Tuesday, September 21, 2021

திராவிடம் அறிவோம் - முதல் உலகப்போரில் இந்தியா கொடுத்த ஒத்துழைப்பு

இந்தியாவிற்கு அதிகப்படியான உரிமைகளையும் அதிகாரங்களையும் வழங்க பிரிட்டன் முன் வந்தது.

இந்திய மந்திரி எட்வின் மாண்டேகு , பிரிட்டிஷ்  நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார் இந்திய மக்களுக்கு அரசியலில் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு பொருப்பு ஆட்சி வழங்கப்படும் அதை படிப்படியாக உருவாக்கும் நோக்கத்துடன். நிர்வாகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இந்தியர்களை அதிகமாக பங்கெடுத்துக் கொள்ளச் செய்து - சுயாட்சி அமைப்புகளை வளர்ச்சியுறச் செய்யும் என்றது அந்த அறிக்கை 1917 ஆகஸ்ட் 20 ஆம் நாள் இந்திய அரசின் சிறப்பு அரசிதழிலும்அது வெயிடப்பட்டது இந்திய விடுதலைக்கு பிரிட்டன் காட்டிய  முதல் அடையாளம் அது.

காங்கிரஸ் அறிக்கை
-----------------------------------.
அந்த அறிக்கை பற்றிய இந்தியர்களின் கருத்தறிய இந்திய மந்திரி எட்வின் மாண்டேகுவும் அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லார்டு செமஸ்போர்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். பிரிட்டிஷாரின் அடிமை என்ற நிலையிலிருந்து பிரிட்டிஷாருக்கு சமமான நாடு என்ற நிலைக்கு இந்தியா வரவேண்டும். அதற்கு சுயாட்சி அமைவதுதான் தீர்வு அதற்கான ஆணையை பிரிடிஷ் அரசு வெளியிட வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது காங்கிரஸ் ,முஸ்லீம் லீக்கும் அதே கருத்தைக் கூறியது. இந்திய தேசியக் காங்கிரஸ், முஸ்லிம் லீக் இரண்டு கட்சிகளின் கருத்தை ஆதரிக்கிறோம் என்றது சென்னை மாகாண சங்கம்.

1917 டிசம்பர் 24ம் நாள் அக்குழு சென்னை வந்தது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சார்பாக திவான் பகதூர் ராஜரத்ன முதலியார் தலைமையில் ராவ் பகதூர், பிட்டி தியாகராயர் அக்குழுவிடம் ஒரு அறிக்கை கொடுத்தார் பிரிடிஷ் அரசு அறிவித்துள்ள பொருப்பு ஆட்சி முறை உயர் சாதி வாகுப்பினரான பார்ப்பனர்களுக்கு அதிகாரமும் ஆதிக்கமும் கொடுப்பதாகவும் பிற்படுத்தப்பட்ட பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மக்களுக்கு திங்கு விளைவிப்பதாகவும் அமையும்.
சமூக சீர்திருத்தம் ஏற்பட்டு, சாதிப்பிரிவுகள் அனைத்தும் அடியோடு ஒழிகின்ற காலம் வரை - அரசின் நிர்வாகத் துறைகள் அத்தனையிலும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இடா ஒதுக்கீடு செய்யவேண்டும்.
ஒவ்வொரு சமூகப் பிரிவு நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் விதத்தில் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கொடுத்து சட்டாமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது அந்த அறிக்கையின் சுருக்கம்.

நூல்    ; திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை.
பக்கம் ; 54 to 55.

No comments: