Wednesday, March 13, 2019

#திராவிடம் அறிவோம் (78)

திராவிடம் அறிவோம் (78)

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது இன்னுயிரை ஈந்தவர்கள் நடராசன், தாளமுத்து ஆகியோர்.

போராட்டக் களத்தில் முதல் பலியானவர் நடராசன். ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கடுமையான வயிற்றுவலியால் சனவரி 15, 1939 – இல் மரணமடைந்தார்.

சிறைக்கொடுமையால் கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து, அதே ஆண்டு மார்ச் 12 – ஆம் நாள் உயிரழந்தார். மூலக்கொத்தளம் மயானத்தில் இருவருடைய உடல்களும் புதைக்கப்பட்டன. சாதிக்கொரு சுடுகாடு இருக்கிற நாட்டில், ஆதிதிராவிடரான  நடராசனும், நாடாரான தாளமுத்துவும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டது தமிழ் உணர்வுப் போராட்டத்தின் சான்று. அதை சாதித்துக் காட்டியது திராவிட இயக்கம்.

இன்று தோழர் தாளமுத்துவின் நினைவு நாள்.


No comments: