருந்த லார்டு ரீயின் தலைமையில் நடத்த அனுமதி தரவேண்டும் என டப்ரின் பிரபுவிடம் தெரிவிக்கப்பட்டது, அரசாங்கத்தின் பூரண சமரச பாவத்துடனேயே  வேலை செய்ய விரும்புகிறது என்பதால் டப்ரின் பிரபு மகிழ்ச்சியடைந்தார். அதை எற்றுக் கொள்வதில் கஷ்டங்கள் பல குறுக்கிடுவதாக கூறினார், எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது, எனினும் முதலாவது காங்கிரஸ் பெரிய அதிகாரிகளின் அனுதாபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு.
பக்கம் ; 132 to 134

No comments: