Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - நாகம்மையாரின் பங்களிப்பு

ஆச்சாரம்மாக, வெகுளித்தனமாக இருந்த நாகம்மையார் பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த போதும் , சுயமரியாதை இயக்கத்தை துவங்கிய போதும் நாகம்மையாரின் பங்களிப்பு மகத்தானவை. நாளடைவில் கணவரை பின்பற்றி சுயமரியாதை வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட நாகம்மையார்.  1920 களில் கள்ளுக்கடை போராட்டம் தொடங்கியது. கள்ளுக்கடைகளை மூடச்சொல்லி போராட்டம் தொடங்க வேண்டும் என்கின்ற தீர்மானம் பெரியாரின் வீட்டில் காந்தியார்ரின் தலைமையிலே நிறைவேற்றப்படுகிறது. போராட்டத்திற்காக தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டி வீத்தினார். 500 தென்னைமரங்களின் மதிப்பு சாதாரணம் அல்ல, வட நாட்டில் கூட ஈச்சமரங்கலைத்தான்  வெட்டினார்கள்.

போராட்டத்தில் பெரியார் கைது செய்மப்பட்ட பிறகு நாகம்மையார் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறார். அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இப்போது இருப்பதுபோல் ஊருக்குள்  கிடையாது. ஊருக்கு வெளியில் சுகாதாரமற்ற இடங்களில் அமைந்திருக்கும். அத்தகைய இடங்களுக்கு சென்று நாகம்மையாரும், பெரியாரின் சகோதரி கண்ணம்மாளும்  மரியலில் ஈடுபட்டது எப்படிப்பட்ட புரட்சிகரமான  செயல். காங்ரசில் இருக்கும்போது நடந்த போராட்டம், ஆணால் காங்கிரஸ்காரர்கள் தங்கள் இயக்கத்து போராளிகள் பெயரை பேசியதுண்டா?
 மது ஓழிப்பு போராட்டங்கள் ஏராளமாக நடக்கிறது, காந்தியவாதி இயக்கம், கம்யூனிஸ்ட் காரர்கள்,  ஆணால் மது ஒழிப்பு போராட்டத்தின் முன்னோடிகள் என்று இரு பெண்களைப்பற்றி யாரும் பேசுவதில்லை.

1924 ல் வைக்கம் போராட்டாம் நடக்கிறது கேரளாவிலே அங்கு இருக்கிற வீதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்து போக முடியாது. இதணால் வழக்கறிஞர் வழக்கறிஞர் தொழில் செய்வோர் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். காரணம் அந்த வீதியை தாண்டி தான் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தது அதணால் வழக்கறிஞர்கள் போராட்த்தை துவங்கிய திருமிகு மாதவன் மற்றும் கே,பி. கேசவமேணன் இருவரும் கைது செய்து சிறை செல்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்படி பெரியாருக்கு கடிதம் வருகிறது. பெரியார் போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்படுகிறார்.
 பிறகு நாகம்மை போராட்டத்தை தொடார்கிறார், வெளிமாநிலம் மொழி காலாச்சாரம் வேறு, இன்றைய காலத்தில் படித்து வேலைக்கு செல்லும் பெண்களே கணவர் துணையின்றி வெளியில் வர தயங்குகிறார்கள், நாகம்மையார் போராட்டத்தை தொடர்கிறார். காவாலர்கள் உன்னுடைய சாதி என்ன என்று கேட்கிறார்கள்? ஏன் நான் தாழ்த்தப்பட்ட சாதி இல்லை என்றால் என்னை மட்டும் உள்ளே விடலாம் என நினைக்கிறீர்களா? நான் சாதி சொல்ல முடியாது?

நூல்    ; கருஞ்சட்டைப் பெண்கள்.
பக்கம் ; 75 to 77.

No comments: