Tuesday, April 10, 2018

ஆசியாவின் முதல் ஈரடுக்குப் பாலம்



ஆசியாவின் முதல் ஈரடுக்குப் பாலம் எங்குள்ளது என்று நேற்று என்னிடம் கேட்டிருந்தால் சிங்கப்பூர் அல்லது ஹாங்காங் என்றுதான் கூறி இருப்பேன்.

நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மீது அவ்வளவு அவநம்பிக்கை.

உண்மையில் அது நமது நாட்டில், நமது மாநிலத்தில்தான் இருக்கிறதாம்.

இப்படிச் சொன்னவுடன் "எவனாவது வெள்ளைக்காரன் கட்டியிருப்பான்" என்ற நினைப்பு அடுத்து தோன்றும்

அதுவும் தவறுதானாம். பாலம் கட்டுறதுனா கலைஞரவிட்டா வேறு யாரு?

ஆம். 1973ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது திருநெல்வேலியில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு.

திருக்குறளைப் போல ஈரடுக்குல இருக்கிறதால அந்தப் பாலத்துக்கு "திருவள்ளுவர் பாலம்" என்ற பெயரையும் கலைஞர் சூட்டியுள்ளார்.

"சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்"னு முழங்குற திமுக, தன்னுடைய சாதனைகளில் ஒன்றாக இந்தப் பாலத்தைக் குறிப்பிட்டதாக நான் அறியவில்லை.

No comments: