Monday, June 04, 2018

நம்முடைய கலாச்சாரம் , பண்பாடு இத்தியாதி எல்லாம் சங்க கால ஓலைச்சுவடிகளில் செல் அரித்து காணாமல் போய் விட்டது.

ஒரு வெளிநாட்டு நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கையில் சொன்னது இது.
உலகில் வெள்ளைக்காரர்கள் , கருப்பர்கள் என்று இரண்டு பிரிவுகள் இருக்கிறார்கள். என்னதான் நாகரீகம் அடைந்தாலும் வெள்ளையர்களிடத்தில் இன்னும் ரேசிசம் இருக்கிறது.
வெள்ளையர்கள் கருப்பர்களை கேவலமாகத்தான் பார்ப்பார்கள். ரேசிசம் நுணுக்கமாக இருந்து கொண்டே இருக்கும். நிற்க இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
அதே வெள்ளையர்கள் , நம்மை , இந்தியர்களை , கருப்பர்களை விட , கேவலமாக பார்க்கிறார்கள். கருப்பர்களுக்கு கொடுக்கும் மரியாதையில் , பாதி கூட இந்தியர்களுக்கு கொடுப்பதில்லை. நாம் தான் ஆக கேவலமானவர்கள் அவர்களுக்கு.
கருப்பர்கள் , நம்மை மதிக்கிறார்கள். ப்ரோ என்று கட்டிக்கொள்கிறார்கள். நாம் பெரிய மயிரு போல , அவர்களை கருப்பர்களாக இருந்தாலும் மதிப்பது போல சீன் போடுகிறோம்.
உண்மையில் , உலக அரங்கில் , நாம் கருப்பர்களுக்கும் கீழேதான்.
இங்கே நாம் அய்யர் , அய்யங்கார் , தேவர் ,கவுண்டர் , செட்டி ,பிள்ளை என பலவித ஜாதி அடுக்குகளை வைத்துக்கொண்டு , ஜாதி பெருமை பேசிக்கொண்டு இருக்கிறோம். “பறையன்” என்று சொல்வது சட்டப்படி தவறுதான் என்றாலும் உண்மையில் “பறையன்” என்பதை ஆங்காங்கே சொல்லிக்கொண்டுதான் உள்ளனர். அவர்களை தாழ்த்திதான் பார்க்கிறோம்.
ஆனால் உலக அளவில் வெள்ளையர்கள் , அய்யர் அய்யங்கார் எல்லோரையும் சேர்த்து நம்மை இண்டர்நேஷனல் பறையர்களாகத்தான் பார்க்கிறார்கள்.
நாம் மொத்தமாக கறுப்பர்களுக்கு கீழ்தான்.
ஏன் இப்படி என்று அந்த நண்பரிடம் கேட்டேன். நமக்கு “கலாச்சாரமே” கிடையாது , அதுதான் காரணம் என்றார்.
உடனே பொங்கல் வைப்பது , மஞ்சத்தண்ணி ஊத்துவது , வளைகாப்பு என துக்கிக்கொண்டு வராதீர்கள். அது வேறு ....
நம்க்கு என்று ஒரு வாழ்வியல் முறை , தனித்தன்மை , ஒரு ஒற்றுமை என ஏதும் கிடையாது. இனியும் காது குத்துவது , ஒன்றாய் குழுவாய் சேர்ந்து பேலப்போவதை எல்லாம் கலாச்சாரம் என்று சொல்லி ஜல்லி அடித்துக்கொண்டு இருக்காதீர்கள்.
அப்படியே நமக்கு ஒரு வாழ்வியல் முறையோ அல்லது பழக்கவழக்கமோ இருக்கிறது என்று நீங்கள் நம்பினால் , அது அவ்வளவு அருவருப்பாகவும் , முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கிறது. அதனால் தான் நம்மை ஆக கேவலமான இடத்தில் உலக சமுதாயம் வைத்து இருக்கிறது.
கருப்பர்கள் கறுப்புத் தோலினால் ஒதுக்கப்பட்டார்கள்.அது ரேசிசம்.
நாம் நம்முடைய மட்டமான வாழ்வியல் முறையாலும் , இங்கே இருக்கும் ஜாதி மத வேறுபாடாலும் , நம்முடைய அருவருப்பான பழகும் தன்மையாலும் , அடிமை புத்தியாலும் , காலை நக்கும் பழக்கத்தினாலும் ,நமக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சிறு புத்தியாலும் வெள்ளையர்களால் கீழே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறோம்.
நம்முடைய கலாச்சாரம் , பண்பாடு இத்தியாதி எல்லாம் சங்க கால ஓலைச்சுவடிகளில் செல் அரித்து காணாமல் போய் விட்டது.

இதுல இன்னொரு நடைமுறை உளவியலும் இருக்கு. பொதுவான சுற்றுலா ஸ்தலத்தில் நாம பண்றத காட்டிலும் பல அழிச்சாட்டியங்களை வெள்ளாக்காரன் பண்றான். ஆனால் அவன் பண்ணா அது fun போல பார்க்கப்படுகிறது. நாம பண்ணால் நாகரீகம், கலாசாரம் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது. 

இன்னொன்னு, நாம பாக்குற பார்வை, உடல்மொழி, அடிக்கும் கமெண்ட் எல்லாமே கொடூரமா இருக்கு. 

புக்கட் கடற்கரையில் நடந்த சம்பவம் இது. 

ஒரு கொரிய அல்லது சைனாக்காரன். கூட ஒரு பொண்ணு கையை கோர்த்துட்டு போய்ட்டு இருந்தான். அந்தப் பொண்ணு அட்டகாசமான அழகு. பையன் கொஞ்சம் சுமாராதான் இருந்தான். 
எனக்குப் பின்னால் கட்டம் போட்ட சட்டையும், முக்கா கால் ஷார்ட்ஸும் போட்டு நாலு தமிழர்கள் வந்துட்டு இருந்தாங்க. அவனுங்க அந்த ஜோடியை பார்த்து அடிச்ச கமெண்ட். 

" கேணக்கூதி மாதிரி இருக்கான். அவனுக்கெல்லாம் இவ்ளோ சூப்பரா ஐட்டம் கிடைக்குது "

இவனுங்க ஜாதிலயும், ஜாதி எதிர்ப்புலயும் பெருமைப்பட்டு நட்டுக்குறானுங்க.

அவங்ககிட்ட இருக்குற தொழில்நுட்பம், பிசினெஸ் ஐடியாக்கள், 500-800 பில்லியன் பிசினெஸ் அசெட்கள் இதெல்லாம் இந்த எருமை மாட்டுமூளைகளுக்குப் பு
ரிவதே இல்லை. அப்படி என்றால் என்ன என்கிற பிரக்ஞையே இல்லை.

இதுகள் போராளி, ஆண்ட பரம்பரை மோடிலேயே கெத்துக் காட்டிக் கொள்கின்றன.

இங்கு ஒரு ஜெஃப் பெஸோஸ், ஜாப்ஸ், கேட்ஸ், ரிச்சர்ட் ப்ரான்ஸன்கள் உருவாக வாய்ப்பே இல்லை.

வால்மார்ட் ஃப்ளிப்கார்ட்டை ஒரு லட்சம் கோடிக்கு வாங்கி, அதன் ஃபௌண்டர்கள் 7000 கோடி சம்பாதித்தது எல்லாம் ஜுஜுபி. அது ஒரு பில்லியன் தான்.

ஆனால், ஜெஃப் பெஸோஸ் 100 பில்லியனை நெருங்கிக் கொண்டிருக்கிறார், பில் கேட்ஸ், பஃபெட் எல்லாம் 80, 90 என்றும், அவர்களின் நிறுவனங்கள் 600, 800 பில்லியன் மதிப்பிலும் இருக்கின்றன.

இவர்கள் ஒரு பெரிய அசெட்டை உருவாக்கி, நாட்டையே சுபிட்சமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு இன்னும் கோயிலில் முதல் மரியாதை, நிலம் எங்கள் உரிமைன்னு கற்கால மனிதர்களாகவே தொடர்கிறார்கள். நாம் உண்மையில், மிகக் கேவலமான ஒரு சமுதாயம் தான்.

அதைவிடப் பிரச்சனை, இவர்கள் நண்டுகளாக நம்மையும் இழுத்து விடுவார்கள் என்பது தான்.

அயல் நாட்டுக்காரன் ஒருவனிடம் சிரித்து பேசிவிட்டு அவன் அந்த பக்கம் நகர்ந்த அடுத்த நொடி அவனைப்பற்றி அவன் நண்பனிடமே குறை கூறிப்பேசும் hi profile version இந்தியனிலிருந்து விமானத்தில் இலவசமாக தரும் விஸ்கியை ஆறாவது பெக் கேட்டு திரும்ப திரும்ப அழைக்கும் இந்தியன் வரை... என் அனுபவத்தில் நாம் மட்டமானவர்கள் தான்... கருப்பர்களில் நல்லவன், கெட்டவன் ரெண்டு வகைதான்.. நயவஞ்சகர்கள் குறைவு.. நாம்தான் ராஜதந்திரம், மயிருன்னு மானிட பண்புகளில் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்...


No comments: