Sunday, August 12, 2018

கலைஞர் கருணாநிதி தீர்க்கதரிசிதான்......

கலைஞர் கருணாநிதி தீர்க்கதரிசிதான்......

ஆயிரம் விமர்சனங்கள் கலைஞர் கருணாநிதி மீது உண்டு என்றாலும், "அவர் நம்ம ஆளு" என்பதை உணர மறுத்தால் இங்கு மதவாதிகள் உள்ளே வருவதை யாராலும் தடுத்துவிட முடியாது.....

கலைஞர் கருணாநிதியை நான் வியந்து பார்க்கும் இரண்டு சம்பவங்கள் மிக முக்கியமானதாகும்.....

ஒன்று,
அக்டோபர் 2002 ல் ஆன்ரூ தேவாலய கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பேசும்போது "இந்து என்றால் திருடன்" என்று பேச்சின் போக்கில் அப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்கிறார். அப்போதைக்கு கடும் விமர்சனங்கள் நாடு முழுக்க எழும்புகிறது. குறிப்பாக, பா.ஜ.க மற்றும் இந்து அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவர் கலைஞர் தலைக்கு விலைவைத்து தலையைக் கொண்டு வருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கவும் செய்தார்......

மற்றொரு புறம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இருவர் வழுக்கும் தொடுக்கின்றனர்.  அன்றைய ஜெயலளிதா அரசாங்கம் அதற்கு பல வகையிலும் உதவி புரிந்தன என்பதெல்லாம் நினைவில் கொள்ளத்தக்கவை. இது ஒருபுறமிருக்கட்டும்........

ஆனால், கலைஞர் கருணாநிதி ஆதாரம்-தரவுகள் இல்லாமல் அப்படி பேசமாட்டார் என்பது இந்த முட்டாள்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைவரும் வாய்பிளந்து வாய்மூடிக் கொள்ளும்படியாக "விஷ்வகோஷ் தொகுந்த இந்தி அகராதியை" மேற்கோள் காட்டி, இந்து என்றால் திருடன் என்ற பொருளும் உண்டு, நீங்களே! படித்தறிந்து கொள்ளலாம் என்றார். பிறகு வழக்கு நிற்குமா, என்ன? வழக்கு தள்ளுபடியானது என்பது பிற்கால வரலாறு.......

இப்போது, வந்துகொண்டிருக்கும் செய்திகளை உற்று கவனித்தால் இந்து கடவுளைத் திருடியவர்கள் யாவரும் இந்துக்கள் என்பதை உணரலாம். அப்படியானால், கலைஞர் சொன்னது உண்மையல்லவா!......

இரண்டு,
சேது சமுத்திர திட்டம் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருந்த காலக்கட்டம். 2007 என்று நினைக்கிறேன்.  அப்போது, பா.ஜ.க மற்றும் இந்து அடிப்படைவாதிகள் ராமர்பாலம் என்ற கதையை அவுத்துவிட்டார்கள். கலைஞர் கருணாநிதி என்ன செய்தார் தெரியுமா?.....

17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதன் வாழ்ந்தானாம்....
அவன் பெயர் ராமனாம்....
அவன் கட்டிய பாலம் ராமர் பாலமாம்.... அந்தப் பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாதாம்.......
அந்த ராமன் எந்தப் பொறியியல் கல்லூரிக்குச் சென்று படித்து விட்டு வந்து இந்தப் பாலத்தைக் கட்டினான்?.... அதற்கு ஆதாரம் இருக்கிறதா?.....
என்று, கலைஞர் கருணாநிதி கேட்டார்......

யோசித்துப்பாருங்கள் ஆட்சியின் அதிகாரபீடத்தை அடைந்த கலைஞர் கருணாநிதி கேட்டார் என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. அரசு-ஆட்சி-அதிகாரம்- என்பதெல்லாம் எவ்வளவு சமரசங்களுக்கிடையில் இயங்கவேண்டியதிருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த சமரசங்களுக்கிடையிலும் கொள்கைநெறி தவறாத தோழர் அல்லவா கலைஞர் கருணாநிதி......

இவரை நாம் விட்டுக்கொடுக்கலாகாது....
இவர் நம்முடையை தோழர்.....

விமர்சியுங்கள் அது உங்கள் உரிமை.....
கைவிட்டுவிடாதீர்கள் பா.ஜ.க கழுகு வானத்தில் வட்டமிடுகிறது.......

No comments: