Tuesday, April 10, 2018

காவி அம்பேத்கர்

உ.பி. படானில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைக்கப்பட்டு காவி நிறம் பூசப்பட்டுள்ளது. காவி நிறம் 'தூய்மை'யின் நிறம் என்பதால் அம்பேத்கர் சிலைக்கு காவி நிறத்தை தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறார். இன்னும் சில காவி கும்பல்கள், 'பௌவுத்தத்தின் நிறம் காவி' தானே என்கிறார்கள். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் கடவுள் மறுப்பை பேசி, பார்ப்பன மனு தர்ம கோட்பாடுகளை எதிர்த்து இயக்கமாக பௌவுத்த தத்துவத்தை அறிவித்தார். இயக்கத்தின் கொடி காவி நிறத்திலும் இயக்கத்தவர்களுக்கு காவி உடையும் தேர்ந்தெடுத்தார்.

இந்த இயக்கத்திற்கு மக்களிடம் வரவேற்று அதிகரிக்கவே பிராமண வேத மதத்தவர்கள் உணவில் விஷத்தை கலந்து புத்தரை கொன்றனர். இதற்கு பின் சில நூற்றாண்டுகளிலேயே புத்தரை கிருஷ்ணனின் அவதாரம் என்றும் புத்தர் விகாரங்களை திருத்தம் செய்து பூணூல் அணிவித்தும், இந்து சின்னத்தை மார்பிலும் செதுக்கி புத்தரை இந்து கடவுளின் அவதாரம் என்று சுவீகரித்துக் கொண்டது.

'நான் இந்து அல்ல' என்று அறிவித்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு இன்று காவி நிறத்தையும் இந்துத்துவத்தை அம்பேத்கர் ஆதரித்தார் என்று காவிக் கூட்டங்கள் புரட்டு பேசி திரிகின்றன.

நல்ல வேளையாக காவி அம்பேத்கர் சிலையை ஏற்காத அம்பேத்கரியவாதிகள் சிலைக்கு கருப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளனர்.

குரங்குகள் சேஷ்டையும் சங்கி மங்கி காவிகள் சேஷ்டையும் ஒன்று. அவப்போது இதுகளை குரங்காட்டிகள் போன்று அடக்கி ஒடுக்கி வைத்திருக்க வேண்டும்!


அம்பேத்கர் சிலை பொதுவாக நீல நிற கோட் அணிந்தபடி கையில் சட்டபுத்தகத்தை ஏந்திய வண்ணம் அமைந்திருக்கும். ஆனால்உத்தரப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர்சிலைக்கு காவி நிற வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது,இந்நிலையில் உள்ளூர் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹிமேந்திர கவுதம், காவி நிறத்தை நீக்கிவிட்டு அதில் "நீல" நிற பெயிண்ட் அடித்தார்.

No comments: