Friday, April 20, 2018

ஈழப்பிரச்சனையில் திமுக என்ன பண்ணிருக்கணும்

ஈழப்பிரச்சனையில் திமுக என்ன பண்ணிருக்கணும்னு நினைக்கிறீர்களோ தெரியலை ஆனா நான் ஒரு ஈழத்தவன் எனக்கு அந்த வரலாறு அத்துப்படி நேரில் இருந்து பார்த்தவன் எனும் ரீதியில் சொல்கிறேன்.
இந்திய அமைதிப்படையை திருப்பி அழைத்தது திமுக அரசு அது திரும்பிய பொழுது ஒரு முதலமைச்சராக தலைவர் கலைஞர் கலந்து கொண்டு வரவேற்க போகவில்லை பதிலுக்கு அவர் சொன்னார் எனது மக்களை கொன்றுவிட்டு வரும் ராணுவத்தை நான் ஏன் வரவேற்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் ஆயுததாரிகளுக்கு ஆதரவான அரசு செயற்படுகிறது ஆட்சியை கலைக்கவேண்டும் என ஜனாதிபதி, கவர்னரிடம் முறைப்பாடுகள் செல்கின்றன அவை நிரூபணம் ஆகாமல் ஆட்சி தப்புகிறது
பின்னர் புலிகள் தமிழகத்தில் நுழைந்து இந்திய ராணுவத்துடன் வந்த பத்ம நாபா போன்ற 12 பேரை சென்னையில் சுட்டு கொலை செய்கிறார்கள், கொலை என்றால் என்னனு உங்களுக்கு தெரிந்திருக்கும் அதை விட மோசமான கொலைகள் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட மறு நிமிடமே திமுக வின் ஆட்சி கலைக்கப்படுகிறது. இந்த கொலைகளில் திமுக ஆட்சியை இழந்தது தான் மிச்சம் அப்போ கூட திமுகவின் ஈழ கொள்கையில் மாற்றம் வரவில்லை.!
ஆட்சி கலைக்கப்பட்டு மறுபடியும் தேர்தல் வருகிறது அப்போதான் புரட்சித்தலைவினு ஒருத்தர் தமிழக முதல்வர் பதவிக்கு போட்டி போட ஆரம்பித்தார் ராஜீவ் காந்தி அவர்களுடன் கூட்டணி போட்டு அவர் ஆரம்பித்தார்.
மறுபடியும் ஒரு 12 பேரை கொலை செய்தார்கள் அந்த ஈழத்துக்காரர்கள் அதில் ராஜீவ் காந்தியும் அடங்குவர்.
பத்ம நாபா கொலையுடன் போன ஆட்சியாவது அடுத்த தேர்தலில் திரும்பி திமுகவிற்கு வந்திருக்கும் ஆனால் இம்முறை ராஜீவ் கொலைசெய்யப்பட்டவுடன் திமுகவிற்கு தமிழகத்தில் டெப்பாஸிட்டே காலி செய்யப்பட்டது இவ்வளவுக்கும் அந்த கொலைகள் எவற்றுக்கும் திமுகவிற்கும் எள்ளளவு கூட தொடர்பு இருக்கவில்லை.
இன்னமும் ஈழ கொள்கை நிலைப்பாட்டில் திமுகவிற்கு மாற்றம் நிகழவில்லை. ஒரே நாளில் அத்தனை திமுக கொடி கம்பங்களும் தமிழக்மெங்கும் வெட்டி சாய்க்கப்பட்டது.
2000 ஆரம்பங்களில் ஈழ சமாதான காலம் ஆரம்பமானது
அந்த பேச்சுக்களில் திமுக தமிழக பிரதிநிதியாக ஒரு மரியாதைக்கு தன்னும் அழைக்கப்படவில்லை. நார்வேயில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து போனார்கள். அப்போல்லாம் திமுகவிடம் ஈழ ஆதரவு போட்டது போலவே இருந்தது
தமிழ்செல்வன் மரணித்தபொழுது கூட தலைவர் இரங்கற்பா எழுதினார்.
அதே போல இன்னும் திமுகவின் ஈழ நிலைப்பாடு மாறாத ஒன்றாகவே இருக்கிறது.
ஆனால் புலிகள் எம்ஜியாரினால் உருவாக்கப்பட்டவர்கள் வளர்க்கப்பட்டவர்கள் அவர்களால் எம்ஜிஆர் இறந்த பின்னர் கலைஞரிடம் செல்ல முடியவில்லை. பதிலுக்கு ஶ்ரீ சபாவின் கொலையால் கலைஞர் மிகுந்த துயரம் அடைந்தார்.
ஸ்டாலினும் ஶ்ரீயும் இதோ இந்த மேஜையில் இருந்து காலை உணவு உண்டார்கள் என தலைவர் சொன்னார். ஆட்சியில் இல்லாத பொழுதும் பாலைவன ரோஜாக்கள் என்று படம் எடுத்த தலைவர், சபாரட்ணம் என ஹீரோவுக்கு பெயர்வைத்தார்.
ஈழம் என்பது திமுகவுக்கு இன்னமும் உயிருடன் இருக்கும் ஒரு கோட்பாட்டு அரசியல் அதை உங்களை போன்ற வரலாற்று தெளிவு இல்லாதவர்கள் பல்வேறுவிதமாக அறிந்து கொள்கிறீர்கள்.

No comments: