Tuesday, April 10, 2018

ஊட்டியில் தமிழகம் அணை கட்டுகிறது "கர்நாடகம் அதிர்ச்சி"

What's app லும் ,Facebook லும் அணை கட்டும்,
ஊட்டியில் தமிழகம் அணை கட்டுகிறது "கர்நாடகம் அதிர்ச்சி" என்று தகவல் என்று பொய்யாய் தகவல் பரப்பும் அறிவு ஜீவீகள் கவனத்திற்கு,,

இந்த காவிரி பிரச்னை, வறட்சி பிரச்னை போன்றவைகள் வந்தாலே, பல அறிவாளிகள், தமிழகத்து உரிமைகள் பறிபோவதை குறித்து பேசாமல், இங்கே கடந்த ஐம்பது ஆண்டுகளாக அணைகளையே கட்டவில்லை என்ற பொய்யை பரப்புவார்கள்.. அவர்களுக்கான உண்மை,

தமிழ் நாட்டில் உள்ள அணைகள் / பெரிய நீர் தேக்கங்கள் எண்ணிக்கை - 85
அரசர்கள் & ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை -- 10
காங்கிரஸ் ஆட்சியில் கட்டப்பட்டவை -- 14
50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியின் போது கட்டப்பட்டவை -- 61 (எங்கெல்லாம் அணை கட்ட வாய்ப்பிருக்கிறதோ, நீரை தேக்கும் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது,, இயற்கையாய் அமைந்த அமைப்பை தாண்டி புதிதாக ஏதாவது புது விதத்தில் அணை கட்ட வேண்டிய தொழில்நுட்பம் வந்தால் வரவேற்போம் அறீவு ஜீவீகளே)

அதேபோல, நினைத்த இடத்தில் ஓர் அணையை கட்டிவிடமுடியாது. நீர், மலைகளிலிருந்து இறங்கும் இடத்திலோ, நீர்பிடிப்பு இடங்கள் என்று இயற்கையாக நிலவமைப்பு இருக்கும் இடத்திலோதான் அணைகளை கட்டமுடியும். பெரிய அணைகள் கட்ட வேண்டும் என்றால், மலைதொடர்களுக்கு இடையே இயற்கையாக நிலப்பரப்பில் அதற்கான அமைப்பு இருக்க வேண்டும். தமிழகத்தில் மேட்டூரை தாண்டினால், காவிரி பாயும் பகுதிகளில் அப்படியான பெரிய நிலபரப்பு கிடையாது.. சமவெளி பகுதிகளில் அணைகளை கட்டமுடியாது..

கர்நாடகா எப்படி ஹேமாவதி, கபினி என சில காவிரி துணையாறுகளில் அணைகளை கட்டியதோ, அதே போல, தமிழகத்தில் உள்ள காவிரி துணையாறுகளான பவானியிலும், நொய்யலிலும் , அமராவதியிலும் அணை கட்டியுள்ளது தமிழகம்..

மேலும், காவிரி தொடர்பான 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு, 1974-ஆம் ஆண்டு அதை அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது புதுப்பிக்காததால் தான் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை என சிலர் உளறிக்கொண்டு இருகிறார்கள்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூட, காவிரி தொடர்பாக 1892 மற்றும் 1924 ல் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்றும் செல்லுபடியாகும். என்று தான் தீர்ப்பு வந்துள்ளது... செல்லுபடியாகும் ஒப்பந்தத்தை எதற்காக புதுப்பிக்கவேண்டும்?? சரியான கூமூட்டைகளாக இருக்கிறார்களே...

1989-90 களில், தமிழக முதல்வராக இருந்த கலைஞர், மத்தியில் விபி.சிங் அவர்கள் ஆட்சில், போராடி, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து காட்டினார்.. தொடர்ந்து காவிரி நடுவர்மன்றத்தில் வாதாடி, 2007-இல் திமுக ஆட்சியின்போது, 192 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்திற்கு என்ற தீர்ப்பை பெற்றுத்தந்தார்... ஆனால், இப்போது, திமுக அரசு பெற்றுத் தந்த தண்ணீரின் அளவை, உச்ச நீதிமன்றம் குறைத்து விட்டதற்கு முழு காரணம் அதிமுக அரசு தான். வழக்கை சரியான முறையில் இவர்கள் நடத்தவில்லை, சொத்தையான வக்கீல்களை வைத்து, காவிரியில் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் கெடுத்துவிட்டனர். தமிழகத்தை, தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிட்டனர்..

No comments: