Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - திருக்குறளுக்குப் பார்ப்பனரரான பரிமேலழகர் வகுத்துள்ள உரை

தாழ்ந்த வகுப்பினரான திருவள்ளுவரால் எழுதப்பட்ட  திருக்குறளுக்குப் பார்ப்பனரரான பரிமேலழகர் வகுத்துள்ள உரையே சிறந்தது எனப் பாராட்டுகிறார்.

திராவிட மதத்தின் தனித்தன்மை குறித்து அவர் கூறும்போது ஆரியர் வருகைக்கு முன் திராவிடர்கள் இந்துக்களாக இல்லையா?
ஆரியர்களோட வடமொழியும், அவர்களுக்கென்றிருந்த மதமும், சம்பிரதாயங்களும் இங்கு  வந்து குடியேறின. குறிப்பாக ஆரியர் வருகைக்கு முன் இங்கு விக்கிரக வழிபாடு இல்லை என்பதும் அவரது கருத்து.

விக்கிரகம் (image) என்கிற வடமொழி சொல்லிற்குநேர் தமிழ் சொல் இல்லை.  காரணம் "அச்சொல்லும் அதன் கருத்தும் தமிழ் மக்களின் பழக்க வழக்கங்களுக்கும், கொள்கைகளுக்கும் புறம்பானவை பார்ப்பனர்களால் புராணக் கருத்துக்களோடும், "விக்கிரக ஆராதனை முறை" என்னும் உருவ வழிபாட்டோடும், இச்சொல்லும் கருத்தும் தமிழ் நாட்டினுல் புகுத்தப்பட்டவை. என்கிறார் கால்டுவெல்.

நூல்     ; திராவிட இயக்க வரலாறு,
பக்கம் ; 178 to 179.

No comments: