Tuesday, April 10, 2018

சென்னையில் ராணுவ கண்காட்சி

ராணுவ கண்காட்சி ஏன் சென்னையில் நடத்தபட வேண்டும், இப்போதுள்ள சூழலில் இது தமிழரை அவமதிக்கும் செயல் என்கின்றனர் சிலர்
இது முன்பே திட்டமிட்ட விஷயம், காவேரி விவகாரம் தீர்ப்பு வழங்கும் முன்பே திட்டமிடபட்டது
ராணுவத்தினை எதிர்த்து முணுமுணுக்கின்றார்களாம், இதெல்லாம் தமிழனை ராணுவத்தை காட்டி பயமுறுத்தும் முயற்சியாம்
எது?
ஆவடி ராணுவ தொழிற்சாலையால் இவனுக்கு வேலை வேண்டும்
திருச்சி பகுதி ராணுவ தளவாட தொழிற்சாலையாலும் வேலை வேண்டும்
இன்னும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகம் முழுக்க ராணுவத்தால் இவர்களுக்கு தொழில் வேண்டும்
ஆனால் ராணுவ கண்காட்சி மட்டும் நடக்க கூடாது, மோடியும் வரகூடாது
அற்ப பதர்களே, சென்னை கோட்டை என்ன தமிழ் உணர்வாளர்கள் கட்டியதா?
அது பிரிட்டிஷ் ராணுவத்தால் உருவாக்கபட்டு இன்று இந்திய ராணுவத்தின் வசம் இருக்கும் கோட்டை
தமிழக அரசு வாடகைக்குத்தான் இயங்குகின்றது, அந்த அவமானம் போக்கத்தான் கலைஞர் ஒரு மன்றம் கட்டினார் அதுவும் அந்த வசந்தசேனைக்கு பொறுக்கவில்லை அதனை கெடுத்துவிட்டுத்தான் செத்தார்
நியாயமாக இந்த ராணுவ கண்காட்சி சென்னை கோட்டையில்தான் நடக்க வேண்டும்
ஏதோ பெரியமனதோடு அதற்கு வெளியில் நடத்துகின்றார்கள்
ஒரு சட்டசபை கட்டடத்திற்கே வழியில்லை , அப்படி ஒரு மனிதன் உருவாக்கியதையும் ஒருவர் கெடுத்தார், மனதறிந்து கெடுத்தார்
அப்படி தமிழரை சட்டசபை இல்லாமல் செய்த அவருக்கு பல கோடியில் நினைவு மண்டபமாம்
வெட்கமாக இல்லை, இக்கொடுமை எங்காவது நடக்குமா?
வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு, அதற்கு காரணமானவருக்கு பல கோடியில் மண்டபம் கட்டுமாம்
எப்படிபட்ட வெட்க கேடு? ச்சீ மாபெரும் அவமானம்
அந்த அளவு மானமும் அறிவும் இல்லாமல் போயிவிட்டது
இதனை எவனாவது கேட்கின்றானா என்றால் இல்லை.
இந்த பெரும் மானக்கேட்டில் உங்களுக்கெல்லாம் கோபம் வேறு வருகின்றதா?

No comments: