Tuesday, April 10, 2018

''அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்கிறது.''

50 வருட தமிழகத்தின் சமுக நீதி கல்வி வளர்சிகள் ஒரு சிலர் சுயநலத்துகாய் அடகு வைக்கபடுகிறது.
ஒடுக்கபட்டவர்களின் முன்னேற்றத்திற்கான ஓரே துடுப்பு கல்வி.
ஒரு சமூகத்தை கூலிகளாக மாற்ற கல்வியை மறுத்தாலே போதும்.

ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல்களுக்கு இந்தியாவில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாகவும் முதல் இடத்தையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் கல்வி மையங்களை அபகரித்து கல்வியை சீர்படுத்துவதற்கு பதிலாக சீரழிவு நடத்த துடித்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாகவே அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்வியும் கிடைத்து விடக் கூடாது என்பதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது.

ஜெயலலிதா எதிர்த்த நீட் திட்டம் அப்போலோவில் இருந்த போது அனுமதி கொடுத்ததாக கூறி தமிழ்நாட்டுக்குள் நீட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தால் கிராம மாணவர்கள் மருத்துவர் கனவை இழந்தனர். அனிதா தற்கொலை செய்தார். ஆந்திர மாநிலத்தில் 12 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்னும் வெறி தீராத இந்த கும்பல் தமிழக பல்கலைக்கழகத்தை கைப்பற்ற முனைகிறது!


No comments: