Friday, October 07, 2022

காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

 நிலை 1: நம் ஊர் பெரிதாக வேண்டும். எல்லா வசதிகளும் அரசு உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.


எங்கள் வீடுகளை, நிலங்களை அரசு திட்டங்களுக்குத் தர மாட்டோம். அது எங்கள் வாழ்வாதாரம்.


பக்கத்து ஊரை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் நிலங்களின் மதிப்பு கூடிவிடும்!


நிலை 2: என் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்குகிறது. என்னால் இங்கு வாழ முடியவில்லை. எங்கேயோ வடிகால் அடைபட்டிருக்கிறது. உடனே அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.


வீட்டைச் சுற்றி நீர் தேங்கினாலும் என் வீடு ஆக்கிரமிப்பு கிடையாது. அரசு என் வீட்டை இடிக்கக் கூடாது. பக்கத்து வீட்டை இடித்தால் நீர் வடிந்துவிடும்.


நிலை 3: நிலத்தடி நீரை சட்டத்திற்கு புறம்பாக உறிஞ்சும் நிறுவனங்களால்தான் என் நிலத்தில் நீர் கிடைக்கவில்லை. உடனே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மூன்று நாள்களாக தொடர்ந்து குடிக்க கேன் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம். ஒரு கேனுக்கு 100 உரூபாய்! அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


காலநிலை மாற்றங்கள்! வளர்ச்சித் திட்டங்கள்!

No comments: