Wednesday, April 11, 2018

உணர்வு இல்லாதவனை எல்லாம் அடிச்சு உணர்வு வர வைக்கிறது தான் சரி

கர்நாடகாரனுக்கு இருக்கற உணர்வு தமிழனுக்கு இல்லை. அதனால உணர்வு இல்லாதவனை எல்லாம் அடிச்சு உணர்வு வர வைக்கிறது தான் சரி. தடுக்க போலீஸ் வந்தா, அவனையும் வெளுக்க வேண்டியது தான். வேற வழியில்லை. வன்முறை என்று இதை கூறக்கூடாது. உணர்வு போராட்டம் என்று பார்க்க வேண்டும்.
இப்படி ஒரு கருத்து பரப்பப்படுகிறது.
சரி ரொம்ப சந்தோஷம். இப்போ இஸ்லாமியர்களுக்கு பாத்தீங்கன்னா அவங்க மத உணர்வு இருக்கு. அவங்க இறையச்சம் இருக்கு. வெள்ளிக்கிழமை தவறாம மசூதி போய் தொழுகை செய்யணும்ன்னு நினைக்கறாங்க. அந்த உணர்வு இந்துன்னு சொல்லிக்கற எல்லாருக்கும் இருக்கறதில்லையே? என்ன பண்ணலாம்?
இந்துக்கள் எவன் எவன் எல்லாம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போய் சாமி கும்பிடாம இருக்கானோ, அத்தனை பேரையும் அடி வெளுக்கணும். தடுக்க போலீஸ் வந்தா தூக்கி போட்டு மிதிக்கணும்.
இதை வன்முறைன்னு சொல்லக்கூடாது. உணர்வுப் போராட்டம் என்று பார்க்க வேண்டும்.
சரி தானே?

No comments: