Tuesday, April 10, 2018

50 வருஷமா ஒன்றுமே செய்யல, தமிழகம் பின்தங்கி இருக்கு

இங்க 50 வருஷமா ஒன்றுமே செய்யல, தமிழகம் பின்தங்கி இருக்கு. இதெல்லாம் தமிழ் தேசியம், இந்து தேசியவாதி என்று சொல்லிக்கிட்டு சுத்தரவங்க கடந்த 10 வருஷமா கட்டமைத்த பிரச்சாரம். இவங்க எடுத்துகிட்ட ஆயுதம் காமராஜர். ஏன் என்றால் தமிழ் தேசியவாதி பரிசோதனையில் கிடைச்ச கடைசி தமிழ் தலைவர் அவர் தான், காமராஜரின் சாதி சேர்ந்தவர்கள் அதிகம் இந்து தேசியவாதி கட்சியில் இருப்பதால் அவர்களும் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு சென்றார்கள். ஆனால், இதை இரண்டையுமே அவர் ஏற்றுகொண்டது இல்லை. இந்த பஜனையை வைத்து திராவிட கட்சிகள் தேவை என்ன, எதற்கு மக்கள் தேர்ந்து எடுத்தார்கள், 1950-67 நடந்து பிரச்சனை என்ன என்று கூட யோசிக்கவிடமால் இளைஞர்களை முட்டாள் ஆகவே மாற்றிவிட்டார்கள். அவரோட அரசியல் நிலைப்படு கூட தெரியாது.
இங்க படிச்ச பெரும்பாலான இளைஞர்களுக்கும், பக்தாளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் மூடர் கூட்டங்களே. கையில் போன் இருக்கு, டேட்டா நெறையா இருக்கு, என்ன பயன். ஊழல் என்று சொன்னால் என்னவென்று தெரிஞ்சிக்காமலே வெறும் ஊழல் என்று சொல்லவேண்டியது. நீதிமன்றம் விடுதலை செய்தால், இந்த சட்டமே இப்படி தான் பெரிய ஓட்டை இருக்கு அதையும் குறை சொல்லவேண்டியது. சரி அந்த பெரிய ஓட்டை என்னவென்று தெரிஞ்சிக்க, தீர்ப்பை எடுத்து படிக்க கூட யோசனை வராது. ஆனால் மீம், ஸ்டேட்டஸ் மட்டும் எக்கச்சக்கமாக போட்டு பொலம்ப நேரம் இருக்கும். இங்கே அணைகள் கட்டவில்லை என்று சொன்னதும், அதை பற்றி தேடி பார்ப்போம் என்ற என்னம் இல்லை. சட்டமன்றம் இந்த தீர்மானம்/சட்டம் அந்த வருஷம் போட்டு ஏமாதிடாங்க என்று யார் சொன்னாலும் நம்ப வேண்டியது, போய் சட்டமன்ற வளைதளத்தில் தேடி பார்ப்போம் என்று கூட தோன்றாது. அந்த browser எதுக்கு தான் வச்சி இருக்கீங்க. எல்லாத்தையும் facebook, whatsapp'லயே நம்பிக்கட்டு இருந்தா என்ன மாற்றம் கொண்டுவரப்போறீங்க.
விஜய், அஜித் சண்டையில் கூட sources கேட்டு சண்டை போட்டானுங்க. இங்க அரசு வளைதளக்கள் இருந்தும் கூட கேர்க்க/தேட தோன்றவில்லை..
ஆண்ட கட்சிக்கும், புதிய கட்சிக்கும் சண்டை வந்தால் ஆண்ட காட்சிகளை திட்டுவது. அரசியல்வாதிக்கும், அரசு அதிகாரிக்கு சண்டை வந்தால் அரசியல்வாதியை திட்டுவது. ஊழியர்களுக்கும், மக்களுக்கும் சண்டை வந்தால் ஊழியர்களை திட்டுவது. கடைசி என்ன பிரச்சனை என்று தெரிஞ்சிக்காமலே இருந்து எதை சரி செய்யலாம் என்று இருக்கீங்க.
கண்முடித்தனமான நம்பிக்கை, கண்முடித்தனமான கோவம் இந்த இரண்டையும் வைத்து எதையும் கயட்ட முடியாது!!!
இந்தியாவின் முன்னிலை மாநிலத்துக்கே இந்த நிலைமை என்றால், என்ன சொல்லறது....

No comments: