Tuesday, April 10, 2018

வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா - இலை மலர்ந்தால் ஈழம் மலரும்

வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா காவிரி பிரச்சனை இந்தளவுக்கு சென்றிருக்காது, தண்ணீர் தானா வந்திருக்கும் என அரைவேக்காட்டுத்தனமா கூவுறவிங்க யாருன்னா பார்த்தா, ஒரு காலத்தில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அம்மையாருக்கு சாமரம் வீசிய சில்லறைகள்.

வீரப்பனை சட்டத்தின் முன்தான் நிறுத்தவேண்டுமே தவிர அவர் உயிருக்கு காவல்துறையால் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தவர் கலைஞர். 

வீரப்பனை கொன்று பிடிக்கவேண்டும். அதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என காவல்துறைக்கு உத்தரவிட்டு அதை செய்தும் காட்டியவர் ஜெயலலிதா. 

அது எப்படிங்கடா ஒரு பக்கம் வீரப்பனையும் தூக்கிப்பிடிக்க முடிகிறது. இன்னொரு பக்கம் ஜெயலலிதாவையும் வாழ்த்திப்பேச உங்களால் முடிகிறது..? இது என்ன எழவு நிலைப்பாடு..?

No comments: