Thursday, April 12, 2018

சமூக நீதி காவலர் வி.பி. சிங்


தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வி.பி. சிங் என்பவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.அப்பொழுது பலவித எதிர்ப்புகளுக்கு இடையில் மண்டல் கமிசன் எனும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான(obc) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

இதனால் கூட்டணி கட்சிகள் முதற்கொண்டு அனைத்து கட்சிகளும் அவரது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரது ஆட்சியை கலைத்தன.பிரதமர் பதவியும் பறி போகிறது.

இப்போது மண்டல் கமிசன் அமைய காரணமாக இருந்த மேலும் அந்த கமிசன் அமல்படுத்தியதால் பயன்பெற்ற ஒரு மண் அவரை பாராட்ட/கொண்டாட அழைக்கிறது.அவரும் வருகிறார் பிரதமராக அல்ல முன்னாள் பிரதமராக.

அந்த மண் அவரை உச்சி முகர்ந்து வரவேற்கிறது.தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.'சமூக நீதி காவலர்' என பட்டம் அளித்து மகிழ்கிறது.

ஏன் அந்த மண் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது??

ஏனென்றால் அந்த மண் சுயமரியாதை மண்;சமூகநீதி மண்.அந்த மண்ணிற்கு தெரியும் யாரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும்!யாரை தலை தெறிக்க ஓட விட வேண்டும் என்று!

அந்த வகையில் இன்று(12/4/2018) அந்த மண் சுயமரியாதை மண்;சமூக நீதி மண் என மீண்டும் நிரூபித்துள்ளது.

அந்த மண் தமிழகம்❤️


No comments: