Tuesday, April 10, 2018

ஹிந்துத்துவாவுக்கு சாமரம் வீசும் தமிழ் தேசியம் பேசும் சிலர்

தமிழ் தேசியம் பேசும் சிலர், ஹிந்துத்துவாவுக்கு சாமரம் வீசிக்கொண்டு, திராவிட இயக்கத்தவரை விமர்சிக்கிறார்கள்.. அவர்கள் கவனத்துக்கு..
சமீபத்தில் ஹிந்துத்துவா இயக்கத்தால் நடத்தப்பட ராமராஜ்ய ரத யாத்திரையின் வீடியோ ஒன்றை பார்க்கநேர்ந்தது, அதில் காவி துண்டு அணிந்த பலர், ஆவேசமாக பல்வேறு மத துவேஷ கோஷங்களை எழுப்புகிறார்கள்.. அப்போது, அங்கே, வந்த காவி அணியாத, வேட்டி & டீ ஷர்ட் அணிந்த "அவா" ஒருவர், "வெட்டுவோம் வெட்டுவோம் சீமானை வெட்டுவோம்" என்று கோஷத்தை துவக்குகிறார், உடன், அங்கிருந்த காவி கோஷ்டிகள் அனைவரும் அதை திருப்பி சொல்கிறர்கள்.. இப்படி வெளிபடையாக வன்முறை கோஷத்தை எழுப்பும் தைரியத்தை இந்த கும்பலுக்கு யார் கொடுத்தது??
மற்றொரு நிகழ்வு, செல்வா பாண்டியன் என்ற தமிழ் தேசிய கொள்கையாளர், தமிழர் நடுவம் என்ற இயக்க தலைவர், சில நாட்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.. பல தரப்பினரும் இரங்கல்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்கள்.. ஆனால், ஹிந்துத்துவா கும்பல், அவரின் மரணத்தை கொண்டாடும்விதமான செய்தியை, "ஒரு தமிழ் தேசிய பிரிவினைவாதி அவுட்" என பகிர்ந்திருந்தார்கள்..
இப்படி எங்காவது, மாற்று கருத்துடையோர்களை திராவிட இயக்கத்தினரோ, பெரியாரிஸ்ட்களோ வன்முறை விஷம் கொண்டு பேசுவதில்லை.. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுபவர்கள் தான் திராவிட இயக்கத்தவர்.. அதினால் தான், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு பேசப்பட்ட காலங்களில் கூட, பார்பனர்கள் மீது எந்தவிதமான வன்முறை தாக்குதல்களோ, அடிதடி கலவரங்களோ இங்கு நடந்தது இல்லை.. எந்த ஒரு பார்பனரும் தாக்கப்பட்டது இல்லை..

No comments: