Tuesday, April 10, 2018

காவிரி டெல்டா

"டெல்டா" பெயர் காரணம் அறிந்தால் தடுப்பணை ஏன் கட்டவில்லை என்பது தற்க்குறிகளுக்கு தெரியும்.!

3000"அடி உயரத்திலிருந்து குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி... மேட்டூர் அணையை வந்தடையும் போது கடல்மட்டத்திலிருந்து சுமார் 400"அடி உயரமே!

ஆனால்! சுமார் 2600"அடி பள்ளத்தை கடக்கும் தூரம் 200"கிலோமீட்டர் கூட இல்லை
தலைக்காவிரிக்கும் மேட்டூருக்கும்

மேட்டூருக்கும் கடலில் கலக்கும் காவிரியின் முகத்தூரத்திற்கும் இடையே சுமார் 400"கிமீ தூரத்தை வெறும் 400"அடி கடல்மட்டத்தில் கடக்கும் சமதளபரப்பு என்பதால் தான் (சமவெளி) கடல்மட்மும் ஆற்றுப்படுகையும் கிட்டத்தட்ட ஒன்றாக இருப்பின் அப்பகுதிக்கு #டெல்டா பகுதி என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

கா(விரி) பெயர் காரணம் கூட
விரிந்து தமிழகத்தில் புரண்டு ஓடுவதால் தான் மேட்டூர்வரை கா(குறி) தான்
குறுகிய வழித்தடத்தில் புரண்டுவருவதால்

டெல்டா பகுதியில் தடுப்பணைகள் அதிகமாக கட்டி நீரைத்தேக்கினால், கடல்நீர் உட்புகுந்து கடலை ஒட்டிய விளைநிலங்கள் உவர்நிலங்களாக மாறும். படிப்படியாக கல்லணைவரை உவராக (உப்பு) மாறவும் கூடும் காலப்போக்கில்..

காமராஜர் அண்ணா கலைஞர் எம்ஜிஆர் ஜெயா
எல்லோரும் கட்டத் தவறியிருந்தாலும்..!

கரிகாலன் கட்டிய கல்லணைக்குப் பிறகு பலகோயில்கள் குளங்களை எழுப்பிய ராஜராஜன் ராஜேந்திர சோழ வம்சாவழியினர் கட்டியிருக்க மாட்டார்களா?

முல்லைப்பெரியார் உள்ளிட்ட பல அணைகளை கட்டிய ஆங்கிலேயர்களுக்கு தெரியாதா
கல்லணைக்கு பின் தடுப்பணைகள் எழுப்ப?

முகத்துவாரம் செல்லுங்கள்
டெல்டா என்றால் என்ன என்பதை தெரிந்து பேசுங்க..!
ஊட்டிமலை உயரத்தில் இருந்து குடகுமலை உயரத்திற்கு நீர்வழித்தடம் ஏற்படுத்தி
கர்நாடகம் நீர் சேமிக்கிறது என்ற கட்டுக்கதை போன்று
கதைவிட வேண்டாம்.!

No comments: